சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

இரக்கமுள்ள மனசுக்காரன்டா... Khan11

இரக்கமுள்ள மனசுக்காரன்டா...

Go down

இரக்கமுள்ள மனசுக்காரன்டா... Empty இரக்கமுள்ள மனசுக்காரன்டா...

Post by ராகவா Tue 3 Sep 2013 - 4:41

இரக்கமுள்ள மனசுக்காரன்டா... Tamil_News_large_787295



பட்டப்படிப்பு படித்துவிட்டு பல்வேறு வேலைகளை பார்த்த ஒருவர் தற்போது மதுரை மக்களின் அன்பைப் பெற்ற ஆட்டோ ஒட்டுனராக உள்ளார்.

அவர் பெயர் டி.மதன்


மதுரை வக்பு கல்லூரியில் வரலாறு பட்டப்படிப்பு எடுத்து படிக்கும் போது இதை படித்தால் வேலை கிடைக்காது என்று நண்பர்கள் சிலர் சொல்ல,"நான் வேலைக்காக படிக்கவில்லை என் அறிவை விருத்தி செய்து கொள்ளவே படிக்கிறேன், மேலும் வரலாறு என்பது எனக்கு பிடித்த விஷயம், நாட்டோட வரலாறும் நகரத்தோட வரலாறும் தெரியாமல் யாரும் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் நானே வரலாறு படிக்காவிட்டால் எப்படி'' என்று சொல்லிவிட்டு வரலாறு படித்தவர். தொடர்ந்து வரலாற்று பாடத்தில் முதுகலை படிக்கலாம் என்று எண்ணியபோது வேலை பார்க்கவேண்டிய குடும்ப சூழ்நிலை.

சென்னையிலும், திருப்பூரிலும் பல்வேறு வேலை பார்த்தார் எதுவுமே அவருக்கு மனது பிடிக்கவில்லை சொந்த ஊரான மதுரைக்கே திரும்பினார். பொழுது போக்காக "கிளாரினட் 'எனும் இசைக் கருவியை வாசிக்கப் பழகியிருந்ததால் உள்ளூர் பேண்டு வாத்திய குழுவில் கிளாரினட் இசைக் கலைஞராக கொஞ்ச நாள் இருந்தார்.அதில் பணம் வரவில்லை ஆனால் புகழ் கிடைத்தது.


இதிலும் நிரந்தர வருமானம் இல்லாத நிலையில் இவரது சகோதரர் "கொஞ்ச நாளைக்கு ஆட்டோ ஒட்டிப்பாருப்பா உனக்கு பிடிக்கும்' என்று சொல்லி வழிகாட்ட மதன் ஆட்டோ ஒட்ட துவங்கினார்.

எதைச் செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி, நேர்மை, உழைப்பை வெளிப்படுத்தும் மதன் ஆட்டோ ஒட்டுவதிலும் தனது நல்ல குணங்களை வெளிப்படுத்தினார், படித்த பட்டப்படிப்பும் இவரது அணுகுமுறையில் பண்பாட்டினை வெளிப்படுத்தியது. இவர் கிளாரினட் வாசித்ததன் மூலம் கிடைத்த புகழும் எளிதில் மக்களை அணுகவைத்தது.


நியாயமான கட்டணம், ஒரு எஸ்எம்எஸ் கொடுத்தால் போதும் உடனே தொடர்பு கொள்வது எந்நேரம் அழைத்தாலும் செல்வது என்பது போன்ற காரணங்களால் மதுரை திருப்பாலை பகுதி மக்களின் அன்பிற்கு பாத்திரமானார், அந்த பகுதி பெண்களுக்கு கூடப்பிறக்காத அண்ணன் போல அக்கறை எடுத்து செயல்படுவார். இதன் காரணமாக எங்கே போகவேண்டும் என்றாலும் கூப்பிடு மதனை என்று சொல்லுமளவிற்கு பிரபலமாகிவிட்டார்.

இது மட்டுமின்றி தனது ஆட்டோ சவாரி இல்லாமல் போகும் போது வழியில் யாராவது முதியவர்களை பார்த்தால் இலவசமாக ஏற்றிச் சென்று விட்டுவிடுவார், பிரசவத்திற்கு இலவசம், ஆள் இல்லாத பெரியவர்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போய் திரும்ப கூட்டிக்கொண்டு வருவது, நள்ளிரவு நேரமானாலும் ரயில் பெட்டிக்கே வந்து வாடிக்கையாளர்களை வரவேற்று வீட்டில் கொண்டு போய்விடுவது, அதே போல ஏற்றிவிடுவது என்று தனது ஆட்டோ பணியை பாசத்துடனும், நேசத்துடனும் செய்வதன் காரணமாக, வருடத்தில் 365 நாளும் ஒய்வு ஒழிவின்றி, நேரம் காலம் பார்க்காமல் இரக்கமுள்ள மனசுக்காரனாக ஆட்டோ ஒட்டிக்கொண்டு இருக்கிறார்.


ஆட்டோ ஓட்ட ஆரம்பித்து எட்டு வருடமாகிறது.வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஒட்டியவர் இன்னும் கொஞ்ச நாளில் சொந்த ஆட்டோ ஒட்டுனராகப்போகிறார்.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை போன் மூலம் அழைத்தால் அழைத்தவர்கள் தேவைக்கு ஏற்ப ஆட்டோ ஏற்பாடு செய்துவிடுகிறார். ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்டோ வேண்டும் என்றாலும் அமைத்து தருகிறார்.


கல்லூரியில் வரலாறு படித்தவர் என்பதால் மதுரையின் வரலாறை முழுமையாக தெரிந்து வைத்திருப்பதால் தெரியாதவர்கள் ஆட்டோவில் ஏறும்போது மதுரையின் வரலாறை சுவராசியமாக சொல்கிறார். விரும்புபவர்களுக்கு சம்பந்தபட்ட இடத்தை கூட்டிப்போய் காண்பிக்கிறார்.

வரலாறு முதுகலை படிக்கவேண்டும் என்ற ஆசையை தற்போது தபால் மூலம் படித்து நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்.


என் தேவைக்கு ஏற்ற வருமானம் கிடைக்கிறது எனக்கு அது போதும் வேறு எந்த வேலைக்கு போயிருந்தாலும் இந்த அளவு நிம்மதியும், உறவும், நட்பும், பாசமும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே என்று சொல்லும் ஆட்டோ மதன் உண்மையின் அனைவரின் அன்பை பெற்ற மதன்.

செய்யும் தொழில் எதுவானாலும் அதில் திறமைதான் நமது செல்வம் என்ற பொன்மொழியின் இலக்கணமாக திகழும் மதனுடன் பேச விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9367792728.



- எல்.முருகராஜ்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum