சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

நீக்கமற நிறைந்த ஊழல் ஒழிக்குமா லோக்பால்? Khan11

நீக்கமற நிறைந்த ஊழல் ஒழிக்குமா லோக்பால்?

2 posters

Go down

நீக்கமற நிறைந்த ஊழல் ஒழிக்குமா லோக்பால்? Empty நீக்கமற நிறைந்த ஊழல் ஒழிக்குமா லோக்பால்?

Post by *சம்ஸ் Sun 1 Jan 2012 - 6:31

ஊழல் என்பது எங்கும் நீக்கமற நிறைந்தது. அதனை ஒழிப்பதென்பது சாத்தியமற்றது என எண்ணியிருந்த எல்லோருக்கும் ஊழலும் ஒழிக்கப்படக் கூடியதே என்ற நம்பிக்கையைத் தந்தவர் அன்னா ஹசாரே. அவர் மீதான, அவரது போராட்டம் மீதான விமர்சனங்களுக்கப்பால் பார்த்தால் இவ்வாண்டின் ஆரம்பம் முதல் அநேக இந்தியர்களால் உச்சரிக்கப்படும் பெயர் அன்னா ஹசாரேதான் என்பதில் சந்தேகமில்லை.

ஜன லோக்பால் என்ற சட்ட வரைவை முன்வைத்து ஹசாரேயும் அவருடைய குழுவினரும் பெரும் போராட்டங்களைச் செய்தார்கள். இதனால் லோக்பால் சட்ட வரைவை அரசு கையில் எடுக்க வேண்டியதாயிற்று. லோக்பால் என்பது ஊழலை எதிர்க்கும் அமைப்பு.

லோக்பால் என்ற சொல்லுக்கு ‘மக்கள் மன்றம்’ அல்லது ‘மக்கள் நீதிமன்றம்’ என்று பெருள் கொள்ளலாம், தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் முன்மொழியப்பட்டதுதான் இந்த லோக்பால் சட்ட வரைவு. இந்தியாவில் அனைத்து மட்டங்களிலும் மலிந்திருக்கும் ஊழலை அறவே ஒழிக்கும் வகையிலும், அடிமட்ட ஊழியர் முதல் பிரதம மந்திரிவரை ஊழல் புரியும் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தும் வகையில் லோக்பால் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்என்பதுதான் இப்போது எழுந்துள்ள கோரிக்கை.

அரசியல்வாதிகள் தாங்களாகவே இதனைச் செய்திருக்க மாட்டார்கள். அன்னா ஹசாரேயின் தொடர் உண்ணாவிரத மிரட்டல்களால்தான் இத்தனை வேகமாக அரசு ஒரு சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது. முதலில் அரசு கொண்டு வந்த சட்ட வரைவு, பின் கொஞ்சம் அதிகமான பலத்துடன், சாதாரண சட்டமாக மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் மாநிலங்களவையில் லோக்பால் சட்ட வரைவு நிறைவேறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

அந்த சட்ட வரைவு மீது வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் இப்போதைய வடிவிலேயே சட்ட வரைவை நிறைவேற்ற திரிணமூல் காங்கிரஸ் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

பா.ஜ.க. சார்பில் 24 திருத்தங்களும், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் 37 திருத்தங்களும் பரிந்துரைக்கப்பட்டன. இதர கட்சிகள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் வலியுறுத்தப்பட்டன.

மக்களவையில் லோக்பால் சட்ட வரைவு செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு காரசார விவாதம் நடைபெற்றது. ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ், லோக்பால் சட்ட வரைபில் இருந்து லோக் ஆயுக்த பிரிவை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது. இதனால் ஆளும் கூட்டணிக்குள்ளேயே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

இந்தியாவின் ஊழல் வரலாறு சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே அதாவது 1948 ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. இராணுவத்திற்காக ஜீப் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக இங்கிலாந்தில் இந்தியத் தூதராக இருந்த வி.கே. கிருஷ்ணமேனன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டு விசாரிக்கப்படவேயில்லை. அவரை 1956 ல் மத்திய அமைச்சரவையில் அமைச்சரவை இல்லாத அமைச்சராக நியமித்தது இந்திய அரசு. அன்று முதல் இன்று வரை 1981 போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், 1990 ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல், 1996 கார்கில் சவப்பெட்டி ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், கொமன்வெல்த் போட்டிகள் ஊழல், ஆதர்ஷ் வீடு ஒதுக்கல் ஊழல் என ஊழல் தொடர்கதையாகி விட்டது.

இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழலுக்காக தண்டனை பெற்ற அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், நீதிபதிகள் ஒரு சிலர் மட்டுமே.

லோக்பால் சட்டம் என்பது இன்று, நேற்று முளைத்த பிரச்சனை அல்ல. பல்லாண்டு கால பிரச்சினை. 1966 முதன் முதலாக நிர்வாகச் சீர்திருத்த கமிஷன் சில பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. அந்தப் பரிந்துரையில் மத்திய அரசுக்கு லோக்பால் அமைப்பும் மாநில அரசுகளுக்கு லோக் ஆயுக்தா என்ற அமைப்பும் தேர்தல் ஆணையம் போல சுயேச்சையாக செயல்பட்டு ஊழல் புகார்களை விசாரிக்க ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது. லோக் ஆயுக்தா என்பது மாநில அளவில் லோக்பாலுக்கு இணையான அமைப்பு. 1968ல் லோக்பால் மசோதா மக்கள வையில் கொண்டு வரப்பட்டது. அது சட்டமாக மாற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் அந்த மசோதா கைவிடப்பட்டது. அதன் பிறகு 1971, 1977, 1985, 1989, 1998, 2001 ஆண்டுகளில் 8 முறை தாக்கல் செய்யப்பட்ட சட்ட வரைவு இதுவரை சட்ட வடிவம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு முந்தைய சட்ட வடிவில் உள்ள லோக்பால் சட்ட வரைவில் பல குறைபாடுகள் உள்ளன. பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார்களை பெற அதிகாரம் இல்லை. புகார்களை பெறுவதற்கென நியமிக்கப்படும் எம்.பிக்கள் மூலமாகத்தான் புகார்களை பெற வேண்டும். புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியாது, சிபாரிசு மட்டுமே செய்ய முடியும். ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைத் தண்டனை பெற்றாலும் ஊழல் செய்தவர் ஊழல் மூலமாக சம்பாதித்த சொத்துக்களை அனுபவிக்க தடை ஏதுவும் விதிக்கப்படவில்லை.

இந்நிலையில் அன்னாவின் ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதப் போராட்டங்களால் அவசர அவசரமாக மக்களவையில் கொண்டுவரப்பட்ட லோக்பால் சட்ட வரைவு வலுவற்றதெனக் குற்றம் சாட்டியுள்ள அன்னா ஹசாரே, வலுவான லோக்பால் சட்ட வரைவு நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து போராடுவோம் எனச் சுளுரைத்திருக்கிறார். வலுவான லோக்பால் சட்ட வரைவு கோரி நடக்கும் இந்தப் போராட்டம் இரண்டாம் விடுதலைப் போரைப் போன்றது. இந்தப் போரில் வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டேயிருப்போம். அவசியம் ஏற்பட்டால் சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம். அரசு துரோகம் செய்துவிட்டது. இது எனக்கோ எனது குழுவினருக்கோ இழைக்கப்பட்ட துரோகம் அல்ல. நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் துரோகம். இதற்காக மத்திய அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மும்பையில் செவ்வாயன்று ஆரம்பித்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் பத்தாயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள். அன்னாவுக்கெதிராக இந்திய அரசும் சக்தி வாய்ந்த ஊடகங்களும் செய்யும் எதிர்மறையான பிரசாரங்களின் விளைவுதான் அவர் பின்னே திரண்டிருந்த மக்களின் தொகையைக் குறைத்திருக்கக்கூடுமோ என்ற வகையிலும் பலர் எண்ணத் தலைப்பட்டிருக்கின்றனர்.

அன்னா ஹசாரே பேசும் பேச்சுக்களை வைத்தே அவர் மீதான ஒரு எதிர்மறைப் பிம்பத்தைத் தோற்றுவிப்பதில் ஊடகங்கள் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. அண்ணா ஒரு அரசியல்வாதியோ அல்லது மெத்தப்படித்தவரோ அல்லர். மக்களுக்காகப் போராடும் ஒரு சாமான்யர். ஆனாலும் இத்துணை பெரியதொரு நாட்டில் ஊழலை ஒழிக்கலாம் என்ற நம்பிக்கையைத் தந்தவர்.

இந்நிலையில் ஊழலை ஒழிக்க இவர் ஏன் பாடுபடுகிறார். இவரது பின்னணி என்ன என்பது பற்றி ஆராயாமல், ஒட்டுமொத்த இந்திய மக்களும் அவரது போராட்டத்துக்கு ஆதரவு தருவதன் மூலம் ஊழல் ஒழிப்பில் தங்களது பங்களிப்பினை வழங்கலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீக்கமற நிறைந்த ஊழல் ஒழிக்குமா லோக்பால்? Empty Re: நீக்கமற நிறைந்த ஊழல் ஒழிக்குமா லோக்பால்?

Post by kalainilaa Sun 1 Jan 2012 - 17:57

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum