Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
நமது பயன்பாட்டில் தமிழ்
4 posters
Page 1 of 1
நமது பயன்பாட்டில் தமிழ்
அண்மையில் என்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
மதிய உணவுவேளையின் போது உறவினரின் மகன், "அம்மா 'சோறு' போடுங்க!!" என்றான். அதற்கு உறவினரோ, "சோறுன்னு சொல்லாதே. சாதம்னு சொல்லு..!" என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு வியப்பாக இருந்தது.
"சாதம்" என்பது தூய தமிழ்ச் சொல் கிடையாது என்பது தான் வியப்புக்குக் காரணம்.
"சோறு" என்பதே தூய தமிழ்ச் சொல். "சாதம்" என்பது வடசொல் என்பது நமக்குத் தெரியுமா?
ஆனால், நமது பயன்பாட்டில் "சோறு" என்பது தரக் குறைவான சொல்!?
*
சுத்தம் - துப்புரவு இந்த இரண்டு சொற்களில் எது தூய தமிழ்ச் சொல்?
துப்புரவு தான் தூய தமிழ்ச் சொல். ஆனால் நாம், "துப்புரவு" என்ற சொல்லை அதிகமாக பயன்படுத்துவது, துப்புரவுத் தொழிலைக் குறிப்பிடுவதற்குத் தான். இப்படி, நமக்கு தெரியாமலேயே தூய தமிழ்ச் சொற்களுக்கு நாம் இரண்டாம் இடத்தையே தருகிறோம் என்பது சிறிது யோசிக்க வேண்டிய ஒன்று.
*
ஆசிர்வாதம் - வாழ்த்து
வாழ்த்து என்பதன் வடசொல்லே ஆசிர்வாதம். ஆனால் நமது பயன்பாட்டில், "பெரியோரின் காலில் விழுந்து வாழ்த்து வாங்க வேண்டும்" என்று கூறுவது மிகவும் அரிதே. அந்த இடத்தில், "ஆசிர்வாதம்" என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறோம்.
இது போல, நாம் பயன்படுத்தும் பல சொற்கள் வடசொற்களே. கீழே சில எடுத்துக்காட்டுகள் (உதாரணம் என்பது வடசொல்)
வடசொல் - தமிழ்ச்சொல்
அகங்காரம் - செருக்கு
அகதி - ஆதரவற்றவர்
அகிம்சை - ஊறு செய்யாமை
அங்கத்தினர் - உறுப்பினர்
அங்கீகாரம் - ஒப்புதல்
அசுத்தம் - துப்புரவின்மை
அதிகாரி - உயர் அலுவலர்
அநீதி - முறையற்றது
அபயம் - அடைக்கலம்
அபிவிருத்தி - பெருவளர்ச்சி
அபிஷேகம் - திருமுழுக்கு
அபிப்பிராயம் - உட்கருத்து
*
திங்க் (Think) பண்ணி, யூஸ் (use) பண்ணி, டிரைவ் (drive) பண்ணி என தமிழ் பேசுபவர்களுக்கு இந்தக் கட்டுரைத் தொடர் பிடிக்காமல் போகலாம். ஆனால், நல்ல தமிழில் எழுத, பேச முனைவோருக்கு இந்தத் தொடர் பயனளிக்கும் என்றே நம்புகிறேன்.
*
"ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!" என்று நமது நினைவுக் குறிப்புகளை எழுதுவது இன்று நம் மத்தியில் அதிகமாகக் காணப்படுகிறது. அதற்கு நாம் (என்னையும் சேர்த்து) கொடுக்கும் பெயர் "அனுபவக் குறிப்புகள்".
சின்ன வயதில் நாம் ஏதாவது குறும்பு செய்தோம் என்றால், வீட்டில் நம்மிடம் கூறுவது, "அத எடுக்காதன்னு சொன்னா கேட்க மாட்டீங்கற... உனக்கு பட்டாத்தான் தெரியும்!!". அதே போல, ஒருவர் வாழ்க்கையில் அடிபட்டு முன்னேறி இருந்தால், நாம் கூறுவது, "அவருக்கு பட்டறிவு அதிகம்," என்பது தான்.
"பட்டறிவு" என்ற தமிழ்ச் சொல்லின் வடசொல்லே "அனுபவம்".
நல்லதோ கெட்டதோ "பட்டால்" தானே நமக்கு மறக்க முடியாத நினைவாகிறது? ஆனால் இன்றைய பயன்பாட்டில் "பட்டறிவு" என்ற சொல்லையும் "அனுபவம்" என்ற சொல்லையும் வெவ்வேறு பொருளுக்குப் பயன்படுத்துகிறோம்.
வட இந்தியப் பெயர்களில், "அனுபவ்" என்ற சொல் வரும் போது, "பரவாயில்லையே தமிழ்ச் சொல்லை அங்கேயும் பயன்படுத்துகிறார்கள்" என்று மகிழ்ச்சி அடைந்ததுண்டு. ஆனால், அது எனது அறியாமை என்பது புரிகிறது.
("ஞாபகம்" என்பதே "நினைவு" என்பதன் வடசொல்லே!)
*
வட மாநிலங்களில் "கார்யாலயி" என்ற வார்த்தை பெரும்பாலான அலுவகங்களில் பார்க்க முடியும். அதையே நாம் "காரியம்" என்ற சொல்லால் பயன்படுத்துகிறோம்.
காரியம் - செயல்
காரியம் என்ற வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் 'செயல்'.
காரியாலயம் - செயலகம்.
காரியதரிசி - செயலர், செயலாளர்.
இங்கே, "காரியவாதி" என்ற சொல் "தனது செயலில் மட்டும் குறியாக இருப்பவரை" குறிக்கும்படி பயன்படுத்தும் வழக்கம் எப்படி வந்தது?
*
இலட்சணம் - அழகு
உனக்கு எப்படி பெண் தேட வேண்டும் என்ற கேள்வி வரும் போது, "அழகா, கண்ணுக்கு இலட்சணமா இருக்க வேண்டும்" என்று நாம் கூறுவது வழக்கம். இதனை, "அழகா, கண்ணுக்கு "அழகா" இருக்க வேண்டும்" என்று கூறுவதாகவே பொருள் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், இலட்சணம் என்ற வடசொல்லின் தமிழ்ச்சொல் அழகு.
மேலும் "உத்தியோகம் புருஷ இலட்சணம்" என்ற வாக்கியத்தை தூய தமிழில், "நல்ல அலுவல் ஆண்மகனுக்கு அழகு!" என்று எழுதலாம்.
*
அர்ச்சணை - மலரிட்டு ஓதுதல்
இன்று பெரும்பாலான கோயில்களில் "இங்கு தமிழில் அர்ச்சணை செய்யப்படும்" என்று எழுதி இருப்பதைக் காண்கிறோம்.
அர்ச்சணை என்பது மலரிட்டு ஓதுதல் என்பதன் வடசொல். இதே வரிசையில் கோயில்களில் பயன்படுத்தும் சில வடசொற்களுக்கான தமிழ்ச்சொல் கீழே...
வடசொல் - தமிழ்ச்சொல்
அனுக்கிரகம் - அருள் செய்தல்
ஆராதனை - வழிபாடு
உற்சவம் - விழா
கும்பாபிஷேகம் - குடமுழுக்கு
கோத்திரம் - குடி
சந்தியாவந்தனம் - வேளை வழிபாடு
சரணம் - அடைக்கலம்
சிவமதம் - சிவநெறி
பஜனை - கூட்டுப்பாடல் வழிபாடு
பிரசாதம் - திருப்பொருள்
பிரகாரம் - திருச்சுற்று
(அங்கப்) பிரதட்சனம் - வலம் வருதல்
பிரார்த்தனை - நேர்த்திக்கடன்
மந்திரம் - மறைமொழி
மார்க்கம் - நெறி, வழி
விக்கிரகம் - திருவுருவம்
யாத்திரை - திருச்செலவு.
க்ஷேத்திரங்கள் - திருப்பதிகள்
இந்த சொற்களை நாம் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, புதிதாக நமக்குத் தெரிந்தால் நல்லது தானே!
*
பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெளிநாடுகளில் மேற்படிப்புக்காகத் தயாராகும் போது, BARRON'S WORDLIST என்ற புத்தகத்தில் உள்ள சொற்களையும், அதன் அர்த்தங்களையும் மனப்பாடம் செய்வதைப் பார்க்க முடியும். அது போல நமது கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு தமிழிலும் ஒரு தேர்வு வைத்தால் எப்படி இருக்கும்?
அபூர்வம், அவசரம், அவகாசம், அவசியம் - இதில் எது தூய தமிழ்ச்சொல்..? அடுத்தக் கட்டுரையில் அலசுவோம்!
மதிய உணவுவேளையின் போது உறவினரின் மகன், "அம்மா 'சோறு' போடுங்க!!" என்றான். அதற்கு உறவினரோ, "சோறுன்னு சொல்லாதே. சாதம்னு சொல்லு..!" என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு வியப்பாக இருந்தது.
"சாதம்" என்பது தூய தமிழ்ச் சொல் கிடையாது என்பது தான் வியப்புக்குக் காரணம்.
"சோறு" என்பதே தூய தமிழ்ச் சொல். "சாதம்" என்பது வடசொல் என்பது நமக்குத் தெரியுமா?
ஆனால், நமது பயன்பாட்டில் "சோறு" என்பது தரக் குறைவான சொல்!?
*
சுத்தம் - துப்புரவு இந்த இரண்டு சொற்களில் எது தூய தமிழ்ச் சொல்?
துப்புரவு தான் தூய தமிழ்ச் சொல். ஆனால் நாம், "துப்புரவு" என்ற சொல்லை அதிகமாக பயன்படுத்துவது, துப்புரவுத் தொழிலைக் குறிப்பிடுவதற்குத் தான். இப்படி, நமக்கு தெரியாமலேயே தூய தமிழ்ச் சொற்களுக்கு நாம் இரண்டாம் இடத்தையே தருகிறோம் என்பது சிறிது யோசிக்க வேண்டிய ஒன்று.
*
ஆசிர்வாதம் - வாழ்த்து
வாழ்த்து என்பதன் வடசொல்லே ஆசிர்வாதம். ஆனால் நமது பயன்பாட்டில், "பெரியோரின் காலில் விழுந்து வாழ்த்து வாங்க வேண்டும்" என்று கூறுவது மிகவும் அரிதே. அந்த இடத்தில், "ஆசிர்வாதம்" என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறோம்.
இது போல, நாம் பயன்படுத்தும் பல சொற்கள் வடசொற்களே. கீழே சில எடுத்துக்காட்டுகள் (உதாரணம் என்பது வடசொல்)
வடசொல் - தமிழ்ச்சொல்
அகங்காரம் - செருக்கு
அகதி - ஆதரவற்றவர்
அகிம்சை - ஊறு செய்யாமை
அங்கத்தினர் - உறுப்பினர்
அங்கீகாரம் - ஒப்புதல்
அசுத்தம் - துப்புரவின்மை
அதிகாரி - உயர் அலுவலர்
அநீதி - முறையற்றது
அபயம் - அடைக்கலம்
அபிவிருத்தி - பெருவளர்ச்சி
அபிஷேகம் - திருமுழுக்கு
அபிப்பிராயம் - உட்கருத்து
*
திங்க் (Think) பண்ணி, யூஸ் (use) பண்ணி, டிரைவ் (drive) பண்ணி என தமிழ் பேசுபவர்களுக்கு இந்தக் கட்டுரைத் தொடர் பிடிக்காமல் போகலாம். ஆனால், நல்ல தமிழில் எழுத, பேச முனைவோருக்கு இந்தத் தொடர் பயனளிக்கும் என்றே நம்புகிறேன்.
*
"ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!" என்று நமது நினைவுக் குறிப்புகளை எழுதுவது இன்று நம் மத்தியில் அதிகமாகக் காணப்படுகிறது. அதற்கு நாம் (என்னையும் சேர்த்து) கொடுக்கும் பெயர் "அனுபவக் குறிப்புகள்".
சின்ன வயதில் நாம் ஏதாவது குறும்பு செய்தோம் என்றால், வீட்டில் நம்மிடம் கூறுவது, "அத எடுக்காதன்னு சொன்னா கேட்க மாட்டீங்கற... உனக்கு பட்டாத்தான் தெரியும்!!". அதே போல, ஒருவர் வாழ்க்கையில் அடிபட்டு முன்னேறி இருந்தால், நாம் கூறுவது, "அவருக்கு பட்டறிவு அதிகம்," என்பது தான்.
"பட்டறிவு" என்ற தமிழ்ச் சொல்லின் வடசொல்லே "அனுபவம்".
நல்லதோ கெட்டதோ "பட்டால்" தானே நமக்கு மறக்க முடியாத நினைவாகிறது? ஆனால் இன்றைய பயன்பாட்டில் "பட்டறிவு" என்ற சொல்லையும் "அனுபவம்" என்ற சொல்லையும் வெவ்வேறு பொருளுக்குப் பயன்படுத்துகிறோம்.
வட இந்தியப் பெயர்களில், "அனுபவ்" என்ற சொல் வரும் போது, "பரவாயில்லையே தமிழ்ச் சொல்லை அங்கேயும் பயன்படுத்துகிறார்கள்" என்று மகிழ்ச்சி அடைந்ததுண்டு. ஆனால், அது எனது அறியாமை என்பது புரிகிறது.
("ஞாபகம்" என்பதே "நினைவு" என்பதன் வடசொல்லே!)
*
வட மாநிலங்களில் "கார்யாலயி" என்ற வார்த்தை பெரும்பாலான அலுவகங்களில் பார்க்க முடியும். அதையே நாம் "காரியம்" என்ற சொல்லால் பயன்படுத்துகிறோம்.
காரியம் - செயல்
காரியம் என்ற வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் 'செயல்'.
காரியாலயம் - செயலகம்.
காரியதரிசி - செயலர், செயலாளர்.
இங்கே, "காரியவாதி" என்ற சொல் "தனது செயலில் மட்டும் குறியாக இருப்பவரை" குறிக்கும்படி பயன்படுத்தும் வழக்கம் எப்படி வந்தது?
*
இலட்சணம் - அழகு
உனக்கு எப்படி பெண் தேட வேண்டும் என்ற கேள்வி வரும் போது, "அழகா, கண்ணுக்கு இலட்சணமா இருக்க வேண்டும்" என்று நாம் கூறுவது வழக்கம். இதனை, "அழகா, கண்ணுக்கு "அழகா" இருக்க வேண்டும்" என்று கூறுவதாகவே பொருள் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், இலட்சணம் என்ற வடசொல்லின் தமிழ்ச்சொல் அழகு.
மேலும் "உத்தியோகம் புருஷ இலட்சணம்" என்ற வாக்கியத்தை தூய தமிழில், "நல்ல அலுவல் ஆண்மகனுக்கு அழகு!" என்று எழுதலாம்.
*
அர்ச்சணை - மலரிட்டு ஓதுதல்
இன்று பெரும்பாலான கோயில்களில் "இங்கு தமிழில் அர்ச்சணை செய்யப்படும்" என்று எழுதி இருப்பதைக் காண்கிறோம்.
அர்ச்சணை என்பது மலரிட்டு ஓதுதல் என்பதன் வடசொல். இதே வரிசையில் கோயில்களில் பயன்படுத்தும் சில வடசொற்களுக்கான தமிழ்ச்சொல் கீழே...
வடசொல் - தமிழ்ச்சொல்
அனுக்கிரகம் - அருள் செய்தல்
ஆராதனை - வழிபாடு
உற்சவம் - விழா
கும்பாபிஷேகம் - குடமுழுக்கு
கோத்திரம் - குடி
சந்தியாவந்தனம் - வேளை வழிபாடு
சரணம் - அடைக்கலம்
சிவமதம் - சிவநெறி
பஜனை - கூட்டுப்பாடல் வழிபாடு
பிரசாதம் - திருப்பொருள்
பிரகாரம் - திருச்சுற்று
(அங்கப்) பிரதட்சனம் - வலம் வருதல்
பிரார்த்தனை - நேர்த்திக்கடன்
மந்திரம் - மறைமொழி
மார்க்கம் - நெறி, வழி
விக்கிரகம் - திருவுருவம்
யாத்திரை - திருச்செலவு.
க்ஷேத்திரங்கள் - திருப்பதிகள்
இந்த சொற்களை நாம் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, புதிதாக நமக்குத் தெரிந்தால் நல்லது தானே!
*
பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெளிநாடுகளில் மேற்படிப்புக்காகத் தயாராகும் போது, BARRON'S WORDLIST என்ற புத்தகத்தில் உள்ள சொற்களையும், அதன் அர்த்தங்களையும் மனப்பாடம் செய்வதைப் பார்க்க முடியும். அது போல நமது கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு தமிழிலும் ஒரு தேர்வு வைத்தால் எப்படி இருக்கும்?
அபூர்வம், அவசரம், அவகாசம், அவசியம் - இதில் எது தூய தமிழ்ச்சொல்..? அடுத்தக் கட்டுரையில் அலசுவோம்!
சிபான்- புதுமுகம்
- பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0
Re: நமது பயன்பாட்டில் தமிழ்
சிறந்த தொகுப்பு தொடருங்கள் சிபான் நலமாக உள்ளீர்களா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது பயன்பாட்டில் தமிழ்
@. @.நண்பன் wrote:சிறந்த தொகுப்பு தொடருங்கள் சிபான் நலமாக உள்ளீர்களா?
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: நமது பயன்பாட்டில் தமிழ்
தொடர்ந்து இணைந்திருங்கள் சிபான் பகிர்விற்க்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நமது தமிழ்....நமது பெருமை...!
» அசத்தலான 40,000 பதிவுகளைத் தாண்டும் நமது சேனைத் தமிழ் உலா
» 2000 பதிவுகள் கடந்த நமது சேனை தமிழ் உலாவின் நகைச்சுவை மன்னன் கைப்புள்ளையை வாழ்த்தலாம் வாருங்கள்
» வெற்றிலை பயன்பாட்டில் இருந்து
» Computer பயன்பாட்டில் உள்ள சில File வகைகள் பற்றி .......
» அசத்தலான 40,000 பதிவுகளைத் தாண்டும் நமது சேனைத் தமிழ் உலா
» 2000 பதிவுகள் கடந்த நமது சேனை தமிழ் உலாவின் நகைச்சுவை மன்னன் கைப்புள்ளையை வாழ்த்தலாம் வாருங்கள்
» வெற்றிலை பயன்பாட்டில் இருந்து
» Computer பயன்பாட்டில் உள்ள சில File வகைகள் பற்றி .......
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|