Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
1996 உலககோப்பையில் மேட்ச் பிக்சிங்:
2 posters
Page 1 of 1
1996 உலககோப்பையில் மேட்ச் பிக்சிங்:
1996-ம் ஆண்டு உலக கோப்பை அரை இறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்தியா-இலங்கை மோதிய இந்த ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போதைய இந்திய அணி கேப்டன் அசாருதீன் டாஸ் வென்று இலங்கையை முதலில் ஆட அழைத்தார்.
இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 251 ரன் எடுத்தது. பனிதுளி காரணமாக இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. 129 ரன்னுக்கு 8 விக்கெட் என்ற நிலையில் இருந்தபோது ரசிகர்கள் வீரர்களின் மோசமான ஆட்டத்தால் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
அசாருதீன் டாஸ் வென்று ஏன் முதலில் பேட்டிங் செய்யவில்லை என்று அப்போதே இது தொடர்பாக விமர்சிக்கப்பட்டது. ஜெயசூர்யா-கலுவதர்னாவின் தொடக்க ஜோடி அதிரடியாக ஆடியதால் இலங்கை அணி எந்த இலக்கையும் எடுக்க கூடிய நிலை இருந்தது.
லீக் ஆட்டத்தில் இந்தியா எடுத்த 271 ரன்னை இலங்கை எளிதாக எடுத்து வெற்றி பெற்றது. இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான அரை இறுதியில் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ததாக அப்போதே அசாருதீன் மற்றும் அணி நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் 1996 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான அரை இறுதி ஆட்டம் மேட்ச் பிக்சிங் (சூதாட்டம்) செய்யப்பட்டு இருப்பதாக சந்தேகிக்றேன் என்று அப்போதைய அணியில் இடம் பெற்று இருந்த வினோத் காம்ப்ளி அதிரடியாக தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.
டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்த முடிவு தனக்கு அதிர்ச்சி அளித்ததாகவும், அதோடு தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாகவும் தொலைக்காட்சி பேட்டியில் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதை அசாருதீன் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
காம்ப்ளி ஒரு முட்டாள். என்ன பேசுவது என்று கூட தெரியாமல் பேசுகிறார். அவரது குற்றச்சாட்டு முற்றிலும் முட்டாள் தனமானது. டாஸ் வென்றால் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஒரு தினத்துக்கு முன்பே அணி வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வீரர்கள் ஒட்டு மொத்தமாக முடிவு செய்தே பீல்டிங்கை தேர்வு செய்தோம்.
அணி வீரர்களின் கூட்டம் நடக்கும் போது காம்ப்ளி தூங்கி கொண்டிருந்தார் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். காம்ப்ளி தனது நடத்தையினாலேயே அணியில் இருந்து நீக்கப்பட்டார். குடித்துவிட்டு இரவு நேரத்தில் தாமதமாக வருவது, அடிக்கடி சண்டை போடுவது என்பது அவரது வாடிக்கை. இது அனைவருக்கும் தெரிந்தது.
காம்ப்ளின் இந்த குற்றச்சாட்டு அப்போதைய இந்திய அணியில் இடம் பெற்று இருந்த சஞ்சய் மஞ்சுரேக்கர், நயன் மோங்கியா, வெங்கடபதி ராஜூ மற்றும் மேலாளர் அஜீத் வடேகர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அசாருதீனுக்கு ஆதரவாக அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர்: 1996 உலக கோப்பை அரை இறுதியில் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. தவறான முடிவு தான். ஆனால் இந்த முடிவை எல்லோரும் இணைந்து தான் எடுத்தோம். இது நேர்மையான முடிவு தான்.
வெங்கடபதி ராஜூ: அந்தப்போட்டியில் சூதாட்டம் நடந்து இருப்பதாக நான் கருதவில்லை. காம்ப்ளி தற்போது பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார். பவுலிங்கை தேர்வு செய்தது ஒட்டு மொத்த முடிவாகும்.
மோங்கியா: இந்திய கிரிக்கெட்டில் தேவையில்லாத மோசமான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்திய அணியின் தோல்விக்கு காரணம் எதுவும் இல்லை. வீரர்கள் சிறப்பாக ஆடாததே தோல்வியாக அமைந்தது.
அஜீத் வடேகர்: (அப்போதைய மானேஜர், இந்திய அணி முன்னாள் கேப்டன்): ஆடுகளத்தை தவறாக கணித்து விட்டோம். பீல்டிங் முடிவு ஒட்டு மொத்தமானது. கால் இறுதியில் நாங்கள் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்ததால் அதிக நம்பிக்கையில் இருந்தோம். காம்ப்ளி இந்த புகாரை இப்போது கூறி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு அவர் திடீரென இந்த சூதாட்ட குற்றச்சாட்டை கூறுவது ஏன்? இலங்கை அணி சேஸ் செய்வதில் சிறந்த அணி என்பதால் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்வது என்று எல்லோரும் சேர்ந்து முடிவு எடுத்திருந்தோம். காம்ப்ளியின் தேவையில்லாத இந்த குற்றச்சாட்டு சந்தேகம் அளிப்பதால் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்த வேண்டும்.
முன்னாள் கேப்டன் கங்குலியும் காம்ப்ளியின் குற்றச்சாட்டு முட்டாள் தனமானது என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் அசாருதீன் தனது நிலையை தெளிவுப்படுத்திவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்தப்போட்டியில் காம்ப்ளி 29 பந்துகளில் 10 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் கண்ணீர்விட்டு கதறி அழுதவாறு மைதானத்தைவிட்டு வெளியே வந்தார். சூதாட்ட குற்றச்சாட்டில் அசாருதீனுக்கு 2000-ம் ஆண்டு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 251 ரன் எடுத்தது. பனிதுளி காரணமாக இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. 129 ரன்னுக்கு 8 விக்கெட் என்ற நிலையில் இருந்தபோது ரசிகர்கள் வீரர்களின் மோசமான ஆட்டத்தால் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
அசாருதீன் டாஸ் வென்று ஏன் முதலில் பேட்டிங் செய்யவில்லை என்று அப்போதே இது தொடர்பாக விமர்சிக்கப்பட்டது. ஜெயசூர்யா-கலுவதர்னாவின் தொடக்க ஜோடி அதிரடியாக ஆடியதால் இலங்கை அணி எந்த இலக்கையும் எடுக்க கூடிய நிலை இருந்தது.
லீக் ஆட்டத்தில் இந்தியா எடுத்த 271 ரன்னை இலங்கை எளிதாக எடுத்து வெற்றி பெற்றது. இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான அரை இறுதியில் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ததாக அப்போதே அசாருதீன் மற்றும் அணி நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் 1996 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான அரை இறுதி ஆட்டம் மேட்ச் பிக்சிங் (சூதாட்டம்) செய்யப்பட்டு இருப்பதாக சந்தேகிக்றேன் என்று அப்போதைய அணியில் இடம் பெற்று இருந்த வினோத் காம்ப்ளி அதிரடியாக தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.
டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்த முடிவு தனக்கு அதிர்ச்சி அளித்ததாகவும், அதோடு தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாகவும் தொலைக்காட்சி பேட்டியில் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதை அசாருதீன் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
காம்ப்ளி ஒரு முட்டாள். என்ன பேசுவது என்று கூட தெரியாமல் பேசுகிறார். அவரது குற்றச்சாட்டு முற்றிலும் முட்டாள் தனமானது. டாஸ் வென்றால் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஒரு தினத்துக்கு முன்பே அணி வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வீரர்கள் ஒட்டு மொத்தமாக முடிவு செய்தே பீல்டிங்கை தேர்வு செய்தோம்.
அணி வீரர்களின் கூட்டம் நடக்கும் போது காம்ப்ளி தூங்கி கொண்டிருந்தார் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். காம்ப்ளி தனது நடத்தையினாலேயே அணியில் இருந்து நீக்கப்பட்டார். குடித்துவிட்டு இரவு நேரத்தில் தாமதமாக வருவது, அடிக்கடி சண்டை போடுவது என்பது அவரது வாடிக்கை. இது அனைவருக்கும் தெரிந்தது.
காம்ப்ளின் இந்த குற்றச்சாட்டு அப்போதைய இந்திய அணியில் இடம் பெற்று இருந்த சஞ்சய் மஞ்சுரேக்கர், நயன் மோங்கியா, வெங்கடபதி ராஜூ மற்றும் மேலாளர் அஜீத் வடேகர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அசாருதீனுக்கு ஆதரவாக அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர்: 1996 உலக கோப்பை அரை இறுதியில் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. தவறான முடிவு தான். ஆனால் இந்த முடிவை எல்லோரும் இணைந்து தான் எடுத்தோம். இது நேர்மையான முடிவு தான்.
வெங்கடபதி ராஜூ: அந்தப்போட்டியில் சூதாட்டம் நடந்து இருப்பதாக நான் கருதவில்லை. காம்ப்ளி தற்போது பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார். பவுலிங்கை தேர்வு செய்தது ஒட்டு மொத்த முடிவாகும்.
மோங்கியா: இந்திய கிரிக்கெட்டில் தேவையில்லாத மோசமான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்திய அணியின் தோல்விக்கு காரணம் எதுவும் இல்லை. வீரர்கள் சிறப்பாக ஆடாததே தோல்வியாக அமைந்தது.
அஜீத் வடேகர்: (அப்போதைய மானேஜர், இந்திய அணி முன்னாள் கேப்டன்): ஆடுகளத்தை தவறாக கணித்து விட்டோம். பீல்டிங் முடிவு ஒட்டு மொத்தமானது. கால் இறுதியில் நாங்கள் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்ததால் அதிக நம்பிக்கையில் இருந்தோம். காம்ப்ளி இந்த புகாரை இப்போது கூறி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு அவர் திடீரென இந்த சூதாட்ட குற்றச்சாட்டை கூறுவது ஏன்? இலங்கை அணி சேஸ் செய்வதில் சிறந்த அணி என்பதால் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்வது என்று எல்லோரும் சேர்ந்து முடிவு எடுத்திருந்தோம். காம்ப்ளியின் தேவையில்லாத இந்த குற்றச்சாட்டு சந்தேகம் அளிப்பதால் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்த வேண்டும்.
முன்னாள் கேப்டன் கங்குலியும் காம்ப்ளியின் குற்றச்சாட்டு முட்டாள் தனமானது என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் அசாருதீன் தனது நிலையை தெளிவுப்படுத்திவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்தப்போட்டியில் காம்ப்ளி 29 பந்துகளில் 10 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் கண்ணீர்விட்டு கதறி அழுதவாறு மைதானத்தைவிட்டு வெளியே வந்தார். சூதாட்ட குற்றச்சாட்டில் அசாருதீனுக்கு 2000-ம் ஆண்டு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: 1996 உலககோப்பையில் மேட்ச் பிக்சிங்:
அறிந்தாடத அரிய செய்தி பகிர்வுக்கு நன்றி சகோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 1996 உலககோப்பையில் மேட்ச் பிக்சிங்:
இந்திய அணி உலக கோப்பையை வெல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்த ஒரு சிறந்த கேப்டனை இவர்கள் எந்த ஆதாயத்திற்காக குறை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் காமெடி கலாட்டா
» டோனி சிறந்த மேட்ச் வின்னர்: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பெவன்
» இலங்கை அணியுடனான 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டியில் கிரிக்கெட் சூதாட்டமா?
» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?
» டோனி சிறந்த மேட்ச் வின்னர்: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பெவன்
» இலங்கை அணியுடனான 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டியில் கிரிக்கெட் சூதாட்டமா?
» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|