சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

நிலக்கரி; சுரங்க ஒதுக்கீடு விவகாரம் : சி.பி.ஐ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் Khan11

நிலக்கரி; சுரங்க ஒதுக்கீடு விவகாரம் : சி.பி.ஐ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

2 posters

Go down

நிலக்கரி; சுரங்க ஒதுக்கீடு விவகாரம் : சி.பி.ஐ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் Empty நிலக்கரி; சுரங்க ஒதுக்கீடு விவகாரம் : சி.பி.ஐ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

Post by நண்பன் Fri 10 May 2013 - 0:27

நிலக்கரி; சுரங்க ஒதுக்கீடு விவகாரம் : சி.பி.ஐ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் விசாரணை அறிக்கை விவரங்களை ஆட்சியில் உள்ளவர்களிடமும், அரசுத் துறை உயரதிகாரிகளிடமும் பகிர்ந்து கொண்டது தொடர்பாக மத்திய அரசுக்கும், மத்திய புலனாய்வுத் துறைக்கும் (சிபிஐ) உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த வழக்கில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை வழிகாட்டுதல் ஆகியவற்றை சி.பி.ஐக்கு வழங்கியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2004 - 2009 ஆம் ஆண்டு வரை தனியாருக்கு நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கை நீதிபதி ஆர். எம். லோதா அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த திங்கட்கிழமை சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தாக்கல் செய்த ஒன்பது பக்கப் பிரமாணப் பத்திரத்தை நீதிபதிகள் பரிசீலித்தனர்.

இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரான சட்டமா அதிபர் கூலம் இ. வாகனவதி, “மத்திய சட்ட அமைச்சருடன் நடைபெற்ற கூட்டம், அவரது விருப்பத்தின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது. நானாக முன்வந்து எந்தத் தருணத்திலும் சி.பி.ஐ. விசாரணை அறிக்கையைக் கோரவில்லை” என்றார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சரின் செயல்பாட்டுக்கும் சி.பி.ஐ.யின் நடவடிக்கைக்கும் அதிருப்தி தெரிவித்து நீதிபதிகள் கூறியதாவது:

சி.பி.ஐ. விசாரிக்கும் வழக்குகளில் அரசுக்குப் பதில் கூறும் நிலை உருவானால் எந்த விசாரணையையும் ஒழுங்காக நடத்த முடியாது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கின் முக்கியப் பகுதிகள் அரசுத்துறை அதிகாரிகள் யோசனைப்படி நீக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் உருப்படியான முன்னேற்றம் எதுவும் இல்லை. புகாருக்கு உள்ளானவர்கள் அரசின் மிக முக்கியப் பதவியில் இருப்பவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை துறைக்கு வெளியே உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள இது ஒன்றும் “மதிப்பீட்டு அறிக்கை”கிடையாது.

சி.பி.ஐ விசாரணையில் தலையிட்டு அறிக்கையில் திருத்தம் செய்யும் நடவடிக்கை அதன் நேர்மையைக் களங்கப்படுத்தும் வகையில் அமையாதா? அரசுத்துறை மேற்பார்வையுடன் சி.பி.ஐ. நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்படலாம். ஆனால் அதன் விசாரணையில் அரசுத்துறையின் தலையீடு அறவே இருக்கக்கூடாது. அந்த வகையில் சி.பி.ஐ. செயல்பாடு சுதந்திரமானதாக இருக்க வேண்டும்.

உண்மையைக் கண்டுபிடிப்பது மட்டும்தான் சி.பி.ஐ.யின் பணி வழக்கு தொடர்பான விபரங்களை மற்ற துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்வது அல்ல. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி (டி.ஐ.ஜி ரவி காந்த்) மத்திய உளவுத் துறைப் பணிக்கு மாற்றப்பட்ட நடவடிக்கையை நீதிமன்றம் ஏற்கெனவே நிறுத்தி வைத்துள்ளது.

அந்த அதிகாரி மீண்டும் சி.பி.ஐ. பணியில் சேர்க்கப்பட்டு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கை அவரது தலைமையிலான குழுவே தொடர்ந்து விசாரிக்க உத்தரவிடுகிறோம். வழிகாட்டுதல்கள் இந்த வழக்கில் மாற்றமோ, கூடுதல் விவரமோ தேவைப்பட்டால் அது குறித்து உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குத்தான் சி.பி.ஐ. முதலில் கொண்டுவர வேண்டும். நீதிமன்ற அனுமதி பெறாமல் துறைக்கு வெளியே உள்ள யாருடனும் வழக்கு குறித்து சி.பி.ஐ. ஆலோசிக்கவோ விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவோ கூடாது.

இந்த வழக்கின் ஒவ்வொரு விசாரணை விபரங்களையும் சரிபார்த்து அவ்வப்போது அதன் அறிக்கையை சி.பி.ஐ. இயக்குநர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

“மேற்கண்ட உத்தரவையும், வழிகாட்டுதலையும் பின்பற்றுவேன்” என்று உறுதியளிக்கும் பிரமாணப் பத்திரத்தை சி.பி.ஐ. இயக்குநர் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜுலை 10 ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிலக்கரி; சுரங்க ஒதுக்கீடு விவகாரம் : சி.பி.ஐ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் Empty Re: நிலக்கரி; சுரங்க ஒதுக்கீடு விவகாரம் : சி.பி.ஐ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

Post by Muthumohamed Fri 10 May 2013 - 10:25

சாட்டை அடி தான் போங்க
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum