சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

கரூர் அருகே மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி Khan11

கரூர் அருகே மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

2 posters

Go down

கரூர் அருகே மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி Empty கரூர் அருகே மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 7:45

கரூர் அருகே மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி C07bcd8a-b1fc-4633-8695-d9d0ca785720_S_secvpf
கரூர்(வெள்ளியணை), ஏப்.15-

கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த கூடலூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு வெள்ளியணை துணை மின் நிலையத்திலிருந்து தனியாக மின்பாதை அமைத்து மின்சாரம் கொண்டு செல்ல தொழிற்சாலை நிர்வாகம், மின்வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பணிக்கு தேவையான பொருட்களை வழங்கிய மின்சார வாரியம், மின்வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறையினால் தொழிற்சாலை நிர்வாகமே ஆட்களை வைத்து மின்கம்பங்களை நட்டு மின் கம்பிகளை இணைத்து பணிகளை முடிக்க கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த பணிக்கு தொழிற்சாலை நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அமர்த்தி வேலை செய்து வந்தது. இந்த பணியில் கோவில்பட்டி, விளாத்திகுளம், சங்கரன் கோவில், திருப்பத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) காலை வெள்ளியணையை அடுத்த முத்தகவுண்டனூர் அருகே கரூர்-திண்டுக்கல் மெயின் ரோட்டையட்டி மின் கம்பிகளை கம்பத்தில் இணைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. இந்த பணியில் 12 ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

மின் கம்பிகள் கொண்டு செல்லும் வழியில் குறுக்காக சில இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பிகளும் செல்கின்றன. இதனால் நேற்று வெள்ளியணை துணை மின் நிலையத்தில் இந்த பகுதிக்கு பணி முடியும் வரையில் மின் சப்ளையை நிறுத்தி வைக்க கோரி இருந்தனர். அதனை ஏற்று மின்வாரியமும் மின் சப்ளையை நிறுத்தி வைத்து அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் முத்தகவுண்டனூர் அருகே வெள்ளியணை துணை மின் நிலையத்தில் இருந்து லந்தக்கோட்டை பகுதிக்கு உயர் அழுத்த மின்சாரம் செல்லக்கூடிய பகுதியில் தனியார் ஆலைக்கு மின்சாரம் கொண்டு செல்லும் கம்பிகளை இழுத்துக்கொண்டு இருந்தனர். அப்போது வெள்ளியணை துணை மின் நிலையத்தில் இருந்து மின் சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த முத்தகவுண்டனூர் பகுதிக்கு மின் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியில் தனியார் ஆலைக்கு மின் கம்பிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு பணியாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் திருப்பத்தூரை சேர்ந்த கார்த்திக் என்பவர் மின்சாரம் பாய்ந்து உடல் கருகிய நிலையில் மின் கம்பத்திலேயே பிணமாக தொங்கினார்.

மேலும் அருப்புக் கோட்டையை சேர்ந்த மதிக்குமார், சங்கரன் கோவிலை சேர்ந்த கார்த்திக், விளாத்திக்குளத்தை சேர்ந்த மாரிச்சாமி, சுரேஷ் ஆகியோர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவர்கள் 4 பேரையும் சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் மதிக்குமார் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்மொழி அரசு, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைதொடர்ந்து கரூர் உதவி கோட்ட தீயணைப்பு அலுவலர் தவமணி, நிலைய அதிகாரி தியாகராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்கம்பியில் உடல் கருகி பலியாகி கிடந்த கார்த்திக் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இந்த சம்பவத்திற்கு காரணமான மின்வாரிய உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் என்றும், அதுவரையில் இறந்தவர் உடலை கீழே இறக்க கூடாது என்றும் கூறிவெள்ளியணை-திண்டுக்கல் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காமராஜ் எம்.எல்.ஏ., துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, தாசில்தார் பாலசுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிடவில்லை. இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் மின் கம்பியில் தொங்கிய நிலையில் கிடந்த கார்த்திக் உடலை மீட்டனர்.

இதையடுத்து கார்த்திக் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொது மக்கள் சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கரூர் அருகே மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி Empty Re: கரூர் அருகே மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 12:27

நிஜமாலுமா மின் தாக்கியதா ?
நம்ப முடிய வில்லையப்பா :pale:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» தன்னந்தனியே மண்வெட்டியால் தாக்கி திருடனைப் பிடித்த தைரிய லட்சுமி! புவனகிரி அருகே சம்பவம்!!
» களுவாஞ்சிக்குடியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி பலி _
» மின்சாரம் தாக்கி இந்தியப் பிரஜை மரணம்
» மின்சாரம் தாக்கி ஒருவர் பலி: மட்டக்களப்பில் சம்பவம் _
» சுவருக்கு பெயின்ட் பண்ணிய இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum