சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

விரதம் இருப்பது நல்லதா? கெட்டதா? Khan11

விரதம் இருப்பது நல்லதா? கெட்டதா?

2 posters

Go down

விரதம் இருப்பது நல்லதா? கெட்டதா? Empty விரதம் இருப்பது நல்லதா? கெட்டதா?

Post by rammalar Sun 17 Mar 2013 - 17:59


“வாரம் ஒரு நாளோ, மாதம் ஒரு நாளோ விரதம் இருப்பது உடலுக்கு நல்லது’

-
– இந்தியாவில் இருக்கும் பல கோடி மக்களின் நம்பிக்கை இதுதான். ஆனால் அதில்
உள்ள நன்மை, தீமைகளைப் புரிந்து கொள்ளாமலே பலர் விரதம் இருக்கிறார்கள்.
நோஞ்சானாக இருப்பார். “நான் இன்னைக்கு பச்சைத் தண்ணி கூட குடிக்க
மாட்டேன்.. விரதம் இருக்கேன்’ என்பார். யார் யார்? எது எதற்கு? எப்படி?
விரதம் இருப்பது? என்ற முறை உள்ளது.
-
அது தெரியாமல், உடல் ஆரோக்கியத்திற்கு
உலை வைக்கும் அளவிற்கு கண்மூடித்தனமாக விரதம் இருக்கிறார்கள். அது பெரிய
ஆபத்தில் கொண்டு போய்விடும் என்பது இவர்களுக்கு தெரிவதில்லை.
-
ஒரு நாள் வயிறைக் காயப் போட்டால் உடல் உறுப்புகளில் உள்ள கழிவுகள்
சுத்திகரிக்கப்படும். ஜீரண மண்டலத்திற்கு ஓய்வு கொடுத்தால் உடல்
புத்துணர்ச்சி பெறும் என்பது உண்மைதான். ஆனால் அது முறைப்படி விரதம்
இருப்பவர்களுக்குதான்.
-
எந்த வயதினர் விரதம் இருக்கலாம்?

-
15 வயதுக்குக் குறைவானவர்கள், 70 வயதைக் கடந்தவர்கள், கடுமையான உடல்
உழைப்பு உள்ளவர்கள், வெளியூரில் வேலை செய்பவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள்
தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் எந்த வகையான விரதமும்
இருக்கக் கூடாது. விரதம் இருக்கும் போது, நம் உடலில் உள்ள உயிரி ரசாயனங்கள்
வயிற்றுக்குக் கேடு விளைவிக்கக் கூடும். குழந்தைகளும் முதியவர்களும்
இறந்து போக வாய்ப்பு உண்டு.
-
நீண்ட நாட்கள் விரதம் இருந்தால் என்னாகும்?

-
நாம் உண்ணும் உணவானது முதலில் குளூக்கோஸாகவும் கொழுப்பாகவும் அமினோ
அமிலமாகவும் பிரித்து எடுக்கப்பட்டு விடும். இதில் குளுக்கோஸ்தான் மிக
முக்கியம். நம் உடலுக்குத் தேவையான சக்தி இதிலிருந்துதான் எடுக்கப்படுகிறத.
இப்போது நீங்கள் விரதம் இருக்கிறீர்கள். சிறிது நேரத்தில் சோர்வு தட்டும்.
அதாவது சக்தி இழக்க நேரிடும். அந்த சக்தியை உடல் சேமித்து வைத்துள்ள
குளுக்கோஸை கரைத்துத்தான் உடலானது எடுத்துக் கொள்ளும்.
-
குளுக்கோஸை தீர்ந்த
பின்னர் உடலில் உள்ள கொழுப்பை எடுத்துக் கொள்ளும். இவை இரண்டும் தீர்ந்த
பின்னர் அதீத பசி எடுக்கும். அப்போதும் உணவு உண்ணாமல் விரதத்தைத்
தொடர்ந்தால் தசைகள் வளர்சிதை மாற்றமடைந்து, தோல் சுருங்கி முகம் வாடத்
தொடங்கிவிடும்.
உடலில் எலக்ட்ரோலைட் குறைந்தவிடும். இதனால் இதயம் வேகமாகத் தாறுமாறாக
துடிக்கத் தொடங்கும். சிறுநீரகம் சரிவர வேலை செய்யாமல் போய்விடும். மேலும்
பட்டினி தொடர்ந்தால் மரணம் கூட சம்பவிக்கும்.
-
விரதம் இருப்பது நல்லதா? கெட்டதா?

-
கொழுப்பையும் இரத்தத்தையும்ண சுத்திகரிக்க விரதம் இருப்பத நல்லது என்றே
இப்போது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். மேலும் புற்றுநோய், இதய நோய்,
நீரிழிவு நோய், நோய் எதிர்ப்புக் குறைபாடு ஆகிய குறைகளை நிவர்த்தி
செய்யலாம் என்கிறார்கள்.
-
உடல் எடையைக் குறைக்க விரதம் இருக்கிறார்களே அது சரியா?

-
உடல் எடையைக் குறைக்க விரதம் இருப்பது சரியல்ல. உணவு சாப்பிடாத அந்த
நாட்களில் அவர்கள் கோபப்படுவதும் எரிச்சலடைவதும்தான் அதிகரிக்கும் இதனால்
உடலில் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. விரதம் முடிந்த பின்னர் பசியை
அடக்க அதிகளவு உணவை உண்ணத் தொடங்கிவிடுகிறார்கள். அது அவர்களை மேலும் உடல்
எடையைக் கூட்ட வைக்கிறது.
-
சரி, விரதம் எப்படி இருந்தால் நல்லது?

-
1. குறைந்தளவு உணவு அதாவது ஒருவேளை அல்லது இரு வேளை சாப்பிடாமல் விரதம்
இருப்பது நல்லது. இதனால் உடலின் இன்சுலின் சுரப்பது, கொழுப்புச் சத்து
குறைவது, எடை குறைவது ஆகிய நன்மைகள் ஏற்படும்.
-
2. மன அழுத்தம், சோர்வு நீங்க குறைந்தபட்ச அளவில் வயிற்றைப் பட்டினி போடுவது நல்லது.
-
3. தண்ணீர் கூட குடிக்காமல், விரதம் இருக்கக் கூடாது. உடலில் உள்ள கழிவுகளை
அகற்றும் பணியை தண்ணீர்தான் செய்யும். தண்ணீர் குடிக்காமல் விரதம்
இருந்தால், கழிவுகள் உடலிலேயே தங்கிவிடும்.
-
4. பெண்கள் மதம், பக்தி, நம்பிக்கை அடிப்படையில் அடிக்கடி விரதம் இருப்பது
கூடாது. அது ரத்தசோகை நோயை உண்டாக்கும். சிலருக்கு சர்க்கரை நோய் வர
அதுவும் ஒரு காரணமாகிவிடும்.
-
5. வாரமோ மாதமோ ஒருநாள் குறைந்த அளவு உணவை எடுத்துக் கொண்டு விரதம்
இருப்பதே நல்லது. அது உடலில் சில செல்களை வளர்ச்சியடையச் செய்யும்.
பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும். அதனால் இளமையுடன் இருக்க முடியும்
என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
-
————————–
- இரா. மணிகண்டன்
நன்றி: குமுதம் செய்திகள்:
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24187
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விரதம் இருப்பது நல்லதா? கெட்டதா? Empty Re: விரதம் இருப்பது நல்லதா? கெட்டதா?

Post by நண்பன் Sun 17 Mar 2013 - 22:47

சிறந்த தகவலுக்கு நன்றி அண்ணா தொடருங்கள் :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum