Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
5 posters
Page 1 of 1
தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
தாத்தாவின் மறைவுக்குப் பின்
பாட்டிமட்டுமே வருவாள் எங்கள் வீட்டிற்கு....
பென்ஷன் பணம் வாங்கியவுடனே
மஞ்சள் பைநிறைய ..
முறுக்கு அதிரசம் கடலை உருண்டைகளும்
மாம்பழம் பலாப்பழம் பேரிக்காய் என
அந்தந்த சீசனுக்குத் தகுந்தாற்போல் பழங்களும்
பையில் திணித்துக்கொண்டு வருவாள்....
வேலூரிலிருந்து பஸ்பிடித்து
வெய்யில்லில் நடந்து வருவாள்....
அவள் வெய்யிலில் நடந்து வருவதையோ
கனமான பையைச் சுமந்து வருவதையோ
வயதான அவளுக்குக் கால் வலிக்குமே என்பதையோ
புரிந்து கொள்ளாத பருவமது....
தூரத்தில் அவளைப் பார்த்தவுடன்...
ஐ.. ஆயா வர்றாங்க... என்ற சத்தத்தோடு
விளையாட்டை நிறுத்திவிட்டு ஓடுவோம்
பையிலிருந்து தின்பண்டங்களைஎல்லாம்
ஒவ்வொன்றாய் வெளியில் எடுத்து வைக்கும்போது
மாம்பழத்தின் சுவையை மீறி
பலாப்பழத்தின் வாசனை மீறி...
எங்கள் மூக்கைத் துளைப்பது...
விபூதி வாசனைதான்
ஆமாம்...
அத்தனை பக்தியானவள்; முருகக்கடவுள் மீது
பேரக்குழந்தைகளைப் பார்க்க வருவதற்கு முன்
முருகனைப் பார்த்துவிட்டுத்தான் வருவாள்
கோவிலில் கிடைக்கும் விபூதியைக் கூட
அதே பையில் தான் போடுவாள்
பக்கத்தில் எதாவது அம்மன் கோவிலிருந்தால்
அங்கும் நுழைந்து குங்குமமும் வாங்கி
பையில் போட்டுக்கொண்டு வந்துவிடுவாள்
அவள் எங்களுக்காகத்தான் வேண்டியிருக்கிறாள்
என்பதைக்கூட நாங்கள் அறிந்திடாமல்
முகம் சுளித்திருக்கிறோம்...
ஆனாலும் விபூதி வாசனையுள்ள முறுக்கைக்கூட
ஆசையாகத் திண்போம்.
சில நேரம்... மாம்பழத்தின் சாறுகூட
முறுக்கில் ஊறி இருக்கும்
அப்படி திணித்துக்கொண்டு
பேருந்து நெரிசலில் வந்து சேர்ந்திருப்பாள்
அம்மாதான் ஆயாவைத் திட்டுவாள்....
"ஒழுங்கா ஒரு பொருளை வச்சுக்க தெரியுதா பார்
சுத்த விவரம் கெட்டவளா இருக்கீயே" என்று
உடனே கோபித்துக்கொண்டு
கந்தசஷ்டிக் கவசத்தை சொல்ல ஆரம்பித்துவிடுவாள்.
எங்கள் நெற்றியில்
விபூதியையும் குங்குமத்தையும் வைத்துவிட்டு
நாங்கள் திண்பண்டங்களைஎல்லாம் தின்பதை
ஆசையாகப் பார்த்துவிட்டு....
உடனே கிளம்பிவிடுவாள்...
"நாளைக்குப் போம்மா... "என்று
அம்மா சொன்னாலும் கேட்கமாட்டாள்...
திரும்பச் செல்லும்போது
சேலையில் எங்களுக்குக் கொடுப்பதற்காகவே
முடிந்துவைத்திருக்கும் சில்லறைகளையும்
மறக்காமல் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிடுவாள்
புடைத்துக்கொண்டிருக்கும்
இன்னொரு பையை எடுத்துக்கொண்டு
அதே ஊரிலிருக்கும்
என் தொத்தா வீட்டுக்கும் சென்று
அந்த பேரப்பிள்ளைகளையும் பார்க்க!
அப்போதெல்லாம் தெரிய வில்லை
மஞ்சள் பை முழுக்க -
அவள் திணித்துக்கொண்டு சுமந்து வந்தது
தின்பண்டங்களையல்ல ... பாசத்தை என்பது !
அப்போதெல்லாம் தெரியவே இல்லை...
அந்த விபூதி வாசனைக்குள் பொதிந்திருந்தது
எங்களுக்கான வேண்டுதல் என்று!
வாழ்க்கை உருண்டோட....
அரபு நாட்டில் இருந்துகொண்டு ..
அவ்வப்போது தொலைபேசியில்
ஆயா வந்தாங்களாம்மா? நல்லா இருக்காங்களா ?
என்று அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்...
அந்த என் ஆயா இப்போது உயிரோடு இல்லை....
ஆனால் அவ்வப்போது
அவளை நினைத்துக் கொள்வேன்
அந்த மஞ்சள் பையும்.... விபூதி வாசனையும்...
பழச்சாற்றில் நனைந்த முறுக்கும்..
தவறாமல் அவளை நினைக்கும்போது
என் நினைவை அழுத்தும்...!
இப்போதும் ஆயா...
விபூதி வாடை வீசும் அந்த மஞ்சள் பையோடு
வருவது போலவே..... எங்கோ ... தூரத்தில் !
பாட்டிமட்டுமே வருவாள் எங்கள் வீட்டிற்கு....
பென்ஷன் பணம் வாங்கியவுடனே
மஞ்சள் பைநிறைய ..
முறுக்கு அதிரசம் கடலை உருண்டைகளும்
மாம்பழம் பலாப்பழம் பேரிக்காய் என
அந்தந்த சீசனுக்குத் தகுந்தாற்போல் பழங்களும்
பையில் திணித்துக்கொண்டு வருவாள்....
வேலூரிலிருந்து பஸ்பிடித்து
வெய்யில்லில் நடந்து வருவாள்....
அவள் வெய்யிலில் நடந்து வருவதையோ
கனமான பையைச் சுமந்து வருவதையோ
வயதான அவளுக்குக் கால் வலிக்குமே என்பதையோ
புரிந்து கொள்ளாத பருவமது....
தூரத்தில் அவளைப் பார்த்தவுடன்...
ஐ.. ஆயா வர்றாங்க... என்ற சத்தத்தோடு
விளையாட்டை நிறுத்திவிட்டு ஓடுவோம்
பையிலிருந்து தின்பண்டங்களைஎல்லாம்
ஒவ்வொன்றாய் வெளியில் எடுத்து வைக்கும்போது
மாம்பழத்தின் சுவையை மீறி
பலாப்பழத்தின் வாசனை மீறி...
எங்கள் மூக்கைத் துளைப்பது...
விபூதி வாசனைதான்
ஆமாம்...
அத்தனை பக்தியானவள்; முருகக்கடவுள் மீது
பேரக்குழந்தைகளைப் பார்க்க வருவதற்கு முன்
முருகனைப் பார்த்துவிட்டுத்தான் வருவாள்
கோவிலில் கிடைக்கும் விபூதியைக் கூட
அதே பையில் தான் போடுவாள்
பக்கத்தில் எதாவது அம்மன் கோவிலிருந்தால்
அங்கும் நுழைந்து குங்குமமும் வாங்கி
பையில் போட்டுக்கொண்டு வந்துவிடுவாள்
அவள் எங்களுக்காகத்தான் வேண்டியிருக்கிறாள்
என்பதைக்கூட நாங்கள் அறிந்திடாமல்
முகம் சுளித்திருக்கிறோம்...
ஆனாலும் விபூதி வாசனையுள்ள முறுக்கைக்கூட
ஆசையாகத் திண்போம்.
சில நேரம்... மாம்பழத்தின் சாறுகூட
முறுக்கில் ஊறி இருக்கும்
அப்படி திணித்துக்கொண்டு
பேருந்து நெரிசலில் வந்து சேர்ந்திருப்பாள்
அம்மாதான் ஆயாவைத் திட்டுவாள்....
"ஒழுங்கா ஒரு பொருளை வச்சுக்க தெரியுதா பார்
சுத்த விவரம் கெட்டவளா இருக்கீயே" என்று
உடனே கோபித்துக்கொண்டு
கந்தசஷ்டிக் கவசத்தை சொல்ல ஆரம்பித்துவிடுவாள்.
எங்கள் நெற்றியில்
விபூதியையும் குங்குமத்தையும் வைத்துவிட்டு
நாங்கள் திண்பண்டங்களைஎல்லாம் தின்பதை
ஆசையாகப் பார்த்துவிட்டு....
உடனே கிளம்பிவிடுவாள்...
"நாளைக்குப் போம்மா... "என்று
அம்மா சொன்னாலும் கேட்கமாட்டாள்...
திரும்பச் செல்லும்போது
சேலையில் எங்களுக்குக் கொடுப்பதற்காகவே
முடிந்துவைத்திருக்கும் சில்லறைகளையும்
மறக்காமல் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிடுவாள்
புடைத்துக்கொண்டிருக்கும்
இன்னொரு பையை எடுத்துக்கொண்டு
அதே ஊரிலிருக்கும்
என் தொத்தா வீட்டுக்கும் சென்று
அந்த பேரப்பிள்ளைகளையும் பார்க்க!
அப்போதெல்லாம் தெரிய வில்லை
மஞ்சள் பை முழுக்க -
அவள் திணித்துக்கொண்டு சுமந்து வந்தது
தின்பண்டங்களையல்ல ... பாசத்தை என்பது !
அப்போதெல்லாம் தெரியவே இல்லை...
அந்த விபூதி வாசனைக்குள் பொதிந்திருந்தது
எங்களுக்கான வேண்டுதல் என்று!
வாழ்க்கை உருண்டோட....
அரபு நாட்டில் இருந்துகொண்டு ..
அவ்வப்போது தொலைபேசியில்
ஆயா வந்தாங்களாம்மா? நல்லா இருக்காங்களா ?
என்று அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்...
அந்த என் ஆயா இப்போது உயிரோடு இல்லை....
ஆனால் அவ்வப்போது
அவளை நினைத்துக் கொள்வேன்
அந்த மஞ்சள் பையும்.... விபூதி வாசனையும்...
பழச்சாற்றில் நனைந்த முறுக்கும்..
தவறாமல் அவளை நினைக்கும்போது
என் நினைவை அழுத்தும்...!
இப்போதும் ஆயா...
விபூதி வாடை வீசும் அந்த மஞ்சள் பையோடு
வருவது போலவே..... எங்கோ ... தூரத்தில் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
இயற்கை நிறைந்த கிராமிய வாசனை வீசும் கவிதை சம்பவங்கள் கண்முன்னே நிழலாடியது வாழ்த்துகள் அக்கா அருமையிலும் அருமை
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
என் கண்கள் குளமாகிய கவிதை அக்கா எனக்கும் எனது பாட்டியின் நினைவு :!#: :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
பசுமையான நினைவுகளை கவிதையாக்கி வடித்த புரட்சிக்கவிக்கு வாழ்த்துக்கள் அருமையாக உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
நேசமுடன் ஹாசிம் wrote:இயற்கை நிறைந்த கிராமிய வாசனை வீசும் கவிதை சம்பவங்கள் கண்முன்னே நிழலாடியது வாழ்த்துகள் அக்கா அருமையிலும் அருமை
நன்றி ஹாசிம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
...)மீனு wrote:என் கண்கள் குளமாகிய கவிதை அக்கா எனக்கும் எனது பாட்டியின் நினைவு :!#: :!#:
நன்றி மீனுக்குட்டி....(அழக்கூடாது ..._) ஆமா எங்க இருந்தே இவ்வளவு நாள்... ஆளை காணலியே... சுகமா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
ahmad78 wrote:கவிதை அருமை
நன்றி அஹ்மத்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
நண்பன் wrote:பசுமையான நினைவுகளை கவிதையாக்கி வடித்த புரட்சிக்கவிக்கு வாழ்த்துக்கள் அருமையாக உள்ளது.
நன்றி நண்பன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
சுகம் அக்கா நீங்கள் சுகமா?யாதுமானவள் wrote:...)மீனு wrote:என் கண்கள் குளமாகிய கவிதை அக்கா எனக்கும் எனது பாட்டியின் நினைவு :!#: :!#:
நன்றி மீனுக்குட்டி....(அழக்கூடாது ..._) ஆமா எங்க இருந்தே இவ்வளவு நாள்... ஆளை காணலியே... சுகமா?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
மீனு wrote:சுகம் அக்கா நீங்கள் சுகமா?யாதுமானவள் wrote:...)மீனு wrote:என் கண்கள் குளமாகிய கவிதை அக்கா எனக்கும் எனது பாட்டியின் நினைவு :!#: :!#:
நன்றி மீனுக்குட்டி....(அழக்கூடாது ..._) ஆமா எங்க இருந்தே இவ்வளவு நாள்... ஆளை காணலியே... சுகமா?
சுகம் சுகமே. உன்னைப் பார்க்கவில்லையே என்ற கவலைதான் மற்றபடி சுகமே
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூரத்தில் ... பாட்டி வருகிறாள்!
இப்போது தொடர்ந்து வருகிறேன் அக்கா :.”:யாதுமானவள் wrote:மீனு wrote:சுகம் அக்கா நீங்கள் சுகமா?யாதுமானவள் wrote:...)மீனு wrote:என் கண்கள் குளமாகிய கவிதை அக்கா எனக்கும் எனது பாட்டியின் நினைவு :!#: :!#:
நன்றி மீனுக்குட்டி....(அழக்கூடாது ..._) ஆமா எங்க இருந்தே இவ்வளவு நாள்... ஆளை காணலியே... சுகமா?
சுகம் சுகமே. உன்னைப் பார்க்கவில்லையே என்ற கவலைதான் மற்றபடி சுகமே
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!
» தை மகள் வருகிறாள் தரணி மணக்க!
» 15ந் தேதி வருகிறாள் 'தெய்வத்திருமகள்'
» பாத்திரங்களை மனைவி கைக்கு ஏட்டாத தூரத்தில் வைக்கணும்..
» பாட்டி
» தை மகள் வருகிறாள் தரணி மணக்க!
» 15ந் தேதி வருகிறாள் 'தெய்வத்திருமகள்'
» பாத்திரங்களை மனைவி கைக்கு ஏட்டாத தூரத்தில் வைக்கணும்..
» பாட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|