Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
சரணடைந்த விடுதலைப்புலிகளைக் கொன்று விடும்படி கோத்தபாய உத்தரவிட்டார்!- இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம
4 posters
Page 1 of 1
சரணடைந்த விடுதலைப்புலிகளைக் கொன்று விடும்படி கோத்தபாய உத்தரவிட்டார்!- இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம
சரணடைந்த விடுதலைப்புலிகளைக் கொன்று விடும்படி இலங்கை
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கை இராணுவத்தின் களமுனைத்
தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக, இலங்கை இராணுவத்தில் பணியாற்றிய மேஜர்
ஜெனரல் தர அதிகாரி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.உயிருக்குப் பயந்து சிறிலங்காவை விட்டு
வெளியேறிய அவர், தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாக லண்டனில் இருந்து
வெளியாகும் ‘தி ரெலிகிராப்‘ நாளிதழ் இன்று(19.12.2011) தகவல்
வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவை விட்டுத் தப்பிச் செல்ல முன்னர் இந்த அதிகாரி மேஜர் ஜெனரலாக
பதவி உயர்த்தப்பட்டதாகவும், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட
கொடுமைகள் குறித்து சாட்சியமளித்துள்ள இலங்கையின் உயர்மட்ட படைஅதிகாரி இவரே
என்றும் ‘ரெலிகிராப்‘ கூறியுள்ளது.
சக்திவாய்ந்த நபர்கள் சிலருக்கும் இலங்கை இராணுரவ அதிகாரிகள்
சிலருக்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்ததாகவும், அவர்களுக்கு உயர்மட்டப்
பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தாகவும் அந்த மேஜர் ஜெனரல்
கூறியுள்ளார்.
இவரது இந்தச் சாட்சியம், இலங்கைப் படையினர் பொதுமக்களை குறிவைத்து
தாக்குதல் நடத்தவில்லை என்று அண்மையில் வெளியிடப்பட்ட நல்லிணக்க
ஆணைக்குழுவின் அறிக்கைக்கு முரணாக இருப்பதாகவும் ‘ரெலிகிராப்‘
குறிப்பிட்டுள்ளது.
இலங்கைப் படையினரால் பொதுமக்கள் துன்புறுத்தப்பட்ட சில தனிப்பட்ட
குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ள
ஆணைக்குழுவின் அறிக்கையில், உயர்மட்ட கட்டளையை பின்பற்றாத படையினர்
சிலராலேயே இந்த மீறல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள மேஜர் ஜெனரல், களமுனைத் தளபதி
ஒருவருக்கு இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச சில கட்டளைகளை
பிறப்பித்ததாகவும், சரணடையும் புலிகளை வழக்கமான நடைமுறைகள் எதுமின்றி
கொன்று விடுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பாதுகாப்புச் செயலரிடம் இருந்து அந்த உத்தரவு வந்தபோதிலும்,
ஜனாதிபதி மகிந்தவும் தொடர்புபட்டிருக்க வேண்டும். அவரும் அதுபற்றி
அறிந்திருந்தார். தளபதிகளால் அந்த முடிவை எடுக்க முடியாது.“ என்றும் அவர்
கூறியுள்ளார்.
தனது பாதுகாப்புக் கருதி பெயரை வெளியிட விரும்பாத அந்த மேஜர் ஜெனரல்,
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப்
புலிகள் படுகொலை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளார்.
இந்த மேஜர் ஜெனரல் தனது முதலாவது சாட்சியத்தை அமெரிக்காவைத் தளமாகக்
கொண்ட புலனாய்வு இணையம் ஒன்றுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005 இல் பாதுகாப்புச் செயலராக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர்
கொழும்பு நகர வீதிகளில் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து
செயற்படுவோர் என்று சந்தேகிக்கப்படுவோரை களையெடுக்க வெள்ளை வான் “தாக்குதல்
அணி“ யொன்றை உருவாக்கினார் என்றும் அந்த மேஜர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளது.
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கை இராணுவத்தின் களமுனைத்
தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக, இலங்கை இராணுவத்தில் பணியாற்றிய மேஜர்
ஜெனரல் தர அதிகாரி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.உயிருக்குப் பயந்து சிறிலங்காவை விட்டு
வெளியேறிய அவர், தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாக லண்டனில் இருந்து
வெளியாகும் ‘தி ரெலிகிராப்‘ நாளிதழ் இன்று(19.12.2011) தகவல்
வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவை விட்டுத் தப்பிச் செல்ல முன்னர் இந்த அதிகாரி மேஜர் ஜெனரலாக
பதவி உயர்த்தப்பட்டதாகவும், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட
கொடுமைகள் குறித்து சாட்சியமளித்துள்ள இலங்கையின் உயர்மட்ட படைஅதிகாரி இவரே
என்றும் ‘ரெலிகிராப்‘ கூறியுள்ளது.
சக்திவாய்ந்த நபர்கள் சிலருக்கும் இலங்கை இராணுரவ அதிகாரிகள்
சிலருக்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்ததாகவும், அவர்களுக்கு உயர்மட்டப்
பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தாகவும் அந்த மேஜர் ஜெனரல்
கூறியுள்ளார்.
இவரது இந்தச் சாட்சியம், இலங்கைப் படையினர் பொதுமக்களை குறிவைத்து
தாக்குதல் நடத்தவில்லை என்று அண்மையில் வெளியிடப்பட்ட நல்லிணக்க
ஆணைக்குழுவின் அறிக்கைக்கு முரணாக இருப்பதாகவும் ‘ரெலிகிராப்‘
குறிப்பிட்டுள்ளது.
இலங்கைப் படையினரால் பொதுமக்கள் துன்புறுத்தப்பட்ட சில தனிப்பட்ட
குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ள
ஆணைக்குழுவின் அறிக்கையில், உயர்மட்ட கட்டளையை பின்பற்றாத படையினர்
சிலராலேயே இந்த மீறல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள மேஜர் ஜெனரல், களமுனைத் தளபதி
ஒருவருக்கு இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச சில கட்டளைகளை
பிறப்பித்ததாகவும், சரணடையும் புலிகளை வழக்கமான நடைமுறைகள் எதுமின்றி
கொன்று விடுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பாதுகாப்புச் செயலரிடம் இருந்து அந்த உத்தரவு வந்தபோதிலும்,
ஜனாதிபதி மகிந்தவும் தொடர்புபட்டிருக்க வேண்டும். அவரும் அதுபற்றி
அறிந்திருந்தார். தளபதிகளால் அந்த முடிவை எடுக்க முடியாது.“ என்றும் அவர்
கூறியுள்ளார்.
தனது பாதுகாப்புக் கருதி பெயரை வெளியிட விரும்பாத அந்த மேஜர் ஜெனரல்,
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப்
புலிகள் படுகொலை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளார்.
இந்த மேஜர் ஜெனரல் தனது முதலாவது சாட்சியத்தை அமெரிக்காவைத் தளமாகக்
கொண்ட புலனாய்வு இணையம் ஒன்றுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005 இல் பாதுகாப்புச் செயலராக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர்
கொழும்பு நகர வீதிகளில் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து
செயற்படுவோர் என்று சந்தேகிக்கப்படுவோரை களையெடுக்க வெள்ளை வான் “தாக்குதல்
அணி“ யொன்றை உருவாக்கினார் என்றும் அந்த மேஜர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளது.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சரணடைந்த விடுதலைப்புலிகளைக் கொன்று விடும்படி கோத்தபாய உத்தரவிட்டார்!- இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம
உண்மையை என்றும் மறைக்க முடியாது
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சரணடைந்த விடுதலைப்புலிகளைக் கொன்று விடும்படி கோத்தபாய உத்தரவிட்டார்!- இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம
யாருக்கும் தெரியாமல் கொன்று குவித்தாலும் குவிப்பார்கள் வெறியர்கள் அவர்களுக்கு நல்ல வாழ்வழித்து விடுதலை செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் சுகந்திரமாக அவர்களும் வாழ்வார்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சரணடைந்த விடுதலைப்புலிகளைக் கொன்று விடும்படி கோத்தபாய உத்தரவிட்டார்!- இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம
இனிதான் உண்மைகள் உலா வரும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» பாரத லச்மனின் தலையில் துமிந்த சில்வா சுட்டார்!! அவரை சுடுமாறு மெய்பாதுகாவலர்களுக்கும் உத்தரவிட்டார்
» சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை!
» மொசுலில் இரு அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக் இராணுவ வீரரினால் சுட்டுக்கொலை
» என்னைப் பயன்படுத்தி கோத்தபாய அச்சுறுத்தல்களை மேற்கொள்கிறார் - கருணா
» சரணடைந்த புலிகளின் புனர்வாழ்வுக்கு ரூ. 180 கோடி; 70 மூ சமூகத்தில் இணைந்தனர்
» சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை!
» மொசுலில் இரு அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக் இராணுவ வீரரினால் சுட்டுக்கொலை
» என்னைப் பயன்படுத்தி கோத்தபாய அச்சுறுத்தல்களை மேற்கொள்கிறார் - கருணா
» சரணடைந்த புலிகளின் புனர்வாழ்வுக்கு ரூ. 180 கோடி; 70 மூ சமூகத்தில் இணைந்தனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|