Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
புதிய பாப்பரசரின் கீழ் கிறிஸ்தவ – முஸ்லிம் நல்லுறவு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
புதிய பாப்பரசரின் கீழ் கிறிஸ்தவ – முஸ்லிம் நல்லுறவு
புதிய பாப்பரசரின் கீழ் கிறிஸ்தவ – முஸ்லிம் நல்லுறவு
அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் நம்பிக்கை
அடுத்து வரவிருக்கும் புதிய பாப்பரசரின் கீழ் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான உறவு மேம்படும் என உலக சுன்னி முஸ்லிம்களின் மதிப்பு மிக்க உயரிய நிறுவனமான அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான மதிப்பு மற்றும் புரிந்துணர்வை மீளக்கட்டி எழுப்ப வேண்டும் எனவும் அல் அஸ்ஹர் குறிப்பிட்டுள்ளது.
இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் ஒருசில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கருத்து காரணமாக வத்திக்கான் மற்றும் முஸ்லிம் உலகுக்கு இடையில் அண்மைக் காலமாக விரிசல் நிலை இருந்து வருகிறது. பாப்பரசர் இஸ்லாம் தொடர்பான பாதகமான கருத்தை வெளியிட்டு வருவதாக அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியது.
கடந்த 2006 ஆம் ஆண்டு 16 ஆவது ஆசீர்வாதப்பர் வெளியிட்ட கருத்து முஸ்லிம் உலகில் சர்ச்சையை கிளப்பியது. அதன்போது அவர் 14 ஆம் நூற்றாண்டின் பைஸாந்திய மன்னர் கருத்தை எடுகோள் காட்டி இஸ்லாம் வன்முறையான மதம் என குறிப்பிட்டார். எனினும் இது தனது கருத்து இல்லை என்று மீண்டும் ஒருமுறை பாப்பரசர் வலியுறுத்திய போதும் அது தொடர்பில் முஸ்லிம்களிடம் வருத்தம் தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து 2011 ஜனவரியில் வத்திக்கானுடனான சம்பிரதாயமான பேச்சுவார்த்தையை அல் அஸ்ஹர் ஒத்திவைத்தது. முஸ்லிம்கள் தொடர்பில் பாப்பரசர் தொடர்ந்து பாதகமான கருத்தை வெளியிடுவதாலேயே அந்த பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்ததாக அல் அஸ்ஹர் கூறியது.
மத்திய கிழக்கு, குறிப்பாக எகிப்திலுள்ள கிறிஸ்தவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாவதாக பாப்பரசர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறித்தும் அல் அஸ்ஹர் கவலை தெரிவித்திருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் எகிப்தின் அலக்சான்ட்ரியாவில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது புத்தாண்டு தினத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்தே பாப்பரசர் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார். 21 பேர் கொல்லப்பட்டு 70 பேர் காயமடைந்த இந்த தாக்குதல் ஒரு தற்கொலைத் தாக்குதல் என பின்னர் உறுதி செய்யப்பட்டது.
மத்திய கிழக்கில் அதிக கிறிஸ்தவ சனத்தொகை கொண்ட நாடு எகிப்து ஆகும். இங்கிருக்கும் 83 மில்லியன் மக்களில் 10 வீதத்தினர் கிறிஸ்தவர்களாவர். முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அரசில் தாம் வன்முறைக்கு உட்பட்டதாக எகிப்தில் இருக்கும் கொப்டிக் கிறிஸ்தவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
அல் அஸ்ஹர் 971 ஆம் ஆண்டு பள்ளிவாசலாக அமைக்கப்பட்டு பின்னர் பல்கலைக்கழகமாக விரிவுபடுத்தப் பட்டதாகும். முஹமத் நபியின் மகள் பாத்திமா அல் சஹ்ராவின் பெயரை அடிப்படையாக கொண்டே அல் அஸ்ஹர் என்ற பெயர் சூட்டப்பட்டது. இங்கு கடந்த பல நூற்றாண்டுகளாக உலகெங்கி லுமுள்ள பல மில்லியன் முஸ்லிம்கள் கல்வி கற்கின்றனர்.
எனினும் கடந்த காலங்களில் சர்வாதிகார ஆட்சி நடத்திய முன்னாள் ஹொஸ்னி முபாரக் அரசுடன் நெருங்கிய உறவை பேணி வந்தது குறித்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் மீது தப்பபிப்பிராயங்களும் உள்ளன.
தினகரன்
அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் நம்பிக்கை
அடுத்து வரவிருக்கும் புதிய பாப்பரசரின் கீழ் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான உறவு மேம்படும் என உலக சுன்னி முஸ்லிம்களின் மதிப்பு மிக்க உயரிய நிறுவனமான அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான மதிப்பு மற்றும் புரிந்துணர்வை மீளக்கட்டி எழுப்ப வேண்டும் எனவும் அல் அஸ்ஹர் குறிப்பிட்டுள்ளது.
இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் ஒருசில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கருத்து காரணமாக வத்திக்கான் மற்றும் முஸ்லிம் உலகுக்கு இடையில் அண்மைக் காலமாக விரிசல் நிலை இருந்து வருகிறது. பாப்பரசர் இஸ்லாம் தொடர்பான பாதகமான கருத்தை வெளியிட்டு வருவதாக அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியது.
கடந்த 2006 ஆம் ஆண்டு 16 ஆவது ஆசீர்வாதப்பர் வெளியிட்ட கருத்து முஸ்லிம் உலகில் சர்ச்சையை கிளப்பியது. அதன்போது அவர் 14 ஆம் நூற்றாண்டின் பைஸாந்திய மன்னர் கருத்தை எடுகோள் காட்டி இஸ்லாம் வன்முறையான மதம் என குறிப்பிட்டார். எனினும் இது தனது கருத்து இல்லை என்று மீண்டும் ஒருமுறை பாப்பரசர் வலியுறுத்திய போதும் அது தொடர்பில் முஸ்லிம்களிடம் வருத்தம் தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து 2011 ஜனவரியில் வத்திக்கானுடனான சம்பிரதாயமான பேச்சுவார்த்தையை அல் அஸ்ஹர் ஒத்திவைத்தது. முஸ்லிம்கள் தொடர்பில் பாப்பரசர் தொடர்ந்து பாதகமான கருத்தை வெளியிடுவதாலேயே அந்த பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்ததாக அல் அஸ்ஹர் கூறியது.
மத்திய கிழக்கு, குறிப்பாக எகிப்திலுள்ள கிறிஸ்தவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாவதாக பாப்பரசர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறித்தும் அல் அஸ்ஹர் கவலை தெரிவித்திருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் எகிப்தின் அலக்சான்ட்ரியாவில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது புத்தாண்டு தினத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்தே பாப்பரசர் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார். 21 பேர் கொல்லப்பட்டு 70 பேர் காயமடைந்த இந்த தாக்குதல் ஒரு தற்கொலைத் தாக்குதல் என பின்னர் உறுதி செய்யப்பட்டது.
மத்திய கிழக்கில் அதிக கிறிஸ்தவ சனத்தொகை கொண்ட நாடு எகிப்து ஆகும். இங்கிருக்கும் 83 மில்லியன் மக்களில் 10 வீதத்தினர் கிறிஸ்தவர்களாவர். முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அரசில் தாம் வன்முறைக்கு உட்பட்டதாக எகிப்தில் இருக்கும் கொப்டிக் கிறிஸ்தவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
அல் அஸ்ஹர் 971 ஆம் ஆண்டு பள்ளிவாசலாக அமைக்கப்பட்டு பின்னர் பல்கலைக்கழகமாக விரிவுபடுத்தப் பட்டதாகும். முஹமத் நபியின் மகள் பாத்திமா அல் சஹ்ராவின் பெயரை அடிப்படையாக கொண்டே அல் அஸ்ஹர் என்ற பெயர் சூட்டப்பட்டது. இங்கு கடந்த பல நூற்றாண்டுகளாக உலகெங்கி லுமுள்ள பல மில்லியன் முஸ்லிம்கள் கல்வி கற்கின்றனர்.
எனினும் கடந்த காலங்களில் சர்வாதிகார ஆட்சி நடத்திய முன்னாள் ஹொஸ்னி முபாரக் அரசுடன் நெருங்கிய உறவை பேணி வந்தது குறித்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் மீது தப்பபிப்பிராயங்களும் உள்ளன.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|