Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
ஹஜ் ருல் அஸ்வத்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
ஹஜ் ருல் அஸ்வத்
ஹஜ் ருல் அஸ்வத்
ஹஜ்ருல் அஸ்வத் ஒரு ஸ¤வனத்தின் கல்லாகும். ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதனைக் கொண்டு வந்தார்கள். நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட தூபான் வெள்ளத்தின் பொழுது கஃபாவுக்கு பக்கத்தில் உள்ள அபூகுபைஸ் மலையின் மீது அது பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இப்ராஹீம் (அலை) அவர்கள் கஃபாவை புனர்நிர்மாணம் செய்த வேலை கஃபாவை தவாப் செய்யும் ஆரம்ப இடமாக அடையாளம் காட்டுவதற்காக அது உரிய இடத்தில் வைக்கப்பட்டது.
அப்பொழுது அது வெண்ணிறமாகவும் அதன் பிரகாசம் கிழக்கு, மேற்கு, யமன், ஷாம் போன்ற பகுதிகளிலெல்லாம் ஒளிவீசியது.
பிற்காலத்தில் அமாலிகா, ஜுர்ஹும் போன்றவர்களின் காலங்களில் கஃபாவை புனர்நிர்மாணம் செய்தது போல் குறைஷியர்களும் புதுப்பித்த பொழுது ஹஜ்ருல் அஸ்வத்தை உரிய இடத்தில் வைக்கும் விடயத்தில் பெரும் தர்க்கம் ஏற்பட்டு பின் அடுத்த நாள் அதிகாலையில் கஃபா நுழைவாயிலினூடே முதன் முதலில் நுழைபவரே அதனை உரிய இடத்தில் வைக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.
அதற்குப் பொருத்தமானவராக முஹம்மத் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் தயார் செய்தான். என்றாலும் ஒற்றுமையை விரும்பிய நபியவர்கள், தானும் ஏனையோரும் சேர்ந்து ஒரு பிடவையை பயன்படுத்தி கல்லை அதிலே வைத்து எல்லோருமாக சேர்ந்து வைத்தனர். இது நடைபெற்றது சிறப்புமிக்க திங்கட்கிழமையில் ஆகும். அப்போது நபியவர்களுக்கு 35 வயதாகும்.
இஸ்லாத்திற்கு முன்னறும் பின்னரும் அப்துல்லாஹ் பின் துபைர் (ரழி) அவர்களின் காலத்திலும் ஏற்பட்ட தீவிபத்துக்கள் மூலம் இக்கல் சேதமுற்று வெள்ளி பூசி சீர் திருத்தப்பட்டது. ஹிஜ்ரி 188 இல் கலீபா ஹாருன் ரiத் அவர்களுடைய காலத்தில் மீண்டும் வெள்ளி பூசி சீர் செய்யப்பட்டது.
ஹிஜ்ரி 317 இல் திர்மித் என்பவனின் பரம்பரையில் வந்த கராமிதா என்ற கொடியவன் அதனை சேதப்படுத்த மீண்டும் ஹிஜ்ரி 339 செவ்வாயன்று உரிய இடத்தில் வைத்து சரிசெய்யப்பட்டது. ஹிஜ்ரி 363 இல் மீண்டும் ரூம் தேசத்தை சேர்ந்த ஒருவன் பெரும் பணத்திற்கு அடிமைப்பட்டு அதனை சேதப்படுத்தினான். ஹிஜ்ரி (413, 990, 135) ஆகிய காலப்பகுதிகளில் கூட இஸ்லாத்தின் விரோதிகள் அதனை சேதப்படுத்த இறுதியாக ஹிஜ்ரி 1375 ஷஃபான் மாதம் பிறை 22 புதன்கிழமை மஃரிபிற்கு சற்று முன்பு உரிய இடத்தில் வைக்கப்பட அது இன்று வரை நிலைத்திருக்கிறது.
ஹஜ்ருல் அஸ்வத் கல்லிற்கு ருக்ன் என்றுமொரு பெயருள்ளது.
பாலை விடவும் வெண்மையாக இருந்த அந்தக் கல்லை இணைவைப்பவர்களின் பாவச் செயல்கள் கறுப்பாக்கியது. இணைவைப்பவர்களால் ஏற்பட்ட கறுப்பை அல்லாஹ் ஈமான் உள்ளவர்களின் நன்மைகள் மூலம் வெண்ணிறம் ஆக்காது வைத்திருப்பதன் காரணமாவது ‘பாவங்கள் கல்லையே கறுப்பாக்கியுள்ளது. அப்படியென்றால் பாவங்களினால் கல்புகள் (உள்ளங்கள்) எவ்வளவு கறுப்படையும்’ என்பதை பின்னோர் உணர்வதற்கே!
பிரார்த்தனையில் ஈடுபடுபவர்களுக்கு ஆமீன் சொல்வதற்காக 70 மலக்குகளை அல்லாஹ் பொறுப்பு சாட்டியுள்ளான். (அல்ஹதீஸ்)
அது ஸ¤வனத்திலிருந்து வந்தது போல் மீண்டும் ஒருநாள் அங்கேயே கொண்டு செல்லப்படும். அதற்கு முன்னர் நீங்கள் அதனால் பயன்பெற்றுக் கொள்வீர். (அல்ஹதீஸ்)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களும் முத்தமிட்ட அக்கல்லை நம்முடைய முகமும், வாயும் எவ்வளவு பாசத்துடன் முத்தமிட வேண்டும்.
ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுவது பாவங்களுக்கு பரிகாரமாகும். உண்மையான நல்ல எண்ணத்துடன் முத்தமிட்டவர்களுக்கு சாட்சி பகரும் வகையில் மறுமை நாளில் இதற்கு நாவும் இரு உதடுகளும் கொடுக்கப்படும். இக்கல்லின் பக்கமாக கேட்கும் துஆ அங்கீகாரம் பெரும். மலக்குகளும் இக்கல்லை முத்தமிடுகிறார்கள். (அல்ஹதீஸ்) ஹஜ்ருல் அஸ்வத்தை எப்பொழுதும் முத்தமிடுவது விரும்பத்தக்க நல்ல காரியமாகும்.
தொங்கோட்டம் ஓட முன்பு இதனை முத்தமிடுவது சிறப்பானதாகும். அல்லாவிடில் தொட்டு முகர்தல், அதன் பக்கம் கைகளினால் சைகைகாட்டல் அதனை தொட்ட பொருளை முகர்தல் அனைத்தும் நல்ல காரியமாகும். வாயினால் முத்தமிடுவது போல் சைகைகாட்டுவது முறையல்ல. முத்தமிடும்போது சத்தம் வராது பார்த்துக் கொள்ள வேண்டும். அதனை தொட்ட கையை முகத்தில் தடவிக் கொள்வது நல்ல காரியமாகும். பிரருக்கு தீங்கிழைத்து முத்தமிடுவது குற்றமாகும்.
பெண்கள், ஆண்களினால் நெருக்கடி இல்லாத போது முத்தமிடுவது ஸ¤ன்னத்து, முத்தமிடும் போது ‘பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்’ என்று கூற வேண்டும் இன்னும் துஆக்கள் உண்டு.
ஹஜ்ருல் அஸ்வத் ஒரு கல்லாகும்; எனினும் அது ஒரு புனிதக் கல்லாகும். அதனால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அதன் மூலம் அல்லாஹ்வை நெருங்க முடியும். எவரும் அதனை வணங்க எண்ணாது அல்லாஹ்வை நெருங்குவதற்கான ஒரு சாதனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே மேற்படி நடப்போமாக! நன்றி!!!
கலீபதுஷ்ஷாதுலி
எம்.எஸ்.எம். இஸ்திகார் (பாரி)
(அதிபர், மின்னதுல் பாஸிய்யா அரபுக் கல்லூரி, மாத்தறை)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|