சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்! A.BALAMURUGAN KAMAKKUR Khan11

சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்! A.BALAMURUGAN KAMAKKUR

3 posters

Go down

சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்! A.BALAMURUGAN KAMAKKUR Empty சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்! A.BALAMURUGAN KAMAKKUR

Post by gokul2500 Mon 17 Dec 2012 - 8:10

கம்யூட்டரில் மணிக்கணக்கில் செலவு செய்யும் மகனோ, மகளோ இருக்கின்றனரா?
அப்படி எனில் உங்கள் குழந்தைகள் படிப்பிற்காக அதிகம் மெனக்கெடுகின்றனர்
என்று பெருமை பட்டுக்கொள்ளவேண்டாம். அவர்கள் பேஸ்புக், ட்விட்டர்,
யுடியூப்,என சமூக வலைத்தளங்களின் பிடியில் சிக்கியிருக்கக் கூடும் என்று
எச்சரிக்கின்றனர் உளவியல் நிபுணர்கள்


‘லைக்­’ எதிர்பார்ப்பு

கல்லூரி
செல்லும் மாணவர்களும், ஐடி துறையில் இருப்பவர்களும் சமூக வலைத்தளங்களை
அதிகம் பயன்படுத்திய காலம் போய் இன்றைக்கு லட்சக்கணக்கானோர் சமூக
வலைத்தளங்களை பயன்படுத்தியும், பார்வையிட்டும் வருகின்றனர். மழை பெய்தால்
ஸ்டேட்டஸ், தும்மினால் ஸ்டேட்டஸ் என அப்டேட் செய்து அதற்கு லைக் கேட்டு
காத்திருக்கும் காலம் வந்துவிட்டது. அதிகம் ‘லைக்' கிடைத்தால்
மகிழ்ச்சியும், யாருமே ‘லைக்' போடாவிட்டால் மனஅழுத்தமும் ஏற்படுகிறது
இவர்களுக்கு. ஆர்வத்தில் தொடங்கிய இந்த பழக்கம் படிப்படியாக இதிலிருந்து
மீளவே முடியாத அளவிற்கு வலைத்தளங்களின் வலையில் சிக்கிக் கொள்கின்றனர்.
இதனால் பெற்றோர்களுடனான பேச்சு குறைவதோடு, படிப்பும் பாழாகி விடுகிறது
என்கின்றனர் நிபுணர்கள்


ஃபேஸ் புக் அடிமை

மணிக்கணக்கில்
கம்ப்யூட்டர் முன்பு அடிமையாகக் கிடப்பது, எந்த நேரமும் வலைத்தள
யோசனையிலேயே இருப்பது, பிற வேலைகளை மறப்பது போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகும்
மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதன்காரணமாகவே 'சமூக
வலைத்தளங்களால் பாதிக்கப்பட்டவர்கள்' என்று ஒரு புது ரகத்தினர் இன்றைக்கு
மனநல மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு அணுகத் தொடங்கி இருக்கிறார்கள்...


கவனிக்கப்படவேண்டியவர்கள்

வதோதராவில்
எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் 8வது மற்றும் 10 வது படிக்கும் 200 மாணவர்கள்
பங்கேற்றனர். அவர்களில் ஃபேஸ் புக் தங்கள் வாழ்வின் ஒரு அங்கம் என்று 58
சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். தினசரி அப்டேட் செய்யாவிட்டால் எதையோ
இழந்தது போல நினைப்பதாக 27 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். இவர்கள்தான்
உண்மையான அடிமைகள். இவர்கள்தான் அதிகம் கவனிக்கப்படவேண்டியவர்கள்.


பிள்ளைகளை கவனிங்க

தமிழ்நாட்டிலும்
'சமூக வலைத்தளங்களில் மூழ்கி படிப்பில் கவனம் சிதறும் பல மாணவ, மாணவிகள்
இருக்கின்றனர். சாதாரணமாக ஒவ்வொருவருக்கும் 500க்கும் மேற்பட்ட நண்பர்கள்
வரை இருக்கின்றனர். 'படிக்கிறேன்' என்ற போர்வையில் தினமும் 3-4 மணி நேரம்
வரை சமூக வலைத்தளத்தில் மூழ்குவது, நண்பர்களுடன் சாட்டிங் என படிப்பை
பாழாக்கிக் கொள்கின்றனர்.



இதுவும் போதைதான்

''மூளையில்
'டோபோமைன்' என்ற வேதிப்பொருள் சுரக்கும்போது ஒருவிதக் கிளர்ச்சி, சந்தோஷம்
உண்டாவதும் இது போன்ற வலைதள அடிமையாக காரணம் என்கின்றனர் நிபுணர்கள். மது,
புகை ஒருவித போதை என்றால் கணினி மற்றும் மொபைல் போன் போன்றவைகளிடம் இன்று
பலரும் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள.


சமூக விரோதிகளின் கையில்

சமூகத்
தளங்கள் மூலமாகப் பள்ளி மாணவிகளைச் சமூக விரோதிகள் பயன்படுத்திக்கொள்ளும்
அபாயமும் இருக்கிறது. முகம் தெரியாத ஆட்களுடன் 'தான் யார், தனக்கு என்ன
சினிமா பிடிக்கும், எந்த மாதிரி உணவு பிடிக்காது' என்று துவங்கி தங்களைப்
பற்றிய அத்தனை விஷயங்களையும் பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள்.
புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தப் பழக்கம் கடைசியில் உணர்வு
ரீதியான உறவாகவும் மாறி ஓடிப்போக வழிவகுக்கிறது.



எரிச்சலும் மனஅழுத்தமும்

''சமூக
வலைத்தளங்களில் பழியாய்க் கிடந்தால் படிப்பு, வேலை, குடும்பம் ஆகியவற்றின்
மீது கவனம் குறையும். கவனச்சிதறல் ஏற்படும். வாழ்க்கையில் எது முக்கியம்,
எது முக்கியம் இல்லை என்பது மறந்து போவதுடன் வாழ்க்கை முறையே மாறிவிடும்.
நிறைய 'லைக்ஸ்', 'ஷேர்' கிடைக்கவில்லை என்றால் ஒருவித ஏமாற்றம் வந்து
மனஅழுத்தம் ஏற்படும். நம்முடைய கருத்துக்கு எதிரான கருத்து வந்தால், அதைத்
தாங்கும் பக்குவமற்று சிலருக்கு எரிச்சல் ஏற்படும். அதுவே மன அழுத்தமாகவும்
மாறும் என்கின்றனர் நிபுணர்கள்


உடல், மனநல பாதிப்பு

மனம்
மட்டும் அல்லாமல், நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் இடுப்பு மற்றும்
கண் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படும். படிப்பு அல்லது வேலையில் கவனம்
குறையும். எதையும் சகஜமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் அவசியம். ஒரு
வார்த்தைக்கே ஒடிந்துபோகிறவர்கள் வலைத்தள ஆர்வத்தால் எத்தகைய
மனச்சிக்கலுக்கும் ஆளாக நேரிடும். சிலர் தற்கொலைக்கு முயலும் அபாயமும்
உருவாகும்.


கவனத்தை திருப்பலாம்

எனவே சமூக
வலைத்தளங்களுக்கு அடிமையானவர்களை மீட்க ஒரே தீர்வு... அத்தகைய ஆர்வத்தை
உடனடியாக நிறுத்துவதுதான். முதலில் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், மூன்றே
வாரத்தில் அதில் இருந்து விடுபட்டு வழக்கமான பணிகளில் முன்போல ஈடுபட
முடியும். இதில் பெற்றோர் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி செல்லும்
மாணவ- மாணவிகளுக்குச் சமூக வலைத்தளங்களை அறிமுகம் செய்வதற்கு பதிலாக நல்ல
புத்தகங்களை அறிமுகப்படுத்தலாம். மேலும் பிற குழந்தைகளோடு சேர்ந்து
விளையாடுவது, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது போன்றவற்றில்
சந்தோஷத்தை உருவாக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஒன்இந்தியா தமிழ்
gokul2500
gokul2500
புதுமுகம்

பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10

http://www.eegarai.net/t92047-topic

Back to top Go down

சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்! A.BALAMURUGAN KAMAKKUR Empty Re: சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்! A.BALAMURUGAN KAMAKKUR

Post by Muthumohamed Mon 17 Dec 2012 - 14:39

intraya soolalukku etra pathivu

nalla thakaval gokul ##*
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்! A.BALAMURUGAN KAMAKKUR Empty Re: சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்! A.BALAMURUGAN KAMAKKUR

Post by *சம்ஸ் Tue 18 Dec 2012 - 18:32

சிறந்த தகவலுக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்! A.BALAMURUGAN KAMAKKUR Empty Re: சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்! A.BALAMURUGAN KAMAKKUR

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum