Latest topics
» அட...ஆமால்ல?by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு
4 posters
Page 1 of 1
சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு
ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத கால சிறைத் தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று கொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மேல் நீதிமன்றக் கட்டடத்தில் அறிவிக்கப்பட்டது.
நீதவான் தீபாலி விஜேசுந்திர தலைமையிலான ட்ரயல் எட் பார் நீதவான் குழாம் இந்த வழக்கை கடந்த ஒன்றரை வருட காலமாக விசாரணை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதிக் கட்ட போரின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்திருந்ததாக ஆங்கில ஊடகமொன்றுக்கு சரத் பொன்சேகா நேர் காணல் வழங்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பாதுகாப்புக் செயலாளருக்கும், நாட்டுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் சரத் பொன்சேகா தகவல்களை வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதவான் குழாம், சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இதற்கு முன்னர் இராணுவ நீதிமன்றினால் சரத் பொன்சேகாவிற்கு 30 மாத சிறைத்தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தில் கடமையாற்றிய போது அரசியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
படையினருக்கோ, நாட்டுக்கோ களங்கம் ஏற்படும் வகையில் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை என நான்கு நட்சத்திர ஜெனராலாக பதவி வகித்த சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரிக்கா போலியாக தம்மீது குற்றம் சுமத்துவதாகவும் தம்முடனான நேர்காணல் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
மேற்படி வெள்ளைக்கொடி வழக்கினால் நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
ஒரு நீதவான் சரத் பொன்சேகா குற்றமற்றவர் என தெரிவித்தார்
வெள்ளைக் கொடி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றமற்றவர் என விசாரணையின்போது ஒரு நீதவான் தெரிவித்துள்ளார்.
மேல் நீதிமன்ற நீதவான்களான தீபாலி விஜேசுந்தர, சுல்பியர் ராசின் மற்றும் வேரவௌ ஆகிய மூவர் ஆகியோர் இந்த வழக்கு விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதில் நீதவான் தீபாவலி விஜேசுந்தர மறறும் சர்பிக் ராசின் ஆகியோர், மூன்று குற்றச்சாட்டுக்களில் ஒன்றில் சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளனர்.
வழக்கை விசாரணை செய்த பி. வேரவௌ என்னும் நீதவான் சரத் பொன்சேகா மூன்று குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளி கிடையாது என அறிவித்துள்ளார்.
இதேவேளை, அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது பிடிக்காத தரப்பினர் தம்மை சிறையில் அடைக்க வேண்டுமென விரும்புவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நீதிமன்ற வளாகத்தில் தெரிவித்துள்ளார்.
3ம் இணைப்பு
அநீதியான தீர்ப்பு: பிரதிவாதி கூண்டிலிருந்து பொன்சேகா
ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிரணி வேட்பாளராக போட்டியிட்ட ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிப்பதை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது என்பதுடன் இந்த அநீதியான தீர்ப்பை நான் நிராகரிக்கின்றேன் என வெள்ளைக்கொடி விவகார வழக்கின் பிரதிவாதியான சரத் பொன்சேகா தெரிவித்தார்.
வெள்ளைக்கொடி விவகார வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் பிரதிவாதியின் கூண்டிலிருந்து தனது கருத்தை தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பு நீதிமன்ற வரலாற்றில் கேள்விக்குட்படுத்தும். அவ்வாறு இடம்பெறக்கூடாது என்று நான் எண்ணுகின்றேன் என்பதுடன் அநீதியான தீர்ப்பை நிராகரிக்கின்றேன் என்றார்.
இதேவேளை, வெள்ளைக்கொடி வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆட்சேபித்து, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேன்முறையீடு நீதிமன்றில் மனுதாக்கல் செய்யவுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவை குற்றவாளியென அறிவித்த அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட சிறைத்தண்டனையும் 5000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று கொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மேல் நீதிமன்றக் கட்டடத்தில் அறிவிக்கப்பட்டது.
நீதவான் தீபாலி விஜேசுந்திர தலைமையிலான ட்ரயல் எட் பார் நீதவான் குழாம் இந்த வழக்கை கடந்த ஒன்றரை வருட காலமாக விசாரணை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதிக் கட்ட போரின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்திருந்ததாக ஆங்கில ஊடகமொன்றுக்கு சரத் பொன்சேகா நேர் காணல் வழங்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பாதுகாப்புக் செயலாளருக்கும், நாட்டுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் சரத் பொன்சேகா தகவல்களை வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதவான் குழாம், சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இதற்கு முன்னர் இராணுவ நீதிமன்றினால் சரத் பொன்சேகாவிற்கு 30 மாத சிறைத்தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தில் கடமையாற்றிய போது அரசியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
படையினருக்கோ, நாட்டுக்கோ களங்கம் ஏற்படும் வகையில் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை என நான்கு நட்சத்திர ஜெனராலாக பதவி வகித்த சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரிக்கா போலியாக தம்மீது குற்றம் சுமத்துவதாகவும் தம்முடனான நேர்காணல் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
மேற்படி வெள்ளைக்கொடி வழக்கினால் நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
ஒரு நீதவான் சரத் பொன்சேகா குற்றமற்றவர் என தெரிவித்தார்
வெள்ளைக் கொடி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றமற்றவர் என விசாரணையின்போது ஒரு நீதவான் தெரிவித்துள்ளார்.
மேல் நீதிமன்ற நீதவான்களான தீபாலி விஜேசுந்தர, சுல்பியர் ராசின் மற்றும் வேரவௌ ஆகிய மூவர் ஆகியோர் இந்த வழக்கு விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதில் நீதவான் தீபாவலி விஜேசுந்தர மறறும் சர்பிக் ராசின் ஆகியோர், மூன்று குற்றச்சாட்டுக்களில் ஒன்றில் சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளனர்.
வழக்கை விசாரணை செய்த பி. வேரவௌ என்னும் நீதவான் சரத் பொன்சேகா மூன்று குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளி கிடையாது என அறிவித்துள்ளார்.
இதேவேளை, அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது பிடிக்காத தரப்பினர் தம்மை சிறையில் அடைக்க வேண்டுமென விரும்புவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நீதிமன்ற வளாகத்தில் தெரிவித்துள்ளார்.
3ம் இணைப்பு
அநீதியான தீர்ப்பு: பிரதிவாதி கூண்டிலிருந்து பொன்சேகா
ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிரணி வேட்பாளராக போட்டியிட்ட ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிப்பதை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது என்பதுடன் இந்த அநீதியான தீர்ப்பை நான் நிராகரிக்கின்றேன் என வெள்ளைக்கொடி விவகார வழக்கின் பிரதிவாதியான சரத் பொன்சேகா தெரிவித்தார்.
வெள்ளைக்கொடி விவகார வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் பிரதிவாதியின் கூண்டிலிருந்து தனது கருத்தை தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பு நீதிமன்ற வரலாற்றில் கேள்விக்குட்படுத்தும். அவ்வாறு இடம்பெறக்கூடாது என்று நான் எண்ணுகின்றேன் என்பதுடன் அநீதியான தீர்ப்பை நிராகரிக்கின்றேன் என்றார்.
இதேவேளை, வெள்ளைக்கொடி வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆட்சேபித்து, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேன்முறையீடு நீதிமன்றில் மனுதாக்கல் செய்யவுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவை குற்றவாளியென அறிவித்த அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட சிறைத்தண்டனையும் 5000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
Re: சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு
பகிர்வுக்கு நன்றி இதுக்குத்தான் அரசாங்கத்தோடு மோதக்கூடாது என்று சொல்றது
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு
:silent: :silent: :silent: :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|