சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

கண் கலங்க வைக்கும் அப்சல் குருவின் இறுதித் தருணங்கள் ! Khan11

கண் கலங்க வைக்கும் அப்சல் குருவின் இறுதித் தருணங்கள் !

3 posters

Go down

கண் கலங்க வைக்கும் அப்சல் குருவின் இறுதித் தருணங்கள் ! Empty கண் கலங்க வைக்கும் அப்சல் குருவின் இறுதித் தருணங்கள் !

Post by Muthumohamed Tue 12 Feb 2013 - 21:32

கண் கலங்க வைக்கும் அப்சல் குருவின் இறுதித் தருணங்கள் !

நான் 'விடை பெறுகிறேன்' . தூக்கிலிடுவதற்கு சில நொடிகளுக்கு முன் அப்சல் குரு உதிர்த்த வார்த்தைகள் . பின்பு
அப்சல் குருவின் தூக்கு மேடைக்கு கீழ் இருக்கும் பாதாளக் கதவுகள்
திறக்கப்பட்டன. அதை திறப்பதற்கு ஒரு பிடியை நகர்த்தினார் மரண தண்டனையை
நிறைவேற்றும் அந்த சிறைச் சாலை ஊழியர்.

அந்த பெயர் சொல் விரும்பாத சிறைச் சாலை ஊழியர் சொன்னதாவது :

அப்சல் குருவின் உயிர் ஒரு நிமிடத்தில் பிரிந்தது . ஆனால் சிறைச் சாலையின்
விதி முறைப் படி அரை மணி நேரம் உடலை தொங்கவிடப் பட வேண்டும். அதன் பின்
அவரது உடல் இஸ்லாமிய சடங்குகளுடன் திகார் சிறை எண் 3 அருகே புதைக்கப்பட்டது
. காஷ்மீர் பிரிவினைவாதி மக்பூல் பட் கல்லறையின் அருகே அப்சல் குருவின்
உடலும் புதைக்கப்பட்டது.

ஆனாலும் இவர்கள் இருவருக்கும் இடையே
நிறைய வேறுபாடுகள் இருந்தன . அப்சல் காஸ்மீர் பிரிவினை பற்றி பேசியது இல்லை
. தான் விரும்பாமல் இந்த விடயத்தில் தன்னை தேவை இல்லாமல் இழுத்து வந்து
விட்டார்கள் என்று கூறுவார் . மேலும் இந்தியாவில் ஊழல் ஒழியவேண்டும் என்று
விரும்பியவர் அப்சல் குரு என்பது குறிப்பிடத் தக்கது.


இந்தியாவின் உள்ள வெகுமக்கள் , இந்துத்வா ஆதரவாளர்கள் அப்சல் குருவின்
தூக்கை வெடிவைத்து கொண்டாடினாலும் , சிறைச்சாலை வளாகம் அமைதியாகவே
காணப்பட்டது. சிறை ஊழியர்கள் பலரும் வருத்ததுடன் காணப்பட்டனர் . காரணம்
அப்சல் குருவை தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் பொது அவர் எல்லோரையும்
பெயரை குறிப்பிட்டு தான் விடை பெறுகிறேன் என்று சொல்லியவாறு நகர்ந்தார்.

அவர் உண்மையாக தனது மார்க்கத்தை நேசிப்பவர் மிகவும் கண்ணியமாக நடந்து
கொள்பவர் . தூக்கிடுவதற்கு முன் ஒன்றே ஒன்று தான் அவர் கேட்டுக் கொண்டார்.
'எனக்கு அதிக வலி அறியமுடியாத வாறு பார்த்துக் கொள்ளுங்கள் ' என்றார் .
அப்படியே பார்த்துக் கொள்கிறேன் என்ற உறுதி அளித்து அப்சல் குருவின் கண்களை
உற்று நோக்கியவாறு கருப்பு துணியை வைத்து அவரது முகத்தை மூடினார் அந்த
சிறைச் சாலை ஊழியர் . பின்பு மரணத்தை நோக்கிய அப்சல் குருவின் பயணம் இனிதே
நிறைவேறியது .

பலரும் நினைப்பது போல் அப்சல் குருவின் தூக்கு
தண்டனை நிறைவேற்றம் குறித்து அவருக்கு ஒரு நாள் முன்பு தெரிவிக்கப்
படவில்லை . தண்டனை வழங்கப்பட்ட அன்று காலையில் தான் தெரிவிக்கப்பட்டது .

அன்று காலையில் அப்சல் குரு தேநீர் மட்டுமே அருந்தினார் . அவருக்கு உணவு
வழங்கப் படவில்லை . குளித்துவிட்டு வெள்ளை ஆடை உடுத்தி தொழுகை நடத்தினார் .


'இது வரை திகார் சிறைச் சாலை 25 க்கும் மேற்பட்ட தூக்கு
தண்டனைகளை நிறைவேற்றி உள்ளது . எங்கள் அனுபவத்தில் 10 நபர்களுக்கு தூக்கு
தண்டனை நிறைவேற்றி உள்ளோம் . ஆனால் நாங்கள் அப்சல் குருவைப் போல் , மரணம்
தனக்கு வருவதை அறிந்தும் இவ்வளவு அமைதியும் அடக்கத்தையும் கட்டிக் காத்த
மனிதரை பார்த்ததில்லை '

கடைசி இரண்டு மணி நேரத்தில் அப்சல் குரு
சிறைத் துறை அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தார் . அவர் வாழ்வும் மரணமும்
பற்றி அவருடை கருத்துகளை முன்வைத்தார். உலக சகோதரத்துவம் , ஒருமைப்பாடு ,
மனித நேயம் குறித்து பேசினார் . எந்த மனிதனும் தீயவன் அல்ல , எல்லா
உயிர்களும் ஆண்டவனால் படைக்கப் படுகிறது . நாம் உண்மையின் பாதையை
தேர்ந்தெடுத்து செல்ல வேண்டும் . அது தான் உண்மையான சாதனை என்று விளக்கினர்
. ஒரு புத்தகத்தில் அவரது சிந்தனையை எழுதி தேதி குறிப்பிட்டு கையெழுத்தும்
இட்டார் .

சிறை அதிகாரிகள் அவரது குடும்பத்தை இனி யார்
பார்த்துக் கொள்வார்கள் என்ற கேள்வியை அவரிடம் எழுப்பினார்கள் . அதற்கு
அவர் , கடவுள் தான் எல்லா உயிர்களையும் பார்த்துக் கொள்கிறார் . ஆகவே எனது
குடும்பத்தையும் அவரே பார்த்துக் கொள்வார் என்றார் .

அவரின் பலமே
ஆன்மீகம் தான் . அப்சல் நன்கு படித்தவர் . இஸ்லாம் மற்றும் இந்து மதத்தை
நன்கு அறிந்தவர் . இரு மதங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை அடிக்கடி
சொல்வார் . சில காலங்களுக்கு முன் வேத மதத்தினரின் புனித நூலான நான்கு
வேதங்களையும் படித்துள்ளார் . எத்தனை வேத நெறியை பின்பற்றும் இந்துக்கள்
நான்கு வேதங்களும் படித்துள்ளனர். ஒரு நல்ல ஆன்மா நம்மை விட்டு விலகும்
போது நமக்கு அது பெரும் சோகத்தை விட்டுச் செல்கிறது என்றார் சிறை ஊழியர் .

இதற்கு முன் தூக்கு மேடைக்கு செல்லும் கைதிகள் நடுங்கிய படி தான்
செல்வார்கள் . ஆனால் அப்சல் குரு அமைதியாக மகிழ்ச்சியாக முகத்தில் சோகம்
இல்லாது ஒரு புன்னகையுடன் தான் தூக்கு மேடைக்கு சென்றார். அந்த புன்னகைக்கு
பின்னால் ஆயிரம் பொருள் இருந்திருக்கும் .

மற்ற கைதிகளை தூக்கு
மேடைக்கு கொண்டு செல்லும் போது , அவர்கள் பொதுவாகவே மதத்தை குறித்தும்
அவர்கள் சார்ந்த அரசியல் சித்தாந்தம் குறித்தும் புலம்பிய படியே
செல்வார்கள் . ஆனால் அப்சல் குரு , எவ்வகையிலும் புலம்பவில்லை . தன்னுடைய
அறையில் இருந்து சுமார் நூறு அடி தூரம் வரை இருந்த தூக்கு மேடைக்கு
செல்லும் வரை சுற்றி இருந்த அனைவருக்கும் தனது வாழ்த்துகளை சொல்லியபடியே
நகர்ந்தார். இப்படி ஒரு மனிதரை இனி திகார் சிறை பார்ப்பது அரிது தான்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கண் கலங்க வைக்கும் அப்சல் குருவின் இறுதித் தருணங்கள் ! Empty Re: கண் கலங்க வைக்கும் அப்சல் குருவின் இறுதித் தருணங்கள் !

Post by ahmad78 Tue 12 Feb 2013 - 21:53

இறைவன் அவருக்கு சுவனத்தில் நல்ல அந்தஸ்தை கொடுப்பானாக


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கண் கலங்க வைக்கும் அப்சல் குருவின் இறுதித் தருணங்கள் ! Empty Re: கண் கலங்க வைக்கும் அப்சல் குருவின் இறுதித் தருணங்கள் !

Post by ansar hayath Tue 12 Feb 2013 - 23:54

ahmad78 wrote:இறைவன் அவருக்கு சுவனத்தில் நல்ல அந்தஸ்தை கொடுப்பானாக

:!#: ஆமீன் ...
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

கண் கலங்க வைக்கும் அப்சல் குருவின் இறுதித் தருணங்கள் ! Empty Re: கண் கலங்க வைக்கும் அப்சல் குருவின் இறுதித் தருணங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum