சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு Khan11

ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு

2 posters

Go down

ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு Empty ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு

Post by நண்பன் Fri 10 May 2013 - 23:39

ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு
சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரை நீக்க முடிவு
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இதனால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் நீக்கப்படலாம் என்றும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவி உயர்வுக்கு மருமகன் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சிக்கிய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் பதவிக்கும் ஆபத்து நீடிக்கிறது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விசாரணை பற்றிய அறிக்கையில், சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறிய திருத்தங்களை செய்தோம் என்று உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இயக்குனர் தெரிவித்திருந்தார். இது டில்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் அஸ்வனி குமார், பிரதமர் அலுவலக அதிகாரிகளின் செயலுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சி.பி.ஐ. சுதந்திரமாக செயல்பட புதிய சட்டத்தை கொண்டு வரவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல் ரயில்வேயில் பதவி உயர்வு பெறுவதற்கு ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் மருமகன் ரூ. 90 இலட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரமும் டெல்லியை கலக்கியது. இந்த இரு விவகாரங்களால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றம் முடங்கியது.

உணவு பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு முயன்றது. ஆனால், 2 அமைச்சர்களையும் நீக்கினால்தான் மசோதாக்களை நிறைவேற்ற உதவுவோம் என்று பா.ஜ. நிபந்தனை விதித்தது. இதை அரசு ஏற்காததால் நாடாளுமன்றம் 2 நாளுக்கு முன்பே மறு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் அலுவலகத்துக்கு அமைச்சர் அஸ்வனி குமார் நேற்று முன்தினம் வந்திருந்தார். அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்ததாக தகவல்கள் வெளியாயின. இதற்கிடையே 30 நிமிடங்கள் பிரதமர் அலுவலகத்தில் இருந்த அஸ்வனி குமார் வெளியே வந்த போது அவரிடம் ‘பிரதமரிடம் என்ன பேசினீர்கள்’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அஸ்வனிகுமார் பதிலளிக்கையில், “பிரதமரை சந்திக்கவில்லை. பிரதமர் அலுவலக அதிகாரிகளைத்தான் சந்தித்தேன்” என்றார். உச்ச நீதிமன்றத்தின் கண்டனம் குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் அவர் பேசியதாக தெரிகிறது.

இதற்கிடையே பிரதமர் அலுவலகத்தில் அஸ்வனி குமார் இருந்த போது ஜனாதிபதியை மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்ததால் ஜனாதிபதியை பிரதமர் மரியாதை நிமித்தம் சந்தித்ததாக கூறப்பட்டது. ஆனாலும், அஸ்வனி குமாரை நீக்குவதென பிரதமர் முடிவெடுத்துள்ளதாகவும், இது பற்றி ஜனாதிபதியிடம் விவாதித்து ள்ளதாகவும் டில்லி வட்டாரங்கள் இதற்கிடையே நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் கலந்து கொள்ளவில்லை. டில்லியில் தனது வீட்டில்தான் பன்சால் இருந்தார். ஆனால், ரயில்வே அமைச்சக அலுவலகத்துக்கும் அவர் செல்லவில்லை. இதனால், பன்சாலின் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு நிலவுகிறது.

ஆனால், உடல் நிலை பாதிக்கப் பட்டதால் பன்சால் ஓய்வு எடுப்பதாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே துறை தொடர்பாக எதுவும் விவாதிக்கப் படாததால் அவர் செல்லவில்லை என்றும் அவரது சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான விசாரணையில் அரசு தலையீடு தொடர்பாக சி.பி.ஐ.யிடம் மத்திய விஜிலன்ஸ் ஆணைக்குழு விளக்கம் கேட்டுள்ளது.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு Empty Re: ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு

Post by Muthumohamed Fri 10 May 2013 - 23:42

நல்லது நடந்தால் அனைவருக்கும் நல்லது தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum