Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவுby rammalar Today at 10:49
» விடுகதைகள்
by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
+2
நண்பன்
பார்த்திபன்
6 posters
Page 1 of 1
முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
பத்தொன்பது வயது!
திரைப்படங்கள் வளர்த்துவிட்டிருந்த கல்லூரிக் கனவுகள்
நிஜம் எனும் நீர் பட்டு கலையத் தொடங்கிய நாள்!
சக நண்பன் சரவணனுடன் பேருந்து விட்டு இறங்குகிறேன்
பேராவலுடன்!
"பச்சேரி ஸ்ரீ நல்லதங்காள் அம்மன் பொறியியல் கல்லூரி"
முகம் பார்த்து சிரிக்கிறது முகப்புப் பலகை!
கான்கிரீட் மலையாய் கல்லூரிக் கட்டிடம்!
இன்னும் சற்று உயர்ந்தால்,
விண்ணையும்கூட விரல் நீட்டித் தொட்டிடும்!
வகுப்பறை...
படிக்க வந்த பட்டாம்பூசிகளின் தொகுப்பறை!
பிடரி பிடித்திழுத்த தயக்கத்துடன் "பி" பிரிவில் நுழைகிறேன்!
புதிது புதிதாய் முகங்கள்!
அனிச்சையாய் கடிபட்டன என் நகங்கள்!
புன்னகையோடு தன்னருகில் இடம் தருகிறான் அந்த புதிய நண்பன்!
அந்தப் பண்பான நண்பன் "பழனிக்குமார்" என்றே ஞாபகம்!
வலப்புறம் திரும்புகிறேன்....
அட! வகுப்பறைக்குள் வானவில்லா..?
அதுவும் இத்தனை நிறங்களில்...!
இந்த சூரியகாந்திகளுக்கெல்லாம் சுடிதார் போட்டனுப்பியது யார்?
ஒ! ....மாணவிகள்!...
என்ன செய்வது?...ஆண்கள் பள்ளி எனும் அனல் பாலைவனத்திலிருந்து வந்த எனக்கு,
கானல் நீரும் கரும்புச்சாறாய்தான் தெரியும்!
அடுத்ததாக ஆசிரியர்களின் அணிவகுப்பு!
ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துகொள்ள வேண்டுமாம்!
என் பாதம் வழியே நுழைந்த பயம்,
பல்லிடுக்கில் படுத்துக்கொண்டது!
என் முறை வருகிறது....
கூச்சம் என்னை கூறுபோட்டது!
கூட்டம் கண்டு என் குரல் உடைந்தது!
நாக்கின் அடியில் நரம்பிழுத்தது!
ஆங்கிலம் அங்கே கற்பிழந்தது!
உளறிமுடித்தேன் ஒருவழியாக!
இதயம் துடித்தது இரு மடங்காக!
முதல் நாளில் மட்டும் மூன்று நண்பர்களின் அறிமுகம் பெற்றேன்!
சில நேரங்களில் நகைச்சுவையும், பல நேரங்களில் நாராசமும் காட்டும்
அன்பு நண்பன் குண்டு விஜயகுமார்!
அசிங்கமாகத் திட்டினாலும் அமைதியாகச் சிரிக்கும் வி.எம்.செந்தில்!
என்னைக் கூசாமல் "குருவே" என்றழைத்த "மணிமாறன்"!
இயல்பாய் எல்லாம் நடந்துவர,
இடையில் புகுந்தனர் இரண்டாமாண்டு மாணவர்கள்!
மூங்கில் செடிக்கு மூக்கு முளைத்ததுபோல் ஒருவன்!
முள்ளம்பன்றிக்கு முழுக்கை சட்டை போட்டதுபோல் மற்றொருவன்!
ராகிங்...
இளைய மாணவர்களின் இதயம் உடைக்கும்
மூத்த மாணவர்களின் மூர்க்க விளையாட்டு!
தோல் செருப்பு காலில் கண்டால்,
நாள்கணக்கில் அடி விழுமாம்!
வணக்கம் சொல்லத் தவறினால்,
வாரக்கணக்கில் அடி விழுமாம்!
மாணவிகளுடன் பேசினால்,
மாதக்கணக்கில் அடி விழுமாம்!
மீசை மழிக்க மறுத்தால்,
பூசை நிச்சயமாம்!
மொத்தத்தில், அவர்களின் ராகிங் எனும் ராஜ போதைக்கு,
நாங்கள் ஊமைகளாய் நின்று ஊறுகாய் ஆனோம்!
இப்படியாகக் கழிந்தது அன்றைய பொழுது!
இப்போதும் இனிக்கிறது இதயத்தில் அந்த நினைவு!
பதினைந்தாண்டுகள் பறந்தோடியபோதிலும்,
பத்திரமாய் என்னுள் அந்தப் பசுமையான சுவடு!
-நிலவை.பார்த்திபன்
திரைப்படங்கள் வளர்த்துவிட்டிருந்த கல்லூரிக் கனவுகள்
நிஜம் எனும் நீர் பட்டு கலையத் தொடங்கிய நாள்!
சக நண்பன் சரவணனுடன் பேருந்து விட்டு இறங்குகிறேன்
பேராவலுடன்!
"பச்சேரி ஸ்ரீ நல்லதங்காள் அம்மன் பொறியியல் கல்லூரி"
முகம் பார்த்து சிரிக்கிறது முகப்புப் பலகை!
கான்கிரீட் மலையாய் கல்லூரிக் கட்டிடம்!
இன்னும் சற்று உயர்ந்தால்,
விண்ணையும்கூட விரல் நீட்டித் தொட்டிடும்!
வகுப்பறை...
படிக்க வந்த பட்டாம்பூசிகளின் தொகுப்பறை!
பிடரி பிடித்திழுத்த தயக்கத்துடன் "பி" பிரிவில் நுழைகிறேன்!
புதிது புதிதாய் முகங்கள்!
அனிச்சையாய் கடிபட்டன என் நகங்கள்!
புன்னகையோடு தன்னருகில் இடம் தருகிறான் அந்த புதிய நண்பன்!
அந்தப் பண்பான நண்பன் "பழனிக்குமார்" என்றே ஞாபகம்!
வலப்புறம் திரும்புகிறேன்....
அட! வகுப்பறைக்குள் வானவில்லா..?
அதுவும் இத்தனை நிறங்களில்...!
இந்த சூரியகாந்திகளுக்கெல்லாம் சுடிதார் போட்டனுப்பியது யார்?
ஒ! ....மாணவிகள்!...
என்ன செய்வது?...ஆண்கள் பள்ளி எனும் அனல் பாலைவனத்திலிருந்து வந்த எனக்கு,
கானல் நீரும் கரும்புச்சாறாய்தான் தெரியும்!
அடுத்ததாக ஆசிரியர்களின் அணிவகுப்பு!
ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துகொள்ள வேண்டுமாம்!
என் பாதம் வழியே நுழைந்த பயம்,
பல்லிடுக்கில் படுத்துக்கொண்டது!
என் முறை வருகிறது....
கூச்சம் என்னை கூறுபோட்டது!
கூட்டம் கண்டு என் குரல் உடைந்தது!
நாக்கின் அடியில் நரம்பிழுத்தது!
ஆங்கிலம் அங்கே கற்பிழந்தது!
உளறிமுடித்தேன் ஒருவழியாக!
இதயம் துடித்தது இரு மடங்காக!
முதல் நாளில் மட்டும் மூன்று நண்பர்களின் அறிமுகம் பெற்றேன்!
சில நேரங்களில் நகைச்சுவையும், பல நேரங்களில் நாராசமும் காட்டும்
அன்பு நண்பன் குண்டு விஜயகுமார்!
அசிங்கமாகத் திட்டினாலும் அமைதியாகச் சிரிக்கும் வி.எம்.செந்தில்!
என்னைக் கூசாமல் "குருவே" என்றழைத்த "மணிமாறன்"!
இயல்பாய் எல்லாம் நடந்துவர,
இடையில் புகுந்தனர் இரண்டாமாண்டு மாணவர்கள்!
மூங்கில் செடிக்கு மூக்கு முளைத்ததுபோல் ஒருவன்!
முள்ளம்பன்றிக்கு முழுக்கை சட்டை போட்டதுபோல் மற்றொருவன்!
ராகிங்...
இளைய மாணவர்களின் இதயம் உடைக்கும்
மூத்த மாணவர்களின் மூர்க்க விளையாட்டு!
தோல் செருப்பு காலில் கண்டால்,
நாள்கணக்கில் அடி விழுமாம்!
வணக்கம் சொல்லத் தவறினால்,
வாரக்கணக்கில் அடி விழுமாம்!
மாணவிகளுடன் பேசினால்,
மாதக்கணக்கில் அடி விழுமாம்!
மீசை மழிக்க மறுத்தால்,
பூசை நிச்சயமாம்!
மொத்தத்தில், அவர்களின் ராகிங் எனும் ராஜ போதைக்கு,
நாங்கள் ஊமைகளாய் நின்று ஊறுகாய் ஆனோம்!
இப்படியாகக் கழிந்தது அன்றைய பொழுது!
இப்போதும் இனிக்கிறது இதயத்தில் அந்த நினைவு!
பதினைந்தாண்டுகள் பறந்தோடியபோதிலும்,
பத்திரமாய் என்னுள் அந்தப் பசுமையான சுவடு!
-நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
பசுமையான நினைவு நினைக்கும் போது நெஞ்சம் கனக்கிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
அருமை பார்த்திபன் தொடருங்கள் கவி ஓடையை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
- Code:
முதல் நாளில் மட்டும் மூன்று நண்பர்களின் அறிமுகம் பெற்றேன்!
சில நேரங்களில் நகைச்சுவையும், பல நேரங்களில் நாராசமும் காட்டும்
அன்பு நண்பன் குண்டு விஜயகுமார்!
அசிங்கமாகத் திட்டினாலும் அமைதியாகச் சிரிக்கும் வி.எம்.செந்தில்!
என்னைக் கூசாமல் "குருவே" என்றழைத்த "மணிமாறன்"!
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
பசுமை நினைவுகள் அருமை.
அந்த நாட்கள் மரக்க முடியாத நாட்கள்.
அந்த நாட்கள் மரக்க முடியாத நாட்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!
நேசிக்க நண்பர்கள் இருந்தால் நயாக்ராவாக மாற நானும் தயார்! பாராட்டியமைக்கு பல கோடி நன்றிகள்!
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Similar topics
» இனி சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா தாக்கல்
» மோடியின் முத்தான முதல் முடிவு!
» தமிழக தலை நகரத்தில் தரம் தாழ்ந்து போன 'தாய் தமிழ்' மொழி - 'சென்னையில் ஒரு நாள்' அனுபவம் !
» யூனிவர்சிட்டி போன முதல் நாள்
» முதல் நாள் பள்ளியில்..
» மோடியின் முத்தான முதல் முடிவு!
» தமிழக தலை நகரத்தில் தரம் தாழ்ந்து போன 'தாய் தமிழ்' மொழி - 'சென்னையில் ஒரு நாள்' அனுபவம் !
» யூனிவர்சிட்டி போன முதல் நாள்
» முதல் நாள் பள்ளியில்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|