சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

முல்லைப்பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது  Khan11

முல்லைப்பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது

Go down

முல்லைப்பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது  Empty முல்லைப்பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது

Post by *சம்ஸ் Wed 4 Jan 2012 - 6:15

நீதிபதி ஆனந்த் குழுவிடம் நிபுணர் குழு அறிக்கை
முல்லைப்பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது என்று நீதிபதி ஆனந்த் குழுவிடம் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.

தமிழகத்தின் 5 தென் மாவட்டங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது முல்லைப்பெரியாறு அணை.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இந்த அணை வலுவிழந்து விட்டதாக கூறி புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழக அரசு மறுப்பு

கேரள அரசின் இந்த பொய் பிரசாரத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. ‘முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது. கேரளா சொல்வது போல நில நடுக்கத்தால் பாதிக்கப்படாது. புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனவே அணையின் நீர் மட்டத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும்’ என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பாக இரு மாநிலங்களும் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஐவர் குழு

இதற்கிடையே இரு மாநிலங்களுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் இந்த பிரச்சினை குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்க உச்ச நீதிமன்றம் 5 பேர் குழு ஒன்றை நியமித்தது.

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ. எஸ். ஆனந்த் தலைமையிலான இந்த குழுவில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ. ஆர் இலட்சுமணன் இடம்பெற்று உள்ளார். இந்த குழு மார்ச் மாதத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த குழு ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணை பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டது.

நிபுணர் குழு அறிக்கை

அணையை பார்வையிட்டு கேரளாவின் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருப்பது பற்றி ஒரு ஆய்வு அறிக்கை தரும்படி 2 பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை ஐவர் குழு நியமித்தது. அந்த இரு நிபுணர்களும் அணையை பார்வையிட்டு ஐவர் குழுவிடம் இடைக்கால அறிக்கையை அளித்து உள்ளனர்.

நிபுணர் குழுவின் அறிக்கையில் கேரளாவின் புகார் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் நில நடுக்கத்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இலேசான நிலநடுக்கம் ஏற்பட கூடிய பகுதியில் முல்லைப்பெரியாறு அணைப் பகுதி இருப்பதால் எதிர்காலத்திலும் அணைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் நிபுணர் குழு தனது அறிக்கையில் கூறியிருப்பதாக தெரிகிறது.

கேரளா தரப்பில் ஆஜரான ராஜீவ் தவான் வாதாடுகையில் கூறியதாவது : ‘அணையில் விரிசலோ, கீறலோ ஏற்படவில்லை. ஆனால் ரூர்க்கி ஐ. ஐ. டீ. நிபுணர்கள் அளித்த அறிக்கையை தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும். இடுக்கி மாவட்டம் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும் பகுதி. இடுக்கி மாவட்டத்தில்தான் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. ஆகவே நில நடுக்கத்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அணை உடையும் அச்சம் உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு புதிய அணை கட்டுவதுதான். அதுவரை அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான சட்டத்தரணி குருகிருஷ்ணா, ‘புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை ஏற்க முடியாது. ஏனென்றால் முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது’ என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதி ஆனந்த் குறுக்கிட்டு ‘முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டி பராமரிப்புக்கு கூட்டுக் குழுவை நியமிக்கலாமா? புதிய அணையில் குறிப்பிட்ட அளவுக்கு தண்ணீர் தேக்கி வைத்து பராமரிக்க நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளுமா’ என்று கேட்டார்.

இந்த யோசனையை ஏற்க தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது.

‘முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலமாக உள்ளது. அதில் போதிய தண்ணீர் தேக்கி வைக்கும் திறன் நன்றாகவே உள்ளது. ஆகவே புதிய அணை கட்ட வேண்டும் என்று பேச்சுக்கே இடமில்லை. அதற்கு அவசியமும் இல்லை. புதிய அணை கட்டப்பட்டால், ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள நீர் பங்கீடு உள்ளிட்ட பல அம்சங்களில் பாதிப்பு ஏற்படும். அணைக்கு 100 ஆண்டு ஆகிவிட்டது. அது உடைந்து விடும் என்று கேரள அரசு மக்களிடம் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கலாம்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி அணையின் , நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட வேண்டும்’ என்று தமிழக அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் குழு கிருஷ்ணா வலியுறுத்தி வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு புதிய அணை கட்டப்பட்டால் தண்ணீர் பங்கீடு பாதுகாப்பு ஏற்பாடு, அணை நிர்வாகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இரு மாநிலங்களும் தங்களது பதில்களை வெள்ளிக்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பூமியை நெருங்கும் ராட்சத பாறையால் பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள் கருத்து
» சுனாமி எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன இந்திய அணு உலைகளில் விபத்து ஏற்படாது
» கபினி அணை நிரம்பி வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வர வாய்ப்பு
» இயல்புநிலை பாதிப்பு
» செல்போன் பயன்படுத்துவதால் உடலில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் ஏற்படாது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum