சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

கொள்கையுடன் வாழ்தல்....அதுவே வெற்றிக்கு வழியாகும். Khan11

கொள்கையுடன் வாழ்தல்....அதுவே வெற்றிக்கு வழியாகும்.

Go down

கொள்கையுடன் வாழ்தல்....அதுவே வெற்றிக்கு வழியாகும். Empty கொள்கையுடன் வாழ்தல்....அதுவே வெற்றிக்கு வழியாகும்.

Post by Muthumohamed Fri 28 Jun 2013 - 22:09

நாம் எமது வாழ்வில் மற்றவர் எமக்குச் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் பழிவாங்குவதைப்போன்ற பிரதிச் செயலைச் செய்யாது இருப்பது நன்று. உயர்ந்த கொள்கையோடு செயற்படப் பழகிக்கொண்டால் இந்த நல்லபழக்கம் அன்றாட வாழ்வில் எமக்குள் உருவாகிவிடும். அன்றாட வாழ்வில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கோ அல்லது அச்சூழலுக்கோ அகப்படாது உள்ளாள விடுதலையுடன் வாழப்பழகிக்கொள்ள வேண்டும். இவ்வாறு பழிவாங்காது, நிகழ்ச்சிக்கு அகப்படாது உள்ளாள விடுதலையுடன் நிகழ்ச்சியில் பிரதிச் செயலைக் காட்டுவதைக் கொள்கையுடன் வாழ்தல் என இங்கே குறிப்பிடுகிறேன். அதாவது தனது உயர்ந்த கொள்கையைக் கைவிடாமல் சூழலுக்கு அகப்படாமல் அச்சூழலைக் கட்டுப்படுத்தும் நிலையாகும்.

பெரும்பாலும் நாம் எமது சூழ்நிலைகளால் கட்டுப்படுத்தப்படுகிறோம். எமது சூழல் நன்றாகச் செயற்படும்போது நல்லதை உணர்கிறோம். ஆனால் சூழல் எப்படிப்பட்டதாக இருப்பினும் அந்தச் சூழலுக்கு அகப்படாது மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கிச் செயற்படும்போது சூழ்நிலைகள் எம்மை ஆட்கொள்வதில்லை. இல்லையேல் சூழலுக்கு அகப்பட்டுத் தீமையான பிரதிச் செயலைச் செய்பவர்கள் ஆகிவிடுவோம்.

ஒரு நாள் ஒரு மனைவி தனது கணவனை ஏசினாள். ஆனால் கணவனோ தனது உள்ளத்தில் கலவரப்படவில்லை. மாறாக நான் எனது மனைவியை எதிர்த்துப் பேசுவதில்லை என்ற தீர்மானத்தோடு உள்ளான விடுதலையுடன் அமைதியோடு அவளுக்குச் செவிசாய்த்தான். பழிவாங்கும் பிரதிச் செயலைக் கணவன் காட்டாது கேட்டுக்கொண்டிருந்தான்’ மனைவி தனது கோபம் தணியும்வரை ஏசிவிட்டு நிறுத்திவிட்டாள். ஏசி முடிந்ததும் கோப உணர்வு நீங்கி விடுதலையை அனுபவித்தாள். கணவனும் பதிலுக்குப் பதில் ஏசியிருந்தால் குடும்பத்தில் பெரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கும்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கொள்கையுடன் வாழ்தல்....அதுவே வெற்றிக்கு வழியாகும். Empty Re: கொள்கையுடன் வாழ்தல்....அதுவே வெற்றிக்கு வழியாகும்.

Post by Muthumohamed Fri 28 Jun 2013 - 22:09

எமது வாழ்வில் பயனுள்ள பெறுமதியுள்ள கொள்கைகளை வழி காட்டியாகவும் நங்கூரமாகவும் பாவிக்கும் பொழுது நாம் சூழலை ஆட்கொள்கிறோம். இல்லையேல் சூழல் எம்மை ஆட்கொண்டு விடும். சூழ்நிலைகள் மாறக்கூடியவை. சிலவேளைகளில் கசப்பான சூழல் ஏற்படும். அதே இடத்தில் மகிழ்ச்சியான சூழலாக மாறிவிடும். ஆனால் பெறுமதிகள் மாறுவதில்லை.

மகாத்மாகாந்தி தனது வாழ்வில் நல்ல பெறுமதிகளுடன் வாழ்ந்தார்.
1. அநீதிக்குத் தலைவணங்க மாட்டேன்.
2. பொய்மையைக் காக்க வெற்றிகொள்வேன்.
3. உண்மையைக் காக்க எந்தக் கஷ்டத்தையும் அனுபவிப்பேன்.

இப்படிப்பட்ட நல்ல பெறுமதிகளோடு காந்திமகள் வாழ்ந்தார். நல்ல பெறுமதிகளைத் தீர்மானித்து அதைப்பற்றிக் கொண்டு அதன்படி வாழ்ந்தார். அதுவே அவருக்குச் சக்தியைக் கொடுத்தது.

பெரும்பாலும் சிலர் தமது கொள்கையின் படி பதில் கொடுப்பதில்லை. சூழலுக்கேற்பவே பதில் கொடுப்பார்கள். சிலர் தம்மிடம் வந்து அன்போடு கேட்கும் போது தமது கொள்கையைக் கைவிட்டுச் செயற்படுவர். அதாவது காரியத்தில் தனக்குப் பிடித்தவர்களுடன் ஒரு மாதிரியும் பிடிக்காதவர்களுடன் மற்றொரு மாதிரியும் நடந்து கொள்வது கொள்கையுடன் வாழுவதாகாது. எமது வாழ்வில் எமது செயல்கள் ஒவ்வொன்றுக்கும் நாமே பொறுப்பாளிகள். சூழ்நிலையை அல்லது மற்றவர்களைக் குறை கூறுவது பொருத்தமில்லை. மற்றவர் என்ன நினைப்பாரோ என்று நான் இப்படிச் செய்தேன் என்று குறை கூறுவது கொள்கையோடு வாழ்பவரின் நல்ல பிரதிச் செயலல்ல.

மகாத்மா காந்தி கொள்கையோடு வாழ்ந்து வரும்போது அது அவருக்குச் சக்தியைக் கொடுத்தது. ஆளுக்கேற்ப, நிகழ்ச்சிக் கேற்ப செயற்படாது கொள்கையுடன் செயற்பட்டார்.

நாமும் நல்ல கொள்கைகளைத் தெரிவு செய்து வாழ முயலுவோம். சூழலுக்கு அடிமைப்படாது: சூழலுக்கேற்ப எமது பிரதிச் செயலைக் காட்டாது நல்ல கொள்கையோடு வாழ்ந்து எமது வாழ்வைச் சிறப்பாக்குவோம்.

நான் எப்போது கொள்கையுடன் செயற்படுகின்றேன். எப்போது செயற்படவில்லை என்பதை அறிவது நன்று. அதுவே வெற்றிக்கு வழியாகும்.

by NAGEN VELAYATHAM
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum