சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகத் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

உலகை ஆளும் ஊடகம் Khan11

உலகை ஆளும் ஊடகம்

3 posters

Go down

உலகை ஆளும் ஊடகம் Empty உலகை ஆளும் ஊடகம்

Post by Muthumohamed Fri Aug 09, 2013 11:09 pm

ஊடகம்தான் இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கின்றது என்று கூறும் அளவுக்கு ஊடகங்கள் இன்று முக்கியத்துவம் பெற்றுவிட்டன. உலக ஊடகங்கள் அனைத்தும் யூதர்களின் கையில் இருப்பதால் தாம் நினைத்த திசையில் உலகத்தை இழுத்துச் செல்ல அவர்களால் சாத்தியமாகியுள்ளது. மக்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கு ஏற்ப அவர்கள் தகவல்களை வழங்கி வருகின்றனர்.

“தெரிவிப்பது நாங்கள்; தீர்மானிப்பது நீங்கள்” என ஊடகங்கள் கூறினாலும் மக்கள் எப்படித் தீர்மானிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கின்றார்களோ அதற்கு ஏற்பவே செய்திகள் தயாரிக்கப்படுகின்றன. தமது எண்ணத்துக்கு மாற்றமாக இருக்கும் செய்திகள், கருத்துக்கு முரணாக இருக்கும் செய்திகள் தவிர்க்கப்படுகின்றன; தணிக்கைக்குள்ளாகின்றன.

இந்த நிலையில், சர்வதேச மட்டத்தில் முஸ்லிம்கள் பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் தப்பும் தவறுமாகச் சித்தரிக்கக் கூடிய செய்திகள்தான் ஊடகங்களினூடாக மக்கள் மன்றத்திற்கு வருகின்றன.

முஸ்லிம்கள் தீவிரவாதிகள்; பயங்கரவாதிகள்; பண்பாடு அற்றவர்கள்; இஸ்லாம் பிற்போக்குத்தனமானது என்ற அடிப்படையில்தான் கருத்துக்கள் வலம் வருகின்றன.

தற்போது அச்சு ஊடகங்களின் செல்வாக்கு மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்துவிட்டன. இலத்திரனியல் ஊடகங்களைப் பொறுத்தவரையில் தனி நபர்களாலும், சிறு சிறு குழுக்களாலும் எவ்வித முதலீடும், கட்டுப்பாடுகளும் இன்றி நடத்தப்படுவதால் உண்மையான செய்திகளையும் உலகுக்கு வழங்க வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பு முஸ்லிம் சகோதர, சகோதரி களால் ஓரளவு பயன்படுத்தப் படுவது மகிழ்ச்சியானதே!

இருப்பினும், இலத்திரனியல் ஊடகங்களின் நம்பகத் தன்மை உறுதியற்றதாகவும், கட்டுப் பாடுகள், தணிக்கைகள் இல்லாமையால் நாகரீகம், பண்பாடு பேணப்படாமையும் முக்கிய குறைபாடுகளாகத் தெரிகின்றன.

இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான ஒரு ஊடகம் இல்லாத குறை பரவலாகப் பலராலும் உணரப்பட்டு வருகின்றது. எமக்கான ஊடகம் இல்லாததன் பாதிப்புக்களைப் பலமுறை நாம் அனுபவித்துள்ளோம். இதே வேளை, முஸ்லிம்களின் ஊடகத் தாகத்தை உணர்ந்து கொண்ட மாற்று ஊடகங்கள் அந்தத் தேவையை நிறைவு செய்யும் விதத்தில் செயற்பட்டு வருகின்றன. அவை வர்த்தக நோக்கத்தில் செய்யப்பட்டாலும் அதைக் குறை கூற முடியாது.

வீரகேசரியினால் முஸ்லிம்களைக் கவனத்திற் கொண்டு “விடிவெள்ளி” வாரப் பத்திரிகை வெளியிடப்படுகின்றது. இவ்வாறே சுடர்ஒளி மூலம் “முஸ்லிம் முரசு” வெளிவருகின்றது. நாட்டு முஸ்லிம்களின் நிலையை, முஸ்லிம் உலகு குறித்த செய்திகளை இவற்றின் மூலம் ஓரளவு அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புக் கிட்டியுள்ளது.

ஆனால், இதனால் பெரியதொரு நஷ்டத்தையும் நாம் அடைந்து வருகின்றோம். விடிவெள்ளி வெளிவர முன்னர் முஸ்லிம்களின் சில செய்திகளை வீரகேசரி தாங்கி வந்தது. இதனால் முஸ்லிம்களின் சில பிரச்சினைகளை வீரகேசரி வாசகர்களும் புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது விடிவெள்ளி, முஸ்லிம் முரசு போன்ற பத்திரிகைகளை முஸ்லிம்களே வாங்கி வாசித்து வருவதால் முஸ்லிம்கள் குறித்த செய்திகளை ஏனைய சகோதரர்கள் அறியக் கூடிய வாய்ப்பு அருகிவிட்டது. இது எமக்கு ஏற்பட்ட பாரிய நஷ்டமாகும்.

முஸ்லிம்களுக்கென ஊடகம் தேவையென்றால் முஸ்லிம்களது பிரச்சினைகளை முஸ்லிம்களுக்குச் சொல்வதற்கான ஊடகமாக மட்டும் அது இருக்கக் கூடாது.

இஸ்லாமிய சிந்தனையுடன் உலக நிகழ்ச்சிகளை நோக்கி, தேசிய சர்வதேசப் பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய அடிப்படையிலான தீர்வுகளை முன்வைக்கக்கூடிய ஊடகமாக இஸ்லாமிய ஊடகம் இருக்க வேண்டும். அது முஸ்லிம்கள் மட்டும் பயன் படுத்தும் ஊடகமாக இல்லாமல் மாற்று சமூகங்களும் பயன்படுத்தும் ஊடகமாக இருக்க வேண்டும். இதன் மூலம் இஸ்லாம் இன்றைய காலத்துக்கும் உகந்தது; இன்று உலகம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தில்தான் தீர்வு இருக்கின்றது என்ற உண்மை எல்லா மக்களின் உள்ளங்களிலும் ஊன்றப்பட வேண்டும். இதுதான் இஸ்லாமிய ஊடகத்தின் இலட்சியமாக இருக்க வேண்டும்.

இத்தகைய இலட்சியம் கொண்ட அந்த ஊடகம் ஒன்றை முஸ்லிம்கள் உருவாக்குவதற்கு முன்னரே அச்சு ஊடகங்கள் மங்கி மறைந்துவிடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது.

அச்சு ஊடகம் எனும் போது பெருத்த முதலீடு, கூடிய உழைப்பு, தொழிலாளர்கள், ஊழியர்கள் என பெரும் பிரச்சினைகள் இருப்பது குறித்து சிந்தித்து நாட்களை நகர்த்துவதை விட ஜனரஞ்சகமான, அனைத்து மக்களையும் சென்றடையக்கூடிய இலத்திரனியல் ஊடகமூடாக களத்தில் கால் பதித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி நகர்வது நல்லது என்பது எமது அபிப்பிராயமாகும்.

- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்


Last edited by பானுகமால் on Sat Aug 10, 2013 4:09 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உலகை ஆளும் ஊடகம் Empty Re: உலகை ஆளும் ஊடகம்

Post by பானுஷபானா Sat Aug 10, 2013 4:10 pm

பகிர்வுக்கு நன்றி முஹம்மத்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகை ஆளும் ஊடகம் Empty Re: உலகை ஆளும் ஊடகம்

Post by *சம்ஸ் Sat Aug 10, 2013 7:15 pm

நன்றி தகவலுக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகை ஆளும் ஊடகம் Empty Re: உலகை ஆளும் ஊடகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகை ஆளும் அரசி
» தெற்காசியாவிலேயே மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடு சிறிலங்கா – நியுசிலாந்து ஊடகம்
» கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவார்: ஊடகம் ஆரூடம்
» மகிந்தவையும், கோத்தபாயவையும் அகற்றிய பின்னரே மேற்குலகம் ஆறுதல் அடையும்!- கொழும்பு ஊடகம்
» படையினரும், பொலிஸாரும் நினைத்த மாதிரி எவரையும் கைது செய்ய முடியாது : சிங்கள ஊடகம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum