Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
வில்லன், குணச்சித்திர வேடங்களில் 40 ஆண்டுகள் முத்திரை பதித்த டி.எஸ்.பாலையா
3 posters
Page 1 of 1
வில்லன், குணச்சித்திர வேடங்களில் 40 ஆண்டுகள் முத்திரை பதித்த டி.எஸ்.பாலையா
தமிழ்ப்பட உலகில், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் 40 ஆண்டுகள்
கொடி கட்டிப் பறந்தவர், டி.எஸ். பாலையா. இவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி.
எம்.ஜி.ஆர். நடித்த முதல் திரைப்படமான "சதிலீலாவதி"தான்
பாலையாவுக்கும் முதல் படம். 1934-ல் வெளிவந்த இந்தப் படத்தில் வில்லனாக
பாலையா அறிமுகமானார். அப்போது பாலையாவுக்கு 20 வயது.
அம்பிகாபதி
1937-ம்
ஆண்டு, எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "அம்பிகாபதி" படத்தில், தளபதியாக
(வில்லன்) டி.எஸ். பாலையா நடித்தார். ஆரம்ப காலத்தில் பாலையாவுக்கு புகழ்
தேடித்தந்த படம் இது. இதில், பாகவதரும், பாலையாவும் கத்திச்சண்டை
போடுவார்கள்! 1940-ம் ஆண்டு முதல், பி.யு.சின்னப்பா புகழ் பெற்று
விளங்கினார். அவர் நடித்த பெரும்பாலான படங்களில் பாலையாதான் வில்லன்.
கதாநாயகன்
மாடர்ன்
தியேட்டர்ஸ் படங்களிலும் டி.எஸ்.பாலையா தொடர்ந்து இடம் பெற்றார்.
உலகப்போரை பின்னணியாக வைத்து, மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம்
"சித்ரா" என்ற படத்தைத் தயாரித்தார். அதில் டி.எஸ்.பாலையா கதாநாயகனாக
நடித்தார். கதாநாயகி கே.எல்.வி.வசந்தா. பாலையா கதாநாயகனாக நடித்த மற்றொரு
படம் "வெறும் பேச்சல்ல". 1956-ல் வெளியான இப்படத்தில் பாலையா "கவ்பாய்"
வேடத்தில் வருவார். அவருக்கு ஜோடி பத்மினி! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
அறிஞர்
அண்ணா கதை -வசனம் எழுதிய "வேலைக்காரி" படத்தில், கதாநாயகன்
கே.ஆர்.ராமசாமியின் நண்பனாக, முக்கிய வேடத்தில் பாலையா நடித்தார்.
அண்ணாவின் "ஓர் இரவு" படத்தில் வில்லனாக நடித்தார். ஏவி.எம். தயாரித்த படம்
இது.
எம்.ஜி.ஆருடன்
எம்.ஜி.ஆர்.
கதாநாயகனாக நடித்த முதல் படம் "ராஜகுமாரி." ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த
இப்படத்தில், வில்லனாக பாலையா நடித்தார். இப்படத்தில் எம்.ஜி.ஆரும்,
பாலையாவும் போட்ட கத்திச்சண்டை மிகப்பிரபலம். தொடர்ந்து எம்.ஜி.ஆர்.
படங்களிலும், சிவாஜிகணேசன் படங்களிலும் வில்லனாக நடித்தார்.
குணச்சித்திர வேடம்
இதன்
பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இவற்றில்
பெரும்பாலானவை நகைச்சுவை கலந்தவை. ஸ்ரீதர் தயாரித்த முழு நீள நகைச்சுவை
படமான "காதலிக்க நேரமில்லை" பாலையாவின் சிறந்த நகைச்சுவை நடிப்புக்கு
எடுத்துக்காட்டு. இப்படத்தில், ஒரு திகில் கதையை நாகேஷ் கூற, அப்போது
பாலையா காட்டும் முகபாவம் எவரும் மறக்க முடியாத ஒன்று.
"திருவிளையாடல்"
படத்தில் வடநாட்டு பாகவதராக வந்து, "ஒரு நாள் போதுமா...!" என்று பாடி,
ரசிகர்களைக் கவர்ந்தார். "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் தவில்
வித்துவானாக நடித்தார்.
பாகவதர், சின்னப்பா,
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன் ஆகிய சூப்பர் ஸ்டார்களுடன்
இணைந்து நடித்த பாலையா, 40 ஆண்டுகளில் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார்.
பிரசன்னா
படங்களில்
நடனம் மட்டுமே ஆடிவந்த லலிதா- பத்மினி சகோதரிகள், முதன் முதலாக "பிரசன்னா"
என்ற மலையாள படத்தில் கதாபாத்திரம் ஏற்று நடித்தனர்.
பட்சிராஜா தயாரித்த இப்படத்தின் கதாநாயகன் பாலையா என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பம்
டி.எஸ்.பாலையாவின்
குடும்பம் மிகவும் பெரியது. இவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி பெயர்
பத்மாவதி. இவருக்கு சாய்பாபா, அரவிந்தன், சோனையா, ரகுராம், கணேஷ் ஆகிய 5
மகன்கள். துர்க்கா, தேவி என்ற 2 மகள். 2-வது மனைவி பெயர் லீலா (இவர்
டி.எஸ்.பாலையா மரணம் அடைவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.)
அம்புஜம், பொன்னி, சிவகாமி, ரமா என்ற 4 மகள்கள். நாகராஜன், முனிபாலன் என்ற 2
மகன்கள். 3-வது மனைவி பெயர் நவநீதம். இவர் நடிகை சந்திரகாந்தாவின்
அக்காள். இவருக்கு மனோகரி என்ற மகள்.
61 வயதில் மரணம்
சென்னை
தி.நகரில் வசித்து வந்த டி.எஸ்.பாலையாவுக்கு, 61 வயது நிரம்பியபோது
உடல்நிலை பாதிக்கப்பட்டது. நெஞ்சுவலி, மாரடைப்பு போன்றவற்றால்
அவதிப்பட்டார். 20-12-1972 அன்று டி.எஸ்.பாலையாவுக்கு மீண்டும் மாரடைப்பு
ஏற்பட்டது. உடனே அவரை வீடு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்
சேர்த்தனர். என்றபோதிலும் மறுநாள் (21-ந்தேதி) அதிகாலை அவர் மரணம்
அடைந்தார்.
மகனும் நடிகர்
அவருக்கு
பிறகு அவரது மகன் ஜுனியர் பாலையா என்ற பெயரில் சினிமா படங்களில் நடித்து
வருகிறார். இவரது குரலும் பாலையா குரலாக எதிரொலிக்கிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வில்லன், குணச்சித்திர வேடங்களில் 40 ஆண்டுகள் முத்திரை பதித்த டி.எஸ்.பாலையா
பாலையா பற்றிய நல்ல செய்தி நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: வில்லன், குணச்சித்திர வேடங்களில் 40 ஆண்டுகள் முத்திரை பதித்த டி.எஸ்.பாலையா
jasmin wrote:பாலையா பற்றிய நல்ல செய்தி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» அம்மா வேடங்களில் பிரபல கதாநாயகிகள்!
» குணச்சித்திர நடிகர் ராஜ்கிரண்…
» நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்: திரையுலகினர் இரங்கல்..!
» முதன் முறையாக ஐந்து வேடங்களில் சூர்யா
» க்ரிஷ்-3ல் மூன்று வேடங்களில் ஹிருத்திக் ரோஷன்
» குணச்சித்திர நடிகர் ராஜ்கிரண்…
» நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்: திரையுலகினர் இரங்கல்..!
» முதன் முறையாக ஐந்து வேடங்களில் சூர்யா
» க்ரிஷ்-3ல் மூன்று வேடங்களில் ஹிருத்திக் ரோஷன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|