சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் Khan11

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்

Go down

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் Empty தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 16 Oct 2011 - 12:10

உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியது மனிதனின் அடிப்படை உரிமை. ஒவ்வொருவருக்கும் போதுமான அளவில் தரமான உணவு கிடைக்க வேண்டும்.
வசதி வாய்ப்பற்றவர்களுக்கு, உடல் ஊனமுற்றவர்களுக்கு, இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை. இதை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த ஆண்டு "உணவு விலை - நெருக்கடியில் இருந்து உறுதித் தன்மை' என்ற மையக் கருத்தோடு உலக உணவு தினம் அக். 16ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கத்தால், வறுமையும் அதிகரிக்கிறது. அடுத்த வேலை உணவு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருப்பவர்களும், உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். மக்கள் தொகை வளர்ச்சியை ஒப்பிடும்போது, உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைவாகவே உள்ளது.

85 கோடி பேர் : உலகில் 85 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 82 கோடிப் பேர், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். ஆண்டு தோறும் பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் அதிகம். இந்த எண்ணிக்கையை பாதியாக குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டும், ஒவ்வொரு ஆண்டும் பட்டினி மரணங்கள் அதிகரித்து வருகின்றன. உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு, முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில் ஒவ்வொரு அரசும், அவை அனைவருக்கும் வினியோகிக்கபட வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

விலைவாசியே காரணம் : உலகில் வாழும் அனைவருக்கும் தேவையான உணவு இருந்தாலும், அதை பெறும் அளவு பணம் இல்லாத நிலையே மரணங்களுக்கு காரணம். உலகில், வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசி உயர்வால், உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு என்பது கடினமான விஷயமாகிறது. உலக வங்கியின் அறிக்கையின் படி, 2010 - 2011ம் ஆண்டில் உணவுப் பொருட்களுக்கான விலை ஏற்றத்தால், உ<லகம் முழுவதும் 7 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்யாண சமையல் சாதம்... சரியான உணவு விகிதம் : திருமண வீடுகளில் மாப்பிள்ளை, பெண்ணுக்கு அடுத்தபடியாக, அனைவராலும் பேசப்படுவது விருந்து தான். அறுசுவையுடன் தித்திக்க பரிமாறப்படும் விருந்தை சாப்பிடும் போது, மனநிறைவு ஏற்படும். அனைத்து சத்துகளும் ஒருங்கிணைந்து, சரிவிகித உணவாக இருப்பது தான், விருந்தின் சிறப்பு.

இன்று உலக உணவு தினம். எளிய உணவு வகைகளில் தான் சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே அனைவராலும் சரிவிகித உணவை சாப்பிட முடியும் என்கிறார், டாக்டர் சீ.ரேவதி (குழந்தைகள் நல நிபுணர், மதுரை). : ""குழந்தைப் பருவத்திலிருந்து உணவு பழக்கத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். "பேஷன்' என்ற பெயரில், காலைநேர உணவை தவிர்க்கக்கூடாது. கொழுப்பு குறைவான, அதிகமாக உணவுகளை கலந்து சாப்பிடுவது நல்லது. இட்லி, வடை சேர்த்து சாப்பிடலாம். ஆனால் பூரி, வடை இரண்டுமே எண்ணெய் அதிகமாக இருக்கும். கண்ணைப் பறிக்கும் வண்ண உணவுகளை, கண்ணை மூடிக் கொண்டு தவிர்த்து விடலாம். சீசனுக்கேற்ப தினம் ஒரு பழங்களை சாப்பிடவேண்டும்.
அதிக காரம், உப்பு, அமிலத்தன்மை கொண்ட பாக்கெட் தின்பண்டங்களை குழந்தைகள் விரும்புபவர். உணவின் நச்சுத்தன்மையை குழந்தைகளுக்கு புரியவைத்து, அவற்றை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
பீட்சா, பர்கரை தவிர்த்து, கேழ்வரகு, கம்பு கஞ்சி, கூழ் இவற்றை வெல்லத்துடன் கலந்து கொடுத்தால், இரும்புச்சத்து, கால்சியம் கிடைக்கும். சிறுமிகளுக்கு மாதவிடாய்க்கு ஒருவாரம் முன், உளுந்தங்களியில் எண்ணெய் விட்டு வெல்லத்துடன் கொடுத்தால் ரத்த இழப்பை ஈடுகட்டும். சிறுவர்களுக்கு உடலை வலுப்படுத்தும். வயிற்றில் புழுக்கள் இருந்தால், உணவில் சத்துக்களை உறிஞ்சி ரத்தசோகை ஏற்படுத்தும், என்றார்.

மதுரை பாத்திமா கல்லூரி மனையியல் துறைத் தலைவர் வசந்தா எஸ்தர் ராணி கூறியதாவது: மூன்று வேளை உணவிலும் கார்போ ஹைட்ரேட், புரதம், தாது, நார், தண்ணீர், விட்டமின் சத்துக்கள் இருந்தால் தான், அது சரிவிகித உணவு. இதற்கேற்ப உணவுமுறையை திட்டமிட வேண்டும். இட்லி, சட்னி, சாம்பார், வாழைப்பழம், பால்... இதுதான் சரிவிகித உணவு. எலுமிச்சை சாதத்திற்கு, உருளைக்கிழங்கு வறுவல் பொருந்தாது. சோயா பீன்ஸ் கூட்டு சாப்பிடலாம். மதியநேரம் சாதம், சாம்பார், கீரைப் பொறியல், காய், தயிர், பாகற்காய் அல்லது புடலை சாப்பிடலாம், என்றார்.

ரத்தசோகையை விரட்ட... : பேரீச்சம்பழத்தை கீறி, விதையை எடுத்துவிட்டு வேர்க்கடலை, வெல்லம் சேர்த்து மூடி, பொடித்த சர்க்கரையை தூவி சாப்பிடலாம். புரோட்டீன், இரும்புச்சத்து இதில் அதிகம்.ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதி கரிக்கும். அவல், பொரி, தர்ப்பூசணி, ஈரல், கீரை, சிறிய பாகற்காயிலும் இரும்புச்சத்து அதிகம்.


தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum