சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

எதிர்க்கட்சிகள் அசந்து போகும் அளவுக்கு பிப். 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப் போகிறேன்-ஜெ.` Khan11

எதிர்க்கட்சிகள் அசந்து போகும் அளவுக்கு பிப். 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப் போகிறேன்-ஜெ.`

4 posters

Go down

எதிர்க்கட்சிகள் அசந்து போகும் அளவுக்கு பிப். 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப் போகிறேன்-ஜெ.` Empty எதிர்க்கட்சிகள் அசந்து போகும் அளவுக்கு பிப். 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப் போகிறேன்-ஜெ.`

Post by யாதுமானவள் Thu 2 Feb 2012 - 13:54

சென்னை : (01 - பிப்ரவரி-2012 )

தானே புயல் நிவாரணப் பணிகளில் எனது அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, உலக சாதனை படைத்துள்ளது. புயல் நிவாரணம் தொடர்பாக எதிர்க்கட்சித் துணை தலைவரே அசந்து போகும் அளவிலான அறிவிப்புகளை பிப்ரவரி 4ம் தேதி எதிர்பார்க்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் புயல் நிவாரணப் பணிகளைக் குறை கூறிப் பேசினார். இதற்கு முதல்வர் ஜெயலலிதா நீண்டதொரு விளக்கம் அளித்தார்.

மேலும் தமிழகத்தைப் போல எங்காவது போர்க்கால அடிப்படையில் புயல் நிவாரணப் பணிகளை நிறைவேற்றியுள்ளனர் என்பதைக் காட்ட முடியுமா என்றும் பண்ருட்டியாருக்கு சவால் விடுத்தார்.

முதல்வரின் பேச்சு முழு விவரம்:

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தானே புயலால் ஏற்பட்ட சேதங்களைப்பற்றி இங்கே குறிப்பிடும்போது, தானே இது வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட சேதம் என்பதை குறிப்பிட்டார்.

யாருமே இதுவரை கண்டிராத அளவிற்கு 35,000க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சூறாவளி காற்றில் வீசி அடிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் விழுந்து கிடந்தன.

எல்லாமே சீரழிக்கப்பட்டு விட்டது. இயல்பான வாழ்க்கை நடத்துவதற்கு என்னென்ன கட்டமைப்புகள் தேவையோ, என்னென்ன கட்டமைப்புகள் அரசால் அங்கே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்ததோ, எல்லாமே சீர்குலைந்து விட்டது. ஆனால், 2, 3 நாட்கள் வரை எந்தப் பணியுமே நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் சொல்வது தவறு. அதை ஆணித்தரமாக மறுக்கிறேன்.

சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களையெல்லாம், போர்க்கால அடிப்படையில், 24 மணி நேரத்திற்குள் அகற்றி விட்டோம். மரங்களை அகற்றாமல், வண்டி, வாகனங்கள் எப்படிச் செல்லமுடியும்? குடிநீரை எப்படிக் கொண்டு கொடுக்க முடியும்? சாப்பாட்டுப் பொட்டலங்களை எப்படிக் கொண்டுபோய்க் கொடுக்க முடியும்? ஆகவே, அதைத் தலையாயப் பணியாக மேற்கொண்டு, 24 மணி நேரத்திற்குள் சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றி விட்டோம் என்பதை மீண்டும் நான் வலியுறுத்திக் கூறுகிறேன்.

மாவட்ட நிர்வாகமும் தன்னால் இயன்ற பணிகளை, உடனடியாக மேற்கொண்டது. தகவல் தொடர்பே இல்லை, துண்டிக்கப்பட்டு விட்டது என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவரே கூறுகிறார். ஆகவே, உடனடியாக இயன்ற இடங்களில் எல்லாம், உணவுப் பொட்டலங்களும், குடிநீரும் விநியோகிக்கப்பட்டன. படிப்படியாக நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்கள், வீடுகளை இழந்த மக்களெல்லாம் பொது இடங்களில், பள்ளிக் கூடங்களில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே குடியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு உணவும் வழங்கப்படவில்லை; எந்த நிதியுதவியும் செய்யப்படவில்லை என்று சொல்வதெல்லாம் தவறு. புள்ளி விவரங்கள் இருந்தால், புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு பேச வேண்டும். இல்லையென்றால், பொத்தாம்பொதுவாக எதுவுமே நடைபெறவில்லை என்று சொல்வது மிகவும் எளிதான ஒரு காரியம்; அப்படி இல்லை.

அண்டை மாநிலமாக உள்ள புதுச்சேரியில்கூட, அங்குள்ள அமைச்சர்கள்கூட, அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள்கூட, தமிழ்நாட்டில் நடைபெற்ற பணிகளைப் பாராட்டியிருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் சந்திப்பிலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள். புதுச்சேரி முன்னாள் முதல்வர்கூட பாராட்டியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற பணிகளைப் போல், நிவாரணப் பணிகளைப்போல் இதுவரை எங்குமே நடைபெறவில்லை என்றும் அவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, கடலூர் மாவட்டத்திலும், விழுப்புரம் மாவட்டத்திலும், நாகை மாவட்டத்திலும் ஏற்பட்ட சேதங்களைப் பார்க்கின்றபோது, சாதாரணமாக எந்த அரசாக இருந்தாலும், எந்த மாநில அரசாக இருந்தாலும், மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மீண்டும் கொண்டுவருவதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள், 7 மாதங்கள் பிடித்திருக்கும். ஆனால், ஒரே மாதத்திற்குள் அதைச் செய்து முடித்திருக்கிறோம். மின்சார சப்ளை, மின்சார விநியோகம் ஒட்டுமொத்தமாக அங்கே சீரழிக்கப்பட்டு விட்டது.

இதுவரை தமிழ்நாட்டில் எங்குமே இதுபோன்ற சேதத்தை நாங்கள் பார்த்ததில்லை; யாருமே பார்த்ததில்லை. அங்குள்ள மக்களே மீண்டும் மின்சார சப்ளையை அங்கே ஏற்படுத்திக் கொடுப்பதற்குக் குறைந்தபட்சம் 4 மாதங்கள் பிடிக்கும் என்று நினைத்தார்கள். ஆனால், ஒரு மாத காலத்திற்குள்ளேயே மீண்டும் அங்கே மின்சாரத்தைக் கொடுத்து, போர்க்கால அடிப்படையில் அண்டை மாவட்டங்களிலிருந்து எல்லாம் மின்சார வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களை அங்கே கொண்டுவந்து, நம்மிடம் நிதி இல்லை என்றாலும், எப்படியோ திரட்டி, 300 கோடி ரூபாய் அளவிற்கு மின்சார வாரியத்திற்குக் கொடுத்து, அண்டை மாநிலங்களிலிருந்தெல்லாம் மின்கம்பங்கள் வரவழைத்து, தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நாங்கள் அங்கே நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, பொங்கல் வருவதற்குள் உள்ளூர் மின் விநியோகம் வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அவற்றையெல்லாம் எடுத்து, இதுவரை உலக சாதனையாக நாங்கள் நிகழ்த்திக் காட்டி, பொங்கல் வருவதற்குள் அனைத்து வீடுகளுக்கும் அங்கே மின்சாரம் வழங்கப்பட்டது.

அனைத்து வேளாண் பம்ப்செட்டுகளுக்கு இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் அங்கே மின் சப்ளை வழங்கப்பட வேண்டுமென்று உத்தரவிட்டு, அதுவும் செய்யப்பட்டு விட்டது. இதுபோல் செயல்பட்ட ஒரு மாநில அரசை, எதிர்க்கட்சித் துணைவரால் சுட்டிக்காட்ட முடியுமா என்று நான் சவால் விடுகிறேன்.

மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை; பாராமுகமாக இருந்தது என்பதை மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களே ஒப்புக் கொள்கிறார். அப்படியிருக்கும்போது, மாநில அரசு தன்னிடம் இருக்கின்ற நிதியை வைத்துக்கொண்டு, தன்னிடம் இருக்கின்ற ஆட்களை வைத்துக்கொண்டு, தன்னிடம் இருக்கின்ற நிதியாதாரங்களை வைத்துக்கொண்டு, இந்த அளவிற்குச் செயல்பட்டிருக்கிறோம் என்று சொன்னால், யாராக இருந்தாலும், மனம் திறந்து, மனமுவந்து நம்மைப் பாராட்ட வேண்டும்.

இன்னும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். ஏற்பட்டிருக்கிற சேதம் வரலாறு காணாத சேதம். ஆனால், பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறோம், எந்தளவிற்குச் செய்திருக்கிறோம் என்பதைப் புள்ளி விவரங்களுடன் 4 ஆம் தேதி என்னுடைய பதிலுரையில் நான் தெரிவிக்கிறேன் என்றார்.

பிறகு பண்ருட்டியார் தொடர்ந்து பேசினார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட ஜெயலலிதா, நீண்ட கால குறுகிய காலத் திட்டங்கள் எல்லாம் என்னுடைய தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துவிட்டோம். அப்படியே அந்த திட்டங்களை வெளியிடாததுதான் நான் செய்த தவறு.

கவர்னர் உரை மீது நடைபெறும் விவாதத்திற்கு பதிலளிக்கும் போது அந்த திட்டங்கள் குறித்து நான் வரும் 4ம் தேதி அறிவிப்பேன். நான் வெளியிடும் அறிவிப்புகளை பார்த்து எதிர்கட்சிகள் அசந்து போகும் நிலைமை உருவாகும் என்றார்.

காதைக் கிழித்த மேசைத் தட்டல்

முதல்வர் விளக்கம் அளித்துப் பேசியபோது பலமுறை அவரது பேச்சை வரவேற்று ஆளுங்கட்சியினர் மேசைகளை பலம் கொண்டு தட்டி வரவேற்றதால் அவையில் மேசைத் தட்டல் ஒலி காதைப் பிளந்தது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

எதிர்க்கட்சிகள் அசந்து போகும் அளவுக்கு பிப். 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப் போகிறேன்-ஜெ.` Empty Re: எதிர்க்கட்சிகள் அசந்து போகும் அளவுக்கு பிப். 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப் போகிறேன்-ஜெ.`

Post by jasmin Thu 2 Feb 2012 - 18:15

இது ஜெ வின் அகங்காரமான வீண் பேச்சாகும் இவர் ஒரு வாய் பேச்சு வீராங்கனை செயலில் பூஜ்யம் .....புயல் ஓய்ந்து சுமார் பத்து நாட்கள் எந்த மின் கம்பங்களுமே சரி செய்யாமல் கிடந்த காட்சிகளை எல்லா தொலைகாட்சிகளும் லைவாக காட்டின ....மக்களை முட்டாளாக்குகிறார் ஜெ ....சட்டமன்றத்தில் தனி பெரும்பாணமை இருக்கும் அகந்தையும் அகங்காரமும் அவர் பேச்சிலும் செயலிலும் மிளிர்கிறது ....இதுவே அவரின் வீழ்ச்சிக்கு முதல் படி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

எதிர்க்கட்சிகள் அசந்து போகும் அளவுக்கு பிப். 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப் போகிறேன்-ஜெ.` Empty Re: எதிர்க்கட்சிகள் அசந்து போகும் அளவுக்கு பிப். 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப் போகிறேன்-ஜெ.`

Post by முfதாக் Thu 2 Feb 2012 - 18:45

எதிர்க்கட்சிகள் அசந்து போகும் அளவுக்கு பிப். 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப் போகிறேன்-ஜெ.` 876805 எதிர்க்கட்சிகள் அசந்து போகும் அளவுக்கு பிப். 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப் போகிறேன்-ஜெ.` 876805
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

எதிர்க்கட்சிகள் அசந்து போகும் அளவுக்கு பிப். 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப் போகிறேன்-ஜெ.` Empty Re: எதிர்க்கட்சிகள் அசந்து போகும் அளவுக்கு பிப். 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப் போகிறேன்-ஜெ.`

Post by gud boy Thu 2 Feb 2012 - 19:02

jasmin wrote:அகந்தையும் அகங்காரமும் அவர் பேச்சிலும் செயலிலும் மிளிர்கிறது ....இதுவே அவரின் வீழ்ச்சிக்கு முதல் படி

முற்றிலும் உண்மை..அகங்காரம் தான் அழிவுக்கு முதற் படி..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

எதிர்க்கட்சிகள் அசந்து போகும் அளவுக்கு பிப். 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப் போகிறேன்-ஜெ.` Empty Re: எதிர்க்கட்சிகள் அசந்து போகும் அளவுக்கு பிப். 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப் போகிறேன்-ஜெ.`

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum