Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மாரடைப்பால் மரணம்
3 posters
Page 1 of 1
இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மாரடைப்பால் மரணம்
சென்னை: இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா கடும் மாரடைப்பால் நேற்று இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 60.
இளையராஜாவின் உயிர் நாடியாக திகழ்ந்தவர் ஜீவா. அவரது இசைப் பயணத்திற்கும், குடும்ப வாழ்க்கைக்கும் இடையிலான பாலமாக விளங்கியவர். இளையராஜாவின் ஜீவனாக வாழ்ந்து வந்த ஜீவா, இளையராஜாவின் உற்ற துணையாக விளங்கினார் - நேற்று அவர் மறைந்து விட்டார்.
ஜீவாவுக்கு நேற்று இரவு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். இதைக் கேட்டு இளையராஜாவின் குடும்பம் அதிர்ந்து உடைந்து போனது.
மறைந்த ஜீவாவுக்கு கார்த்திக் ராஜா, பவதாரணி, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
தனது பிள்ளைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர் ஜீவா. அதிலும் இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜா மீது அதிக பாசம் வைத்திருந்தார். அவரது முதல் கல்யாணம் தோல்வியில் முடிந்ததால் அவர் பெரும் வருத்தத்திலும், வேதனையிலும் இருந்து வந்தார். சமீபத்தில்தான் யுவனுக்கு 2வது கல்யாணம் நடந்தது. இதனால் பெரும் நிம்மதியும் சந்தோஷமும் அடைந்திருந்தார். தான் அதிகம் பாசம் வைத்த 2வது மகனின் வாழ்க்கை பூர்த்தி ஆனதைப் பார்த்து விட்டு அவர் கண் மூடியிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இளையராஜாவின் உயிர் நாடியாக திகழ்ந்தவர் ஜீவா. அவரது இசைப் பயணத்திற்கும், குடும்ப வாழ்க்கைக்கும் இடையிலான பாலமாக விளங்கியவர். இளையராஜாவின் ஜீவனாக வாழ்ந்து வந்த ஜீவா, இளையராஜாவின் உற்ற துணையாக விளங்கினார் - நேற்று அவர் மறைந்து விட்டார்.
ஜீவாவுக்கு நேற்று இரவு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். இதைக் கேட்டு இளையராஜாவின் குடும்பம் அதிர்ந்து உடைந்து போனது.
மறைந்த ஜீவாவுக்கு கார்த்திக் ராஜா, பவதாரணி, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
தனது பிள்ளைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர் ஜீவா. அதிலும் இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜா மீது அதிக பாசம் வைத்திருந்தார். அவரது முதல் கல்யாணம் தோல்வியில் முடிந்ததால் அவர் பெரும் வருத்தத்திலும், வேதனையிலும் இருந்து வந்தார். சமீபத்தில்தான் யுவனுக்கு 2வது கல்யாணம் நடந்தது. இதனால் பெரும் நிம்மதியும் சந்தோஷமும் அடைந்திருந்தார். தான் அதிகம் பாசம் வைத்த 2வது மகனின் வாழ்க்கை பூர்த்தி ஆனதைப் பார்த்து விட்டு அவர் கண் மூடியிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மாரடைப்பால் மரணம்
இவ்வளவு அழகான வீட்டை இதுவரை பார்த்ததில்லை. எங்கு பார்த்தாலும் சிற்பங்களும் மலர்களுமாக, ஒரு கோயில் போல இருக்கிறது உங்கள் வீடு. யாருடைய ரசனை?’
"என் மனைவி ஜீவாவுக்குத்தான் அந்தப் பெருமை. இந்த இடத்தை வாங்கி வீடு கட்டிக்கொண்டிருந்த நேரத்தில், நான் பார்க்கவே இல்லை. முக்கால்வாசி வேலைகள் முடிந்த பிறகுதான் நான் பார்த்தேன். உள்ளே காலடி எடுத்து வைத்தவுடன், "ஐயோ! இவ்வளவு பெரிய வீடா? எனக்கு வேண்டாம்" என்று சொல்லிப் புலம்ப ஆரம்பித்து விட்டேன்.
சிறிய வயதில் இதற்கெல்லாம் ஆசைப்பட்டிருந்தது உண்மைதான். 'தூணில் அழகியதாய்.. நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்..' என்று பாரதி போல ரசனையும், கலையுணர்வும், எனக்கும் இருந்தது. நீங்கள் விரும்பாமலே இதுபோல அமைந்திருக்கிறதென்றால், அதுவே கடவுள் உங்களை இந்த இடத்தில் இரு என்று சொல்கிறார் என்று கூட அர்த்தமாகும் இல்லையா?' என்றாள் என் மனைவி.
இந்த வீடு கோயில் போல இருக்கிறது என்றாலோ, உள்ளே நுழைந்ததும் மன அமைதி கிடைக்கிறது என்றாலோ, அதற்குக் காரணம் என் மனைவிதான். அவள் இல்லாவிட்டால் இந்த வீடும் இந்தத் தோற்றம் அளித்திருக்காது. நானும் இப்படி இருந்திருக்க மாட்டேன்.
என் மனைவி, அது வேண்டும், இது வேண்டும், குழந்தைகளுக்கு அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும், என்று நச்சரித்திருந்தால், எனக்கு எந்த இசையும் வந்திருக்காது. அவருக்கு, என் அம்மாவின் சமாதிக்குச் சென்று பூஜை செய்வது, அன்னதானம் செய்வது, நவராத்திரியை வருடா வருடம் கொண்டாடுவது, போன்ற விஷயங்களில்தான் ஆர்வம். என்னைத் தெய்வமாக வணங்குவாள். அதற்கு நான் அருகதை உடையவனா என்பது வேறு விஷயம். அவளின் தெய்வ பக்தியும், ஈடுபாடும், வேறு யாருக்கும் வராது.
- ஆனந்த விகடன் (21.2.99) க்கு அளித்த பேட்டியில், இசைஞானி.
Re: இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மாரடைப்பால் மரணம்
காலையில் படித்த முதல் செய்தியே இதுதான் அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கே. ஏ. தங்கவேலு மனைவி நடிகை எம். சரோஜா மரணம்
» விமானி மாரடைப்பால் காலமானதால் விமானத்தை தரையிறக்கிய 80 வயது மனைவி
» இளையராஜாவின் தீவிர ரசிகர் மரணம்… பாடல்கள் பாடி நண்பர்கள் இறுதி அஞ்சலி – நெகிழ வைக்கும் வீடியோ
» ஆண்டுக்கு 8 கோடி பேர் மாரடைப்பால் பாதிப்பு
» கலாநிதி மாறன் மீது புகார் கொடுத்த கேபிள் டிவி ஆபரேட்டர் மாரடைப்பால் மரணம்
» விமானி மாரடைப்பால் காலமானதால் விமானத்தை தரையிறக்கிய 80 வயது மனைவி
» இளையராஜாவின் தீவிர ரசிகர் மரணம்… பாடல்கள் பாடி நண்பர்கள் இறுதி அஞ்சலி – நெகிழ வைக்கும் வீடியோ
» ஆண்டுக்கு 8 கோடி பேர் மாரடைப்பால் பாதிப்பு
» கலாநிதி மாறன் மீது புகார் கொடுத்த கேபிள் டிவி ஆபரேட்டர் மாரடைப்பால் மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|