சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

பாரிமுனை, ரிச்சி தெரு, ரங்கநாதன் தெரு, மெரினாவை தகர்க்க தீவிரவாதிகள் சதி  Khan11

பாரிமுனை, ரிச்சி தெரு, ரங்கநாதன் தெரு, மெரினாவை தகர்க்க தீவிரவாதிகள் சதி

Go down

பாரிமுனை, ரிச்சி தெரு, ரங்கநாதன் தெரு, மெரினாவை தகர்க்க தீவிரவாதிகள் சதி  Empty பாரிமுனை, ரிச்சி தெரு, ரங்கநாதன் தெரு, மெரினாவை தகர்க்க தீவிரவாதிகள் சதி

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 Dec 2011 - 9:50

பாரிமுனை, ரிச்சி தெரு, ரங்கநாதன் தெரு, மெரினாவை தகர்க்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியதற்கான வீடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள தீவிரவாதியைப் பிடிக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அருகே உள்ள தாம்பரம் சேலையூரில் உள்ள ஒரு வீட்டில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுடன் இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அவர்கள், சென்னை மாநகர போலீசார் உதவியுடன் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். வீட்டில் 6 மாணவர்களுடன் தடை செய்யப்பட்ட சிமி அமைப்பின் முக்கியத் லைவர்களில் ஒருவரும் இப்போது இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய நிர்வாகியுமான இர்சாத் (50), மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பீகாரை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் அப்துல்ரகுமான் ஆகியோர் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

அதைத் தொடர்ந்து 5 மாணவர்களை மட்டும் போலீசார் விடுவித்தனர். இர்சாத், அப்துல்ரகுமான் ஆகியோரை கைது செய்து, டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையில் சென்னையில் வைத்து, மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீசார் இர்சாத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது 2 நாட்களுக்கு முன்னர்தான் சென்னை வந்ததாகவும், பாரிமுனை, ரங்கநாதன் தெரு, ரிச்சி தெரு, மெரினா கடற்கரை ஆகிய இடங்களுக்குச் சென்றதாகவும் அங்கு அப்துல் ரகுமானுக்கு ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்தாகவும், தங்களுடன் போலீசார் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் தப்பிச் சென்ற ஆசீப் வந்ததாகவும் இர்சாத் போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்த தகவலைக் கேள்விப்பட்டு சென்னை போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பாரிமுனை மற்றும் ரிச்சி தெருவில் போலீசார் 80 கேமராக்களை பொருத்தியுள்ளனர். இதனால் அந்த கேமராக்களை போலீசார் நேற்று இரவு போட்டுப் பார்த்தனர். அதில், இர்சாத், ஆசீப், அப்துல் ரகுமான் ஆகியோர் ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று லேப் டாப் வாங்கியுள்ளனர். அதில் நீண்ட நேரம் ஆசீப் மட்டும் ரிச்சி தெருவை சுற்றிச் சுற்றி வந்து வேவு பார்த்துள்ளார். இதேபோல பாரிமுனை பகுதியையும் அவர் வேவு பார்த்துள்ளது கேமராவில் கண்டறியப்பட்டுள்ளன. அதை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் லேப் டாப் மட்டும் வாங்கியிருந்தால் கடைகளில் மட்டும் விசாரித்து விட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் தெருக்களை வேவு பார்க்க வேண்டிய அவசியம் என்ன என்பதைக் கண்டு போலீசார் திடுக்கிட்டனர். மேலும் இர்சாத்திடம் விசாரணை நடத்தியதில் பெங்களூரில் டிசம்பர் 6ம் தேதி குண்டு வைக்க திட்டமிட்டிருந்தோம் என்று மட்டும் தெரிவித்திருந்தார்.

இதனால் அவர்கள் சென்னையில் ரிச்சி தெரு, பாரிமுனை, ரங்கநாதன் தெரு, மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் டிசம்பர் 6ல் குண்டு வைப்பதற்காகத்தான் சுற்றி வந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதோடு, சென்னையில் ஆசிப் தப்பி சென்றார். அவர் இதுவரை எங்கும் பிடிபடவில்லை. ஆசிப், தப்பிச் செல்வதற்கு பயந்துபோய் சென்னையிலோ அல்லது தமிழகத்தில் வேறு எங்காவது இருந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனால் ஆசிப்பை பிடித்தால்தான் முழு சதித் திட்டமும் தெரியவரும். மேலும் அவர் ஏற்கனவே திட்டமிட்டபடி குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சென்னையில் ஈடுபடக் கூடாது என்பதற்காக நகரில் பாதுகாப்பை போலீசார் பலப்படுத்தியுள்ளனர். வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதி ஒருவர் சென்னையில் தலைமறைவாக இருப்பதும், அவர்கள் ஏற்கனவே நகரின் பல இடங்களை வேவு பார்த்ததும் போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மத்திய உளவுப் பிரிவு அதிகாரி டிஜிபியுடன் ஆலோசனை

டிஜிபி ராமானுஜம், போலீஸ் கமிஷனர் திரிபாதி ஆகியோருடன் மத்திய உளவுப் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் சென்னையில் நேற்று முன்தினம் இரவு ஆலோசனை நடத்தினர். அப்போது சென்னையில் தீவிரவாதிகள் அசம்பாவிதச் சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அதனால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், தலைமறைவாக உள்ள ஆசிப்பை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மத்திய உளவுத்துறை அதிகாரி கூறியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து சென்னை மட்டுமல்லாது முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


பாரிமுனை, ரிச்சி தெரு, ரங்கநாதன் தெரு, மெரினாவை தகர்க்க தீவிரவாதிகள் சதி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum