Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
வடகொரிய அணு குண்டு சோதனைக்கு பாதுகாப்புச் சபை கடும் கண்டனம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
வடகொரிய அணு குண்டு சோதனைக்கு பாதுகாப்புச் சபை கடும் கண்டனம்
வடகொரிய அணு குண்டு சோதனைக்கு பாதுகாப்புச் சபை கடும் கண்டனம்
உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரிக்கை
வட கொரியாவின் மூன்றாவது அணு குண்டு சோதனைக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை கடும்
கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
எச்சரித்தது.
“பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் இந்த அணு குண்டு சோதனைக்கு கடும் கண்டனத்தை
தெரிவிப்பதோடு இந்த செயல் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தை மீறுவதாகும்” என ஐ.நா.
பாதுகாப்பு சபையில் சுழற்சி முறையில் இம்மாதத்திற்கான தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும்
தென் கொரிய வெளியுறவு அமைச்சர் கிம் சுங் வன் செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற ஊடக
மாநாட்டில் குறிப்பிட்டார்.
பாதுகாப்புச் சபையால் தேவைப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்
எச்சரித்தார். வட கொரியாவின் அணு குண்டு சோதனைக்கு பல்வேறு நாடுகள், அமைப்புகளிடம்
இருந்து கண்டனம் வெளியானதோடு இது பிராந்திய நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்
என அமெரிக்கா குறிப்பிட்டது.
ஆனால் வட கொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா,
அமைதிகாக்கும் படி சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொண்டுள்ளது. வட கொரியா கடந்த
செவ்வாய்க்கிழமை நிலத்துக்கடியில் அணு குண்டு சோதனை மேற்கொண்டது பெரும் பதற்றத்தை
ஏற்படுத்தியுள்ளது. இதன் போது கடந்த தடவைகளை விடவும் பாரிய வெடிப்பு திறனுடன் சிறிய
மற்றும் லேசான அணுகுண்டே வெடிக்கச் செய்யப்பட்டதாக வட கொரிய அரசு குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் வட கொரியா நீண்ட தூரம் பாயும் ஏவுகணையில் பொருத்து வதற்கு பொருத்தமான அணு
குண்டை தயாரிக்க முற்படுவதாக அமெரிக்கா மற்றும் பிராந்திய நாடுகள் அச்சம்
தெரிவித்துள்ளன.
இந்த அணு குண்டு சோதனையின் போது மேற்படி அணு குண்டு வெடிக்கச் செய்யப்பட்ட பகுதியில்
சிறு நில அதிர்வும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறத்தில் வடகொரியாவின் அயல் மற்றும் எதிரி நாடான தென் கொரியாவின் ஜனாதிபதி லீ
ம்யுங் பக் தனது அலுவலகத்தின் நிலவரையில் அவசர கூட்டத்தை நடத்தினார். ‘இதனைத்
தொடர்ந்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் வெளியிட்ட அறிவிப்பில், எமது
இராணுவ தயார் நிலையை மேலும் உயர்த்தியுள்ளோம். அதேபோன்று பாதுகாப்பு அவசர நிலையையும்
இரண்டாவது கட்டத்திற்கு உயர்த்தியுள்ளோம். வட கொரியாவின் இராணுவ நகர்வுகள் குறித்து
தென்கொரிய, அமெரிக்க கூட்டாக அவதானிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே அணு ஆயுத சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதியின் கதிரியக்க அளவை சோதித்து அணு
குண்டு குறித்து ஊகத்தை பெற தென் கொரியா முயற்சித்து வருகிறது. இதற்காக தென் கொரியா
தனது கப்பல்கள், விமானங்களை பயன்படுத்தி கதிரியக்க அளவை பெறும் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளது. இதனிடையே அணு குண்டு சோதனை மேற்கொண்ட பின் வட கொரியா வெளியிட்ட
அறிவிப்பால், அமெரிக்கா தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால்
வட கொரியா இரண்டு மற்றும் மூன்றாவது நடவடிக்கைக்கு செல்லும் என்றும் எச்சரித்தது.
உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரிக்கை
வட கொரியாவின் மூன்றாவது அணு குண்டு சோதனைக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை கடும்
கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
எச்சரித்தது.
“பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் இந்த அணு குண்டு சோதனைக்கு கடும் கண்டனத்தை
தெரிவிப்பதோடு இந்த செயல் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தை மீறுவதாகும்” என ஐ.நா.
பாதுகாப்பு சபையில் சுழற்சி முறையில் இம்மாதத்திற்கான தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும்
தென் கொரிய வெளியுறவு அமைச்சர் கிம் சுங் வன் செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற ஊடக
மாநாட்டில் குறிப்பிட்டார்.
பாதுகாப்புச் சபையால் தேவைப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்
எச்சரித்தார். வட கொரியாவின் அணு குண்டு சோதனைக்கு பல்வேறு நாடுகள், அமைப்புகளிடம்
இருந்து கண்டனம் வெளியானதோடு இது பிராந்திய நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்
என அமெரிக்கா குறிப்பிட்டது.
ஆனால் வட கொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா,
அமைதிகாக்கும் படி சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொண்டுள்ளது. வட கொரியா கடந்த
செவ்வாய்க்கிழமை நிலத்துக்கடியில் அணு குண்டு சோதனை மேற்கொண்டது பெரும் பதற்றத்தை
ஏற்படுத்தியுள்ளது. இதன் போது கடந்த தடவைகளை விடவும் பாரிய வெடிப்பு திறனுடன் சிறிய
மற்றும் லேசான அணுகுண்டே வெடிக்கச் செய்யப்பட்டதாக வட கொரிய அரசு குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் வட கொரியா நீண்ட தூரம் பாயும் ஏவுகணையில் பொருத்து வதற்கு பொருத்தமான அணு
குண்டை தயாரிக்க முற்படுவதாக அமெரிக்கா மற்றும் பிராந்திய நாடுகள் அச்சம்
தெரிவித்துள்ளன.
இந்த அணு குண்டு சோதனையின் போது மேற்படி அணு குண்டு வெடிக்கச் செய்யப்பட்ட பகுதியில்
சிறு நில அதிர்வும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறத்தில் வடகொரியாவின் அயல் மற்றும் எதிரி நாடான தென் கொரியாவின் ஜனாதிபதி லீ
ம்யுங் பக் தனது அலுவலகத்தின் நிலவரையில் அவசர கூட்டத்தை நடத்தினார். ‘இதனைத்
தொடர்ந்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் வெளியிட்ட அறிவிப்பில், எமது
இராணுவ தயார் நிலையை மேலும் உயர்த்தியுள்ளோம். அதேபோன்று பாதுகாப்பு அவசர நிலையையும்
இரண்டாவது கட்டத்திற்கு உயர்த்தியுள்ளோம். வட கொரியாவின் இராணுவ நகர்வுகள் குறித்து
தென்கொரிய, அமெரிக்க கூட்டாக அவதானிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே அணு ஆயுத சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதியின் கதிரியக்க அளவை சோதித்து அணு
குண்டு குறித்து ஊகத்தை பெற தென் கொரியா முயற்சித்து வருகிறது. இதற்காக தென் கொரியா
தனது கப்பல்கள், விமானங்களை பயன்படுத்தி கதிரியக்க அளவை பெறும் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளது. இதனிடையே அணு குண்டு சோதனை மேற்கொண்ட பின் வட கொரியா வெளியிட்ட
அறிவிப்பால், அமெரிக்கா தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால்
வட கொரியா இரண்டு மற்றும் மூன்றாவது நடவடிக்கைக்கு செல்லும் என்றும் எச்சரித்தது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|