Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
வன்முறைகளை நிறுத்த சிரியாவுக்கு அரபு லீக் மூன்று நாள் கெடு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
வன்முறைகளை நிறுத்த சிரியாவுக்கு அரபு லீக் மூன்று நாள் கெடு
வன்முறைகளை நிறுத்த சிரியாவுக்கு அரபு லீக் மூன்று நாள் கெடு
பிரான்ஸ், மொரோக்கோ தூதுவர்கள் திரும்ப அழைப்பு
வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர சிரியாவுக்கு அரபு லீக் மூன்று நாள் காலக்கெடு விதித்துள்ளது. சிரிய அரசு வன்முறைகளை நிறுத்தாவிட்டால் வரும் சனிக்கிழமை (நாளை) அதன் மீது பொருளாதார தடை உட்பட வன்மையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரபு லீக் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரியா விவகாரம் குறித்து ஆலோசிக்க அரவு லீக்கின் அவசர கூட்டம் மொரோக்கோ தலைநகர் ரபாட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலேயே சிரியாவுக்கு மேலும் மூன்று நாள் காலக்கெடு விதிக்க தீர்மானிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அரபு லீக் கூட்டத்தின் போது சிரிய அரசை அரபு லீக் அமைப்பில் இருந்து இடைநீக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்போது சிரியா தனது வன்முறைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையிலேயே அரபு லீக் நேற்று முன்தினம் அவசரமாக கூடியது.
எனினும், இந்த கூட்டத்தை சிரிய அரசு தவிர்த்துக் கொண்டது. இதில் அரபு லீக் அமைப்பில் அங்கத்துவம் பெறாத துருக்கியும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. துருக்கியின் வெளியுறவு அமைச்சர் அஹமட் டவுடொக்லு இந்த கூட்டத்தில் பங்கேற்று சிரியா மீதான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.
இதனிடையே அரபு லீக்கின் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிரிய தலைநகர் டமஸ்கஸ்ஸில் அரசுக்கு ஆதரவானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மொரோக்கோ தூதரகங்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து மொரோக்கோ தனது தூதுவரை திருப்பி அழைத்துக் கொண்டுள்ளது.
இதேபோன்று, சிரியாவில் உள்ள பிரான்ஸ் தூதர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் அலைன் ஜுப்பே இந்த தகவலை அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிரியாவில் வன்முறைகள் அதிகரித்து வருவதால் அங்கிருந்து தூதுவர் திரும்பி அழைக்கப்பட்டதாக ஜுப்பே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை சிரியாவில் அரச எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்களில் மேலும் 11 பேர் கொல்லப்பட்டதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். டரா மற்றும் சுபார்ப் பகுதிகளில் நேற்று முன்தினம் நடந்த வன்முறைகளிலேயே இவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் கடந்த 2ம் திகதி முதல் சிரியாவில் இடம்பெற்ற வன்முறைகளில் 376 பேரளவில் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தவிர, நேற்று முன்தினம் சிரிய உளவுப் பிரிவு மீது இராணுவத்தில் இருந்து பிரிந்து சென்ற சுயாதீன படையின் தாக்குதலால் 6 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்த சுயாதீனப் படையில் 15 ஆயிரம் வீரர்கள் அளவில் செயற்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அரச எதிர்ப்பாளர்களுடன் செயற்படும் இந்த சுயாதீனப் படை வீரர்கள் கடந்த ஜூலை மாதம் தொடக்கம் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் இராணுவத்திற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சிரிய உளவுப் பிரிவு கட்டடம் மீதான தாக்குதலே சுயாதீனப் படை நடத்திய மிகப்பெரிய தாக்குதல் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலால் டமஸ்கஸ்ஸிற்கு அருகாமையிலுள்ள மேற்படி உளவுப் பிரிவுத் தளம் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சிரியாவில் இடம்பெற்று வரும் வன்முறைகளால் இதுவரை 3500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் சிரியாவில் சர்வதேச ஊடகவியலாளர்கள் இயங்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதனால் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் எதனையும் உறுதிப்படுத்த முடியாதுள்ளது.
பிரான்ஸ், மொரோக்கோ தூதுவர்கள் திரும்ப அழைப்பு
வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர சிரியாவுக்கு அரபு லீக் மூன்று நாள் காலக்கெடு விதித்துள்ளது. சிரிய அரசு வன்முறைகளை நிறுத்தாவிட்டால் வரும் சனிக்கிழமை (நாளை) அதன் மீது பொருளாதார தடை உட்பட வன்மையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரபு லீக் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரியா விவகாரம் குறித்து ஆலோசிக்க அரவு லீக்கின் அவசர கூட்டம் மொரோக்கோ தலைநகர் ரபாட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலேயே சிரியாவுக்கு மேலும் மூன்று நாள் காலக்கெடு விதிக்க தீர்மானிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அரபு லீக் கூட்டத்தின் போது சிரிய அரசை அரபு லீக் அமைப்பில் இருந்து இடைநீக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்போது சிரியா தனது வன்முறைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையிலேயே அரபு லீக் நேற்று முன்தினம் அவசரமாக கூடியது.
எனினும், இந்த கூட்டத்தை சிரிய அரசு தவிர்த்துக் கொண்டது. இதில் அரபு லீக் அமைப்பில் அங்கத்துவம் பெறாத துருக்கியும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. துருக்கியின் வெளியுறவு அமைச்சர் அஹமட் டவுடொக்லு இந்த கூட்டத்தில் பங்கேற்று சிரியா மீதான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.
இதனிடையே அரபு லீக்கின் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிரிய தலைநகர் டமஸ்கஸ்ஸில் அரசுக்கு ஆதரவானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மொரோக்கோ தூதரகங்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து மொரோக்கோ தனது தூதுவரை திருப்பி அழைத்துக் கொண்டுள்ளது.
இதேபோன்று, சிரியாவில் உள்ள பிரான்ஸ் தூதர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் அலைன் ஜுப்பே இந்த தகவலை அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிரியாவில் வன்முறைகள் அதிகரித்து வருவதால் அங்கிருந்து தூதுவர் திரும்பி அழைக்கப்பட்டதாக ஜுப்பே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை சிரியாவில் அரச எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்களில் மேலும் 11 பேர் கொல்லப்பட்டதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். டரா மற்றும் சுபார்ப் பகுதிகளில் நேற்று முன்தினம் நடந்த வன்முறைகளிலேயே இவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் கடந்த 2ம் திகதி முதல் சிரியாவில் இடம்பெற்ற வன்முறைகளில் 376 பேரளவில் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தவிர, நேற்று முன்தினம் சிரிய உளவுப் பிரிவு மீது இராணுவத்தில் இருந்து பிரிந்து சென்ற சுயாதீன படையின் தாக்குதலால் 6 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்த சுயாதீனப் படையில் 15 ஆயிரம் வீரர்கள் அளவில் செயற்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அரச எதிர்ப்பாளர்களுடன் செயற்படும் இந்த சுயாதீனப் படை வீரர்கள் கடந்த ஜூலை மாதம் தொடக்கம் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் இராணுவத்திற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சிரிய உளவுப் பிரிவு கட்டடம் மீதான தாக்குதலே சுயாதீனப் படை நடத்திய மிகப்பெரிய தாக்குதல் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலால் டமஸ்கஸ்ஸிற்கு அருகாமையிலுள்ள மேற்படி உளவுப் பிரிவுத் தளம் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சிரியாவில் இடம்பெற்று வரும் வன்முறைகளால் இதுவரை 3500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் சிரியாவில் சர்வதேச ஊடகவியலாளர்கள் இயங்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதனால் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் எதனையும் உறுதிப்படுத்த முடியாதுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிரியாவுக்கு அழுத்தம்: பாதுகாப்பு சபையை அணுக அரபு லீக் தீர்மானம்
» சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை
» அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை
» அரபு லீக் பார்வையாளர்களை அனுமதிக்க சிரியா இணக்கம்
» சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அரபு லீக் புதிய தீர்வுத்திட்டம்
» சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை
» அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை
» அரபு லீக் பார்வையாளர்களை அனுமதிக்க சிரியா இணக்கம்
» சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அரபு லீக் புதிய தீர்வுத்திட்டம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|