சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கூடங்குளம் மின் உற்பத்தியி;ல் 50மூ தமிழகத்துக்கு!  Khan11

கூடங்குளம் மின் உற்பத்தியி;ல் 50மூ தமிழகத்துக்கு!

2 posters

Go down

கூடங்குளம் மின் உற்பத்தியி;ல் 50மூ தமிழகத்துக்கு!  Empty கூடங்குளம் மின் உற்பத்தியி;ல் 50மூ தமிழகத்துக்கு!

Post by *சம்ஸ் Mon 19 Dec 2011 - 6:36

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதற் கட்டமாக இரண்டு உலைகள் இயங்கத் தொடங்கும்போது அதிலிருந்து 50 சதவீத மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். மூன்று நாள் ரஷ்ய பயணத்துக்குப் பின்னர் மொஸ்கோவில் இருந்து சனிக்கிழமை இரவு டில்லி திரும்பிய அவர், விமானத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்காக கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 14 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. அந்த அணுமின் நிலையத்தை இயக்காமல் அப்படியே கிடப்பில் போட முடியாது. கூடங்குளம் பகுதி மக்களில் சிலர், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அங்கு அமைக்கப்பட்டிருக்கும் அணு உலைகள் உலகிலேயே மிகவும் பாதுகாப்பானவை என்பதை எடுத்துரைத்து அவர்களின் அச்சத்தைப் போக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இப்பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு சார்பில் 15 நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தமிழக அரசு பிரதிநிதிகளுடனும், கூடங்குளம் பகுதி மக்களுடனும் தொடர்ந்து போச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வெகு விரைவில் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணப்படும் என நம்புகிறேன் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.

தமிழகத்துக்கு 1,000 மெகாவாட், “கேரளம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் அணு மின் நிலையம் அமைக்க முன்வராதபோது பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று துணிந்து கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைய ஒப்புக்கொண்டதால் தமிழகத்துக்கு என்ன சிறப்பான பயன் கிடைக்கிறது” என்ற கேள்விக்கும் பிரதமர் பதில் அளித்தார்.

கூடங்குளத்தில் முதற் கட்டமாக இரு அணு உலைகள் செயல்படத் தொடங்கும் போது 2,000 மெகாவொட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதில் 1,000 மெகவொட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படும். மீதமுள்ள 1,000 மெகாவொட் மின்சாரம் மத்திய மின்தொகுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஏனைய மாநிலங்களுக்குத் தேவைக் கேற்றாற் போல் பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

“மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியும் மத்திய அரசு செவி சாய்க்காதது ஏன் என்கிற கேள்விக்கு முதல்வரின் கோரிக்கையை மத்திய மின் துறை பரிசீலித்து உடனடியாக 100 கெமாவொட் மின்சாரத்தை வழங்க முடிவெடுத்திருக்கிறது. மேலும் தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

முல்லைப் பெரியாறு விவகாரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக, கேரள அரசுகள் இணைந்து சுமுகத் தீர்வு காண மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் என்ன காரணத்தாலோ பலனளிக்கவில்லை. எனினும் எனது முயற்சியைக் கைவிட்டுவிட மாட்டேன்.

பிரச்சினைக்கு விரைவில் சுமுகத் தீர்வு காணத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வேன்.

இந்த விவாகரத்தில் இரு மாநில முதல்வர்களும் ஒன்றாக அமர்ந்து பேசும் போது திருப்திகரமான முடிவு எட்டப்பட்டுவிடும் என்று நம்புகிறேன். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முன்னின்று செயல்பட பிரதமர்தான் பொருத்தமான நபர் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள கருத்துக்கு மதிப்பளிக்கிறேன்.

தமிழ் நாடு, கேரளம் இரண்டுமே மத்திய அரசுக்கு மிகவும் முக்கியமானவை. இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை எழும்போது பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கூடங்குளம் மின் உற்பத்தியி;ல் 50மூ தமிழகத்துக்கு!  Empty Re: கூடங்குளம் மின் உற்பத்தியி;ல் 50மூ தமிழகத்துக்கு!

Post by jasmin Mon 19 Dec 2011 - 14:52

பிரதமரின் பதில் எனக்கு திருப்தியளிக்கவில்லை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி தள்ளிவைப்பு
» கூடங்குளம் மின் நிலையத்தில் விரைவில் உற்பத்தி தொடங்கும்
» கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாதுகாப்பை ஆய்வு செய்தபின் பணிகளை மேற்கொள்ளலாம்: கருணாநிதி கருத்து
» முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம்
» முல்லைப் பெரியாறு தமிழகத்துக்கு சாதகமாக அமையும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum