Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
எப்படி எப்படி - சிறுவர் கதை
4 posters
Page 1 of 1
எப்படி எப்படி - சிறுவர் கதை
ஆதனார் என்ற அரசர் தென்றல் நாட்டை நல்லாட்சி செய்து வந்தார். மக்களுக்கு ஏதேனும் குறை உள்ளதா என்பதை அறிய விரும்பினார். வணிகனைப் போல மாறுவேடம் போட்டுக் கொண்டு குதிரையில் அமர்ந்தார்.
ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டு வந்தார்.
வழியில் வழிப் போக்கன் ஒருவன் நின்று இருந்தான். குதிரையில் அவர் வருவதைப் பார்த்த அவன் கை காட்டினான்.
அவரும் குதிரையை நிறுத்தினார்.
""ஐயா! நீண்ட தொலைவு நடந்து வந்ததால் களைப்பு அடைந்து உள்ளேன். பக்கத்து ஊர் செல்ல வேண்டும். உங்கள் குதிரையில் என்னையும் ஏற்றிச் செல்லுங்கள். இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்,'' என்று வேண்டினான்.
இரக்கப்பட்ட அவர், ""குதிரையில் ஏறிக் கொள்,'' என்றார்.
அவனும் குதிரையில் ஏறி அமர்ந்தான்.
இருவரையும் சுமந்து கொண்டு குதிரை பக்கத்து ஊரை அடைந்தது.
""உன் ஊர் வந்துவிட்டது இறங்கிக் கொள்,'' என்றார் அரசர்.
""இது என் குதிரை... நான் ஏன் இறங்க வேண்டும்? இரக்கப்பட்டு உன்னைக் குதிரையில் ஏற்றி வந்தேன். பெரிய ஏமாற்றுக்காரனாக இருப்பாய் போல இருக்கிறதே. நீ கீழே இறங்கு,'' என்று அதட்டினான் வழிப்போக்கன்.
""இது என் குதிரை. நீ கீழே இறங்கு,'' என்றார் அரசர்.
அங்கே கூட்டம் கூடி விட்டது.
"தான் யார் என்ற உண்மையைச் சொல்ல வேண்டாம். என்னதான் நடக்கிறது பார்ப்போம்' என்று நினைத்தார் அரசர்.
கூட்டத்தினரைப் பார்த்து, ""ஐயா! இது என் குதிரை... வழியில் இவன் குதிரையில் தன்னை ஏற்றிச் செல்லுமாறு கெஞ்சினான். நானும் குதிரையில் ஏற்றி வந்தேன். இங்கே வந்ததும் இதைத் தன் குதிரை என்று அடாவடியாகப் பேசுகிறான்,'' என்றார்.
அவனோ, ""இது என் குதிரை. இவனை நான் ஏற்றி வந்தேன். உங்கள் எல்லாரையும் இவன் ஏமாற்றப் பார்க்கிறான்,'' என்றான்.
அங்கே இருந்தவர்களால் குதிரைக்குச் சொந்தக்காரர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இருவரையும் பார்த்து, ""இந்த ஊர் நீதிபதியிடம் செல்லுங்கள். அவர் உங்கள் வழக்கைத் தீர்த்து வைப்பார்,'' என்றனர்.
அவர்கள் இருவரும் குதிரையுடன் நீதிபதியிடம் வந்தனர். தான் அரசன் என்ற உண்மையை அவர் வெளிப்படுத்தவில்லை.
"நீதிபதி எப்படி தீர்ப்பு வழங்குகிறார்? பார்ப்போம்,' என்று நினைத்தார்.
இருவரையும் பார்த்து நீதிபதி, ""உங்களுக்குள் என்ன வழக்கு?'' என்று கேட்டார்.
""நீதிபதி அவர்களே! நான் குதிரையில் வந்து கொண்டிருந்தேன். வழியில் இவர் குதிரையில் தன்னை ஏற்றி வரும்படி வேண்டினார். நான் இவரை ஏற்றி வந்தேன். இந்த ஊர் வந்ததும் இவர், இது தன் குதிரை என்கிறார். என்னை ஏற்றி வந்ததாகச் சொல்கிறார். என் குதிரைக்கு உரிமை கொண்டாடுகிறார். நீங்கள்தான் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்,'' என்றார் அவர்.
""நீ என்ன சொல்கிறாய்?'' என்று அரசரைப் பார்த்து கேட்டார் நீதிபதி.
""நீதிபதி அவர்களே! இது என் குதிரை. இரக்கப்பட்டு இவனை ஏற்றி வந்தேன். இப்போது இந்தக் குதிரையே இவனுடையது என்கிறார். இப்படி ஒரு ஏமாற்றுக்காரனை நான் பார்த்தது இல்லை. நீங்கள்தான் என் குதிரையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்,'' என்றான் அவன்.
அங்கிருந்த வீரர்களை அழைத்தார் நீதிபதி.
""இந்தக் குதிரையைக் கொட்டடியில் அடையுங்கள். மற்ற குதிரைகளுடன் இது இருக்கட்டும்,'' என்றார்.
அவர்களும் அந்தக் குதிரையை மற்ற குதிரைகளுடன் சேர்த்துக் கட்டினர்.
சிறிது நேரம் சென்றது. குதிரைகள் கட்டப்பட்டு இருந்த இடத்திற்கு நீதிபதி வந்தார்.
அவர்கள் இருவரையும் ஒவ்வொருவராக அழைத்தார்.
""உங்கள் குதிரையை அடையாளம் காட்டுங்கள்,'' என்றார்.
இருவருமே, அந்தக் குதிரையைச் சரியாக அடையாளம் காட்டினர்.
மாறுவேடத்தில் இருந்த அரசரைப் பார்த்த நீதிபதி, ""இது உங்கள் குதிரை. இவன் ஏமாற்ற முயன்று இருக்கிறான்,'' என்றார்.
இதைக் கேட்ட அரசர் வியப்பு அடைந்தார். தன் மாறுவேடத்தை நீக்கினார்.
அரசரைப் பார்த்த நீதிபதி அவரை வணங்கினார்.
""நீதிபதி அவர்களே! நாங்கள் இருவருமே குதிரையைச் சரியாக அடையாளம் காட்டினோம். நான்தான் குதிரையின் சொந்தக்காரன் என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?'' என்று கேட்டார்.
""அரசர் பெருமானே! நீங்கள் குதிரையின் அருகே சென்றதும், அது மகிழ்ச்சியாகக் கனைத்தது. உங்களை உரசிக் கொண்டு நின்றது. ஆனால், அவன் அருகில் சென்றதும் அந்தக் குதிரை அவனை உதைத்தது. இதைப் பார்த்த நான் நீங்கள்தான் குதிரையின் சொந்தக்காரன் என்பதை அறிந்து கொண்டேன்,'' என்று விளக்கம் தந்தார் நீதிபதி.
""உங்கள் அறிவுக்கூர்மையைப் பாராட்டுகிறேன்,'' என்ற அரசன் அவர்களுக்கு பரிசுகளை கொடுத்தார்.
ஏமாற்ற முயன்ற வழிப்போக்கனுக்கு, தக்க தண்டணை கொடுத்தார் அரசர்.
சிறுவர் மலர்
ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டு வந்தார்.
வழியில் வழிப் போக்கன் ஒருவன் நின்று இருந்தான். குதிரையில் அவர் வருவதைப் பார்த்த அவன் கை காட்டினான்.
அவரும் குதிரையை நிறுத்தினார்.
""ஐயா! நீண்ட தொலைவு நடந்து வந்ததால் களைப்பு அடைந்து உள்ளேன். பக்கத்து ஊர் செல்ல வேண்டும். உங்கள் குதிரையில் என்னையும் ஏற்றிச் செல்லுங்கள். இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்,'' என்று வேண்டினான்.
இரக்கப்பட்ட அவர், ""குதிரையில் ஏறிக் கொள்,'' என்றார்.
அவனும் குதிரையில் ஏறி அமர்ந்தான்.
இருவரையும் சுமந்து கொண்டு குதிரை பக்கத்து ஊரை அடைந்தது.
""உன் ஊர் வந்துவிட்டது இறங்கிக் கொள்,'' என்றார் அரசர்.
""இது என் குதிரை... நான் ஏன் இறங்க வேண்டும்? இரக்கப்பட்டு உன்னைக் குதிரையில் ஏற்றி வந்தேன். பெரிய ஏமாற்றுக்காரனாக இருப்பாய் போல இருக்கிறதே. நீ கீழே இறங்கு,'' என்று அதட்டினான் வழிப்போக்கன்.
""இது என் குதிரை. நீ கீழே இறங்கு,'' என்றார் அரசர்.
அங்கே கூட்டம் கூடி விட்டது.
"தான் யார் என்ற உண்மையைச் சொல்ல வேண்டாம். என்னதான் நடக்கிறது பார்ப்போம்' என்று நினைத்தார் அரசர்.
கூட்டத்தினரைப் பார்த்து, ""ஐயா! இது என் குதிரை... வழியில் இவன் குதிரையில் தன்னை ஏற்றிச் செல்லுமாறு கெஞ்சினான். நானும் குதிரையில் ஏற்றி வந்தேன். இங்கே வந்ததும் இதைத் தன் குதிரை என்று அடாவடியாகப் பேசுகிறான்,'' என்றார்.
அவனோ, ""இது என் குதிரை. இவனை நான் ஏற்றி வந்தேன். உங்கள் எல்லாரையும் இவன் ஏமாற்றப் பார்க்கிறான்,'' என்றான்.
அங்கே இருந்தவர்களால் குதிரைக்குச் சொந்தக்காரர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இருவரையும் பார்த்து, ""இந்த ஊர் நீதிபதியிடம் செல்லுங்கள். அவர் உங்கள் வழக்கைத் தீர்த்து வைப்பார்,'' என்றனர்.
அவர்கள் இருவரும் குதிரையுடன் நீதிபதியிடம் வந்தனர். தான் அரசன் என்ற உண்மையை அவர் வெளிப்படுத்தவில்லை.
"நீதிபதி எப்படி தீர்ப்பு வழங்குகிறார்? பார்ப்போம்,' என்று நினைத்தார்.
இருவரையும் பார்த்து நீதிபதி, ""உங்களுக்குள் என்ன வழக்கு?'' என்று கேட்டார்.
""நீதிபதி அவர்களே! நான் குதிரையில் வந்து கொண்டிருந்தேன். வழியில் இவர் குதிரையில் தன்னை ஏற்றி வரும்படி வேண்டினார். நான் இவரை ஏற்றி வந்தேன். இந்த ஊர் வந்ததும் இவர், இது தன் குதிரை என்கிறார். என்னை ஏற்றி வந்ததாகச் சொல்கிறார். என் குதிரைக்கு உரிமை கொண்டாடுகிறார். நீங்கள்தான் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்,'' என்றார் அவர்.
""நீ என்ன சொல்கிறாய்?'' என்று அரசரைப் பார்த்து கேட்டார் நீதிபதி.
""நீதிபதி அவர்களே! இது என் குதிரை. இரக்கப்பட்டு இவனை ஏற்றி வந்தேன். இப்போது இந்தக் குதிரையே இவனுடையது என்கிறார். இப்படி ஒரு ஏமாற்றுக்காரனை நான் பார்த்தது இல்லை. நீங்கள்தான் என் குதிரையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்,'' என்றான் அவன்.
அங்கிருந்த வீரர்களை அழைத்தார் நீதிபதி.
""இந்தக் குதிரையைக் கொட்டடியில் அடையுங்கள். மற்ற குதிரைகளுடன் இது இருக்கட்டும்,'' என்றார்.
அவர்களும் அந்தக் குதிரையை மற்ற குதிரைகளுடன் சேர்த்துக் கட்டினர்.
சிறிது நேரம் சென்றது. குதிரைகள் கட்டப்பட்டு இருந்த இடத்திற்கு நீதிபதி வந்தார்.
அவர்கள் இருவரையும் ஒவ்வொருவராக அழைத்தார்.
""உங்கள் குதிரையை அடையாளம் காட்டுங்கள்,'' என்றார்.
இருவருமே, அந்தக் குதிரையைச் சரியாக அடையாளம் காட்டினர்.
மாறுவேடத்தில் இருந்த அரசரைப் பார்த்த நீதிபதி, ""இது உங்கள் குதிரை. இவன் ஏமாற்ற முயன்று இருக்கிறான்,'' என்றார்.
இதைக் கேட்ட அரசர் வியப்பு அடைந்தார். தன் மாறுவேடத்தை நீக்கினார்.
அரசரைப் பார்த்த நீதிபதி அவரை வணங்கினார்.
""நீதிபதி அவர்களே! நாங்கள் இருவருமே குதிரையைச் சரியாக அடையாளம் காட்டினோம். நான்தான் குதிரையின் சொந்தக்காரன் என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?'' என்று கேட்டார்.
""அரசர் பெருமானே! நீங்கள் குதிரையின் அருகே சென்றதும், அது மகிழ்ச்சியாகக் கனைத்தது. உங்களை உரசிக் கொண்டு நின்றது. ஆனால், அவன் அருகில் சென்றதும் அந்தக் குதிரை அவனை உதைத்தது. இதைப் பார்த்த நான் நீங்கள்தான் குதிரையின் சொந்தக்காரன் என்பதை அறிந்து கொண்டேன்,'' என்று விளக்கம் தந்தார் நீதிபதி.
""உங்கள் அறிவுக்கூர்மையைப் பாராட்டுகிறேன்,'' என்ற அரசன் அவர்களுக்கு பரிசுகளை கொடுத்தார்.
ஏமாற்ற முயன்ற வழிப்போக்கனுக்கு, தக்க தண்டணை கொடுத்தார் அரசர்.
சிறுவர் மலர்
Last edited by Muthumohamed on Sat 6 Apr 2013 - 14:01; edited 2 times in total
Re: எப்படி எப்படி - சிறுவர் கதை
கதை நல்லா இருக்கு...
-
-
இரண்டு முறை பதிவிடப்பட்டுள்ளது. எடிட் செய்யவும்
-
-
-
இரண்டு முறை பதிவிடப்பட்டுள்ளது. எடிட் செய்யவும்
-
Last edited by rammalar on Sat 6 Apr 2013 - 13:17; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186
Re: எப்படி எப்படி - சிறுவர் கதை
rammalar wrote:கதை நல்லா இருக்கு...
-
இரண்டு முறை பதிவிடப்பட்டுள்ளது. எடிட் செய்யவும்
-
தகவலுக்கு நன்றி ராம் அண்ணா திருத்தி விட்டேன்
Re: எப்படி எப்படி - சிறுவர் கதை
ஏமாற்ற முயன்றவனுக்கு தண்டனை கிடைத்தது அதுவும் நீக்குப்பட்டு விட்டது முஹம்மட் :]Muthumohamed wrote:rammalar wrote:கதை நல்லா இருக்கு...
-
இரண்டு முறை பதிவிடப்பட்டுள்ளது. எடிட் செய்யவும்
-
தகவலுக்கு நன்றி ராம் அண்ணா திருத்தி விட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எப்படி எப்படி - சிறுவர் கதை
நண்பன் wrote:ஏமாற்ற முயன்றவனுக்கு தண்டனை கிடைத்தது அதுவும் நீக்குப்பட்டு விட்டது முஹம்மட் :]Muthumohamed wrote:rammalar wrote:கதை நல்லா இருக்கு...
-
இரண்டு முறை பதிவிடப்பட்டுள்ளது. எடிட் செய்யவும்
-
தகவலுக்கு நன்றி ராம் அண்ணா திருத்தி விட்டேன்
தவறு திருத்தப்பட்டு விட்டது அண்ணா
Re: எப்படி எப்படி - சிறுவர் கதை
@. @.Muthumohamed wrote:நண்பன் wrote:ஏமாற்ற முயன்றவனுக்கு தண்டனை கிடைத்தது அதுவும் நீக்குப்பட்டு விட்டது முஹம்மட் :]Muthumohamed wrote:rammalar wrote:கதை நல்லா இருக்கு...
-
இரண்டு முறை பதிவிடப்பட்டுள்ளது. எடிட் செய்யவும்
-
தகவலுக்கு நன்றி ராம் அண்ணா திருத்தி விட்டேன்
தவறு திருத்தப்பட்டு விட்டது அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எப்படி எப்படி - சிறுவர் கதை
நண்பன் wrote:@. @.Muthumohamed wrote:நண்பன் wrote:ஏமாற்ற முயன்றவனுக்கு தண்டனை கிடைத்தது அதுவும் நீக்குப்பட்டு விட்டது முஹம்மட் :]Muthumohamed wrote:rammalar wrote:கதை நல்லா இருக்கு...
-
இரண்டு முறை பதிவிடப்பட்டுள்ளது. எடிட் செய்யவும்
-
தகவலுக்கு நன்றி ராம் அண்ணா திருத்தி விட்டேன்
தவறு திருத்தப்பட்டு விட்டது அண்ணா
@. @. @. :] :] :]
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|