சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

கடைசி நிமிடங்கள்  கடாபி... Khan11

கடைசி நிமிடங்கள் கடாபி...

2 posters

Go down

கடைசி நிமிடங்கள்  கடாபி... Empty கடைசி நிமிடங்கள் கடாபி...

Post by kalainilaa Sat 22 Oct 2011 - 21:02

கிளர்ச்சிப் படையினர் கடாபி தங்கியிருந்த அவரது சொந்த ஊரான சேர்ட்டேவை நேற்றைய தினம் முற்றுகையிட்டனர். இதனிடையே நேட்டோப் படையினர் தமது வேவு பார்த்தலை அதிகரித்து கடாபி அந் நகரில் இருப்பதை உறுதிசெய்துகொண்டனர். கிளர்ச்சிப்படையினர் தாக்குதலை தொடுத்தவேளை அங்கிருந்து அவர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அவரது வாகனத் தொடரணி மீது நேட்டோப் படையின் ஆளில்லா விமானங்களும் ஜெட் விமானங்களும் தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக 5 வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக நேட்டொப் படைப்பிரிவுக்கு செய்தி கிட்டியபோதிலும் அந்த வாகனத் தொடரணியில் எந்த வாகனத்தில் கடாபி இருக்கிறார் என்பதும் கூட அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

பாதுகாப்புக்குச் சென்ற வாகனங்களை துல்லியமாகத் தாக்கியழித்துள்ளது நேட்டோப் படை. இதனால் அவர் வாகனம் மட்டும் பலத்த சேதமடைந்த நிலையில் அவரது பாதுகாப்பாளரும் சாரதியும் வாகனத்தை திருப்பி மறைவான ஒரு இடத்தில் நிறுத்தியுள்ளனர். அதனையும் வேவுபார்த்த அமெரிக்காவின் ஆளில்லா விமானம் கடாபி வீதி ஓரமாக இருக்கும் ஒரு சுரங்கக் குழிக்குள் இருக்கிறார் என்ற தகவலை தலைமைக்கு பரிமாற அவ்விடம் நோக்கி கிளர்ச்சிப்படையினர் நகர்ந்துள்ளனர். காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் பதுங்கியிருந்த அவரை வெளியே இழுத்து சேட்டைக் களற்றி நிர்வாணமாக்கி அவரைப் பிடித்து உலுக்கி கன்னத்தில் அடித்து முதலில் மானபந்தப் படுத்தியுள்ளனர் கிளர்சியாளர்கள். பின்னர் அவர் தலையிலும் வயிற்றிலும் சுட்டுள்ளனர்.ஆனால் கடாபி தன்னைச் சுடவேண்டாம் எனக் கெஞ்சியுள்ளார். நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடாபியின் மன்களில் 2வர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காலில் சிறு காயங்களோடு பிடிபட்டார் என முதலில் அறிவித்த கிளர்ச்சியாளர்கள் பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். அதேபோல மற்றைய மகனும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரே அவர் உடலை ஒரு அம்பூலன்ஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். ஆனால் மேற்குலக தொலைக்காட்சிகள் கடாபி காயங்களுடன் பிடிபட்டதாகவும் அவருக்கு அவசர முதலுதவி வழங்கப்பட்டதாகவும் பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ரத்தப் பெருக்கு காரணமாக அவர் உயிரிழந்தார் எனவும் கதைகளைக் கட்டியது. ஏதோ மனிதநேயம் மிக்க ஒரு நடவடிக்கையை தமது நேட்டோப் படைப்பிரிவு செய்ததாக இவர்கள் நினைப்பது அடி முட்டாள் தனமாகும். அமெரிக்காவின் திட்டப்படி கடாபியை தனிமைப்படுத்தி அவருக்கு மரணபயத்தைக் காட்டி யாரும் இல்லாத நிலையில் வீதியில் ஓடவிட்டு பின்னர் ஒரு மறைவிடத்தை அவர் தேடிய பின்னர் சினிமாப்பட பாணியில் அவரைக் கொண்றுள்ளனர் கிளர்சிப் படையினர். கடாபிக்கும் கிளர்ச்சிப் படையினருக்கும் என்ன வித்தியாசம் ?

இதில் வேதனையான விடையம் என்னவென்றால் சரணடைந்த கடாபியின் வாகன ஓட்டுனரை முதலில் கைகளைக் கட்டி வாகனத்தில் ஏற்றிவிட்டு(புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது) பின்னர் அவர் இறந்துவிட்டார் எனவும் கிளர்ச்சிப் படையினரும் அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. இது இலங்கை இராணுவத்தின் அட்டூளியங்களுக்கு ஒப்பான ஒரு செயலாக நோக்கப்படவேண்டி உள்ளது. கடாபி பல குற்றங்களை இழைத்தவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரை கண்ட இடத்தில் சுட்டுக் கொலைசெய்ய கிளர்ச்சியாளர்களுக்கு என்ன அருகதை உள்ளது ? அவரை இலகுவாகப் பிடித்து நீதிமன்றின் முன் நிறுத்தியிருக்கலாம். அப்படி அவர்கள் நிறுத்தியிருந்தால் கிளர்ச்சிக்காரர்கள் மரியாதை சற்று உயர்ந்திருக்கும். ஆனால் அவர்கள் அவசரப் போக்கு மிக ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக பென்காசி என்னும் நகரில் உள்ளவர்கள் தாமே முதலில் புரட்சியை ஆரம்பித்ததால் நாட்டை ஆளும் பொறுப்பு தம்மிடமே உள்ளது என்றும் மிஸ்ராட்டா நகரவாசிகள் தாமே முழுப் பொறுப்பையும் எடுப்போம் என்று குழுக் குழுவாகப் பிரிந்து விவாதம் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். பல முஸ்லீம் இனங்கள் வாழும் லிபியாவில் இனி ஆரம்பமாக இருக்கும் அரசியல் எப்பாதை நோகிச் செல்லும் எத்ததைய சவால்களைத் தோற்றுவிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது
நன்றி http://www.vivasaayi.com/2011/10/blog-post_22.html
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கடைசி நிமிடங்கள்  கடாபி... Empty Re: கடைசி நிமிடங்கள் கடாபி...

Post by நண்பன் Sat 22 Oct 2011 - 21:11

இப்போது நடந்து முடிந்தல்ல பிரச்சினை இனி நடக்கவிருப்பதுதான் பிரச்சனை இனித்தான் இரத்தக்கண்ணீர் வடிக்க வேண்டும் மதிகெட்ட லிபிய காட்டு வாசிகள் (*(: (*(: :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum