Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
மாமழை போற்றுதும்..
4 posters
Page 1 of 1
மாமழை போற்றுதும்..
'பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் இடிந்தன. மக்கள் மாண்டனர். கன மழையால் பல்வேறு ஊர்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீராணம், புழல் ஏரிகள் நிரம்பி விட்டன. மேட்டூர் அணை உளிட்ட பல்வேறு அணைகளும் நிரம்பி வருகின்றன'. இவையெல்லாம் கடந்த சில தினங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள்.
நமக்கென்று பெரிதாக வற்றாத ஜீவ நதிகள் எதுவும் இல்லை. வறட்சிக் காலத்தில் கர்நாடகா, கேரளா, ஆந்திராவுடன் மல்லுக் கட்டியே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். மழைக்காலத்தில் பெருவேள்ளத்தோடு போராடுகிறோம்.
ஏனிந்த நிலை ? மழைப் பருவம் வரப்போகிறது என்பது முன்பே தெரிந்தும் கூட அதற்கான திட்டமிடலோ முன்னேற்ப்படுகளோ நம்மிடம் சிறிதும் இலை. ஏரிகள், குளங்கள் தூர் வாரப்படவில்லை. ஊரில் உள்ள மழைநீர் வடிகால்கள் முன் கூட்டியே பராமரிக்கப்படவில்லை. கடலில் கலந்து விரயமாகும் மழைநீரைச் சேமிப்பதற்கான சேகரிப்பு தொட்டிகளையும் நாம் அமைத்துக் கொள்ளவில்லை.
முன்பெல்லாம் மழைநீர் ஊரிலுள்ள ஏரி, குளம், குட்டை ஆகியவற்றைச் சென்றடையும். ஆனால், இன்று பல்வேறு குளங்கள், ஏரிகள் இருந்த இடங்களில் குடியிருப்புகள் வளர்ந்து நிற்கின்றன. அவற்றிற்கு நீர் செல்லும் பாதைகளும் தடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தண்ணீர் எங்கே செல்லும் ? தற்போது புழல் ஏரி நிரம்பி விட்டது. இந்த ஆண்டு சென்னைக்குத் தண்ணீர் பற்றாக்குறை வராது என்கிறார்கள். அதேநேரம், சில நாட்கள் பெய்த மழையிலே புழல் எப்படி நிரம்பியது ? பெய்யும் மழை சிறுசிறு ஏரி, குளம், குட்டிகள் என்று படிப்படியாக நிரம்பி அதன்பிறகுதான் புழல் ஏரிக்குத் தண்ணீர் வரவேண்டும். ஆனால், முன்பிருந்த அந்தச் சிறுசிறு குளம், குட்டைகள் எல்லாம் அழிக்கப்பட்டு அடையாளமின்றிப் போனதால், இன்று மழைநீர் ஒரேஅடியாக புழலுக்கு வந்து சேர்ந்துவிடுகிறது என்பதே நிஜம்.
மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையையும் நாம் கெடுத்து வைத்திருக்கிறோம். விளைவு என்னவென்று தெரியாமல் சர்வ அலட்சியமாக பாலிதீன் கவர்களை வீசி எறிகிறோம். அவை மண்ணில் புதைந்து மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையைத் தடுக்கிறது.
ஆற்றுச் செல்வங்களையும் நாம் சுரண்டிவிட்டோம். பல ஆறுகள் ஊரின் கழிவுநீர்க் கால்வாய்களாகவே உள்ளன. அங்கு, லாரியில் மண் அள்ளியது போதாதென்று பொக்லைன் வைத்து மணல் செல்வத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். இதனால், ஆறு தண்ணீரச் சேமித்துவைக்கும் ஆற்றலை இழந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது.
நம் முன்னோர்கள் இயற்கையைப் போற்றினார்கள். அதனுடன் இயைந்து வாழ்ந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஏரிகளும், குளங்களும் அமைத்து நீர்வளத்தைத் தேக்கி வைத்தார்கள். அந்தக் காலப் பெரியவர்கள் நீர் நிலைகளை ஏற்ப்படுத்துவதை தம் வாழ்வின் பெரிய தர்மமாக நினைத்ததுடன் நீர்நிலைகளை அழித்தல் பெரும் நாசம் என்பதனையும் உணர்ந்திருந்தார். ஆண்டுதோறும் ஏரிகள், குளங்கள் தூர் வாரப்பட்டதை உறுதி செய்கிறது மாமல்லபுரம் பையனூர்க் கல்வெட்டு. ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினார்கள். ஆனால், நாமோ ? அது குறித்த அலட்சிய மனோபாவத்துடனே இருக்கிறோம்.
ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டி அமைப்போம். வீட்டின் பராமரிப்பு அம்சங்களில் இதையும் ஒன்றாக நினைப்போம். ஏரி, குளம் போன்ற நீராதாரங்களில் குப்பைகள், கழிவு நீரைச் செலுத்தாமல் அவற்றைப் பாதுகாப்பதை நம் கடமையாக நினைப்போம்.
சேமிப்பு என்பது பொருளாதாரத்துக்கு மட்டுமல், நீராதாரத்துக்கும்தான் என்பதை உணர்வோம்.
- நன்றி புதிய தலைமுறை
நமக்கென்று பெரிதாக வற்றாத ஜீவ நதிகள் எதுவும் இல்லை. வறட்சிக் காலத்தில் கர்நாடகா, கேரளா, ஆந்திராவுடன் மல்லுக் கட்டியே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். மழைக்காலத்தில் பெருவேள்ளத்தோடு போராடுகிறோம்.
ஏனிந்த நிலை ? மழைப் பருவம் வரப்போகிறது என்பது முன்பே தெரிந்தும் கூட அதற்கான திட்டமிடலோ முன்னேற்ப்படுகளோ நம்மிடம் சிறிதும் இலை. ஏரிகள், குளங்கள் தூர் வாரப்படவில்லை. ஊரில் உள்ள மழைநீர் வடிகால்கள் முன் கூட்டியே பராமரிக்கப்படவில்லை. கடலில் கலந்து விரயமாகும் மழைநீரைச் சேமிப்பதற்கான சேகரிப்பு தொட்டிகளையும் நாம் அமைத்துக் கொள்ளவில்லை.
முன்பெல்லாம் மழைநீர் ஊரிலுள்ள ஏரி, குளம், குட்டை ஆகியவற்றைச் சென்றடையும். ஆனால், இன்று பல்வேறு குளங்கள், ஏரிகள் இருந்த இடங்களில் குடியிருப்புகள் வளர்ந்து நிற்கின்றன. அவற்றிற்கு நீர் செல்லும் பாதைகளும் தடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தண்ணீர் எங்கே செல்லும் ? தற்போது புழல் ஏரி நிரம்பி விட்டது. இந்த ஆண்டு சென்னைக்குத் தண்ணீர் பற்றாக்குறை வராது என்கிறார்கள். அதேநேரம், சில நாட்கள் பெய்த மழையிலே புழல் எப்படி நிரம்பியது ? பெய்யும் மழை சிறுசிறு ஏரி, குளம், குட்டிகள் என்று படிப்படியாக நிரம்பி அதன்பிறகுதான் புழல் ஏரிக்குத் தண்ணீர் வரவேண்டும். ஆனால், முன்பிருந்த அந்தச் சிறுசிறு குளம், குட்டைகள் எல்லாம் அழிக்கப்பட்டு அடையாளமின்றிப் போனதால், இன்று மழைநீர் ஒரேஅடியாக புழலுக்கு வந்து சேர்ந்துவிடுகிறது என்பதே நிஜம்.
மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையையும் நாம் கெடுத்து வைத்திருக்கிறோம். விளைவு என்னவென்று தெரியாமல் சர்வ அலட்சியமாக பாலிதீன் கவர்களை வீசி எறிகிறோம். அவை மண்ணில் புதைந்து மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையைத் தடுக்கிறது.
ஆற்றுச் செல்வங்களையும் நாம் சுரண்டிவிட்டோம். பல ஆறுகள் ஊரின் கழிவுநீர்க் கால்வாய்களாகவே உள்ளன. அங்கு, லாரியில் மண் அள்ளியது போதாதென்று பொக்லைன் வைத்து மணல் செல்வத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். இதனால், ஆறு தண்ணீரச் சேமித்துவைக்கும் ஆற்றலை இழந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது.
நம் முன்னோர்கள் இயற்கையைப் போற்றினார்கள். அதனுடன் இயைந்து வாழ்ந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஏரிகளும், குளங்களும் அமைத்து நீர்வளத்தைத் தேக்கி வைத்தார்கள். அந்தக் காலப் பெரியவர்கள் நீர் நிலைகளை ஏற்ப்படுத்துவதை தம் வாழ்வின் பெரிய தர்மமாக நினைத்ததுடன் நீர்நிலைகளை அழித்தல் பெரும் நாசம் என்பதனையும் உணர்ந்திருந்தார். ஆண்டுதோறும் ஏரிகள், குளங்கள் தூர் வாரப்பட்டதை உறுதி செய்கிறது மாமல்லபுரம் பையனூர்க் கல்வெட்டு. ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினார்கள். ஆனால், நாமோ ? அது குறித்த அலட்சிய மனோபாவத்துடனே இருக்கிறோம்.
ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டி அமைப்போம். வீட்டின் பராமரிப்பு அம்சங்களில் இதையும் ஒன்றாக நினைப்போம். ஏரி, குளம் போன்ற நீராதாரங்களில் குப்பைகள், கழிவு நீரைச் செலுத்தாமல் அவற்றைப் பாதுகாப்பதை நம் கடமையாக நினைப்போம்.
சேமிப்பு என்பது பொருளாதாரத்துக்கு மட்டுமல், நீராதாரத்துக்கும்தான் என்பதை உணர்வோம்.
- நன்றி புதிய தலைமுறை
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: மாமழை போற்றுதும்..
ஏனிந்த நிலை ? மழைப் பருவம் வரப்போகிறது என்பது முன்பே தெரிந்தும் கூட அதற்கான திட்டமிடலோ முன்னேற்ப்படுகளோ நம்மிடம் சிறிதும் இலை. ஏரிகள், குளங்கள் தூர் வாரப்படவில்லை. ஊரில் உள்ள மழைநீர் வடிகால்கள் முன் கூட்டியே பராமரிக்கப்படவில்லை. கடலில் கலந்து விரயமாகும் மழைநீரைச் சேமிப்பதற்கான சேகரிப்பு தொட்டிகளையும் நாம் அமைத்துக் கொள்ளவில்லை.
முன்பெல்லாம் மழைநீர் ஊரிலுள்ள ஏரி, குளம், குட்டை ஆகியவற்றைச் சென்றடையும். ஆனால், இன்று பல்வேறு குளங்கள், ஏரிகள் இருந்த இடங்களில் குடியிருப்புகள் வளர்ந்து நிற்கின்றன. அவற்றிற்கு நீர் செல்லும் பாதைகளும் தடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தண்ணீர் எங்கே செல்லும் ? தற்போது புழல் ஏரி நிரம்பி விட்டது. இந்த ஆண்டு சென்னைக்குத் தண்ணீர் பற்றாக்குறை வராது என்கிறார்கள். அதேநேரம், சில நாட்கள் பெய்த மழையிலே புழல் எப்படி நிரம்பியது ? பெய்யும் மழை சிறுசிறு ஏரி, குளம், குட்டிகள் என்று படிப்படியாக நிரம்பி அதன்பிறகுதான் புழல் ஏரிக்குத் தண்ணீர் வரவேண்டும். ஆனால், முன்பிருந்த அந்தச் சிறுசிறு குளம், குட்டைகள் எல்லாம் அழிக்கப்பட்டு அடையாளமின்றிப் போனதால், இன்று மழைநீர் ஒரேஅடியாக புழலுக்கு வந்து சேர்ந்துவிடுகிறது என்பதே நிஜம்.
முன்பெல்லாம் மழைநீர் ஊரிலுள்ள ஏரி, குளம், குட்டை ஆகியவற்றைச் சென்றடையும். ஆனால், இன்று பல்வேறு குளங்கள், ஏரிகள் இருந்த இடங்களில் குடியிருப்புகள் வளர்ந்து நிற்கின்றன. அவற்றிற்கு நீர் செல்லும் பாதைகளும் தடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தண்ணீர் எங்கே செல்லும் ? தற்போது புழல் ஏரி நிரம்பி விட்டது. இந்த ஆண்டு சென்னைக்குத் தண்ணீர் பற்றாக்குறை வராது என்கிறார்கள். அதேநேரம், சில நாட்கள் பெய்த மழையிலே புழல் எப்படி நிரம்பியது ? பெய்யும் மழை சிறுசிறு ஏரி, குளம், குட்டிகள் என்று படிப்படியாக நிரம்பி அதன்பிறகுதான் புழல் ஏரிக்குத் தண்ணீர் வரவேண்டும். ஆனால், முன்பிருந்த அந்தச் சிறுசிறு குளம், குட்டைகள் எல்லாம் அழிக்கப்பட்டு அடையாளமின்றிப் போனதால், இன்று மழைநீர் ஒரேஅடியாக புழலுக்கு வந்து சேர்ந்துவிடுகிறது என்பதே நிஜம்.
உண்மைதான் இப்போது முன்னடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை இருந்தாலும் இயற்கை எப்போது தன் விளையாட்டை ஆறம்பிக்குமென்று தெரியாது
நல்லதோர் கண்ணோட்டம் நன
்றிநல்லதோர் கண்ணோட்டம் நன
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மாமழை போற்றுதும்..
இங்கும் அந்த நிலைதான் சார் :!.:ஆற்றுச் செல்வங்களையும் நாம் சுரண்டிவிட்டோம். பல ஆறுகள் ஊரின் கழிவுநீர்க் கால்வாய்களாகவே உள்ளன. அங்கு, லாரியில் மண் அள்ளியது போதாதென்று பொக்லைன் வைத்து மணல் செல்வத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். இதனால், ஆறு தண்ணீரச் சேமித்துவைக்கும் ஆற்றலை இழந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது.
Re: மாமழை போற்றுதும்..
முனாஸ் சுலைமான் wrote:இங்கும் அந்த நிலைதான் சார் :!.:ஆற்றுச் செல்வங்களையும் நாம் சுரண்டிவிட்டோம். பல ஆறுகள் ஊரின் கழிவுநீர்க் கால்வாய்களாகவே உள்ளன. அங்கு, லாரியில் மண் அள்ளியது போதாதென்று பொக்லைன் வைத்து மணல் செல்வத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். இதனால், ஆறு தண்ணீரச் சேமித்துவைக்கும் ஆற்றலை இழந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது.
பொது வாழ்வில் உள்ள உங்களை போன்ற நல்ல உள்ளங்களால் தான் ,இதற்கு தீர்வினை கண்டறிய இயலும்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: மாமழை போற்றுதும்..
அரசுடன் சேர்ந்து அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம் சிறந்த பகிரவுக்கு நன்றி உறவே.
நாட்டுக்கு சென்றும் எங்களுடன் தொடர்பு கொண்டள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி நாட்டில் அனைவரும் நலமாக உள்ளார்களா உற்றார் உறவினர்கள் அனைவரும் நலம்தானே?
நாட்டுக்கு சென்றும் எங்களுடன் தொடர்பு கொண்டள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி நாட்டில் அனைவரும் நலமாக உள்ளார்களா உற்றார் உறவினர்கள் அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாமழை போற்றுதும்..
ஆமா இப்ப நாட்டில் இருக்கிறீர்கள் எல்லோருக்கும் புனித ஈகைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.நண்பன் wrote:அரசுடன் சேர்ந்து அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம் சிறந்த பகிரவுக்கு நன்றி உறவே.
நாட்டுக்கு சென்றும் எங்களுடன் தொடர்பு கொண்டள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி நாட்டில் அனைவரும் நலமாக உள்ளார்களா உற்றார் உறவினர்கள் அனைவரும் நலம்தானே?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|