Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அலைகடலின் அழுகுரல்…புலவர். தொ. சூசை மைக்கேல்
4 posters
Page 1 of 1
அலைகடலின் அழுகுரல்…புலவர். தொ. சூசை மைக்கேல்
ஓடி வருகுதடி அலைகடல் – மிக
உருண்டு அதிருதடி அலைகடல்…
தேடி வருகுதடி அலைகடல் – நமைத்
தீண்டி வருடுதடி அலைகடல்…
மாறி மருளுதடி அலைகடல் – மனம்
மாய்ந்து புரளுதடி அலைகடல்…
தேரி மணல்முகடு தொடுகையில் – ஒரு
செய்தி சொல்லுதடி அலைகடல்…
விரிச்சல் போடுதடி அலைகடல் – ஒளி
வீச்சு கூட்டுதடி அலைகடல்…
சிரிச்சிச் சிணுங்குதடி அலைகடல் – அவள்
செய்கை ஒவ்வொன்றும் கவிமடல்…
இடிமுழக்கமடி அலைகடல் – புது
இசைமுழக்கமடி அலைகடல்…
மடிவளைக்கும் மற முக்குவர் – மடி
மடிய வைக்கு(ம்)மடி அலைகடல்…
ஈரக் கரையோர மணல்திடல் – தனில்
இருந்து அரசாளும் அலைகடல்…
யாரைக் கண்டாலும் அருகினில் – வந்து
யாதுமாகிறவள் அலைகடல்…
தாழை கற்றாழை இவற்றிடை – நுரை
தானம் வழங்கிவரும் அலைகடல்…
ஏழை பணக்காரர் அனைவரும் – சமம்
என்று முழங்கிவரும் அலைகடல்…
என்ன சொல்கிறாள், அலைகடல்? – ஏன்
இன்னும் தூங்கவில்லை, அலைகடல்?...
தன்னைத் தாக்கவரும் அணு உலை – கண்டு
தவித்துக் கொதிக்கிறாள் அலைகடல்…
கூடங்குளம் மக்கள் கூக்குரல் – அது
கொள்கை மறவர்கள்தம் போர்க்குரல்…
நாடெங்கிலும் நேர்ந்த அழிவுகள் – சொல்லி
நடுங்கி அதிர்கிறாள், அலைமகள்…
பொங்கி எழுகிறாள் அலைகடல் – மனம்
புழுங்கி அழுகிறாள் அலைகடல்…
எங்கும் நிகழும் அணுக் கொடுமைகள் – தமை
எண்ணி அழுகிறாள் அலைமகள்…
அன்னை அலைகடலின் அழுகுரல் – அது
அடங்க வேண்டுமடி விரைவினில்…
சின்ன மதியினர்தம் இழிசெயல் – அறத்
திரள்க, தமிழர் ஓர் அணியினில்!...
-புலவர். தொ. சூசை மைக்கேல்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அலைகடலின் அழுகுரல்…புலவர். தொ. சூசை மைக்கேல்
சூசை மைக்கேல் சூசகமாக அணு உலை பற்றி பதறி எழுதி இருக்கிறார் .ஆனால் 15000 கோடிகள் செலவு செய்து ஒரு அழிவு அணு உலையை செய்ய நாம் ஒன்னும் பைத்தியக் காரர்கள் இல்லை என்பதை மைக்கேல் உணர வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அலைகடலின் அழுகுரல்…புலவர். தொ. சூசை மைக்கேல்
jasmin wrote:சூசை மைக்கேல் சூசகமாக அணு உலை பற்றி பதறி எழுதி இருக்கிறார் .ஆனால் 15000 கோடிகள் செலவு செய்து ஒரு அழிவு அணு உலையை செய்ய நாம் ஒன்னும் பைத்தியக் காரர்கள் இல்லை என்பதை மைக்கேல் உணர வேண்டும்
அணுவுலை வேண்டுமென்பதுதான் என்கருத்தும். இக்கவிதை அதன் அழகிற்காக இங்கு பதித்தேன் ...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அலைகடலின் அழுகுரல்…புலவர். தொ. சூசை மைக்கேல்
அலைகடலின ஆர்ப்பரிப்பை தற்கால நிகழ்வுடன் கோர்த்து அழகாக அன்னைத்தமிழை வழக்கம் போல தான் வசமாக்கி வரிகளாய் மாற்றி நம்மை வசியம் செய்கிறார் கவிஞர்... தமிழும் அழகு அவரின் சிந்தனையும் அதனை வெளிக்கொணர்ந்த பாங்கும் அழகு ஆயினும் அந்த ஒன்றைத் தவிர...
அணு உலை பற்றிய அய்யாவின் கருத்துக்கு மறுப்புப்புறம் நாம் என்றாலும் இந்தப் பொங்கு தமிழுக்கு நான் என்றும் என்னை நான் இழக்கிறேன்...
அணு உலை பற்றிய அய்யாவின் கருத்துக்கு மறுப்புப்புறம் நாம் என்றாலும் இந்தப் பொங்கு தமிழுக்கு நான் என்றும் என்னை நான் இழக்கிறேன்...
Re: அலைகடலின் அழுகுரல்…புலவர். தொ. சூசை மைக்கேல்
மிகவும் அருமையாக உள்ளது மேடம் பகிர்வுக்கு நன்றி
:!+: :!+:
:!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மைக்கேல் - விமர்சனம் (தினபூமி)
» மனசாட்சி உள்ள புலவர்...!!
» இந்தியாவின் ஏழு வயது ஜுனியர் மைக்கேல் ஜாக்சன்
» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
» மனசாட்சி உள்ள புலவர்...!!
» இந்தியாவின் ஏழு வயது ஜுனியர் மைக்கேல் ஜாக்சன்
» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|