சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வழக்குத் தாமதங்களை குறைப்பதற்கு சட்டக் கோவைகளில் திருத்தம் கொண்டு வர ஏற்பாடு! Khan11

வழக்குத் தாமதங்களை குறைப்பதற்கு சட்டக் கோவைகளில் திருத்தம் கொண்டு வர ஏற்பாடு!

2 posters

Go down

வழக்குத் தாமதங்களை குறைப்பதற்கு சட்டக் கோவைகளில் திருத்தம் கொண்டு வர ஏற்பாடு! Empty வழக்குத் தாமதங்களை குறைப்பதற்கு சட்டக் கோவைகளில் திருத்தம் கொண்டு வர ஏற்பாடு!

Post by முனாஸ் சுலைமான் Sun 12 Feb 2012 - 20:36

வழக்குத் தாமதங்களை குறைப்பதற்கு சட்டக் கோவைகளில் திருத்தம் கொண்டு வர ஏற்பாடு! Hakeemவழக்குகள் தாமதமாவதற்கு அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கை கிடைப்பதில் ஏற்படும் சுணக்கமும் முக்கிய காரணம் என்பதால் அதன் பணிகளை பிராந்திய ரீதியில் பன்முகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்

அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அனுராதபுர மாவட்டத்தின் மேல், மாவட்ட, நீதவான் நீதிமன்ற நீதிபதிகளும் சட்ட மருத்துவ அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா, அரசாங்க இரசாயன பகுப்பாளர் டி.ஆர்.என்.எம்.லியனாராச்சி, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட, அனுராதபுரம் பிரதான சட்ட மருத்துவ அதிகாரி தனஞ்சய வைத்தியரத்ன ஆகியோரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது: "எனது அமைச்சின் கீழ் வரும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் குற்றச் செயல்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் புலனாய்வு மற்றும் துப்புத்துலக்கல் போன்றவற்றில் மிகவும் முக்கியமான பணியில் ஈடுபட்டு வருகிறது.

நாடளாவிய ரீதியில் நடைபெறும் குற்றச்செயல்களின் போது அவற்றில் சம்பந்தப்படும் தடயங்கள், மாதிரிகள் என்பவற்றை பரிசோதனைக்குட்படுத்தி அறிக்கை சமர்ப்பிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக நீதியமைச்சுக்கு நீதிமன்றங்களினூடாக முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன. அவ்வாறான தாமதம் காரணமாக ஏராளமான வழக்குகளில் தீர்ப்புகளை வழங்குவதில் நீதிபதிகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன.

கஞ்சா என்ற போதைப்பொருள் கைப்பற்றப்படும் பொழுது லொறிகளில் சாக்குப் பொதிகளில் மூடை மூடையாக ஏற்றி அப்படியே பகுப்பாய்வுக்காக அனுப்பும் போது அவற்றை ஏற்றி இறக்குவது மட்டுமல்லாது, களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதும் பாரிய சிரமத்தையும் இடநெருக்கடியையும் ஏற்படுத்துகிறது. அவற்றின் ஒரு சிறு தொகையை மட்டும் பரிசோதனைக்கு உட்படுத்தினால் போதுமானது. ஆனால் அதற்கான தண்டனையை விதிப்பதற்கு கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் முழுத் தொகையின் நிறையையும் அளவீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதாக இங்கு எங்கள் மத்தியில் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளராலும் பிரதி பகுப்பாய்வாளராலும் சுட்டிக்காட்டப்பட்டது கவனிக்கத்தக்கது.

பொதுவாக அரசாங்க நிறுவனங்களில் காணப்படும் ஆளணி தட்டுப்பாடு நீதித்துறையைப் பொறுத்தவரையிலும் இருந்து வருவது இவ்வாறான தாமதங்களுக்கு ஒரு காரணமாகும்.

வர்த்தக ரீதியான வழக்குகளில் கூட காலதாமதம் ஒரு பாரிய பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. அதனால் உள்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வெளிநாட்டார் தயக்கம் காட்டி பின்வாங்க நேரிடுகிறது.

வழக்குகள் தாமதமாவது குறித்து பிரதம நீதியரசருடன் நான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். நீதித் துறைக்கான நிதியுதவியின் அவசியம் சம்பந்தமாக உலக வங்கி பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி வருகிறேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வரவு செலவு திட்டத்தில் வழக்கு தாமதங்களை குறைப்பதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஆயினும், வழக்குகள் தாமதமாவதை பொறுத்தவரை எதிர்பார்த்த பலன் கிட்டிய பாடில்லை. அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரின் முழுமையான ஒத்துழைப்பு இன்றியமையாதது.

வழக்குத் தாமதங்களை இயன்றவரை குறைப்பதற்கு ஏற்றவகையில் குற்றவியல் மற்றும் குடியியல் (சிவில்) சட்டக் கோவைகளில் விரைவில் பாராளுமன்றத்தில் திருத்தங்களை கொண்டு வர உள்ளேன்" என்றார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வழக்குத் தாமதங்களை குறைப்பதற்கு சட்டக் கோவைகளில் திருத்தம் கொண்டு வர ஏற்பாடு! Empty Re: வழக்குத் தாமதங்களை குறைப்பதற்கு சட்டக் கோவைகளில் திருத்தம் கொண்டு வர ஏற்பாடு!

Post by mufees Sun 12 Feb 2012 - 20:39

பகிர்வுக்கு நன்றி .
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum