Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
குஜராத்தைத் தமிழ்நாடு மிஞ்சிவிடும்
+2
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
6 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
குஜராத்தைத் தமிழ்நாடு மிஞ்சிவிடும்
குஜராத்தைத் தமிழ்நாடு மிஞ்சிவிடும்
பத்திரிகையாளர் சோ
அ.தி.மு.கவுக்குத் தொடர்ந்து தமிழ் நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தால் குஜராத்தைத் தமிழ்நாடு மிஞ்சி விடும் என்றார் பத்திரிகையாளர் சோ.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:
“எந்த ஊழலிலிருந்தும் காப்பாற்றக் கூடியவராக பிரதமர் மன்மோகன் சிங் மாறியுள்ளார். யார் என்ன தப்பு செய்திருந்தாலும், அவர் நல்லவர்தான் என்று கூறுபவர் அவர்.
இப்படிப்பட்டவரின் தலைமையில் செயல்படும் மத்திய அரசு சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு என்ற ஒரு நல்ல காரியத்தை செய்ய முனைந்து கொண்டிருக்கிறது. சில பொருளாதார நிபுணர்கள் எதிர்க்கின்ற போதும் அது நல்ல விஷயம்.
போட்டி காரணமாக கலப்படம், எடைக் குறைப்புகள் ஒழிய மத்திய அரசின் இந்த முயற்சி முக்கிய காரணமாக அமையும். ஆனால் இதைத் தவிர வேறு எந்த நல்ல விஷயத்தையும் மத்திய அரசு செய்துவிடவில்லை.
தேர்தலின் போது கறுப்புப் பணத்தை 100 சதவீதம் ஒழிப்போம் என மன்மோகன் சிங் வாக்குறுதி அளித்தார்.
ஆனால், இப்போது வியாபாரம் போய்விடும் என்பதால் வெளிநாட்டில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்க ளின் பட்டியலை வெளியிடத் தயங்கு கின்றனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கொமன்வெல்த் ஊழல் என ஊழலுக்கு மேல் ஊழலுக்கு உடந்தையாக மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கு மாற்று ஆட்சியை பாஜகவால் மட்டும்தான் கொடுக்க முடியும். அதேநேரம் பாஜகவிலும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன.
காங்கிரஸ் என்றால் சோனியாவை நம்பித்தான் கட்சியே உள்ளது. இதுபோல ஜெயலலிதா இல்லையெனில் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு கிடைக்காது.
அவருக்கு முன்னர் எம்.ஜி.ஆர்.தான் அ.தி.மு.க. என்றிருந்தது. ஆனால் பா.ஜ.கவில் நிலைமை வேறு. தகுதியான நபர்கள் முன்னிலைக்கு வந்து கொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தலைவர். இந்த சுதந்திரம் காரணமாக ஒவ்வொருவருக்குள்ளும் போட்டி உள்ளது. இதுதான் பா.ஜ.க.வின் பிரச்சினை. குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்ற தனது திறமையை அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி நிரூபித்துள்ளார்.
அதற்குப் பிறகும் கூட அகில இந்திய அளவில் அவரை அங்கீகரித்துக் கொள்ளவில்லையெனில் அது நமது முட்டாள்தனம். நரேந்திர மோடியை இந்திய அளவில் அங்கீகரிக்க வைக்கும் முயற்சியை மூத்த தலைவர் அத்வானியால்தான் செய்து முடிக்க முடியும். ஏனெனில் அவரால்தான் பா.ஜ.க.வையும் வழிநடத்த முடியும்.
பிரதமர் வேட்பாளரை முதலில் அறிவிக்க வேண்டும். அதுவே, வாக்காளர்களுக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளிக்கும். ஆனால் அதுவே மிகப் பெரிய பிரச்சினையையும் பா.ஜ.க.வுக்குள் ஏற்படுத்திவிடும்.
இதுபோன்ற காரணங்களால் பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைக்க முடியாமல் பா.ஜ.க ஆதரவு ஆட்சிதான் மத்தியில் அமையும் என்றால் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க பா.ஜ.க. ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
அதற்குத் தேவையான தேசப் பற்றும், அர்ப்பணிப்பும் அவருக்கு உள்ளது.
இலவசங்களைப் பற்றிக் கவலைப்படாத அளவுக்கு மக்களை வளர்க்க வேண்டும்.
ஆனால், இலவசங்கள் அறிவிக்கப்படா விட்டால் தி.மு.கவை அகற்ற முடியாத நிலை தமிழகத்தில் நிலவியது. அதன் காரணமாகத்தான் அ.தி.மு.கவும் இலவசங்களை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
சசிகலா மற்றும் அவருடைய கூட்டாளிகளைக் கட்சியிலிருந்து நீக்கியது, ஒரு தவறு நடக்கிறது என்றால் அதன் மீது முதல்வர் ஜெயலலிதா எவ்வாறு தெளிவான தைரியமான நடவடிக்கை எடுக்கிறார் என்பதற்கான சிறந்த உதாரணம்.
குஜராத்தைவிட சிறந்த ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற ஆசை ஜெயலலிதாவிடம் உள்ளது. ஆனால், தொடர்ந்து ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைக்காததுதான் தமிழக வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருந்து வருகிறது.
எனவே, தொடர்ச்சியாக 10 ஆண்டு ஆட்சி வாய்ப்பு அ.தி.மு.க.வுக்குக் கொடுத்தால் குஜராத்தைத் தமிழகம் மிஞ்சிவிடும்” என்றார் சோ.
பத்திரிகையாளர் சோ
அ.தி.மு.கவுக்குத் தொடர்ந்து தமிழ் நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தால் குஜராத்தைத் தமிழ்நாடு மிஞ்சி விடும் என்றார் பத்திரிகையாளர் சோ.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:
“எந்த ஊழலிலிருந்தும் காப்பாற்றக் கூடியவராக பிரதமர் மன்மோகன் சிங் மாறியுள்ளார். யார் என்ன தப்பு செய்திருந்தாலும், அவர் நல்லவர்தான் என்று கூறுபவர் அவர்.
இப்படிப்பட்டவரின் தலைமையில் செயல்படும் மத்திய அரசு சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு என்ற ஒரு நல்ல காரியத்தை செய்ய முனைந்து கொண்டிருக்கிறது. சில பொருளாதார நிபுணர்கள் எதிர்க்கின்ற போதும் அது நல்ல விஷயம்.
போட்டி காரணமாக கலப்படம், எடைக் குறைப்புகள் ஒழிய மத்திய அரசின் இந்த முயற்சி முக்கிய காரணமாக அமையும். ஆனால் இதைத் தவிர வேறு எந்த நல்ல விஷயத்தையும் மத்திய அரசு செய்துவிடவில்லை.
தேர்தலின் போது கறுப்புப் பணத்தை 100 சதவீதம் ஒழிப்போம் என மன்மோகன் சிங் வாக்குறுதி அளித்தார்.
ஆனால், இப்போது வியாபாரம் போய்விடும் என்பதால் வெளிநாட்டில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்க ளின் பட்டியலை வெளியிடத் தயங்கு கின்றனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கொமன்வெல்த் ஊழல் என ஊழலுக்கு மேல் ஊழலுக்கு உடந்தையாக மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கு மாற்று ஆட்சியை பாஜகவால் மட்டும்தான் கொடுக்க முடியும். அதேநேரம் பாஜகவிலும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன.
காங்கிரஸ் என்றால் சோனியாவை நம்பித்தான் கட்சியே உள்ளது. இதுபோல ஜெயலலிதா இல்லையெனில் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு கிடைக்காது.
அவருக்கு முன்னர் எம்.ஜி.ஆர்.தான் அ.தி.மு.க. என்றிருந்தது. ஆனால் பா.ஜ.கவில் நிலைமை வேறு. தகுதியான நபர்கள் முன்னிலைக்கு வந்து கொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தலைவர். இந்த சுதந்திரம் காரணமாக ஒவ்வொருவருக்குள்ளும் போட்டி உள்ளது. இதுதான் பா.ஜ.க.வின் பிரச்சினை. குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்ற தனது திறமையை அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி நிரூபித்துள்ளார்.
அதற்குப் பிறகும் கூட அகில இந்திய அளவில் அவரை அங்கீகரித்துக் கொள்ளவில்லையெனில் அது நமது முட்டாள்தனம். நரேந்திர மோடியை இந்திய அளவில் அங்கீகரிக்க வைக்கும் முயற்சியை மூத்த தலைவர் அத்வானியால்தான் செய்து முடிக்க முடியும். ஏனெனில் அவரால்தான் பா.ஜ.க.வையும் வழிநடத்த முடியும்.
பிரதமர் வேட்பாளரை முதலில் அறிவிக்க வேண்டும். அதுவே, வாக்காளர்களுக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளிக்கும். ஆனால் அதுவே மிகப் பெரிய பிரச்சினையையும் பா.ஜ.க.வுக்குள் ஏற்படுத்திவிடும்.
இதுபோன்ற காரணங்களால் பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைக்க முடியாமல் பா.ஜ.க ஆதரவு ஆட்சிதான் மத்தியில் அமையும் என்றால் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க பா.ஜ.க. ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
அதற்குத் தேவையான தேசப் பற்றும், அர்ப்பணிப்பும் அவருக்கு உள்ளது.
இலவசங்களைப் பற்றிக் கவலைப்படாத அளவுக்கு மக்களை வளர்க்க வேண்டும்.
ஆனால், இலவசங்கள் அறிவிக்கப்படா விட்டால் தி.மு.கவை அகற்ற முடியாத நிலை தமிழகத்தில் நிலவியது. அதன் காரணமாகத்தான் அ.தி.மு.கவும் இலவசங்களை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
சசிகலா மற்றும் அவருடைய கூட்டாளிகளைக் கட்சியிலிருந்து நீக்கியது, ஒரு தவறு நடக்கிறது என்றால் அதன் மீது முதல்வர் ஜெயலலிதா எவ்வாறு தெளிவான தைரியமான நடவடிக்கை எடுக்கிறார் என்பதற்கான சிறந்த உதாரணம்.
குஜராத்தைவிட சிறந்த ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற ஆசை ஜெயலலிதாவிடம் உள்ளது. ஆனால், தொடர்ந்து ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைக்காததுதான் தமிழக வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருந்து வருகிறது.
எனவே, தொடர்ச்சியாக 10 ஆண்டு ஆட்சி வாய்ப்பு அ.தி.மு.க.வுக்குக் கொடுத்தால் குஜராத்தைத் தமிழகம் மிஞ்சிவிடும்” என்றார் சோ.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குஜராத்தைத் தமிழ்நாடு மிஞ்சிவிடும்
அதனைத்தானே தமிழ் நாட்டினர் விரும்புகின்றனர் போல இருக்கு எது எவ்வாறாயினும் கி.மு / கி.பி என்பது போல தே.மு/ தே.பி அதாவது தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின் தே.மு கூறப்படும் வார்த்தைகள் ஏப்ரல் பூள் என்று நினைத்துக்கொள்ள வேண்டும் ஏன் என்றால் இன்றைய அரசியல் வாதிகளின் சிலர் இப்படித்தான் செய்கிறார்கள்.
Re: குஜராத்தைத் தமிழ்நாடு மிஞ்சிவிடும்
வந்து ஒரு வருஷம் கூட ஆகல.. அதுக்குள்ளே மதவாத கட்சி யா மாறிடுச்சு இந்தம் மாகட்சி. ..
இஸ்லாமிய அட்சி வந்தால் தவிர இந்தியாவை யாராலும் காப்பாற்ற இயலாது..
இஸ்லாமிய அட்சி வந்தால் தவிர இந்தியாவை யாராலும் காப்பாற்ற இயலாது..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: குஜராத்தைத் தமிழ்நாடு மிஞ்சிவிடும்
kiwi boy wrote:வந்து ஒரு வருஷம் கூட ஆகல.. அதுக்குள்ளே மதவாத கட்சி யா மாறிடுச்சு இந்தம் மாகட்சி. ..
இஸ்லாமிய அட்சி வந்தால் தவிர இந்தியாவை யாராலும் காப்பாற்ற இயலாது..
இஸ்லாம் , இந்து, கிரிஸ்டியன் இப்படி எந்தமதமும் சாராமல் இருக்கனும் .
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: குஜராத்தைத் தமிழ்நாடு மிஞ்சிவிடும்
யாதுமானவள் wrote:kiwi boy wrote:வந்து ஒரு வருஷம் கூட ஆகல.. அதுக்குள்ளே மதவாத கட்சி யா மாறிடுச்சு இந்தம் மாகட்சி. ..
இஸ்லாமிய அட்சி வந்தால் தவிர இந்தியாவை யாராலும் காப்பாற்ற இயலாது..
இஸ்லாம் , இந்து, கிரிஸ்டியன் இப்படி எந்தமதமும் சாராமல் இருக்கனும் .
தமிழன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 63
மதிப்பீடுகள் : 25
Similar topics
» என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
» தமிழ்நாடு மாவட்டங்களை தெரிந்து கொள்வோம்
» திருவள்ளுவர் ஒரு தமிழ்நாடு பஸ்கம்பெனி ஓனரும் கூட.
» தமிழ்நாடு காங்கிரஸ் சரித்திரத்தில் திருச்சி.
» என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
» தமிழ்நாடு மாவட்டங்களை தெரிந்து கொள்வோம்
» திருவள்ளுவர் ஒரு தமிழ்நாடு பஸ்கம்பெனி ஓனரும் கூட.
» தமிழ்நாடு காங்கிரஸ் சரித்திரத்தில் திருச்சி.
» என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|