சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

பந்து! - சிறுவர்கதை Khan11

பந்து! - சிறுவர்கதை

3 posters

Go down

பந்து! - சிறுவர்கதை Empty பந்து! - சிறுவர்கதை

Post by Muthumohamed Sun 12 May 2013 - 9:07

ராமு என்ற ஏழைச் சிறுவன் இருந்தான். அவன் எப்போதும் கடைவாசலில் நின்று, கண்ணாடிக் கதவிற்குள்ளிருக்கும் அந்த அழகான பந்தை ஆசையோடு பார்த்துக் கொண்டு இருப்பான். ஏன் என்றால் அவனால் அதை வாங்க முடியாதே... அவனுக்குப் அந்த பந்தை வாங்கக் காசு ஏது? ஒருநாள் கடைக்காரனைக் கேட்டதற்கு அவன், அதன் விலை ஐந்து ரூபாய் என்றான். ராமுவின் முகம் ஏமாற்றத்தால் வாடிவிட்டது.

ஒரு பெருமூச்சுடன் பந்தை மறுபடியும் பார்த்துவிட்டு ராமு மேலே நடந்தான். பந்தை ஆகாயத்தில் தூக்கிப் போட்டுப் பிடிப்பது போலவும், பந்து துள்ளிக் குதித்து ஓட, ராமு அதைத் தாவி பிடிப்பது போலவும், கனவு கண்டு கொண்டே நடந்தான்.

அவன் கனவைக் கலைத்தது ஒரு பரபரப்பான குரல்.

""தம்பி, என் கைக்கடிகாரம் எங்கேயோ நழுவி விழுந்துவிட்டது. கொஞ்சம் தேடிப்பாரேன். எனக்கு வயசாயிடுத்து. கண்ணே சரியாத் தெரியலே... தேடித் தந்தா உனக்கு ஐந்து ரூபாய் தரேன்,'' என்று பரிதாபமாக ஒரு கிழவர் ராமுவை வேண்டினார்.

ஒவ்வொரு பையனும், ""நான் தேடித்தரேன் தாத்தா'' என்று குதிபோட்டுக் கொண்டு ஓடினர்.

""யார் தேடித் தந்தாலும் சரி, ஐந்து ரூபாய் பரிசாகத் தருவேன். இந்த வழியாகத்தான் வந்தேன். இங்கே தான் விழுந்திருக்கும்,'' என்றார் கிழவர்.

ஐந்து ரூபாய்!
ராமுவிற்கு நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது. உடனே அந்தக் கண்ணாடி பீரோவில் இருந்த பளபளக்கும் பந்துதான் அவன்முன் காட்சியளித்தது.

""கடவுளே! கைக்கடிகாரம் என் கையில் கிடைக்கும் படி செய். எனக்கு ஐந்து ரூபாய் தருவார் தாத்தா. உடனே அந்தப் பந்தை வாங்கிவிடுவேன்,'' என்று நினைத்தபடி வந்தவழியே திரும்பித் தேட ஆரம்பித்தான்.

சாலை வழியே தேடிக்கொண்டு வரும் போது ராமுவின் கண்களில் ஒரு வினோதப் பொருள் தென்பட்டது. பரபரப்புடன் அதை நெருங்கிப் பார்த்தான் ராமு.

"ஐயோ பாவம்!' என்று வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வெளிப்பட்டன.

அது ஒரு சின்னக் குஞ்சுப் பறவை. புல் தரையில் விழுந்து கிடந்தது. இன்னும் இறக்கை முளைக்கவில்லை. தன் சின்னச் சிறகை ஆட்டி, ஆட்டி எழுந்திருக்கப் பார்த்தது. ஆனால் முடியவில்லை. மரத்தின் மேலிருந்த கூண்டிலிருந்து தவறி விழுந்திருக்கிறது. தாய்ப் பறவை கீச்சு மூச்சென்று கத்தியபடி மேலும் கீழும் பறந்தபடி தன் குஞ்சைக் கவனித்துக் கொண்டிருந்தது.

"ராமுவிற்கு விஷயம் புரிந்துவிட்டது. பாவம், அதனால் தன் குஞ்சை மேலே கொண்டு போக முடியவில்லை. தன்னைக் கண்டதும் உதவிக் கேட்டு தான் இப்படிக் கத்தி ஆரவாரம் செய்கிறது' என்று நினைத்தான் ராமு. பறவையைக் கூட்டில் சேர்த்துவிடுவதுதான் தனது கடமை என்று தீர்மானித்தான்.

இதை எடுத்துக்கொண்டு மரத்திலேறிக் கூட்டில்விட்டுக் கொண்டிருந்தால் என் கையில் கடிகாரமும் அகப்படாது. பந்தும் வாங்க முடியாது; தனக்கு முன்னால் பையன்கள் எல்லாம் தேடிக் கொண்டிருப்பதைக் கண்டான். பிறகு வந்து பறவையை கவனிக்கலாம் என்று எண்ணி, அவர்களுக்கு முன் கடிகாரத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு அடி முன்னால் நடந்தான்.

திடீரென்று குஞ்சு கிரீச்சிட்டது. திரும்பிப் பார்த்த ராமு, குஞ்சு எழுந்திருக்க முயன்று மல்லாந்து விழுந்துவிட்டதைக் கண்டான். குஞ்சு தவிப்பதைக் கண்ட தாய்ப்பறவை துடித்தது. கத்தியபடி சுற்றிச் சுற்றிப் பறந்தது.

அந்தப் பரிதாபமான காட்சி ராமுவை உருக்கிவிட்டது. இப்படியே இதை விட்டு விட்டுப் போனால், பூனைக்கோ, கழுகுக்கோ அது இரை ஆகிவிடும் என்பதும் அப்போது தான் ஞாபகம் வந்தது. பந்தை மறந்தான்.

கீழே குனிந்து குஞ்சை மெதுவாகத் தூக்கினான். அதன் பட்டுப்போன்ற மிருதுவான மெல்லிய உடலின் ஸ்பரிசம் ராமுவின் உடலைச் சிலிர்க்கச் செய்தது. பஞ்சு போன்ற அதை ஜாக்கிரதையுடன் கையில் ஏந்தியபடி மரத்தில் ஏறினான்.

தாய்ப்பறவையின் ஆனந்தத்தைக் கேட்கவா வேண்டும்? அது ராமுவைச் சுற்றி சுற்றி சந்தோஷ ஆரவாரம் செய்தது. ஒரு உயிரைக் காப்பாற்றினோம் என்ற பெருமை ராமுவுக்குத் தாங்கவில்லை. பச்சிளங்குஞ்சை அதன் கூட்டில் சேர்த்து விட்டு மரத்திலிருந்து கீழே குதித்த ராமு, "அப்பா' என்று அலறினான். அவன் காலிலிருந்து ரத்தம் கசிந்தது.

கீழே குனிந்த ராமுவுக்கு அழுகைக்குப் பதில் ஆனந்தம்தான் உண்டாயிற்று. கால் வலியையும் மறந்தான். புல்லினிடையே பளிச்சிட்ட எதையோ எடுத்துக்கொண்டு ஓட்டமாக ஓடினான்.

ராமுவின் காலில் குத்தியது என்ன தெரியுமா? கடிகாரத்தைக் கட்டிக்கொள்ள அதனுடன் ஒரு தோல் பட்டை இணைத்திருக்கு மல்லவா? அதன் ஒரு முனையில் மறு முனையை மாட்டி இழுத்துச் செறுக, ஒரு ஊசி இருக்குமல்லவா? அதுதான் அவன் காலில் குத்தியது. நல்ல வேளையாக ராமு கடி காரத்தின் மேல் குதிக்காமல் சிறிது தள்ளி ஊசியின் மேல் குதித்தான். அது அவன் அதிர்ஷ்டம்தான்.

தாத்தாவிடம் கடிகாரத்தை கொடுத்தான். தாத்தா அவனுக்கு ஐந்து ரூபாய் பரிசாக கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு, பந்தை வாங்க சந்தோஷமாக கடைக்கு சென்றான் ராமு.
***

சிறுவர் மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பந்து! - சிறுவர்கதை Empty Re: பந்து! - சிறுவர்கதை

Post by rammalar Sun 12 May 2013 - 9:09

பந்து! - சிறுவர்கதை 800522
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பந்து! - சிறுவர்கதை Empty Re: பந்து! - சிறுவர்கதை

Post by Muthumohamed Sun 12 May 2013 - 9:14

rammalar wrote:பந்து! - சிறுவர்கதை 800522
-

:”@: :”@: :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பந்து! - சிறுவர்கதை Empty Re: பந்து! - சிறுவர்கதை

Post by எந்திரன் Sun 12 May 2013 - 12:02

சூப்பரு கண்ணு :/
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

பந்து! - சிறுவர்கதை Empty Re: பந்து! - சிறுவர்கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum