சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!! Khan11

மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

3 posters

Go down

மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!! Empty மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:19

பருவமடைதல் என்பது இறைவனால் பெண்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு இனிமையான நிகழ்வு ஆகும். அதிலும் அது பெண்ணின் உடல் செயல்பாட்டில் ஏற்படுத்தும் அற்புதமான பருவ மாறுதலின் பகுதியாக மாதவிடாய் உள்ளது. சில பெண்கள் மாதவிடாயின் போது வழக்கத்திற்கு மாறாக அதிக இரத்தப்போக்கை அனுபவிக்கக்கூடும். இது மாதவிடாய் மிகைப்பு என்று அழைக்கப்படுகிறது. இதனால் சில நேரங்களில், இந்த மாதிரியான இரத்தப்போக்கு சாதாரணமானதா அல்லது இல்லையா என்று யோசிக்க வைக்கிறது.
 
இத்தகைய இரத்தப்போக்கு இயல்பானதல்ல என்று எப்போது புரியும் என்று தெரியுமா? இதனை உபயோகிக்கும் பேடுகளை ஒரு நாளைக்கு எத்தனை முறைகள் மாற்றுகின்றோம் என்பதனை கணக்கில் கொள்வதன் மூலம் அறியலாம். ஒருவருக்கு மாதவிடாய் மிகைப்பு (அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு) என்று தெரிய வந்தால், அந்த காலத்தின் போது, கண்டிப்பாக பெரும்பாலும் 1-2 மணிநேரத்திற்கு ஒருமுறை பேடுகளை மாற்றகூடும் அல்லது ஒரு வாரம் முழுவதும் நிறைய இரத்தப்போக்கு இருந்திருக்கக்கூடும் என்பதாகும்.
 
சரி, இத்தகைய அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? அப்படி தெரியாவிட்டால், கீழே தொடர்ந்து படித்து பாருங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!! Empty Re: மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:20


ஹார்மோன் சமநிலையின்மை


பருவ வயதிலோ அல்லது மாதவிடாய் நிறுத்தத்திற்கான காலத்திலோ, ஹார்மோனின் சமநிலையின்மையால் ஏற்படுவதே மிகவும் பொதுவான காரணமாக உள்ளது. பருவ வயதில் முதல் முறையாக ஏற்பட்ட மாதவிடாய்க்கு பின்னர் மற்றும் மாதவிடாய் நிறுத்தம் தொடங்குவதற்கு ஒரு சில வருடங்களுக்கு முன்பிருந்தே, ஹார்மோன்களின் அளவு மாறிக்கொண்டே இருப்பதால், கடுமையான இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இத்தகைய ஹார்மோன் சமநிலையின்மையை பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் அல்லது மற்ற ஹார்மோன் ஏற்றத்தாழ்வு சிகிச்சைகள் மூலம் பெரும்பாலும் சரிச்செய்யப்படுகிறது.


கருப்பையில் ஏற்படும் நார்த்திசுக் கட்டிகள்

தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள். இந்த நார்த்திசுக் கட்டிகள் தீங்கற்றதாகவும், பெரும்பாலும் வயதின் அடிப்படையில் காணும் போது அவைகள் 30-40 வயதுகளில் ஏற்படுகிறது. இதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் இதற்காக எடுத்துக் கொள்ளப்படும் சில நடவடிக்கைகளாவன தசைக்கட்டி நீக்கம், கருப்பை நீக்கம், கருப்பையின் தமனியை அறுவை சிகிச்சை முறையில்லாமல் கதிரியக்க முறையில் சிகிச்சை அளிக்கப்படுதல் மற்றும் கருப்பைக்குரிய பலூன் சிகிச்சை மற்றும் கருப்பை நீக்கம் முதலியன ஆகும். ஆனால் ஒருமுறை மாதவிடாய் நின்றுவிட்டால், இத்தகைய கட்டிகள் சுருங்கி மற்றும் சிகிச்சை இல்லாமல் மறைந்துவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!! Empty Re: மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:21


கர்ப்பப்பை முகப்பு கட்டிகள்

 
கர்ப்பப்பை முகப்பில் சீதச்சவ்வில் சிறியதான கட்டிகள் அல்லது கருப்பையின் முகப்பிற்குள் நீட்டிக் கொண்டு மேற்பரப்பில் வளரும் கட்டிகளே கர்ப்பப்பை முகப்பு கட்டிகளாகும். இதற்கான காரணமும் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் பெரும்பாலும் தொற்றுநோய் காரணமாகவும், ஈஸ்ட்ரோஜன் அல்லது கருப்பை இரத்த குழாய்களின் தொடர்புடையதான அடைப்பு அதிகரித்துள்ளதாலும் ஏற்படலாம் என்று கூறுகின்றனர். கர்ப்பப்பை முகப்புக் கட்டிகளால் அவதியுறும் பெரும்பாலான பெண்கள், 20 வயதும் மற்றும் குழந்தைப் பெற்றவர்களாகவும் இருக்கின்றனர். இதற்கு பொதுவாக புறநோய்க்கான சிகிச்சையே அளிக்கப்படுகிறது.
 

கருப்பையின் உள்ளே ஏற்படும் கட்டிகள்

கருப்பையின் மேற்பரப்பில் இணையாமல் தனித்து நின்று வளரும் கட்டிகள் புற்றுநோய் கட்டிகள் அல்ல. இதற்கான காரணமும் தெரியவில்லை. இருப்பினும் அதனை பெரும்பாலும் அதிக எஸ்ட்ரோஜன் அளவுகளினாலும் அல்லது கரு சார்ந்த தொடர்புடைய சில வகையான கட்டிகளுடனும் இணைத்துப் பார்க்கின்றனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!! Empty Re: மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:22


லூபஸ் நோய்

லூபஸ் என்பது குறிப்பாக உடலின் தோல், மூட்டுகள், குருதி, சிறுநீரகங்கள் மற்றும் உடலின் அணுக்களையே தாக்கி அழிக்கும் நிலையை ஏற்படுத்தும் ஒரு வகையான கடுமையான வீக்கம் ஆகும். லூபஸ் ஒரு மரபியல் காரணங்களால் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது. மேலும் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் காரணிகளாலும், நோய்த்தொற்று, நுண்ணுயிர் கொல்லிகள், புற ஊதா கதிர்கள், கடுமையான மன அழுத்தம், ஹார்மோன்கள் மற்றும் மருந்துகளினாலும் லூபஸ் நோயின் அறிகுறிகள் தூண்டப்படுகிறது என்று நம்புகிறர்கள்.
 

இடுப்பெலும்பு அழற்சி நோய் (PID)

 
இது கருப்பை, கருமுட்டை குழாய்கள் மற்றும் கருப்பை முகப்பு பாதிப்பு போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புக்களில் ஏற்படும் ஒரு வகை தொற்றுநோய் ஆகும். இடுப்பக அழற்சி நோய் பெரும்பாலும் ஒரு பால்வினை தொற்றுநோயால் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இதற்கு PRP சிகிச்சையால் பரிந்துரைக்கப்படும் ஆன்டி-பயாடிக் சிகிச்சையே இதற்கான சிகிச்சை ஆகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!! Empty Re: மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:23


கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

 
கர்ப்பப்பை முகப்பு செல்கள் நியதிக்கு மாறாக மற்றும் கட்டுப்பாட்டை மீறி பெருக்கமடைந்து, ஆரோக்கியமான உடல் பாகங்களுக்கு அழிவை ஏற்படுத்துகிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கிட்டத்தட்ட 90%-க்கும் மேலான மனித பாபில்லோமா வைரஸால் ஏற்படுகிறது. இதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகளாவன அறுவை சிகிச்சை, ஹீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை ஆகியவைகள் ஆகும்.
 

கருப்பை புற்றுநோய்

 
பெண்கள் பொதுவாக 50 வயதுக்கு மேல், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முதலில் கருப்பையை நீக்கி, அதனை தொடர்ந்து செய்யப்படும் ஹீமோதெரபி அல்லது கதிர்வீச்சாலும் சரிசெய்யலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!! Empty Re: மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 11:24


கருத்தடைச் சாதனங்கள்/கருப்பையகக் கருவிகள்

 
பெண்கள் பயன்படுத்தும் கருத்தடைச் சாதனங்களால் மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. அப்படியெனில் உடனடியாக கருத்தடைச் சாதனங்களை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக மற்ற வேறு பொருத்தமான முறைகளை பயன்படுத்த வேண்டும்.
 

இரத்தப்போக்கு ஒழுங்கின்மை

 
இரத்தப்போக்கு கோளாறுகளினால் பொதுவாக இரத்தம் உறைவதற்கு கஷ்டமாக இருப்பதால், அது அதிக இரத்தப்போக்கை விளைவிக்கலாம். மேலும் தேசிய இதய, நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனத்தின் கூற்றுப்படி, வோன் வில்லிப்ராண்ட் நோயானது இரத்தப்போக்கு கோளாறினால் ஒழுங்கான இரத்த உறைவு ஏற்படாத காரணத்தினால் உண்டாகிறது என்று கூறப்படுகிறது. இந்த நோய் உள்ளவர்களுக்கு, இரத்தம் உறைதல் நியதிக்கு மாறாக குறைந்த அளவாகவே இருக்கும். இரத்த மெலிவூட்டியை எடுத்துக் கொள்ளும் பெண்கள், கடுமையான அதிக இரத்தப்போக்கை சந்திக்க நேரிடலாம்.
 
http://tamil.boldsky.com/health/wellness/2013/reasons-heavy-menstrual-bleeding-003786.html#slide293623


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!! Empty Re: மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

Post by *சம்ஸ் Sat 24 Aug 2013 - 11:26

பெண்கள் அறிந்திருக்க வேண்டிய விடயம் பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!! Empty Re: மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

Post by ansar hayath Sat 24 Aug 2013 - 12:12

மகளிர்க்கு தெரியவேண்டிய தகவல் ... சிறந்தது :”@:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!! Empty Re: மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum