Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கடவுள் என் பக்கம் - சேவக்
3 posters
Page 1 of 1
கடவுள் என் பக்கம் - சேவக்
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில், 153 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 3&1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. கேப்டன் சேவக் 219 ரன் விளாசி உலக சாதனை படைத்தார். இந்தியா & வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.
மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2&1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 4வது போட்டி இந்தூர், ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ஷர்மா அறிமுக வீரராக இடம் பிடித்தார்.
டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக சேவக், கம்பீர் களமிறங்கினர். பேட்டிங்குக்கு சாதகமான களத்தில், இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். குறிப்பாக, சேவக் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்த தொடரில் இதுவரை பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறியதால் நெருக்கடியுடன் களமிறங்கிய சேவக், வட்டியும் முதலுமாக வெளுத்து வாங்கினார். அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தில் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கதிகலங்கி செய்வதறியாது திக்பிரமை பிடித்து நின்றனர்.
சேவக் & கம்பீர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 22.5 ஓவரில் 176 ரன் சேர்த்து அசத்தியது. போலார்டு வீசிய 23வது ஓவரில் 4வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சேவக் சதம் கடந்தார். அடுத்த பந்திலேயே, கம்பீர் 67 ரன் (67 பந்து, 11 பவுண்டரி) எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ரெய்னாவும் சேவக்குடன் இணைந்து அதிரடியில் இறங்க இந்திய ஸ்கோர் இறக்கை கட்டிப் பறந்தது.
ரெய்னா 55 ரன் (44 பந்து, 6 பவுண்டரி) எடுத்து ரன் அவுட் ஆனார். ஜடேஜா 10 ரன்னில் வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும், ருத்ரதாண்டவத்தை தொடர்ந்த சேவக் 140 பந்தில் இரட்டைசதம் அடித்து அமர்க்களப்படுத்த ஹோல்கர் ஸ்டேடியம் ரசிகர்களின் ஆரவாரத்தில் அதிர்ந்தது. ரஸ்ஸல் வீசிய 44வது ஓவரின் 3வது பந்தில் பவுண்டரி அடித்த சேவக், ஒருநாள் போட்டிகளில் இரட்டைசதம் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றதுடன்,
சச்சினின் உலக சாதனையையும் (200*) முறியடித்து பிரமிக்க வைத்தார். அவர் 219 ரன் (149 பந்து, 25 பவுண்டரி, 7 சிக்சர்) குவித்து போலார்டு பந்துவீச்சில் மார்டின் வசம் பிடிபட்டார். ரோகித் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன் குவித்தது. ஒருநாள் போட்டிகளில் இது இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. கோஹ்லி 23, பார்திவ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அடுத்து 50 ஓவரில் 419 ரன் குவித்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. அந்த அணி 49.2 ஓவரில் 265 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சிம்மன்ஸ் 36, சாமுவேல்ஸ் 33, ரஸ்ஸல் 29, ராம்டின் 96 ரன், சுனில் 27* எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். அறிமுக வீரர் ராகுல் ஷர்மா, ஜடேஜா தலா 3, ரெய்னா 2, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 3&1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய நிலையில், சம்பிரதாயமான கடைசி போட்டி சென்னையில் நாளை மறுநாள் நடக்கிறது.
சச்சினை முந்தினார்
ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்ற சேவக், முன்னதாக சச்சின் படைத்த உலக சாதனையை (200*) முறியடித்து அசத்தினார். அவர் 149 பந்தில் 219 ரன் விளாசி (25 பவுண்டரி, 7 சிக்சர்) புதிய சாதனை படைத்தார். சேவக் 170 ரன் எடுத்திருந்தபோது, ராம்பால் பந்துவீச்சில் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை கேப்டன் சம்மி நழுவவிட்டது குறிப்பிடத்தக்கது.
விளாசிய விதம்...
50 ரன் & 41 பந்து
100 ரன் & 69 பந்து
150 ரன் & 112 பந்து
200 ரன் & 140 பந்து
u இந்தியா 22 போட்டிகளுக்குப் பிறகு முதல் விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்தது.
u சேவக் 2 ரன் அவுட், 2 கேட்ச் வாய்ப்புகளில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
u இந்தியா ஒருநாள் போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரை (50 ஓவரில் 418/5) பதிவு செய்தது.
u சேவக் தனது முந்தைய அதிகபட்ச ஸ்கோரான 175 ரன்னை (உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக) முந்தினார்.
u 191 ரன்னில் இருந்து பவுண்டரி விளாசியபோது, சேவக் ஒருநாள் போட்டிகளில் 8000 ரன் கடந்தார்.
u சேவக் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியபோது, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கை குலுக்கி அவரது உலக சாதனைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சச்சின் வாழ்த்து
u ஆஸ்திரேலியா சென்றுள்ள சச்சின், தனது உலக சாதனையை சேவக் முறியடித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘சேவக்கின் சாதனை மகிழ்ச்சி அளிக்கிறது. எனது உலக சாதனையை மற்றொரு இந்திய வீரரே முறியடித்திருப்பது திருப்தியாக உள்ளது’ என்றார்.
u அதிரடி வீரர்கள் கிறிஸ் கேல், யுவராஜ் சிங், டேவிட் வார்னர் ஆகியோரும் சேவக்கின் சாதனையை புகழ்ந்துள்ளனர்.
u கடினமான ஆஸ்திரேலிய தொடர் தொடங்க உள்ள நிலையில், சேவக் இரட்டை சதம் விளாசியுள்ளது அவரது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சாதனை படைத்துள்ள அவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் & கங்குலி
கடவுள் என் பக்கம்: சேவக் கூறுகையில், ""இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைப்பேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சமீபத்தில் சரியாக விளையாடாத நிலையில், இந்த போட்டிக்காக எனது "பேட்டிங் ஸ்டைலை' மாற்றிக் கொள்ளவில்லை. நான் கொடுத்த "கேட்ச்சை' சமி கோட்டைவிட்ட போதே, கடவுள் என்பக்கம் இருந்தார் என்று தெரிந்தது,'' என்றார்.
319, 219: டெஸ்டில் "டிரிபிள்' சதம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த, உலகின் முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் சேவக். இவர் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சென்னை டெஸ்டில் 319 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 219 ரன் களும் எடுத்து உள்ளார்.
சமி பரிதாபம்: பொதுவாக "டாஸ்' போட்டு முடிந்தவுடன் யார் வென்றாலும், இரு கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்வர். நேற்று தொடர்ந்து நான்காவது முறையாக சேவக் "டாஸ்' வென்றார். இதையடுத்து வெறுத்துப் போன சமி, சேவக் கைகொடுக்க வந்த போதும், அதை ஏற்காமல் சிரித்துக்கொண்டே விலகிக் கொண்டார். இருப்பினும் அவரது முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது
மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2&1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 4வது போட்டி இந்தூர், ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ஷர்மா அறிமுக வீரராக இடம் பிடித்தார்.
டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக சேவக், கம்பீர் களமிறங்கினர். பேட்டிங்குக்கு சாதகமான களத்தில், இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். குறிப்பாக, சேவக் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்த தொடரில் இதுவரை பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறியதால் நெருக்கடியுடன் களமிறங்கிய சேவக், வட்டியும் முதலுமாக வெளுத்து வாங்கினார். அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தில் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கதிகலங்கி செய்வதறியாது திக்பிரமை பிடித்து நின்றனர்.
சேவக் & கம்பீர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 22.5 ஓவரில் 176 ரன் சேர்த்து அசத்தியது. போலார்டு வீசிய 23வது ஓவரில் 4வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சேவக் சதம் கடந்தார். அடுத்த பந்திலேயே, கம்பீர் 67 ரன் (67 பந்து, 11 பவுண்டரி) எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ரெய்னாவும் சேவக்குடன் இணைந்து அதிரடியில் இறங்க இந்திய ஸ்கோர் இறக்கை கட்டிப் பறந்தது.
ரெய்னா 55 ரன் (44 பந்து, 6 பவுண்டரி) எடுத்து ரன் அவுட் ஆனார். ஜடேஜா 10 ரன்னில் வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும், ருத்ரதாண்டவத்தை தொடர்ந்த சேவக் 140 பந்தில் இரட்டைசதம் அடித்து அமர்க்களப்படுத்த ஹோல்கர் ஸ்டேடியம் ரசிகர்களின் ஆரவாரத்தில் அதிர்ந்தது. ரஸ்ஸல் வீசிய 44வது ஓவரின் 3வது பந்தில் பவுண்டரி அடித்த சேவக், ஒருநாள் போட்டிகளில் இரட்டைசதம் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றதுடன்,
சச்சினின் உலக சாதனையையும் (200*) முறியடித்து பிரமிக்க வைத்தார். அவர் 219 ரன் (149 பந்து, 25 பவுண்டரி, 7 சிக்சர்) குவித்து போலார்டு பந்துவீச்சில் மார்டின் வசம் பிடிபட்டார். ரோகித் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன் குவித்தது. ஒருநாள் போட்டிகளில் இது இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. கோஹ்லி 23, பார்திவ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அடுத்து 50 ஓவரில் 419 ரன் குவித்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. அந்த அணி 49.2 ஓவரில் 265 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சிம்மன்ஸ் 36, சாமுவேல்ஸ் 33, ரஸ்ஸல் 29, ராம்டின் 96 ரன், சுனில் 27* எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். அறிமுக வீரர் ராகுல் ஷர்மா, ஜடேஜா தலா 3, ரெய்னா 2, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 3&1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய நிலையில், சம்பிரதாயமான கடைசி போட்டி சென்னையில் நாளை மறுநாள் நடக்கிறது.
சச்சினை முந்தினார்
ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்ற சேவக், முன்னதாக சச்சின் படைத்த உலக சாதனையை (200*) முறியடித்து அசத்தினார். அவர் 149 பந்தில் 219 ரன் விளாசி (25 பவுண்டரி, 7 சிக்சர்) புதிய சாதனை படைத்தார். சேவக் 170 ரன் எடுத்திருந்தபோது, ராம்பால் பந்துவீச்சில் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை கேப்டன் சம்மி நழுவவிட்டது குறிப்பிடத்தக்கது.
விளாசிய விதம்...
50 ரன் & 41 பந்து
100 ரன் & 69 பந்து
150 ரன் & 112 பந்து
200 ரன் & 140 பந்து
u இந்தியா 22 போட்டிகளுக்குப் பிறகு முதல் விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்தது.
u சேவக் 2 ரன் அவுட், 2 கேட்ச் வாய்ப்புகளில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
u இந்தியா ஒருநாள் போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரை (50 ஓவரில் 418/5) பதிவு செய்தது.
u சேவக் தனது முந்தைய அதிகபட்ச ஸ்கோரான 175 ரன்னை (உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக) முந்தினார்.
u 191 ரன்னில் இருந்து பவுண்டரி விளாசியபோது, சேவக் ஒருநாள் போட்டிகளில் 8000 ரன் கடந்தார்.
u சேவக் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியபோது, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கை குலுக்கி அவரது உலக சாதனைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சச்சின் வாழ்த்து
u ஆஸ்திரேலியா சென்றுள்ள சச்சின், தனது உலக சாதனையை சேவக் முறியடித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘சேவக்கின் சாதனை மகிழ்ச்சி அளிக்கிறது. எனது உலக சாதனையை மற்றொரு இந்திய வீரரே முறியடித்திருப்பது திருப்தியாக உள்ளது’ என்றார்.
u அதிரடி வீரர்கள் கிறிஸ் கேல், யுவராஜ் சிங், டேவிட் வார்னர் ஆகியோரும் சேவக்கின் சாதனையை புகழ்ந்துள்ளனர்.
u கடினமான ஆஸ்திரேலிய தொடர் தொடங்க உள்ள நிலையில், சேவக் இரட்டை சதம் விளாசியுள்ளது அவரது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சாதனை படைத்துள்ள அவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் & கங்குலி
கடவுள் என் பக்கம்: சேவக் கூறுகையில், ""இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைப்பேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சமீபத்தில் சரியாக விளையாடாத நிலையில், இந்த போட்டிக்காக எனது "பேட்டிங் ஸ்டைலை' மாற்றிக் கொள்ளவில்லை. நான் கொடுத்த "கேட்ச்சை' சமி கோட்டைவிட்ட போதே, கடவுள் என்பக்கம் இருந்தார் என்று தெரிந்தது,'' என்றார்.
319, 219: டெஸ்டில் "டிரிபிள்' சதம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த, உலகின் முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் சேவக். இவர் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சென்னை டெஸ்டில் 319 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 219 ரன் களும் எடுத்து உள்ளார்.
சமி பரிதாபம்: பொதுவாக "டாஸ்' போட்டு முடிந்தவுடன் யார் வென்றாலும், இரு கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்வர். நேற்று தொடர்ந்து நான்காவது முறையாக சேவக் "டாஸ்' வென்றார். இதையடுத்து வெறுத்துப் போன சமி, சேவக் கைகொடுக்க வந்த போதும், அதை ஏற்காமல் சிரித்துக்கொண்டே விலகிக் கொண்டார். இருப்பினும் அவரது முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது
Re: கடவுள் என் பக்கம் - சேவக்
வாழ்த்துக்கள் செவாக் மற்றும் எங்கள் சூப்பர் ஹீரோ சச்சின்
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: கடவுள் என் பக்கம் - சேவக்
வெறுத்துப் போன சமி, சேவக் கைகொடுக்க வந்த போதும், அதை ஏற்காமல் சிரித்துக்கொண்டே விலகிக் கொண்டார். இருப்பினும் அவரது முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது
முன் அறிவா இருக்கும்
முன் அறிவா இருக்கும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» அந்த பக்கம் கடவுள்..
» அதிரடி சேவக்"கின் ஆசை?
» 50 ஓவர்கள் விளையாட வேண்டும் சேவக் விருப்பம்
» சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன்
» கடவுள் ஏன்?
» அதிரடி சேவக்"கின் ஆசை?
» 50 ஓவர்கள் விளையாட வேண்டும் சேவக் விருப்பம்
» சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன்
» கடவுள் ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|