Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு
2 posters
Page 1 of 1
நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு
நேஷனல் லா ஸ்கூல்களில் சேர
சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு
பொன்.தனசேகரன்
நாட்டில்
சட்டப் படிப்புகளைப் படிக்க முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாகத் திகழ்பவை
நேஷனல் லா ஸ்கூல்கள் என்று அழைக்கப்படும் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள். இந்த
முக்கியத்துவம் வாய்ந்த சட்டக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு கிளாட் என்ற
நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு இல்லை.
பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள்
சேர்க்கப்படுகிறார்கள். எனினும் நாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த நேஷனல் லா
ஸ்கூல்களில் சேர விரும்பும் மாணவர்கள் கிளாட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
சட்டப் படிப்பைக் கற்றுத் தரும் முக்கியக் கல்வி நிறுவனங்கள் நேஷனல் லா ஸ்கூல்கள்.
பெங்களூரில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா சர்வதேச அளவில் புகழ் பெற்ற கல்வி
நிறுவனம். இதே வழியில் தரம் வாய்ந்த சட்டக் கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும்
என்ற நோக்கில் ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் அகாதெமி ஆஃப் லீகல் ஸ்டடி அண்ட்
ரிசர்ச்,
போபாலில் உள்ள நேஷனல் லா இன்ஸ்டிட்யூட் யுனிவர்சிட்டி, கொல்கத்தாவில் உள்ள வெஸ்ட் பெங்கால் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப்
ஜுரிடிக்கல் சயின்சஸ், ஜோத்பூரில்
உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி, ராய்ப்பூரில் உள்ள ஹிதயத்துல்லா நேஷனல் லா
யுனிவர்சிட்டி,
காந்தி நகரில் உள்ள குஜராத் நேஷனல் லா யுனிவர்சிட்டி, லக்னோவில்
உள்ள டாக்டர் ராம் மனோகர் லோகியா நேஷனல் லா யுனிவர்சிட்டி, பாட்டியாலாவில் உள்ள ராஜீவ்காந்தி நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப்
லா,
பாட்னாவில் உள்ள சாணக்கியா நேஷனல் லா யுனிவர்சிட்டி, கொச்சியில்
உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் அட்வான்ஸ்ட் லீகல் ஸ்டடீஸ், ஒரிசாவில்
உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி, ராஞ்சியில்
உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ஸ்டடி அண்ட் ரிசர்ச் இன் லா, அசாமில்
உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி அண்ட் ஜுடிசியல் அகாதெமி ஆகிய சட்டக் கல்வி
நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த
அனைத்துக் கல்வி நிலையங்களிலும் மாணவர்களைச் சேர்ப்பதற்காக
கிளாட் (Common Law Admission Test -
CLAT) என்ற பொது
நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த
தேசியச் சட்டப் பல்கலைக்கழகங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில்
பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேர்க்கப் படுகிறார்கள். இந்த நுழைவுத் தேர்வு எழுத
விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் 50 சதவீதத்திற்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட,
பழங்குடியின, ஓ.பி.சி.
பிரிவைச் சேர்ந்த மாணவர்களும், மாற்றுத்
திறனாளி மாணவர்களும் 45 சதவீத
மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தற்போது பிளஸ் டூ தேர்வு எழுத உள்ள
மாணவர்களும்,
இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவு மற்றும்
ஓ.பி.சி. பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த ஆண்டு ஜூலை முதல் தேதியன்று
20
வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின
மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 22 வயதுக்கு
மேல் ஆகி இருக்கக்கூடாது.
இரண்டு மணி
நேரம் நடைபெறும் கிளாட் நுழைவுத் தேர்வில் 200 கேள்விகள்
கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்கள். ஆங்கிலத்துக்கு (காம்ப்ரிஹென்சன் உள்பட) 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் மாணவர்களின் ஆங்கிலத் திறன்
சோதிக்கப்படும். ஆங்கில இலக்கணத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். பொது
அறிவு மற்றும் நடப்புச் செய்திகள் (கரண்ட் அபயர்ஸ்) குறித்த கேள்விகளுக்கு
50
மதிப்பெண்கள் வழங்கப்படும். 2011ம் ஆண்டு
மார்ச் மாதத்திலிருந்து 2012ம் ஆண்டு
மார்ச் மாதம் வரை முக்கியப் பத்திரிகைகளில் வந்துள்ள நடப்புச் செய்திகளிலிருந்து
கேள்விகள் இருக்கும். கணிதப்பாடத்திற்கு 20 மதிப்பெண்கள் இருக்கும். கணிதத்தில் பத்தாம் வகுப்பு பாடத்துக்குட்பட்ட
நிலையில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படும். லாஜிக்கல் ரீசனிங் பிரிவில்
40
மதிப்பெண்களுக்கான கேள்விகளும், லீகல்
ஆப்டிட்யூட் மற்றும் லீகல் அவேர்னஸ் பகுதியில் 50 மதிப்பெண்களுக்கான கேள்விகளும் இருக்கும். இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை
நடத்தும் பொறுப்பை ஜோத்பூரில் உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி ஏற்றுக்
கொண்டுள்ளது.
இந்த தேசிய
சட்டப் பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேருவதற்கும் பொது
நுழைவுத் தேர்வு (கிளாட்) நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும்
பொதுப்பிரிவு மாணவர்கள், இளநிலை
சட்டப் படிப்பில் குறைந்தது 55 சதவீத
மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, ஓ.பி.சி.
மாணவர்களும் மாற்றுத் திறனாளிகளும் குறைந்தது 50 சதவீத
மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். சட்டப் படிப்பின் இறுதியாண்டு தேர்வு எழுதும்
மாணவர்களும் இந்த முதுநிலைப் பட்டப் படிப்பில் சேருவதற்கான இந்த நுழைவுத் தேர்வு
எழுத விண்ணப்பிக்கலாம்.
இந்தப்
பொது நுழைவுத் தேர்வு இரண்டு மணி நேரம் நடைபெறும். மொத்த மதிப்பெண்கள்
200.
லா ஆஃப் காண்டிராக்ட்ஸ், லா ஆஃப்
டார்ட்ஸ்,
கிரிமினல் லா, கான்ஸ்டிடியூஷனல் லா அண்ட் லீகல் தியரி ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து
அப்ஜெக்ட்டிவ் முறையில் 100 கேள்விகள்
இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
அத்துடன்,
குறுகிய விடையளிக்கும்படியான 10 கேள்விகள்
கேட்கப்படும். இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் தலா 10 மதிப்பெண்கள்.
இந்த
நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட
நேஷனல் லா ஸ்கூல் பல்கலைக்கழகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இதுதவிர,
குறிப்பிட்ட பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கிடைக்கும். விண்ணப்பக்
கட்டணம் ரூ.3
ஆயிரம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்
ரூ.2,500.
தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெற விரும்பும் மாணவர்கள், நேஷனல் லா
யுனிவர்சிட்டி,
ஜோத்பூர் கிளாட் அக்கவுண்ட் என்ற பெயருக்கு விண்ணப்பக் கட்டணத் தொகைக்கு
டிமாண்ட் டிராப்ட் எடுத்து ஜோத்பூரில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்துக்கு
எழுதியும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது குறித்த விரிவான விவரங்களை கிளாட் இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து
கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 31ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். கிளாட்
நுழைவுத் தேர்வு வருகிற மே 13ம் தேதி மாலை 3
மணியிலிருந்து
5 மணி வரை
நடைபெறும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் படிப்பைப் படித்து சட்டத்துறையில் சாதிக்க
விரும்பும் திறமையான மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
விவரங்களுக்கு: www.clat.ac.in
சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு
பொன்.தனசேகரன்
நாட்டில்
சட்டப் படிப்புகளைப் படிக்க முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாகத் திகழ்பவை
நேஷனல் லா ஸ்கூல்கள் என்று அழைக்கப்படும் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள். இந்த
முக்கியத்துவம் வாய்ந்த சட்டக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு கிளாட் என்ற
நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு இல்லை.
பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள்
சேர்க்கப்படுகிறார்கள். எனினும் நாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த நேஷனல் லா
ஸ்கூல்களில் சேர விரும்பும் மாணவர்கள் கிளாட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
சட்டப் படிப்பைக் கற்றுத் தரும் முக்கியக் கல்வி நிறுவனங்கள் நேஷனல் லா ஸ்கூல்கள்.
பெங்களூரில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா சர்வதேச அளவில் புகழ் பெற்ற கல்வி
நிறுவனம். இதே வழியில் தரம் வாய்ந்த சட்டக் கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும்
என்ற நோக்கில் ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் அகாதெமி ஆஃப் லீகல் ஸ்டடி அண்ட்
ரிசர்ச்,
போபாலில் உள்ள நேஷனல் லா இன்ஸ்டிட்யூட் யுனிவர்சிட்டி, கொல்கத்தாவில் உள்ள வெஸ்ட் பெங்கால் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப்
ஜுரிடிக்கல் சயின்சஸ், ஜோத்பூரில்
உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி, ராய்ப்பூரில் உள்ள ஹிதயத்துல்லா நேஷனல் லா
யுனிவர்சிட்டி,
காந்தி நகரில் உள்ள குஜராத் நேஷனல் லா யுனிவர்சிட்டி, லக்னோவில்
உள்ள டாக்டர் ராம் மனோகர் லோகியா நேஷனல் லா யுனிவர்சிட்டி, பாட்டியாலாவில் உள்ள ராஜீவ்காந்தி நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப்
லா,
பாட்னாவில் உள்ள சாணக்கியா நேஷனல் லா யுனிவர்சிட்டி, கொச்சியில்
உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் அட்வான்ஸ்ட் லீகல் ஸ்டடீஸ், ஒரிசாவில்
உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி, ராஞ்சியில்
உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ஸ்டடி அண்ட் ரிசர்ச் இன் லா, அசாமில்
உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி அண்ட் ஜுடிசியல் அகாதெமி ஆகிய சட்டக் கல்வி
நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த
அனைத்துக் கல்வி நிலையங்களிலும் மாணவர்களைச் சேர்ப்பதற்காக
கிளாட் (Common Law Admission Test -
CLAT) என்ற பொது
நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த
தேசியச் சட்டப் பல்கலைக்கழகங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில்
பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேர்க்கப் படுகிறார்கள். இந்த நுழைவுத் தேர்வு எழுத
விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் 50 சதவீதத்திற்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட,
பழங்குடியின, ஓ.பி.சி.
பிரிவைச் சேர்ந்த மாணவர்களும், மாற்றுத்
திறனாளி மாணவர்களும் 45 சதவீத
மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தற்போது பிளஸ் டூ தேர்வு எழுத உள்ள
மாணவர்களும்,
இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவு மற்றும்
ஓ.பி.சி. பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த ஆண்டு ஜூலை முதல் தேதியன்று
20
வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின
மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 22 வயதுக்கு
மேல் ஆகி இருக்கக்கூடாது.
இரண்டு மணி
நேரம் நடைபெறும் கிளாட் நுழைவுத் தேர்வில் 200 கேள்விகள்
கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்கள். ஆங்கிலத்துக்கு (காம்ப்ரிஹென்சன் உள்பட) 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் மாணவர்களின் ஆங்கிலத் திறன்
சோதிக்கப்படும். ஆங்கில இலக்கணத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். பொது
அறிவு மற்றும் நடப்புச் செய்திகள் (கரண்ட் அபயர்ஸ்) குறித்த கேள்விகளுக்கு
50
மதிப்பெண்கள் வழங்கப்படும். 2011ம் ஆண்டு
மார்ச் மாதத்திலிருந்து 2012ம் ஆண்டு
மார்ச் மாதம் வரை முக்கியப் பத்திரிகைகளில் வந்துள்ள நடப்புச் செய்திகளிலிருந்து
கேள்விகள் இருக்கும். கணிதப்பாடத்திற்கு 20 மதிப்பெண்கள் இருக்கும். கணிதத்தில் பத்தாம் வகுப்பு பாடத்துக்குட்பட்ட
நிலையில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படும். லாஜிக்கல் ரீசனிங் பிரிவில்
40
மதிப்பெண்களுக்கான கேள்விகளும், லீகல்
ஆப்டிட்யூட் மற்றும் லீகல் அவேர்னஸ் பகுதியில் 50 மதிப்பெண்களுக்கான கேள்விகளும் இருக்கும். இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை
நடத்தும் பொறுப்பை ஜோத்பூரில் உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி ஏற்றுக்
கொண்டுள்ளது.
இந்த தேசிய
சட்டப் பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேருவதற்கும் பொது
நுழைவுத் தேர்வு (கிளாட்) நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும்
பொதுப்பிரிவு மாணவர்கள், இளநிலை
சட்டப் படிப்பில் குறைந்தது 55 சதவீத
மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, ஓ.பி.சி.
மாணவர்களும் மாற்றுத் திறனாளிகளும் குறைந்தது 50 சதவீத
மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். சட்டப் படிப்பின் இறுதியாண்டு தேர்வு எழுதும்
மாணவர்களும் இந்த முதுநிலைப் பட்டப் படிப்பில் சேருவதற்கான இந்த நுழைவுத் தேர்வு
எழுத விண்ணப்பிக்கலாம்.
இந்தப்
பொது நுழைவுத் தேர்வு இரண்டு மணி நேரம் நடைபெறும். மொத்த மதிப்பெண்கள்
200.
லா ஆஃப் காண்டிராக்ட்ஸ், லா ஆஃப்
டார்ட்ஸ்,
கிரிமினல் லா, கான்ஸ்டிடியூஷனல் லா அண்ட் லீகல் தியரி ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து
அப்ஜெக்ட்டிவ் முறையில் 100 கேள்விகள்
இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
அத்துடன்,
குறுகிய விடையளிக்கும்படியான 10 கேள்விகள்
கேட்கப்படும். இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் தலா 10 மதிப்பெண்கள்.
இந்த
நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட
நேஷனல் லா ஸ்கூல் பல்கலைக்கழகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இதுதவிர,
குறிப்பிட்ட பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கிடைக்கும். விண்ணப்பக்
கட்டணம் ரூ.3
ஆயிரம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்
ரூ.2,500.
தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெற விரும்பும் மாணவர்கள், நேஷனல் லா
யுனிவர்சிட்டி,
ஜோத்பூர் கிளாட் அக்கவுண்ட் என்ற பெயருக்கு விண்ணப்பக் கட்டணத் தொகைக்கு
டிமாண்ட் டிராப்ட் எடுத்து ஜோத்பூரில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்துக்கு
எழுதியும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது குறித்த விரிவான விவரங்களை கிளாட் இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து
கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 31ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். கிளாட்
நுழைவுத் தேர்வு வருகிற மே 13ம் தேதி மாலை 3
மணியிலிருந்து
5 மணி வரை
நடைபெறும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் படிப்பைப் படித்து சட்டத்துறையில் சாதிக்க
விரும்பும் திறமையான மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
விவரங்களுக்கு: www.clat.ac.in
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர தேசிய நுழைவுத் தேர்வு கட்டாயம் : இந்திய மருத்துவக் கவுன்சில்
» 3 தேர்வு மதிப்பெண் கூட்டப்படும்: புத்தக சுமையை குறைக்க பள்ளி தேர்வு முறையில் மாற்றம்; சட்டசபையில் ஜெ
» மீண்டும் வந்தது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை
» நுழைவுத் தேர்வுகளுக்கான் தேதிகள்
» தேர்வு…
» 3 தேர்வு மதிப்பெண் கூட்டப்படும்: புத்தக சுமையை குறைக்க பள்ளி தேர்வு முறையில் மாற்றம்; சட்டசபையில் ஜெ
» மீண்டும் வந்தது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை
» நுழைவுத் தேர்வுகளுக்கான் தேதிகள்
» தேர்வு…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|