Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மன்னிப்பும் அன்பளிப்பும் .............
5 posters
Page 1 of 1
மன்னிப்பும் அன்பளிப்பும் .............
நீயும் நானும் காதலும் யாரும் யாரிடமும் எதுவும் சொல்ல முடியாமல்
தவித்துக்கொண்டு இருந்த காலத்தில்… நீ புதிய உடை அணிந்து வருவாய். ?புது
டிரெஸ் நல்லா இருக்கா?? என்று கேட்கத் துடிக்கும் உன் உதடுகள். ஆனால், அதை
உன் விழிகள் கேட்கும். உன் கொலுசுகளை அனுப்பிக் கேட்பாய். உன் வளையல்களைக்
குலுக்கி விசாரிப்பாய். ஏன் உன் புதிய உடையையே சரசரக்கவிட்டுக் கேட்டுப்
பார்ப்பாய்.
ஆனால், நானோ மாலை வரை மவுனமாகவே இருந்துவிட்டு, சாவகாசமாக புது டிரெஸ்
நல்லாருக்கு என்பேன். அப்போது நீயோ, நான் கேட்டேனா? என்பாய் அநியாயமாய்.
பின்ன என்ன… உடனே சொல்ல வேண்டியதுதான நீ என்றாய் பிறகொரு நாளில்.
ஏன்… நீ கேட்க வேண்டியதுதானே, உன் வாய் திறந்து! என்றேன்.
ஆமா, நீ என்னைக் காதலிக்கிறாயா இல்லையானே தெரியாம உன் முன்னாடி வந்து
நின்னு அசடு மாதிரி, ?புது டிரெஸ் நல்லாருக்கா??னு கேப்பாங்களாக்கும்
என்றாய்.
அப்ப… நல்லாயிருக்குனு சொன்ன நான் இளிச்சவாயனா? என்றேன் கோபமாக.
கோச்சுக்காதடா… வேணும்னா நான் ஸாரி கேட்டுக்கறேன் என்றாய்.
கேளு! என்றேன்.
மன்னிச்சுக்கடா… மச்சான் என்றாய் ஸ்டைலாக.
அடிப்பாவி! புது டிரெஸ் நல்லாருக்கானு நீ வாயாலயா கேட்டே? கண்ணைக்
காட்டி, கையைக் காட்டித் தானே கேட்டே. அந்த மாதிரி இப்போ மன்னிப்பும் உன்
கன்னத்தால கேளு என்றேன்.
கன்னம் எப்படிக் கேட்கும்?
நீ கன்னத்தைக் காட்டு. கன்னமே கேட்டுக்கும் என்றேன்.
சிணுங்கியபடி கன்னம் காட்டினாய். நான் உன் கன்னத்தில் முத்தமிட்டேன்.
வெட்கப்பட்ட நீ, இதுதான் மன்னிப்பா? அன்பளிப்பு மாதிரி இருக்கு! என்றாய்.
காதலில் அப்படித்தான்… மன்னிப்பு கூட அன்பளிப்பாகும்!
எந்த நாளை நீ பிரமாத மாகக் கொண்டாட நினைக் கிறாய்? என்றேன், நமக்குக் கல்யாணமான சில மாதங்கள் கழித்து.
இதிலென்ன சந்தேகம். நம் கல்யாண நாளைத்தான்! என்றாய் முகம் நிறைய
மகிழ்ச்சியுடன். ஆனால், நாம் காதலிக்க ஆரம்பித்த நாளைத்தான் நான்
பிரமாதமாகக் கொண்டாட நினைக்கிறேன் என்றேன்.
ஏன்… கல்யாண நாள் உனக்கு முக்கியமாகப் பட வில்லையா? கல்யாணம் அதற்குள் கசந்து விட்டதா உனக்கு? என்றாய் கோபத்துடன்.
ஐயோ! கல்யாணம் கசந்து போயிருந்தால், காதலித்த நாள் வெறுத்துப் போய்
இருக்குமே. நான் காதலித்த நாளைப் பெரிதாகக் கொண்டாட விரும்புவதே, நம்
கல்யாண வாழ்க்கை இனிப்பாக இருப்பதால்தானே! என்றேன்.
?எப்படிப்பா இப்படில்லாம் யோசிக்கறே?? என்றாய் என் தலையில் ஒரு செல்லக் குட்டுவைத்து.
ஒரு அழகான அலமாரி வேண்டும் என்றாய். வாங்கி வந்தபோது, அதை படுக்கை அறையில் வை என்றாய்.
எதுக்கு இந்த அலமாரி? என்றேன்.
ம்… ஒரு முக்கியமான நினைவுச் சின்னத்தை நீயும் நானும் மட்டும் பார்ப்பது மாதிரி இதில் வைக்கப்போகிறேன் என்றாய்.
அது என்ன அது? என்ற எனக்குப் பதிலே சொல்லாமல், Ԧamp;#2953;ன்னிடம்
எனக்குப் பிடித்தது எது தெரியுமா? என்று கேள்வி கேட்ட நீயே, பதிலும்
சொன்னாய்.
?என் அன்புக் கணவா! என் மார்பு உன் மீது படும்போதெல்லாம் நீ ஒரு
பாட்டுப் பாடுவாயே… அது பிடிக்கும். அதே மார்பு தப்பித்தவறி வேறு எந்தப்
பொருளின் மீது பட்டுவிட்டாலும், உடனே கோபம் வந்து அந்தப் பொருளைத்
தூக்கிப்போட்டு உடைப்பாயே… அது ரொம்பப் பிடிக்கும். அப்படி நீ உடைத்த ஒரு
பொருளை எடுத்து ஒட்டி வைத்திருக்கிறேன். அதை வைக்கத் தான் இந்த அழகான
அலமாரி என்றாய்.
ஒரே ஒரு பொருளை வைப்பதற்கா இத்தனை பெரிய அலமாரி? நீ உடைப்பதற்காக
இன்னும் பல பொருட்கள் இந்த வீட்டில் காத்திருக்கின்றனவே. என்று சிரித்தாய்.
பார்த்து… அந்த அலமாரி மேல சாஞ்சுடாத… அப்புறம் அதையும் உடைச்சுப்
போட்டுடுவேன் ஏன் உன் மீதும்தான் சாய்கிறேன். அப்போ உன்னையும்
உடைத்துவிடுவாயா?
அதுதான் நீ சாயும் ஒவ்வொரு முறையும் நான் உடைந்து உருகிவிடுகிறேனே!
கடவுளின் தரிசனத்துக்காக
தவமிருக்கும் முனிவர்கள் போல
உன்னைத் தரிசிப்பதற்காக
ஒரே இடத்தில் உட்கார்ந்து
தவமெல்லாம் இருக்க மாட்டேன்.
நீ எந்த மலையின் உச்சியில்
இருக்கிறாய் என்று சொல்…
ஒரு மலையேறும் வீரனைப் போல்
உன்னைத் தேடி வருகிறேன் நான்.
அய்யோ…
நீ கொடுத்த
பறக்கும் முத்தத்தைக்
காற்று தூக்கிக்கொண்டு ஓடிவிட்டதே!
உங்கள் எதிர் வீட்டு வாசலின்
திருஷ்டிப் பூசணிக்காய்க்கு
உன் மேல் ஒரு கண்போல.
உன்னைப் பார்க்கும்போது
அது தன் மீது வரைந்திருக்கும்
கர்ண கடூரமான முகத்தை
கமல்ஹாசன் முகம்போல
மாற்றிக்கொள்கிறதே.
தபூ சங்கர்-
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மன்னிப்பும் அன்பளிப்பும் .............
கடவுளின் தரிசனத்துக்காக
தவமிருக்கும் முனிவர்கள் போல
உன்னைத் தரிசிப்பதற்காக
ஒரே இடத்தில் உட்கார்ந்து
தவமெல்லாம் இருக்க மாட்டேன்.
நீ எந்த மலையின் உச்சியில்
இருக்கிறாய் என்று சொல்…
ஒரு மலையேறும் வீரனைப் போல்
உன்னைத் தேடி வருகிறேன் நான்.
சூப்பரான கவிதைக்கட்டுரை இது நீங்களா மேடம்
தவமிருக்கும் முனிவர்கள் போல
உன்னைத் தரிசிப்பதற்காக
ஒரே இடத்தில் உட்கார்ந்து
தவமெல்லாம் இருக்க மாட்டேன்.
நீ எந்த மலையின் உச்சியில்
இருக்கிறாய் என்று சொல்…
ஒரு மலையேறும் வீரனைப் போல்
உன்னைத் தேடி வருகிறேன் நான்.
சூப்பரான கவிதைக்கட்டுரை இது நீங்களா மேடம்
Re: மன்னிப்பும் அன்பளிப்பும் .............
தபு சங்கர் சபாஷ் சும்மா பிரமாதமாக உள்ளது பாஸ் சான்சே இல்லை காதல் காவியம் ஒரு ஒத்திகை பார்த்தது போன்றுள்ளது சூப்பர் ரசனையாக உள்ளது.
மார்பு பட்ட பொருளை உடைக்கும் சீன்ஸ் டச்சிங்கா இருக்கு ரசித்து ரசித்துப் படித்தேன் சிறப்பாக உள்ளது
பானும... மேடத்திற்கு நன்றி நன்றி நன்றி சூப்பராக உள்ளது மேடம்
மார்பு பட்ட பொருளை உடைக்கும் சீன்ஸ் டச்சிங்கா இருக்கு ரசித்து ரசித்துப் படித்தேன் சிறப்பாக உள்ளது
பானும... மேடத்திற்கு நன்றி நன்றி நன்றி சூப்பராக உள்ளது மேடம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மன்னிப்பும் அன்பளிப்பும் .............
கேட்டீங்களே ....................ஒரு கேள்விமுனாஸ் சுலைமான் wrote:கடவுளின் தரிசனத்துக்காக
தவமிருக்கும் முனிவர்கள் போல
உன்னைத் தரிசிப்பதற்காக
ஒரே இடத்தில் உட்கார்ந்து
தவமெல்லாம் இருக்க மாட்டேன்.
நீ எந்த மலையின் உச்சியில்
இருக்கிறாய் என்று சொல்…
ஒரு மலையேறும் வீரனைப் போல்
உன்னைத் தேடி வருகிறேன் நான்.
சூப்பரான கவிதைக்கட்டுரை இது நீங்களா மேடம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மன்னிப்பும் அன்பளிப்பும் .............
கடுமையா சிரிக்கிங்க அப்படின்னா என்ன அர்த்தம் சொல்லுங்க...?பானுகமால் wrote:கேட்டீங்களே ....................ஒரு கேள்விமுனாஸ் சுலைமான் wrote:கடவுளின் தரிசனத்துக்காக
தவமிருக்கும் முனிவர்கள் போல
உன்னைத் தரிசிப்பதற்காக
ஒரே இடத்தில் உட்கார்ந்து
தவமெல்லாம் இருக்க மாட்டேன்.
நீ எந்த மலையின் உச்சியில்
இருக்கிறாய் என்று சொல்…
ஒரு மலையேறும் வீரனைப் போல்
உன்னைத் தேடி வருகிறேன் நான்.
சூப்பரான கவிதைக்கட்டுரை இது நீங்களா மேடம்
Re: மன்னிப்பும் அன்பளிப்பும் .............
என்னவோ தெரியல சிரிப்பு வந்துச்சு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மன்னிப்பும் அன்பளிப்பும் .............
நண்பன் wrote:தபு சங்கர் சபாஷ் சும்மா பிரமாதமாக உள்ளது பாஸ் சான்சே இல்லை காதல் காவியம் ஒரு ஒத்திகை பார்த்தது போன்றுள்ளது சூப்பர் ரசனையாக உள்ளது.
மார்பு பட்ட பொருளை உடைக்கும் சீன்ஸ் டச்சிங்கா இருக்கு ரசித்து ரசித்துப் படித்தேன் சிறப்பாக உள்ளது
பானும... மேடத்திற்கு நன்றி நன்றி நன்றி சூப்பராக உள்ளது மேடம்
@. @. @. :.”:
Re: மன்னிப்பும் அன்பளிப்பும் .............
அருமையாக உள்ளது நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|