Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
+5
அப்புகுட்டி
இன்பத் அஹ்மத்
நண்பன்
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
9 posters
Page 1 of 1
புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
அன்பும் காதலுமே உறவுகளை இணைக்கும் பாலம்.
அந்த அன்பில் இடைவெளி விழுவதால்தான் பந்தங்கள் பலவீனமடைகின்றன. கணவன்
மனைவி பிரிவினை ஏற்படுகிறது. அன்பிருந்தால் அத்தனையையும் சரி செய்ய
முடியும்.
அதனால்தான் `உலகில் அத்தனை
பிரச்சினைகளுக்கும் அன்பின்மையே காரணம்’ அன்பிருந்தால் துன்பமில்லை” .
அன்பு என்பது இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும்
பணியாது, சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது
அன்பு. இன்பம், துன்பம் இரண்டிலும் எல்லா நேரங்களிலும் நீங்கள் ஒருவருடன்
இணைந்திருந்தால் நீங்கள் அவரை நேசிப்பதாகக் கொள்ளலாம். நேசிப்பதால்
இன்பத்தை உருவாக்கலாம். தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை
நேசிக்க முடியும் என்பது அறிஞர்களின் முடிவு.
இல்லறம் நல்லறமாகும்
நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவே நல்ல
துணைவராக இருப்பது மிகவும் நல்லது. தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின்
உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும்.உண்மை, விசுவாசம், மென்மையான
தொடுகை, கவனிக்கும் காது, திறந்த மனம், கவலைப் பகிர்வு, வளர்ச்சியில்
பங்கு, உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில்
மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும்.
தன்னலமற்ற அன்பு
தியாகம் செய்வது தன்னலமற்ற அன்பாகும்.
அக்கறை செலுத்துவது என்பது அன்பின் ஒரு படிநிலை. சின்னச் சின்னத்
தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும்.
நீங்கள் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது உங்களை வெறுப்பவர் மீதும் இதே
அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள்.புரிதலே சிறந்த அன்பு
புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே
முடியாது. துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து
நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும்.
மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில்
பிரச்சினையே இல்லை. மற்றவர்களின் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி,
சோகத்திலும் உடனிருப்பது அவர்களுக்கு உங்கள் ஆதரவை எப்போதும் தருவது அக்கறை
மிகுந்த அன்பாகும்.
நம்புங்கள் நன்மை ஏற்படும்
ஒருவரை புரிந்து கொண்டு அப்படியே
ஏற்றுக் கொள்வது உண்மையான அன்பாகும். கணவரின் நடத்தையை நம்பி
ஏற்றுக்கொள்ளும்போது சந்தேகப் பேய் ஒழிந்து குடும்பத்தில் சந்தோஷம்
கூடுகிறது. நம்பிக்கை என்பது அன்பின் பரிசாகும். நம்புதல் ஏற்படும்போது
அன்பு தானாக மலர்ந்துவிடும்.
அன்பு ஆழமாக பாராட்டுங்கள்
ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை
அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது. ஒருவரை
ஊக்குவிப்பது உங்களுக்கிடையே இணக்கத்தை அதிகமாக்குகிறது. பாராட்டு
தொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது.எனவே பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல
அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.
அன்போடு தழுவுங்கள்
தழுவல் உறவின் முதலீடு, பிரிவின்
தடுப்புக்கோடு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் `நான் உன்னை நேசிக்கிறேன்’
என்று கூறுங்கள். கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட
வைக்கும்.கணவன் மனைவி அன்புறவு நீடிக்க வரவேற்கவும், விடைபெறவும், நன்றி
கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள். இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால்
வெளிப்படுத்தாதீர்கள். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல
வேண்டாம். மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.
ஒருவரிடம் அன்பு – அக்கறை காட்டி, அவரை
புரிந்து கொண்டு, குறைநிறைகளை ஏற்று மதிக்கவும் பாராட்டவும் செய்தால்
உங்களுக்கிடையே இணக்கம் குறையவே வாய்ப்பில்லை. அத்துடன் நம்பிக்கையும்
வைத்திருந்தால் பிரிவு உங்களை நெருங்காது.
அந்த அன்பில் இடைவெளி விழுவதால்தான் பந்தங்கள் பலவீனமடைகின்றன. கணவன்
மனைவி பிரிவினை ஏற்படுகிறது. அன்பிருந்தால் அத்தனையையும் சரி செய்ய
முடியும்.
அதனால்தான் `உலகில் அத்தனை
பிரச்சினைகளுக்கும் அன்பின்மையே காரணம்’ அன்பிருந்தால் துன்பமில்லை” .
அன்பு என்பது இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும்
பணியாது, சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது
அன்பு. இன்பம், துன்பம் இரண்டிலும் எல்லா நேரங்களிலும் நீங்கள் ஒருவருடன்
இணைந்திருந்தால் நீங்கள் அவரை நேசிப்பதாகக் கொள்ளலாம். நேசிப்பதால்
இன்பத்தை உருவாக்கலாம். தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை
நேசிக்க முடியும் என்பது அறிஞர்களின் முடிவு.
இல்லறம் நல்லறமாகும்
நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவே நல்ல
துணைவராக இருப்பது மிகவும் நல்லது. தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின்
உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும்.உண்மை, விசுவாசம், மென்மையான
தொடுகை, கவனிக்கும் காது, திறந்த மனம், கவலைப் பகிர்வு, வளர்ச்சியில்
பங்கு, உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில்
மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும்.
தன்னலமற்ற அன்பு
தியாகம் செய்வது தன்னலமற்ற அன்பாகும்.
அக்கறை செலுத்துவது என்பது அன்பின் ஒரு படிநிலை. சின்னச் சின்னத்
தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும்.
நீங்கள் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது உங்களை வெறுப்பவர் மீதும் இதே
அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள்.புரிதலே சிறந்த அன்பு
புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே
முடியாது. துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து
நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும்.
மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில்
பிரச்சினையே இல்லை. மற்றவர்களின் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி,
சோகத்திலும் உடனிருப்பது அவர்களுக்கு உங்கள் ஆதரவை எப்போதும் தருவது அக்கறை
மிகுந்த அன்பாகும்.
நம்புங்கள் நன்மை ஏற்படும்
ஒருவரை புரிந்து கொண்டு அப்படியே
ஏற்றுக் கொள்வது உண்மையான அன்பாகும். கணவரின் நடத்தையை நம்பி
ஏற்றுக்கொள்ளும்போது சந்தேகப் பேய் ஒழிந்து குடும்பத்தில் சந்தோஷம்
கூடுகிறது. நம்பிக்கை என்பது அன்பின் பரிசாகும். நம்புதல் ஏற்படும்போது
அன்பு தானாக மலர்ந்துவிடும்.
அன்பு ஆழமாக பாராட்டுங்கள்
ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை
அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது. ஒருவரை
ஊக்குவிப்பது உங்களுக்கிடையே இணக்கத்தை அதிகமாக்குகிறது. பாராட்டு
தொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது.எனவே பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல
அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.
அன்போடு தழுவுங்கள்
தழுவல் உறவின் முதலீடு, பிரிவின்
தடுப்புக்கோடு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் `நான் உன்னை நேசிக்கிறேன்’
என்று கூறுங்கள். கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட
வைக்கும்.கணவன் மனைவி அன்புறவு நீடிக்க வரவேற்கவும், விடைபெறவும், நன்றி
கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள். இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால்
வெளிப்படுத்தாதீர்கள். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல
வேண்டாம். மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.
ஒருவரிடம் அன்பு – அக்கறை காட்டி, அவரை
புரிந்து கொண்டு, குறைநிறைகளை ஏற்று மதிக்கவும் பாராட்டவும் செய்தால்
உங்களுக்கிடையே இணக்கம் குறையவே வாய்ப்பில்லை. அத்துடன் நம்பிக்கையும்
வைத்திருந்தால் பிரிவு உங்களை நெருங்காது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
நல்ல சூப்பரான பதிவு மேடம்
:!@!:அன்பு ஆழமாக பாராட்டுங்கள்
ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை
அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது. ஒருவரை
ஊக்குவிப்பது உங்களுக்கிடையே இணக்கத்தை அதிகமாக்குகிறது. பாராட்டு
தொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது.எனவே பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல
அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
முனாஸ் சுலைமான் wrote:நல்ல சூப்பரான பதிவு மேடம்அன்பு ஆழமாக பாராட்டுங்கள்
ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை
அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது. ஒருவரை
ஊக்குவிப்பது உங்களுக்கிடையே இணக்கத்தை அதிகமாக்குகிறது. பாராட்டு
தொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது.எனவே பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல
அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
மிகவும் அருமை அனைவரும் எடுத்துக்கொண்டால் எடுத்து புரிந்து நடந்தால் அவர்கள் வாழ்வு செழிப்பாக அமையும் சந்தோசமாக இருக்கும் பகிர்வுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
நன்றி பகிர்வுக்கு :”@: :”@:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
@. @.நண்பன் wrote:மிகவும் அருமை அனைவரும் எடுத்துக்கொண்டால் எடுத்து புரிந்து நடந்தால் அவர்கள் வாழ்வு செழிப்பாக அமையும் சந்தோசமாக இருக்கும் பகிர்வுக்கு நன்றி
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
அப்புகுட்டி wrote:@. @.நண்பன் wrote:மிகவும் அருமை அனைவரும் எடுத்துக்கொண்டால் எடுத்து புரிந்து நடந்தால் அவர்கள் வாழ்வு செழிப்பாக அமையும் சந்தோசமாக இருக்கும் பகிர்வுக்கு நன்றி
இரு நண்பர்கள் சொல்லவதை நானும் @. @.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
சிரந்த பகிர்விற்கு நன்றி பானு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
இந்த லோள்ளுத்தானே வேணாம்கிறதுkalainilaa wrote:அப்புகுட்டி wrote:நண்பன் wrote:மிகவும் அருமை அனைவரும் எடுத்துக்கொண்டால் எடுத்து புரிந்து நடந்தால் அவர்கள் வாழ்வு செழிப்பாக அமையும் சந்தோசமாக இருக்கும் பகிர்வுக்கு நன்றி
இரு நண்பர்கள் சொல்லவதை நானும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
அருமையாக சொல்லி இருக்கிறார் பானு கமால்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
நாங்க மட்டும் என்ன மோசம்னா சொன்னோம் ஏதோ உங்களுக்கு உதவும் என்று பார்த்தோம் புரிந்து நடந்து கொள்ளுங்க அடி வாங்கி வீங்காம!jasmin wrote:அருமையாக சொல்லி இருக்கிறார் பானு கமால்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
நண்பன் wrote:நாங்க மட்டும் என்ன மோசம்னா சொன்னோம் ஏதோ உங்களுக்கு உதவும் என்று பார்த்தோம் புரிந்து நடந்து கொள்ளுங்க அடி வாங்கி வீங்காம!jasmin wrote:அருமையாக சொல்லி இருக்கிறார் பானு கமால்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
நீங்கள் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது உங்களை வெறுப்பவர் மீதும் இதே
அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள்.புரிதலே சிறந்த அன்பு
அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள்.புரிதலே சிறந்த அன்பு
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
@. @.நிலாம் wrote:நீங்கள் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது உங்களை வெறுப்பவர் மீதும் இதே
அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள்.புரிதலே சிறந்த அன்பு
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|