Latest topics
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்by rammalar Today at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 3:31 pm
» பல்சுவை
by rammalar Today at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm
நபி (ஸல்) அவர்களுடைய வஹியின் ஆரம்ப நிலை!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
நபி (ஸல்) அவர்களுடைய வஹியின் ஆரம்ப நிலை!
ஆயிஷா (ரலி) கூறினார்: -
“நபி(ஸல்) அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும்.
பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா(ரலி) அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது.
(ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, ‘ஓதும்’ என்றார். அதற்கவர்கள் ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே!’ என்றார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள்.
“அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு மீண்டும் ‘ஓதும்’ என்றார்.
(அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னை விட்டுவிட்டு மீண்டும் ‘ஓதும்’ என்றார்.
(அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன்.
அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்துவிட்டுவிட்டு, ‘படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை ‘அலக்’கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்’ என்றார்.”
மேலும், ஆயிஷா (ரலி) கூறினார்.
பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா(ரலி) விடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா (ரலி) அவர்கள்,
‘அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்’ என்றார்கள்.
பின்னர் நபி (ஸல்) அவர்களைத் தம் தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் ‘வராக’விடம் அழைத்துச் சென்றார்கள். நவ்ஃபல், அசது என்பவரின் மகனும் அசது, அப்துல் உஸ்ஸாவின் மகனுமாவார்.
‘வராக’ அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இஞ்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில் அவர் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார்.
அவரிடம் கதீஜா(ரலி), ‘என் தந்தையின் சகோதரன் மகனே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்’ என்றார்கள்.
அப்போது வரகா நபி(ஸல்) அவர்களிடம், ‘என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்?’ எனக் கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள்.
(அதைக் கேட்டதும்) வரகா, (நபி (ஸல்) அவர்களிடம்) ‘இவர்தாம், மூஸாவிடம் இறைவன் அனுப்பிய ‘நாமூஸ்’ (ஜிப்ரீல்) ஆவார்’ என்று கூறிவிட்டு, ‘உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!’ என்றும் அங்கலாய்த்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்?’ என்று கேட்டார்கள்.
அதற்கவர்கள் ‘ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவுவேன்’ என்று கூறினார்.
அதன்பின்னர் வரகா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். இந்த முதற் செய்தியுடன் வஹீ (இறைச்செய்தி) சிறிது காலம் நின்று போயிற்று.
(ஆதாரம் : புகாரி)
“நபி(ஸல்) அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும்.
பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா(ரலி) அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது.
(ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, ‘ஓதும்’ என்றார். அதற்கவர்கள் ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே!’ என்றார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள்.
“அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு மீண்டும் ‘ஓதும்’ என்றார்.
(அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னை விட்டுவிட்டு மீண்டும் ‘ஓதும்’ என்றார்.
(அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன்.
அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்துவிட்டுவிட்டு, ‘படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை ‘அலக்’கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்’ என்றார்.”
மேலும், ஆயிஷா (ரலி) கூறினார்.
பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா(ரலி) விடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா (ரலி) அவர்கள்,
‘அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்’ என்றார்கள்.
பின்னர் நபி (ஸல்) அவர்களைத் தம் தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் ‘வராக’விடம் அழைத்துச் சென்றார்கள். நவ்ஃபல், அசது என்பவரின் மகனும் அசது, அப்துல் உஸ்ஸாவின் மகனுமாவார்.
‘வராக’ அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இஞ்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில் அவர் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார்.
அவரிடம் கதீஜா(ரலி), ‘என் தந்தையின் சகோதரன் மகனே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்’ என்றார்கள்.
அப்போது வரகா நபி(ஸல்) அவர்களிடம், ‘என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்?’ எனக் கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள்.
(அதைக் கேட்டதும்) வரகா, (நபி (ஸல்) அவர்களிடம்) ‘இவர்தாம், மூஸாவிடம் இறைவன் அனுப்பிய ‘நாமூஸ்’ (ஜிப்ரீல்) ஆவார்’ என்று கூறிவிட்டு, ‘உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!’ என்றும் அங்கலாய்த்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்?’ என்று கேட்டார்கள்.
அதற்கவர்கள் ‘ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவுவேன்’ என்று கூறினார்.
அதன்பின்னர் வரகா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். இந்த முதற் செய்தியுடன் வஹீ (இறைச்செய்தி) சிறிது காலம் நின்று போயிற்று.
(ஆதாரம் : புகாரி)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஆரம்ப நிலை நீரிழிவு
» சிறுவனின் ஆரம்ப கல்வி
» ஆரம்ப உடல்நலமே ஆயுள் வரை ஆனந்தம்!
» மார்பக கேன்சரை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முடியுமா?
» ஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
» சிறுவனின் ஆரம்ப கல்வி
» ஆரம்ப உடல்நலமே ஆயுள் வரை ஆனந்தம்!
» மார்பக கேன்சரை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முடியுமா?
» ஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|