Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
நாங்களும் சாகணும்!- சிறுவர் கதை
2 posters
Page 1 of 1
நாங்களும் சாகணும்!- சிறுவர் கதை
ஒருநாள்-
சிற்றெறும்புகள் எல்லாம் ஒன்று கூடின.
தலைவர் எறும்பு பேசியது:
"அன்பு சிற்றெறும்புகளே! ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிக்கத்தான் நாம் இங்கு கூடியுள்ளோம். நம்மைப் படைத் ததும் அந்தக் கடவுள் தான். கொடிய விஷப் பாம்புகளைப் படைத் ததும் அந்த கடவுள்தான். ஆனால், கடவுள் படைப்பு விஷயத்தில், ஓரவஞ்சனை செய்துவிட்டார். பாம்பு கடித்தால் மனிதர்கள் செத்து விடுகின்றர். நாம் கடித்தால் அவர்கள் சாவதில்லை!''
"ஆமாம்! தாங்கள் சொல்வது சரிதான். கடவுள் நம் விஷயத்தில் ஓரவஞ்சனைதான் செய்துவிட்டார்!'' என்றன மற்ற சிற்றெறும்புகள்.
"இந்த விஷயத்தைக் கடவுளிடமே சொல்லி முறையிடுவோம். நாம் கடித்தாலும் மனிதர்கள் சாகவேண்டும் என்ற வரத்தைக் கேட்போம். அதன் பிறகு நம்மை நசுக்கிக் கொல்ல ஒரு மனிதனும் இந்த உலகில் இருக்க மாட்டான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' என்ற கேட்டது தலைவர் எறும்பு.
"தாங்கள் சொல்வதை அப்படியே ஆமோதிக்கிறோம்!'' என்றன மற்ற சிற்றெறும்புகள்.
உடனே, அவைகள் அனைத்தும், கடவுளை எண்ணி தவமிருக்கத் தொடங்கின.
சில நாட்களுக்குப் பின் அவைகள் முன்னே கடவுள் தோன்றினார்.
''சிற்றெறும்புகளே! உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார் கடவுள்.
மற்ற எறும்புகளின் சார்பாக, தலைவர் சிற்றெறும்பு தங்கள் கோரிக்கையைக் கடவுளின் முன்னே வைத்தது.
"நாங்களும் கடித்தால், சாக வேண்டும் கடவுளே!''
"சரி! அப்படியே ஆகட்டும்!''
வரம் கொடுத்து விட்டுக் கடவுள் மறைந்தார்.
சிற்றெறும்புகளுக்கு ஒரே ஆனந்தம். அந்த ஆனந்தத்தில் கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கடித்தன.
கோபம் கொண்ட மனிதர்கள் அவற்றை விரல்களுக்கு இடையே வைத்து நசுக்கிக் கொன்றனர்.
தப்பிப் பிழைத்த சிற்றெறும்புகள் திகிலோடு மீண்டும் ஒன்று கூடின.
"என்ன கொடுமை? மனிதர்கள் மீண்டும் நம் இனத்தைக் கொல்கின்றனரே. கடவுள் என்ன வரம் கொடுத்தார்?'' என்று கூக்குரலிட்டன.
"தெரியவில்லை. எங்கோ தவறு நடந்திருக்கிறது. மீண்டும் தவமிருப்போம். கடவுள் வரட்டும். முறையிடு வோம்!'' என்றது தலைவர் சிற்றெறும்பு.
மீண்டும் அவை கடவுளை வேண்டி தவமிருந்தன.
சில நாட்களில் கடவுள் தோன்றினார்.
"மீண்டும் உங்களுக்கு என்ன பிரச்னை?'' என்று கேட்டார் கடவுள்.
"நாங்கள் கடித்தால் சாகவேண்டும் என்று வரம் கேட்டோம். ஆனால், நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் வரம் எங்களுக்கு எதிராக வேலை செய்வதை எங்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடிய வில்லை!'' என்றது தலைவர் சிற்றெறும்பு.
"நாங்கள் சாக வேண்டும் என்று நீங்கள் தானே வரம் கேட்டீர்கள். அதைத் தானே நானும் கொடுத்தேன். இப்போது என்னையே குறை சொல்கிறீர்களே. என்ன அநியாயம் இது!'' என்று குறைபட்டுக் கொண்டார் கடவுள்.
சிற்றெறும்புகள் ஒன்றை, ஒன்று பார்த்துக் கொண்டன.
"அடக் கடவுளே! நாங்கள் கடித்தால் சாக வேண்டும் என்று குறிப்பிட்டது மனிதர்களை. விஷப் பாம்புகள் கடித்தால் மனிதர்கள் சாகிறார்களே... அதுபோன்ற மனிதர்களைக் கொல்லும் விஷத்தைத் தான் உங்களிடம் நாங்கள் கேட்டோம். எங்களை நாங்களே அழித்துக்கொள்ள வரம் கேட்போமா?'' என்று சொல்லிவிட்டு அழுதன.
கடவுள் கோபத்தோடு சிற்றெறும்புகளைப் பார்த்தார்.
"யார் சாகவேண்டும் என்று நீங்கள் தெளிவாகச் சொல்லவில்லை. தவிர உங்கள் ஆசை மிகவும் மோசமானது; கோடிக் கணக்கில் உற்பத்தியாகும் உங்களுக்குப் பாம்பின் விஷத்தைக் கொடுத்தால் மனித இனத்தையே அழித்துவிடுவீர்கள். நான் ஆக்க, நீங்கள் அழிப்பதா? அது ஒருபோதும் நடக்காது. நான் ஒருமுறை வரம் கொடுத்தது கொடுத்ததுதான். அதை மாற்ற முடியாது. கடித்தால் மனிதர்களால் நசுக்கப்பட்டு சாகவேண்டும் என்பதைத்தான் உங்கள் தலையில் எழுதியிருக்கிறேன். அதையும் என்னால் மாற்ற முடியாது. உடனடியாக இங்கே இருந்து போய்விடுங்கள்!'' என்று எச்சரித்துவிட்டு மறைந்தார் கடவுள்.
சிற்றெறும்புகள் அவமானத்தால் குறுகி, சோகத்துடன் அந்த இடத்தைவிட்டு அகன்றன.
சிறுவர் மலர்
சிற்றெறும்புகள் எல்லாம் ஒன்று கூடின.
தலைவர் எறும்பு பேசியது:
"அன்பு சிற்றெறும்புகளே! ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிக்கத்தான் நாம் இங்கு கூடியுள்ளோம். நம்மைப் படைத் ததும் அந்தக் கடவுள் தான். கொடிய விஷப் பாம்புகளைப் படைத் ததும் அந்த கடவுள்தான். ஆனால், கடவுள் படைப்பு விஷயத்தில், ஓரவஞ்சனை செய்துவிட்டார். பாம்பு கடித்தால் மனிதர்கள் செத்து விடுகின்றர். நாம் கடித்தால் அவர்கள் சாவதில்லை!''
"ஆமாம்! தாங்கள் சொல்வது சரிதான். கடவுள் நம் விஷயத்தில் ஓரவஞ்சனைதான் செய்துவிட்டார்!'' என்றன மற்ற சிற்றெறும்புகள்.
"இந்த விஷயத்தைக் கடவுளிடமே சொல்லி முறையிடுவோம். நாம் கடித்தாலும் மனிதர்கள் சாகவேண்டும் என்ற வரத்தைக் கேட்போம். அதன் பிறகு நம்மை நசுக்கிக் கொல்ல ஒரு மனிதனும் இந்த உலகில் இருக்க மாட்டான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' என்ற கேட்டது தலைவர் எறும்பு.
"தாங்கள் சொல்வதை அப்படியே ஆமோதிக்கிறோம்!'' என்றன மற்ற சிற்றெறும்புகள்.
உடனே, அவைகள் அனைத்தும், கடவுளை எண்ணி தவமிருக்கத் தொடங்கின.
சில நாட்களுக்குப் பின் அவைகள் முன்னே கடவுள் தோன்றினார்.
''சிற்றெறும்புகளே! உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார் கடவுள்.
மற்ற எறும்புகளின் சார்பாக, தலைவர் சிற்றெறும்பு தங்கள் கோரிக்கையைக் கடவுளின் முன்னே வைத்தது.
"நாங்களும் கடித்தால், சாக வேண்டும் கடவுளே!''
"சரி! அப்படியே ஆகட்டும்!''
வரம் கொடுத்து விட்டுக் கடவுள் மறைந்தார்.
சிற்றெறும்புகளுக்கு ஒரே ஆனந்தம். அந்த ஆனந்தத்தில் கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கடித்தன.
கோபம் கொண்ட மனிதர்கள் அவற்றை விரல்களுக்கு இடையே வைத்து நசுக்கிக் கொன்றனர்.
தப்பிப் பிழைத்த சிற்றெறும்புகள் திகிலோடு மீண்டும் ஒன்று கூடின.
"என்ன கொடுமை? மனிதர்கள் மீண்டும் நம் இனத்தைக் கொல்கின்றனரே. கடவுள் என்ன வரம் கொடுத்தார்?'' என்று கூக்குரலிட்டன.
"தெரியவில்லை. எங்கோ தவறு நடந்திருக்கிறது. மீண்டும் தவமிருப்போம். கடவுள் வரட்டும். முறையிடு வோம்!'' என்றது தலைவர் சிற்றெறும்பு.
மீண்டும் அவை கடவுளை வேண்டி தவமிருந்தன.
சில நாட்களில் கடவுள் தோன்றினார்.
"மீண்டும் உங்களுக்கு என்ன பிரச்னை?'' என்று கேட்டார் கடவுள்.
"நாங்கள் கடித்தால் சாகவேண்டும் என்று வரம் கேட்டோம். ஆனால், நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் வரம் எங்களுக்கு எதிராக வேலை செய்வதை எங்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடிய வில்லை!'' என்றது தலைவர் சிற்றெறும்பு.
"நாங்கள் சாக வேண்டும் என்று நீங்கள் தானே வரம் கேட்டீர்கள். அதைத் தானே நானும் கொடுத்தேன். இப்போது என்னையே குறை சொல்கிறீர்களே. என்ன அநியாயம் இது!'' என்று குறைபட்டுக் கொண்டார் கடவுள்.
சிற்றெறும்புகள் ஒன்றை, ஒன்று பார்த்துக் கொண்டன.
"அடக் கடவுளே! நாங்கள் கடித்தால் சாக வேண்டும் என்று குறிப்பிட்டது மனிதர்களை. விஷப் பாம்புகள் கடித்தால் மனிதர்கள் சாகிறார்களே... அதுபோன்ற மனிதர்களைக் கொல்லும் விஷத்தைத் தான் உங்களிடம் நாங்கள் கேட்டோம். எங்களை நாங்களே அழித்துக்கொள்ள வரம் கேட்போமா?'' என்று சொல்லிவிட்டு அழுதன.
கடவுள் கோபத்தோடு சிற்றெறும்புகளைப் பார்த்தார்.
"யார் சாகவேண்டும் என்று நீங்கள் தெளிவாகச் சொல்லவில்லை. தவிர உங்கள் ஆசை மிகவும் மோசமானது; கோடிக் கணக்கில் உற்பத்தியாகும் உங்களுக்குப் பாம்பின் விஷத்தைக் கொடுத்தால் மனித இனத்தையே அழித்துவிடுவீர்கள். நான் ஆக்க, நீங்கள் அழிப்பதா? அது ஒருபோதும் நடக்காது. நான் ஒருமுறை வரம் கொடுத்தது கொடுத்ததுதான். அதை மாற்ற முடியாது. கடித்தால் மனிதர்களால் நசுக்கப்பட்டு சாகவேண்டும் என்பதைத்தான் உங்கள் தலையில் எழுதியிருக்கிறேன். அதையும் என்னால் மாற்ற முடியாது. உடனடியாக இங்கே இருந்து போய்விடுங்கள்!'' என்று எச்சரித்துவிட்டு மறைந்தார் கடவுள்.
சிற்றெறும்புகள் அவமானத்தால் குறுகி, சோகத்துடன் அந்த இடத்தைவிட்டு அகன்றன.
சிறுவர் மலர்
Similar topics
» நாங்களும் நாங்களும் படங்கள் பாருங்கள்!
» சிறுவர் பிரச்சினைகளை ஆராய்தற்காக பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு குழுக்கள்!
» சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}
» நாங்களும் நடப்போம் லே......
» இந்துக்களும் நாங்களும்
» சிறுவர் பிரச்சினைகளை ஆராய்தற்காக பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு குழுக்கள்!
» சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}
» நாங்களும் நடப்போம் லே......
» இந்துக்களும் நாங்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|