Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
மரம் வளர்ப்போம்! மழை அழைப்போம்!!
3 posters
Page 1 of 1
மரம் வளர்ப்போம்! மழை அழைப்போம்!!
மரம் வளர்ப்போம்! மழை அழைப்போம்!!
மரம் வளர்ப்பதால் மாசுகுறையும், மரம் வளர்ப்பதை சமுதாயக் கடமையாக ஆக்க வேண்டும். மரம் வளர்ப்பதால் மழைவரும், மண்கரையாமல் பூமியோடு பிடித்து உறுதி செய்யும், மரங்கள் கார்பன் வாய்வை உள்வாங்கி, பிராணவாயுவை வெளியிடுகிறது. வளர்ந்து செழித்து நிற்கும் மரம் பறவைகளின் சரணாலயமாகும்.
மரம் நட்டால் மட்டும் போதாது, அதை தினமும் பேணி பாதுகாக்க வேண்டும். மரக்கன்று நடும்போது நல்ல மண்வளத்தை உருவாக்க வேண்டும், ஒருமரம் வளர 4 அடி அகலமும், 4அடி நீளமும் இடம் இருந்தால் போதுமாது. வீட்டின் ஓரத்தில் மரம் வளர்த்தால் சுற்றுச் சூழல் மாசுபடாமல் தடுக்க முடியும். மர வளமே மனித சுகம் என்பதை அறிந்துகொள்.
சாலை ஓரத்தில் மரம் வளர்க்க சொல்கிறார்கள். சாலை ஓர மேலே மின்கம்பி, தொலைபேசி கம்பி இடையூராக இருப்பதாக கூறி மரம் வளர்க்க சொன்ன அரசே அதன் கிளைகளை வெட்டுகிறது. சாலை ஓரப்பகுதியில் தொலைபேசி வயர்கள், குடிநீர் குழாய்கள் போடும் போது பள்ளமாக்கி மரவேர்கள் அருந்து மரம் சாய்ந்து விடும் ஆபத்து ஏற்படுகிறது.
எங்கெல்லாம் மரம் வளர்க்கலாம்?
மரங்கள் வீட்டு தோட்டத்திலும், தொழிற்சாலை முன் பின் பகுதிகளிளும், பள்ளி, கல்லூரியை சுற்றிய பகுதிகளிலும், விளையாட்டு திடலை சுற்றிலும் உள்ள பகுதிகளில் பள்ளிவாசலின் முன் பின் பகுதியில் காலி இடங்களிலும், கோவில், சர்ச் இவைகளை சுற்றிலும் மரம் வளர்க்கலாம். சுடுகாடு, முஸ்லிம் மையவாடி, அடக்கஸ்தலங்களிலும், அரசு, தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் இடமெல்லாம் மருத்துவ மூலிகை வேம்பு போன்றவைகளை வளர்க்கலாம்.
ஒரு மரம் வளர்த்தால் இரண்டு டிகிரி வெப்பம் குறையும். மரம் வளர்ப்பதால் பூமி வெப்பம் அடைவது குறையும். மரம் வளர்க்க நேரமில்லை என்ற வார்த்தை மனிதனை சோம்பேறி ஆக்குகிறது. துணிச்சல் இருந்தால் நேரம் தானாக வரும் மேற்கண்ட இந்த செய்தியை தினமணி கதிர் 12.06.2011-ல் மரம் முறிந்தால் மார்க்க உண்டு என்ற கட்டுரையிலிருந்து எடுத்தவை.
நாட்டை நேசிக்கின்றவர் மரம் வளர்க்க வேண்டுமா?
நாட்டுக்கு தேவை, பயிர் செழிக்க மழை - மழையை அழைப்பது மரம் அதனால் எல்லோரும் மரம் வளர்ப்போம். நாட்டை செழிப்பாய் வளச்சியடைய செய்வோம். நமதூரை பொறுத்தவரை வீட்டுத் தோட்டத்தில் மரம் வளர்ப்பதை கவனிக்காமல் காலம் தள்ளுகின்றனர். சிலரது வீட்டுத் தோட்டத்தில் மரம் வைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் ஊற்ற வேளையால். அவர்கள் சரியாக தண்ணீர் பாச்சினார்களா செடி, கொடி, மரம் நன்றாக வளர்ந்துள்ளதா - சத்துள்ள மரம் போடப்பட்டதா? வைத்த மரம் பூவிட்டதா - காய்த்து கனிந்ததா? என்று பலர் கவனிப்பதில்லை. பிள்ளையை பெற்றால் கண்ணீரு, தென்னையை பெற்றால் இளநீர் என்று கவிஞர் சும்மவா பாடினார்.
நம்வீட்டு தோட்டத்து மணலை முதலில் பரிசோதனை செய்து பின் நமக்கு அன்றாட தேவையான தக்காளி, வெண்டை, மிளகாய், கத்திரி, புடலை, பாகை, பீக்கு, கருவேப்பிலை போன்ற செடிகளையும், கொடிகளையும் வளர்த்து நாம் பயனடையலாம்.
லட்சக்கணக்கில் வருவாய்தரும் மரம்!
விவசாய பண்ணை அதிகாரியின் ஆலோசனைபடி நம் வீட்டு தோட்டத்தில் தேக்கு கன்று ஐந்தடி இடைவெளிவிட்டு வளர்க்கலாம், 30 நாற்பது வருடங்களுக்கு பின் ஒவ்வொரு தேக்கும் பலன் தரும் இன்று ஓய்வு பெற்ற 65 வயதானவர்கள் வீட்டு தோட்டத்தில் தேக்கு வளர்த்தால் தனது வாரிசுகளுக்கு பின் கோடிகணக்கில் முதலீடு தரும்.
மூலிகைச்செடி வளர்க்கலாம் :
அழிந்து வரும் தூதுவாளை, கண்டங்கத்தரி, சீந்திக்கொடி, கீழா நெல்லி, ஓமம், துளசி, தும்பை, அவரி, நாவரி போன்றவைகளை நம்வீட்டு தோட்டத்தில் விளையாட்டாக வளர்த்து பணம் சம்பாதிக்கலாம். இது மட்டுமல்லாது முருங்கை, எழுமிச்சை, கொய்யா, சப்போட்டா, மா, பப்பாளி போன்றவைகளையும் அதிகமாக பயிற்செய்தால் அருகிலுள்ள தெருகடைக்காரர்களிடம் விற்க முடியும்.
ஆனால் ஒன்று மட்டுமே நினைவில் வையுங்கள் (செடி வளர்க்காவிடிலும் பராவாயில்லை மரங்களை வெட்டாதீர்) மரம்தான் மழை அழைக்கும், நாடு செழிக்க வைக்கும். மரம் வளர்ப்போம் என்ற அமைப்பை ஓர் பொது அமைப்பு சகோதரியுடன் சிறிய அளவில் துவங்கி உள்ளேன். அதுபற்றி விரிவான விளக்கம் இதே இணையதளத்தில் மரம் பற்றி பயனுள்ள தகவல் எழுதும் போது உங்களிடம் இன்ஷாஅல்லாஹ் கூற ஆசைப்படுகிறேன்.
ஒவ்வொரு வரும் மரம் வளர்க்க வேண்டும் அதன் அவசியத்தை புரிந்துகொள்வீர். உங்கள் வீட்டில் சமையல் அறையில் பயன்படுத்தும் காய்கறி தோல், முட்டை ஓடு, வெங்காயத்தோல், பூண்டுத் தோல் இவைகளை தினமும் வீட்டுத் தோட்டத்தில் ஓர் குழியில் போட்டு மண் தூவி 48 நாட்கள் பின் மக்கிய இயற்கை உரமாக ஆக்கி பயனடையலாம். பயிர் நன்றாக செழித்து வளரும்.
உங்கள் பிள்ளைகள் வெளிநாடுகளில் சம்பாதித்து அசையாத வாடகை தரும் சொத்து வாங்குவது போல, மண்வளமிக்க தோட்டப்பகுதியில் நிலம் வாங்கி அதில் தென்னை, வாழை, நெல்லி, தேக்கு இன்னும் பல மரங்கள் வளர்க்கலாம். செய்வீர்களா?
விவசாயம் சம்பந்தமாக பசுமை விகடன், நவீன வேளாண்மை போன்ற இதழ்களை நமதூர் அரசு நூலகத்தில் வந்து படியுங்கள். விதை, மூலிகைசெடி, உரம், மரம் வாங்கும் இடங்களை தெளிவாக அறிவதோடு தோட்டபயிருக்கு அரசு தரும் மான்யம் பெறலாம். விழித்தெழுங்கள் மரம் வளர்க்க வருவாய் பெற!!
இவன் : O.L.முஹம்மது ஆரிப்
கொழும்பு ஸ்ரீ லங்கா
மெயிலில் வந்தவை
மரம் வளர்ப்பதால் மாசுகுறையும், மரம் வளர்ப்பதை சமுதாயக் கடமையாக ஆக்க வேண்டும். மரம் வளர்ப்பதால் மழைவரும், மண்கரையாமல் பூமியோடு பிடித்து உறுதி செய்யும், மரங்கள் கார்பன் வாய்வை உள்வாங்கி, பிராணவாயுவை வெளியிடுகிறது. வளர்ந்து செழித்து நிற்கும் மரம் பறவைகளின் சரணாலயமாகும்.
மரம் நட்டால் மட்டும் போதாது, அதை தினமும் பேணி பாதுகாக்க வேண்டும். மரக்கன்று நடும்போது நல்ல மண்வளத்தை உருவாக்க வேண்டும், ஒருமரம் வளர 4 அடி அகலமும், 4அடி நீளமும் இடம் இருந்தால் போதுமாது. வீட்டின் ஓரத்தில் மரம் வளர்த்தால் சுற்றுச் சூழல் மாசுபடாமல் தடுக்க முடியும். மர வளமே மனித சுகம் என்பதை அறிந்துகொள்.
சாலை ஓரத்தில் மரம் வளர்க்க சொல்கிறார்கள். சாலை ஓர மேலே மின்கம்பி, தொலைபேசி கம்பி இடையூராக இருப்பதாக கூறி மரம் வளர்க்க சொன்ன அரசே அதன் கிளைகளை வெட்டுகிறது. சாலை ஓரப்பகுதியில் தொலைபேசி வயர்கள், குடிநீர் குழாய்கள் போடும் போது பள்ளமாக்கி மரவேர்கள் அருந்து மரம் சாய்ந்து விடும் ஆபத்து ஏற்படுகிறது.
எங்கெல்லாம் மரம் வளர்க்கலாம்?
மரங்கள் வீட்டு தோட்டத்திலும், தொழிற்சாலை முன் பின் பகுதிகளிளும், பள்ளி, கல்லூரியை சுற்றிய பகுதிகளிலும், விளையாட்டு திடலை சுற்றிலும் உள்ள பகுதிகளில் பள்ளிவாசலின் முன் பின் பகுதியில் காலி இடங்களிலும், கோவில், சர்ச் இவைகளை சுற்றிலும் மரம் வளர்க்கலாம். சுடுகாடு, முஸ்லிம் மையவாடி, அடக்கஸ்தலங்களிலும், அரசு, தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் இடமெல்லாம் மருத்துவ மூலிகை வேம்பு போன்றவைகளை வளர்க்கலாம்.
ஒரு மரம் வளர்த்தால் இரண்டு டிகிரி வெப்பம் குறையும். மரம் வளர்ப்பதால் பூமி வெப்பம் அடைவது குறையும். மரம் வளர்க்க நேரமில்லை என்ற வார்த்தை மனிதனை சோம்பேறி ஆக்குகிறது. துணிச்சல் இருந்தால் நேரம் தானாக வரும் மேற்கண்ட இந்த செய்தியை தினமணி கதிர் 12.06.2011-ல் மரம் முறிந்தால் மார்க்க உண்டு என்ற கட்டுரையிலிருந்து எடுத்தவை.
நாட்டை நேசிக்கின்றவர் மரம் வளர்க்க வேண்டுமா?
நாட்டுக்கு தேவை, பயிர் செழிக்க மழை - மழையை அழைப்பது மரம் அதனால் எல்லோரும் மரம் வளர்ப்போம். நாட்டை செழிப்பாய் வளச்சியடைய செய்வோம். நமதூரை பொறுத்தவரை வீட்டுத் தோட்டத்தில் மரம் வளர்ப்பதை கவனிக்காமல் காலம் தள்ளுகின்றனர். சிலரது வீட்டுத் தோட்டத்தில் மரம் வைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் ஊற்ற வேளையால். அவர்கள் சரியாக தண்ணீர் பாச்சினார்களா செடி, கொடி, மரம் நன்றாக வளர்ந்துள்ளதா - சத்துள்ள மரம் போடப்பட்டதா? வைத்த மரம் பூவிட்டதா - காய்த்து கனிந்ததா? என்று பலர் கவனிப்பதில்லை. பிள்ளையை பெற்றால் கண்ணீரு, தென்னையை பெற்றால் இளநீர் என்று கவிஞர் சும்மவா பாடினார்.
நம்வீட்டு தோட்டத்து மணலை முதலில் பரிசோதனை செய்து பின் நமக்கு அன்றாட தேவையான தக்காளி, வெண்டை, மிளகாய், கத்திரி, புடலை, பாகை, பீக்கு, கருவேப்பிலை போன்ற செடிகளையும், கொடிகளையும் வளர்த்து நாம் பயனடையலாம்.
லட்சக்கணக்கில் வருவாய்தரும் மரம்!
விவசாய பண்ணை அதிகாரியின் ஆலோசனைபடி நம் வீட்டு தோட்டத்தில் தேக்கு கன்று ஐந்தடி இடைவெளிவிட்டு வளர்க்கலாம், 30 நாற்பது வருடங்களுக்கு பின் ஒவ்வொரு தேக்கும் பலன் தரும் இன்று ஓய்வு பெற்ற 65 வயதானவர்கள் வீட்டு தோட்டத்தில் தேக்கு வளர்த்தால் தனது வாரிசுகளுக்கு பின் கோடிகணக்கில் முதலீடு தரும்.
மூலிகைச்செடி வளர்க்கலாம் :
அழிந்து வரும் தூதுவாளை, கண்டங்கத்தரி, சீந்திக்கொடி, கீழா நெல்லி, ஓமம், துளசி, தும்பை, அவரி, நாவரி போன்றவைகளை நம்வீட்டு தோட்டத்தில் விளையாட்டாக வளர்த்து பணம் சம்பாதிக்கலாம். இது மட்டுமல்லாது முருங்கை, எழுமிச்சை, கொய்யா, சப்போட்டா, மா, பப்பாளி போன்றவைகளையும் அதிகமாக பயிற்செய்தால் அருகிலுள்ள தெருகடைக்காரர்களிடம் விற்க முடியும்.
ஆனால் ஒன்று மட்டுமே நினைவில் வையுங்கள் (செடி வளர்க்காவிடிலும் பராவாயில்லை மரங்களை வெட்டாதீர்) மரம்தான் மழை அழைக்கும், நாடு செழிக்க வைக்கும். மரம் வளர்ப்போம் என்ற அமைப்பை ஓர் பொது அமைப்பு சகோதரியுடன் சிறிய அளவில் துவங்கி உள்ளேன். அதுபற்றி விரிவான விளக்கம் இதே இணையதளத்தில் மரம் பற்றி பயனுள்ள தகவல் எழுதும் போது உங்களிடம் இன்ஷாஅல்லாஹ் கூற ஆசைப்படுகிறேன்.
ஒவ்வொரு வரும் மரம் வளர்க்க வேண்டும் அதன் அவசியத்தை புரிந்துகொள்வீர். உங்கள் வீட்டில் சமையல் அறையில் பயன்படுத்தும் காய்கறி தோல், முட்டை ஓடு, வெங்காயத்தோல், பூண்டுத் தோல் இவைகளை தினமும் வீட்டுத் தோட்டத்தில் ஓர் குழியில் போட்டு மண் தூவி 48 நாட்கள் பின் மக்கிய இயற்கை உரமாக ஆக்கி பயனடையலாம். பயிர் நன்றாக செழித்து வளரும்.
உங்கள் பிள்ளைகள் வெளிநாடுகளில் சம்பாதித்து அசையாத வாடகை தரும் சொத்து வாங்குவது போல, மண்வளமிக்க தோட்டப்பகுதியில் நிலம் வாங்கி அதில் தென்னை, வாழை, நெல்லி, தேக்கு இன்னும் பல மரங்கள் வளர்க்கலாம். செய்வீர்களா?
விவசாயம் சம்பந்தமாக பசுமை விகடன், நவீன வேளாண்மை போன்ற இதழ்களை நமதூர் அரசு நூலகத்தில் வந்து படியுங்கள். விதை, மூலிகைசெடி, உரம், மரம் வாங்கும் இடங்களை தெளிவாக அறிவதோடு தோட்டபயிருக்கு அரசு தரும் மான்யம் பெறலாம். விழித்தெழுங்கள் மரம் வளர்க்க வருவாய் பெற!!
இவன் : O.L.முஹம்மது ஆரிப்
கொழும்பு ஸ்ரீ லங்கா
மெயிலில் வந்தவை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மரம் வளர்ப்போம்! மழை அழைப்போம்!!
நன்றி ...நல்ல பதிவு... :here: @.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!
» மரம் வளர்ப்போம் - ஹைகூ
» மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது
» மரம் நடுவிழாவில் தூங்குமூஞ்சி மரம் நட்டது தப்பா போச்சு…!
» விறகுக்கு ஆகாத மரம்; வீணாக நிற்காத மரம். அது என்ன?
» மரம் வளர்ப்போம் - ஹைகூ
» மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது
» மரம் நடுவிழாவில் தூங்குமூஞ்சி மரம் நட்டது தப்பா போச்சு…!
» விறகுக்கு ஆகாத மரம்; வீணாக நிற்காத மரம். அது என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|