Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
ஜூலையா? நவம்பரா? முதல்வரே எது உண்மை..?
Page 1 of 1
ஜூலையா? நவம்பரா? முதல்வரே எது உண்மை..?
அண்மையில் தமிழக அரசு பேருந்துக்கட்டணம் மற்றும் பால்விலையை உயர்த்தியது. மத்திய அரசு போதிய நிதி உதவி தரவில்லை என்பதால்தான் இவ்வாறு விலை உயர்த்தப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த 7.7.2011 அன்று வெளிவந்த நாளிதழ்களில் முந்தைய திமுக அரசை விட கூடுதல் நிதிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளதாக முதல்வர் ஜெயலலிதாவும், மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியாவும் பத்திரிக்கையளர்கள் சந்திப்பில் கூறிய செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த செய்தி இதுதான்;
''முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லி சென்று [6 .7.2011 ]மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியாவுடன் பேச்சு நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார். நிதி ஒதுக்கீடு குறித்தும் அவர் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.
தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பாராட்டு தெரிவித்த அலுவாலியா வளர்ச்சி விகிதத்தையும் பாராட்டினார். கூட்டத்தின் இறுதியில் அலுவாலியாவும்,ஜெயலலிதாவும் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அலுவாலியா கூறுகையில், தமிழக திட்டப் பணிகளுக்குரூ. 23,535 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முதல்வர் ஜெயலலிதா கோரிய நிதியை விட ரூ. 535 கோடி அதிகம். மேலும் கடந்த ஆண்டு[திமுக ஆட்சி] திட்ட ஒதுக்கீட்டை விட ரூ. 3467 கோடி அதிகம் என்று தெரிவித்தார்.இதைத் தொடர்நது தமிழக அரசு கோரியதை விட கூடுதலாக நிதி ஒதுக்கிய திட்டக் கமிஷனுக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.
மேற்கண்ட செய்தியை மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே. வாசனும் உறுதிப்படுத்தும் வகையில் நவம்பர் 19 அன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துதாக முதல்வர் ஜெயலலிதா கூறியது தவறான தகவல்.கடந்த 2011-12 ம் ஆண்டில், தமிழகத்தின் முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 23 ஆயிரத்து 636 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது 2010 -11 ம் ஆண்டைக் காட்டிலும் ரூ. 3467 கோடி அதிகம். இதில் இருந்து அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு ஒரே மாதிரியே நடத்துவதை அறியலாம்'' என்று கூறியுள்ளார். ஆனால் ஜெயலலிதாவோ மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்கிறார். மத்திய அரசு ஒத்துக்கொண்ட நிதியை ஒதுக்கவில்லை என்று ஜெயலலிதா கூறுவாரானால், அந்த நிதியைப் பெற மத்திய அரசை நிர்பந்திக்கும் வகையில் முயற்ச்சிகள் மேற்கொள்வதை விடுத்து, மக்கள் தலையில் மிளகாய் அரைப்பது போல விலைவாசியை உயர்த்துவது நியாயமா? அல்லது மத்திய அரசு உண்மையில் நிதியே ஒதுக்கவில்லை என்றால், முதல்வர் முன்னிலையில் மத்திய திட்டக்கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா சொன்ன செய்தி பொய் என்று சொல்லப்போகிறாரா? அப்படியும் சொல்லமுடியாதே! ஏனென்றால் ஜெயலலிதாவின் கட்சிப் பத்திரிக்கையான நமது எம்.ஜி.ஆர் நாளிதழும் இந்த செய்தியை வெளியிட்டு, அம்மாவின் சாதுர்யத்தால் கூடுதல் நிதியை மத்திய அரசில் பெற்றுள்ளதாக புகழ் பாடியுள்ளதே! எனவே மத்திய அரசு நிதி ஒதுக்கியது குறித்து ஜூலையில் முதல்வர் சொன்னது உண்மையா? அல்லது மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று நவம்பரில் சொன்னது உண்மையா? முதல்வர் தெளிவுபடுத்துவரா?
''முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லி சென்று [6 .7.2011 ]மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியாவுடன் பேச்சு நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார். நிதி ஒதுக்கீடு குறித்தும் அவர் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.
தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பாராட்டு தெரிவித்த அலுவாலியா வளர்ச்சி விகிதத்தையும் பாராட்டினார். கூட்டத்தின் இறுதியில் அலுவாலியாவும்,ஜெயலலிதாவும் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அலுவாலியா கூறுகையில், தமிழக திட்டப் பணிகளுக்குரூ. 23,535 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முதல்வர் ஜெயலலிதா கோரிய நிதியை விட ரூ. 535 கோடி அதிகம். மேலும் கடந்த ஆண்டு[திமுக ஆட்சி] திட்ட ஒதுக்கீட்டை விட ரூ. 3467 கோடி அதிகம் என்று தெரிவித்தார்.இதைத் தொடர்நது தமிழக அரசு கோரியதை விட கூடுதலாக நிதி ஒதுக்கிய திட்டக் கமிஷனுக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.
மேற்கண்ட செய்தியை மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே. வாசனும் உறுதிப்படுத்தும் வகையில் நவம்பர் 19 அன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துதாக முதல்வர் ஜெயலலிதா கூறியது தவறான தகவல்.கடந்த 2011-12 ம் ஆண்டில், தமிழகத்தின் முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 23 ஆயிரத்து 636 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது 2010 -11 ம் ஆண்டைக் காட்டிலும் ரூ. 3467 கோடி அதிகம். இதில் இருந்து அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு ஒரே மாதிரியே நடத்துவதை அறியலாம்'' என்று கூறியுள்ளார். ஆனால் ஜெயலலிதாவோ மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்கிறார். மத்திய அரசு ஒத்துக்கொண்ட நிதியை ஒதுக்கவில்லை என்று ஜெயலலிதா கூறுவாரானால், அந்த நிதியைப் பெற மத்திய அரசை நிர்பந்திக்கும் வகையில் முயற்ச்சிகள் மேற்கொள்வதை விடுத்து, மக்கள் தலையில் மிளகாய் அரைப்பது போல விலைவாசியை உயர்த்துவது நியாயமா? அல்லது மத்திய அரசு உண்மையில் நிதியே ஒதுக்கவில்லை என்றால், முதல்வர் முன்னிலையில் மத்திய திட்டக்கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா சொன்ன செய்தி பொய் என்று சொல்லப்போகிறாரா? அப்படியும் சொல்லமுடியாதே! ஏனென்றால் ஜெயலலிதாவின் கட்சிப் பத்திரிக்கையான நமது எம்.ஜி.ஆர் நாளிதழும் இந்த செய்தியை வெளியிட்டு, அம்மாவின் சாதுர்யத்தால் கூடுதல் நிதியை மத்திய அரசில் பெற்றுள்ளதாக புகழ் பாடியுள்ளதே! எனவே மத்திய அரசு நிதி ஒதுக்கியது குறித்து ஜூலையில் முதல்வர் சொன்னது உண்மையா? அல்லது மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று நவம்பரில் சொன்னது உண்மையா? முதல்வர் தெளிவுபடுத்துவரா?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|