சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

இஸ்லாமியப் பெண்ணே! Khan11

இஸ்லாமியப் பெண்ணே!

4 posters

Go down

இஸ்லாமியப் பெண்ணே! Empty இஸ்லாமியப் பெண்ணே!

Post by Muthumohamed Sat 9 Feb 2013 - 22:13

இஸ்லாமியப் பெண்ணே!

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண்களுக்கு
நலவை நாடுங்கள். நிச்சயமாக பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள்.
விலா எலும்புகளின் மேல்பகுதி மற்றவைகளை விட மிக வளைவாக உள்ளது. அந்த
எலும்பை நேராக்க நீர் சென்றால் அதனை நீர் முறித்து விடுவீர். அதனை அப்படியே
விட்டு விடுவீராக! அது வளைவாகவே இருக்கும். (ஆகவே நடுநிலையைக்
கடைபிடியுங்கள்) (அபூஹூரைரா (ரலி) புகாரி முஸ்லிம்)


பெண்
என்பவள் ஒரு குடும்பத்தின், கலாச்சாரத்தின் அடையாளமாக இருக்கிறாள். அவளின்
குணத்தையும் நடத்தையையும் வைத்தே அவள் சார்ந்த குடும்பத்தையும்,
பாரம்பரியத்தையும் சமுதாயம் எடை போடுகிறது. நல்ல அங்கத்தினர்களை தனது
குடும்பத்திலிருந்து உருவாக்கி சமுதாயத்தில் நடமாட விடும் பொறுப்பும்
பங்களிப்பும் பெண் என்பவளுக்கு அதிகம் உள்ளது.

ஒரு ஆண் கல்வி
கற்றால் அவன் மட்டுமே கற்கிறான். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பமே
கல்வி கற்கிறது என்ற ஒரு அறிஞனின் கூற்றுக்கேற்ப ஒரு பெண் எத்தனை
சிறப்பம்சங்களை இறையருளால் பெற்றவளாக இருக்கிறாள் என்பதை நம்மில் எத்தனை
பேர் உணர்ந்தவர்களாக உள்ளோம்?

ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும்
தங்களின் பொறுப்பு, கடமைகளின் எல்லைக்கோட்பாட்டை உணர்ந்த வர்களாக உறுதிக்
கொள்ள வேண்டும். தனிமனித வாழ்வானாலும், பொது வாழ்வானாலும் நம்மனைவரின்
அதிகபட்ச அக்கறை இறையச்சத்தை மெய்ப்படுத்துவாக இருத்தல் வேண்டும்.

அல்லாஹ்வின்
மார்க்கம் ஒவ்வொரு மனிதனின் அகத்திலும் புறத்திலும் ஏற்படுத்தும்
விழிப்புணர்வை பிரதிபலிக்கும் மெய்யான சான்றுகளாய் வாழ்ந்து காட்ட
வேண்டும். சுதந்திரங்கள் தவறுதலாய் பயன்படுத்துதல் கூடாது.உரிமைகள் வரம்பு
மீறுதலாய் ஆகிவிடக்கூடாது.

ஒரு பெண் குழந்தையாய் மனைவியாய், தாயாய்
பரிணமிக்கும் ஒவ்வொரு நிலையிலும் தனக்குண்டான மார்க்க அம்சங்களை
பிரதிபலிக்கும் கண்ணாடியாய் அவள் திகழ வேண்டும்.அதைவிட்டு அற்ப காரணங்கள்,
அற்ப சுகங்களுக்காக அளப்பரிய முழுமையான தன் பருவத்தை பெண்மையை முடிவில்
வாழ்வையே தொலைத்துவிடும் அபலையாய் ஆகி விடுகிறாள்.இதனால் அவளும் அவளது
சுற்றமும் சமூக அமைப்பும் கூனிக் குறுகிப் போய் விடுகின்றன.

கல்வியறிவும்,
நாகரீகமும் மேன்மையடைந்திருப்பதாய் சொல்லப்படும் இன்றைய உலகில் பெண்
என்பவள் போகப் பொருளாகவும், போதைப் பொருளாகவுமே கையாளப் படுகிறாள்.விஞ்ஞான
தொழில் நுட்பவளர்ச்சியில் பெண் என்பவள் நவீனமயமாக்கப்பட்ட ஆபாச அடிமையாகவே
கிறங்கடிக்கப்படுகிறாள்.தான் அப்படித்தான் கையாளப் படுகிறோம் என்பது
பெண்ணுக்குத் தெரியாமலேயே நவீனம் (மாடர்ன்), நாகரீகம் என்று அவளும்
சமூகமும் மூளைச் சலவை செய்யப்படுகிறது.

ஆண்களிலோ பெண்களிலோ
நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள்.
சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:124)


அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

பெண்பிள்ளைகளை
ஒருபாவச் சுமையாக, அவமானச் சின்னமாக கருதிக் கொண்டிருந்த அன்றைய
மக்களுக்கும் இன்றைக்கு சிரமம் தரும் சுமையாக முதுகை குறிக்கும் செலவினமாக
பெண்பிள்ளைகளை கருதும் இன்றைய மக்களுக்கும் பெண்பிள்ளைகளால் எத்தகைய உயரிய
அந்தஸ்தை அடையலாம் என்பதை இஸ்லாம் எடுத்துக்கூறி பெண்ணிணத்தைக்
கண்ணியப்படுத்துகிறது.

அதேபோல் ருசித்து அனுபவித்துவிட்டு
தூக்கியெறியப்படும் சந்தைப் பொருளாக பெண்களை கருதிய அன்றைய மக்களுக்கும்,
காட்சிப் பொருளாகவும்,கடைச்சரக்காகவும், அவசியத் தேவைக்காக முதலீடாகவும்,
பெண்களை பயன்படுத்தும் இன்றைய மக்களுக்கும் பெண்ணினால் எத்தகைய பெருமைகளை
நெறிமுறைகளை மனிதர்கள் பெறலாம் என்பதையும் இஸ்லாம் உணர்த்திக் காட்டுகிறது.
இது ஏதோ சொல்லளவில் மட்டுமின்றி செயல்முறையில் இறைநம்பிக்கைக் கொண்ட
கூட்டம் செயல்பட்டு இஸ்லாம் வழங்கியுள்ள பெருமையை பெண்ணிணத்துக்கு அணிகலனாக
அணிவித்திருப்பதை நாம் காணலாம்.

இன்னும் பாருங்கள்! அன்னை ஆயிஷா(ரலி) கூறுகிறார்கள்:

ஒரு
பெண் தன் பிள்ளைகளிடம் காட்டிய அரவணைப்பிற் காகவும் அன்பிற்காகவும்
மகத்தான பேரன்பாளனாகிய அல்லாஹ்விடம் சுவனத்துக்குரிய அந்தஸ்தை அடைந்து
விட்டதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறுதிப் படுத்துவதை மேற்கூறிய
செய்தியில் நாம் காணலாம்.

புதுமைப் பெண், புரட்சிப் பெண்
என்றெல்லாம் சிந்தனையாளர்களால் உருவகப்படுத்தப்படும் பெண் ஆக்ரோஷத்தால்
அவதிப்படும் அபலைகளாக இருப்பதை தான் காண முடிகிறதே தவிர இஸ்லாம் கூறும்
இறைப் பொருத்தங்களுக்கு உட்பட்டவளாய் இருப்பதில்லை. புதுமைகளைப்
போதிப்பதாய் கூறி மடமைகள் நிறைந்த பேதைகளாய் பெண்களை ஆக்கும் போக்கே
புதுமைப் பெண்களிடம் நிறைந்திருப்பதை நாம் காண முடிகிறது.

இந்த
மடமைகள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பிரபல்யப்படுத்தப்படுவதால் அதன்
மாயைகளுக்கு நல்ல பெண்களும் பலியாகும் நிலை அல்லது பலியாக்கும்
அவலத்திலிருந்து நாம் எச்சரிக்கை அடைய வேண்டும்

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைப்
போற்றி புகழ்ந்துரைத்த பின், அறிந்துக் கொள்ளுங்கள்! பெண்களுக்கு நன்மையை
நாடுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்.இதனைத் தவிர
வேறெதனையும் நீங்கள் அவர்களிடமிருந்து சொந்தப் படுத்திக் கொள்ள முடியாது.
அவர்கள் பகிரங்கமான மானக்கேடான செயலை செய்து வந்தாலே தவிர! அவ்வாறு அவர்கள்
பகிரங்கமான மானக்கேடான செயலைச் செய்தால் அவர்களை படுக்கையை விட்டு
விலக்குங்கள். (அதற்குப் பின்னரும் அவர்கள் செய்தால்) கடும் வேதனை தராத
லேசான அடியாக அவர்களை அடியுங்கள். அப்பொழுது அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டு
விட்டால் அவர்களுக்கு வேதனை தரும் வேறு எந்த வழியையும் நீங்கள்
தேடாதீர்கள். அறிந்துக் கொள்ளுங்கள்! உங்கள் மனைவியரிடம் உங்களுக்கு சில
உரிமைகள் உள்ளன. உங்களிடம் உங்கள் மனைவியருக்கு சில உரிமைகள் உள்ளன. உங்கள்
மனைவியரிடம் உங்களுக்குள்ள உரிமைகளாவன: உங்கள் விரிப்புகளை நீங்கள்
வெறுக்கும் எவரையும் மிதிக்க விடாதிருப்பதும் உங்கள் இல்லங்களில் நீங்கள்
வெறுக்கும் எவரையும் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். உங்களிடம் உங்கள்
மனைவியருக்குள்ள உரிமையாகிறது, அவர்களுக்கு உடையும், உணவும் அழகிய முறையில்
நீங்கள் அளித்து வருவதாகும்( அம்ரு பின் அஹ்வஸீல் ஜூஷமி(ரலி) (திர்மிதி).

தீன்குலப்பெண்ணே!
ஒழுக்கமிக்க குடும்ப வாழ்வை – குடும்ப அமைப்பை அல்லாஹ் விரும்புவது மாதிரி
வேறு எவரும் விரும்புவதில்லை. எந்த அளவுக்கு அல்லாஹ் விரும்புகிறான் என்று
சொன்னால் இல்லற வாழ்வை இஸ்லாமிய வணக்கங்களில் ஒன்றாக ஆக்கி கோட்பாடுகளில்
ஒன்றாக ஆக்கி மனித இனத்தை அல்லாஹ் ஊக்கப்படுத்துகிறான். அதற்கு இம்மையிலும்
மறுமையிலும் மகத்தான பாதுகாப்பு மிக்க நற்கூலிகளையும் அல்லாஹ் தருகிறான்.

கண்டதே
காட்சி! கொண்டதே கோலம் என்ற ரீதியிலான வாழ்வை அல்லாஹ் விரும்புவதேயில்லை.
எப்படி வேண்டு மானாலும் வாழ்வை அமைத்துக் கொள்ளலாம். யாரும் நம்மை எதுவும்
கேட்கக் கூடாது என்ற மாதிரியான வாழ்வும் நன்மைகளைப் பெற்று தராது.

உலக
கவர்ச்சியும், உடல்வேட்கையும் அப்போதைக்கு மயக்கம் தரும். ஆனால் நிரந்தர
அவமானத்தில் கொண்டு போய் நம்மை தள்ளி விடும். மாற்றுமதத்தினரோடு ஒடிப்
போவதும், பெயர் மாற்றி திருமணம் செய்துக் கொள்வதும் கள்ள உறவுகள் வைத்துக்
கொள்வதும் மிகப் பெரும் புரட்சியோ தைரியமோ அல்ல. மாறாக மனோஇச்சைகளை
இனங்கண்டு வெல்ல முடியாத கோழைத்தனமாகும். மகத்தான இறைவனை
நோவினைப்படுத்துவதாகும்.

உனக்காக உன் நலனுக்காக உன் வளமான
வாழ்வுக்காக உன் குடும்பத்தைச் சேர்ந்த ஆண், அது தந்தையோ சகோதரனோ கணவனோ
சொந்த மண்ணிலோ அல்லது அயல்நாட்டிலோ உனக்கு எல்லா வசதிகளையும் அவர்கள்
அல்லாஹ்வுக்காக ஏற்படுத்தி தருகின்றனர். ஆனால் நீயோ அவர்களின் எந்த
தியாகத்தையும் உழைப்பையும் உணர்ந்து நடப்பதாக தெரியவில்லை.

உன்
குடும்பத்தைச் சேர்ந்த ஆண் நினைத்தால் அது அயல்நாடானாலும் சரி,
உள்நாடானாலும் சரி அவன் சொற்ப தொகையை செலவழித்தால் நாளொரு பெண்ணும்
பொழுதொரு சுகமும் அனுபவிக்க முடியுமே!

மொழிவாரியாக, நாடுவாரியாக,
கலர்வாரியாகப் பெண்ணைத் தேடி அடைய முடியும் அது அவனுக்கு இலகுவானதே!
ஆனாலும் அது வாழ்க்கையல்ல! வாழும் முறையுமல்ல! என்பதை உணர்ந்து நமக்கென்று
ஓர் குடும்பம் ஊரில் உள்ளது அதில் நற்பாக்கியங்கள் நிறைந்துள்ளது என்று
வருடங்களாய் தன் உணர்ச்சிகளை புதையலாய் தேக்கிக் கொண்டு ஹலாலான உன்னை நாடி
ஓடிவருகிறான் ஆனால் நீயோ உன்வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் எந்த வகையிலும்
உதவாத கழிசடைகளோடு சங்கமிக்கிறாய்.

இது எந்த வகையில் நியாயம்? இது
எப்படிப்பட்ட ஈனம் என்பதை உணர்ந்தாயா? இதுதான் படைத்த இரட்சகனுக்கும் அவனது
பேரருளால் அரவணைப்போருக்கும் நாம் செலுத்தும் நன்றி உபகாரமா? சிந்திக்க
வேண்டாமா? விழிப்புணர்வுடன் வாழ வேண்டாமா?

இறைதிருப்தியை தரக்கூடிய இலகுவான சட்ட திட்டங்களால் இவ்வாழ்வை அமைத்துக் கொள்வதில் தான் பாக்கியங்கள் நிறைந்துள்ளது.

நன்றி: துபை TNTJ
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இஸ்லாமியப் பெண்ணே! Empty Re: இஸ்லாமியப் பெண்ணே!

Post by முfதாக் Sat 9 Feb 2013 - 22:16

இஸ்லாமியப் பெண்ணே! 331844
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இஸ்லாமியப் பெண்ணே! Empty Re: இஸ்லாமியப் பெண்ணே!

Post by ராகவா Sat 9 Feb 2013 - 22:20

இஸ்லாமியப் பெண்ணே! 517195 இஸ்லாமியப் பெண்ணே! 517195 இஸ்லாமியப் பெண்ணே! 517195
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இஸ்லாமியப் பெண்ணே! Empty Re: இஸ்லாமியப் பெண்ணே!

Post by ansar hayath Sat 9 Feb 2013 - 22:28

:!+: :!+:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இஸ்லாமியப் பெண்ணே! Empty Re: இஸ்லாமியப் பெண்ணே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum