சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பொதுக் குழு கலாட்டா: வீரபாண்டி ஆறுமுகம் பேச்சால் ஸ்டாலின் - அழகிரி ஆதரவாளர்கள் மோதல் Khan11

பொதுக் குழு கலாட்டா: வீரபாண்டி ஆறுமுகம் பேச்சால் ஸ்டாலின் - அழகிரி ஆதரவாளர்கள் மோதல்

Go down

பொதுக் குழு கலாட்டா: வீரபாண்டி ஆறுமுகம் பேச்சால் ஸ்டாலின் - அழகிரி ஆதரவாளர்கள் மோதல் Empty பொதுக் குழு கலாட்டா: வீரபாண்டி ஆறுமுகம் பேச்சால் ஸ்டாலின் - அழகிரி ஆதரவாளர்கள் மோதல்

Post by யாதுமானவள் Sat 4 Feb 2012 - 20:18

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவில் கருணாநிதியின் மகன்களாக மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க. அழகிரி ஆதரவாளர்களிடையே மோதல் வெடித்தது.

மு.க.ஸ்டாலினை தி.மு.க.வின் அடுத்த தலைவராக முன்னிறுத்துவதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன், சேலம் மாவட்ட செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் வெளிப்படையாக எதிர்த்துள்ளனர்.

வீரபாண்டி ஆறுமுகம் பேசியதாவது:

கழகம்தான் குடும்பம் என்று அண்ணா பேசினார். அதைக் கருணாநிதி பின்பற்றி வருகிறார். கருணாநிதி இருக்கும்போது அடுத்த தலைவர் தேவையில்லை. கருணாநிதியின் பிள்ளைகளான மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் நமக்கு ஒன்றுதான். சிலர் கருணாநிதியை தங்களுக்குச் சாதகமாக முடிவு எடுக்க நிர்ப்பந்திக்கின்றனர். ஒருவரை மட்டும் அடையாளப்படுத்துவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்று மு.க. ஸ்டாலினை முன்னிறுத்த வீரபாண்டி ஆறுமுகம் எதிர்ப்புத் தெரிவித்தார் .

இதற்கு ஸ்டாலின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தை தொடர்ந்து பேசக் கூடாது என்று கூச்சலிட்டனர்.

அழகிரியின் ஆதரவாளரான வீரபாண்டி ஆறுமுகமும் அவர்களை மீறி பேச முயற்சித்தும் பலனில்லை. இதனால் அமளி நீடித்து வந்தது.

இதைக் கட்டுப்படுத்த எழுந்த க. அன்பழகன் பேச்சும் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

க. அன்பழகன் பேசியதாவது:

கருணாநிதி என் நண்பர். அவரின் பிள்ளைகள் என் பிள்ளைகள். இருப்பினும் ஒருவரை மட்டுமே அடையாளப்படுத்தி முக்கியத்துவம் கொடுப்பதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் எழுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வீரபாண்டி ஆறுமுகம் எப்போதும் தன் கருத்துகளை ஒளிவு மறைவு இல்லாமல் முன்வைக்கக் கூடியவர். கருணாநிதி தன் தலைவர் என்கிற முறையில்தான் அவரிடம் தன் கருத்துகளைத் தெரிவிக்கிறார். அதில் தவறு ஒன்றுமில்லை. வீரபாண்டி ஆறுமுகம் திமுகவுக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர்.

திமுக ஒன்றும் சங்கர மடம் இல்லை. மடாதிபதி பதவியை ஸ்டாலினுக்குக் கொடுப்பதற்கு என்று கருணாநிதியே கூறியிருக்கிறார். என்னை விட வயது குறைவான கருணாநிதி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. என்னுடைய வீட்டார் என்னை மதிப்பார்களா என்றுகூட நினைத்திருக்கிறேன்.

பிறகு நானே அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். கருணாநிதி அளவுக்கு அறிவுப்பூர்வமானவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லை. தமிழர்களைக் காப்பாற்ற திமுக தவிர்த்த வேறு இயக்கம் இல்லை. 1967-ல் இருந்து பொதுக்குழு பார்த்து வருகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்டாலினை தலைவராக ஏற்பேன் என்று பகிரங்கமாக அறிவித்த க. அன்பழகனா இப்படி பேசியது என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் குமுறியுள்ளனர்.

தயாநிதிக்கும் எதிர்ப்பு

முன்னதாக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளரான தயாநிதி மாறனுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பொதுக்குழுவில் அவர் பேசுகையில், "18 வயதிலிருந்து 30 வயது வரை உள்ள இளைஞர்களிடம் கட்சியைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதைச் செய்யாமல் இருக்கிறோம். இணையம், ஃபேஸ்புக் போன்றவை மூலமாகவே இளைஞர்களிடம் நம் கருத்துகளைச் கொண்டு செல்ல முடியும்.

இதற்காக போர்க்கால அடிப்படையில் ஒரு புதிய அணி அமைக்க வேண்டும். திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை இணைய தளம் மூலமாக நாம் கொண்டு செல்லாததன் காரணமாகத்தான் தோற்றோம். அந்த வெற்றிடத்தை நாம் நிரப்ப வேண்டும்," என்றார்.

இதற்கு திருச்சி சிவா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், "தயாநிதி மாறன் இணையதளம் பற்றி எல்லாம் பேசினார். அது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் அவர்களது சன் தொலைக்காட்சியில் கட்சி செய்திகளைக் கலைஞர் தொலைக்காட்சியில் காட்டுவதுபோல முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுத்து வெளியிடட்டும்.

ஆ.ராசாவை திமுக கைவிட்டுவிடக் கூடாது. ராசாவின் சகோதரர் கடந்த வாரம் பொதுக்கூட்டம் நடத்தினார். அதில் திமுக நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. ராசா திமுகவுக்காகப் பாடுபட்டவர் என்பதை மறந்துவிடக் கூடாது," என்றார்.

தி.மு.க. பொதுக்குழுவில் அரசியல் வாரிசுகளிடையே பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவாளர்கள் கோவையில் கைது
» ஸ்டாலினுக்கு கூடுதல் பதவி: திமுக பொதுக் குழு கூட்டத்தை புறக்கணிக்கிறார் அழகிரி?
» வீரபாண்டி ஆறுமுகம் தகுதி இல்லாதவர்
» நில அபகரிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவு-12 தனிப்படைகள் அமைப்பு
» ஜூலை 27ல் சென்னையில் பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum