சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

நபிகளாரின் பணிவு Khan11

நபிகளாரின் பணிவு

2 posters

Go down

நபிகளாரின் பணிவு Empty நபிகளாரின் பணிவு

Post by நண்பன் Fri 10 May 2013 - 0:32

நபிகளாரின் பணிவு

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிக நற்குணமுடையவராக பூரண தோற்ற முடையவர்களாக இருந்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தது போன்று நபியவர்களின் குணம் குர்ஆனாக இருந்தது. (நூல் : முஸ்லிம்)

“நிச்சயமாக நான் நற்குணங்களை பூர்த்தியாக்கவே அனுப்பப் பட்டுள்ளேன் என நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

நபியவர்களின் பணிவுத் தன்மைகளில் உள்ளதுதான். அதிகப்புகழ், அளவு கடந்த பாராட்டுதல் போன்றவைகளை விரும்ப வில்லை. உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், மர்யமுடைய மகன் ஈஸாவைப் புகழ்ந்தது போன்று என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். நிச்சயமாக நான் ஓர் அடியானே. எனவே, என்னை அல்லாஹ்வின் அடியான், அவனது தூதர் என்றே கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : அபூதாவுத்)

அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: சில மனிதர்கள், நபியவர்களை அல்லாஹ்வின் தூதரே! எங்களது நல்லவரே’ எங்களது நல்லவரின் மகனே! எங்களது தலைவரே! எங்களது தலைவரின் மகனே! என அழைத்தனர். அதற்கு நபியவர்கள்: மனிதர்களே! உங்களது வழமையான சொல்லால் அழையுங்களே தவிர ஷைத்தான் உங்களை வழி கெடுக்கத் தேட வேண்டாம். நான் முஹம்மத், அல்லாஹ்வின் அடியான், அவனது தூதர், அல்லாஹ் எனக்குக் கொடுத்த அந்தஸ்துக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்து வதை நான் விரும்பவில்லை எனக் கூறினார்கள்” (நூல் : அந்நஸாயி)

சில மனிதர்கள் நபி (ஸல்) அவர்களை அளவு கடந்து புகழ்கின்றனர். நபியவர்கள் மறைவானவற்றை அறிபவர், நலவும், தீங்கும் அவர்களின் கரங்களில் உள்ளது, தேவைகளை நிறைவேற்றுபவர், நோய்களைக் குணப்படுத்துபவர் எனக் கொள்கையாகவே கொண்டுள்ளனர். ஆனால் அல்லாஹ் இவைகளை நிராகரித்து கூறுகிறான். “நபியே! நீர் கூறும், அல்லாஹ் நாடினாலே தவிர நான் எனக்கு யாதொரு நன்மையையோ அல்லது தீமையையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன். மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன். (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டிராது. (அல்குர்ஆன் : 07:188)

அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள், எந்தவொரு மனிதனும், அவர்களிடத்தில் நபியவர்களை விட மிக விருப்பமானவர் எவருமில்லை. இவர்கள், நபியவர்களைக் கண்டு எழுந்து நிற்பதை நபியவர்கள் வெறுக்கிறார்கள் என்பதை அறிந்திருந்த காரணத்திற்காக எழுந்து நிற்கவுமாட்டார்கள். (நூல் : அஹ்மத்)

நபியவர்களின் பணிவு மென் மேலும் எடுத்துக்கூறப்படுவதை அவதானியுங்கள். நபியவர்களிடம் ஒரு பெண் வந்து, உங்களிடம் எனக்கு ஒரு தேவையுண்டு எனக் கூறினாள். அதற்கு நபியவர்கள், நீர் விரும்பும் மதீனாவின் எப்பாதையிலாவது அமர்ந்து கொள்! நானும் அமர்கிறேன். உனது கோரிக்கையை செவிமடுக்கிறேன் என நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அபூதாவூத்)

நபி (ஸல்) அவர்கள் பணிவுடையவர்களுக்கு இலக்கணமானவர்களாகத் திகழ்ந்தார்கள். அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஓர் ஆட்டின் விலா அல்லது காளை அன்பளிப்பாகப் பெற்றுக்கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் விடையளிப்பேன். ஓர் ஆட்டின் விலா அல்லது கால் எனக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டாலும் அதை நான் பெற்றுக்கொள்வேன் என நபியவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி)

ஒவ்வொரு காலத்திலும், நேரத்திலும் இடத்திலும் பெருமைக் காரர்களுக்கு தடையாக அவர்களின் பெருமையை, அவர்களின் உயர்வை கீழிறக்கும் நபி மொழிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. “எவருடைய உள்ளத்தில் கடுகளவேனும் பெருமை இருக்குமோ அவர்கள் சுவனம் நுழையமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

கடுகளவு பெருமை, கர்வம் இருந்தாலும் சரியே, அது நரகத்தின் பாதையாகவே இருக்கிறது. தனது நடையில் கர்வம் கொண்ட தற்பெருமையானுக்குரிய தண்டனையை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முற்காலத்தில் ஒரு மனிதன் தனக்குப் பிடித்த ஆடையை அணிந்து கொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தவனை திடீரென அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்து விட்டான். அவன் மறுமை நாள் அவ்வாறே பூமிக்குள் குலுங்கிய படி அழுத்திச் சென்று கொண்டேயிருப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்கள் : புகாரி, முஸ்லிம்)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிகளாரின் பணிவு Empty Re: நபிகளாரின் பணிவு

Post by Muthumohamed Fri 10 May 2013 - 10:32

நபிகளின் சந்ததியர் ஆனது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம் தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum