Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
எது மூட நம்பிக்கை
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
எது மூட நம்பிக்கை
ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும்
நம்பிக்கையே மூடநம்பிக்கை என்று சொல்லும்
பகுத்தறிவாளர்கள் உண்டு. அவர்களுடைய நம்பிக்கைகள்
எல்லாம் கெட்டிக்காரத்தனம் என்றும் நம்முடைய
நம்பிக்கைகள் மட்டும் மூடத்தனம் என்றும் அவர்கள்
கருதுகிறார்கள்.
--
நான் சொல்கிறேன். நம்பிக்கையில் மூட நம்பிக்கை,
குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை... எதுவும்
கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே
ஒரு மூடத்தனம். அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை
ஏது?
-
நாட்டு மக்கள் எல்லாரையுமே நாத்திகர்களாக
ஆக்கிவிட முடியும் என்று நம்பித்தான் பெரியார்
பிரசாரம் செய்தார். அந்த நம்பிக்கை எப்படி முடிந்தது?
திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான்
அந்தக் காலத்தில் பலர் தி.மு.க.வில் சேர்ந்தார்கள்.
அதன் கதி என்ன?
-
நம்பிக்கை என்பது இப்படி நடக்கும் என்று ஆசைப்
படுவது. அப்படி நடக்காமலும் போய்விடலாம்.
அப்போது அது மூடத்தனமாகிவிடுகிறது. ஆண்டவனை
நம்புவதிலும், அதே நிலைதான். அது தோல்வியுற்றால்
மூடத்தனம். வெற்றி பெற்றால் கெட்டிக்காரத்தனம்.
-
ஆகவே, நம்பிக்கை என்ற மூடத்தனம் மனிதனாகப்
பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. அதில் ஆஸ்திகன்
மட்டுமென்ன தனி ஜாதி! இதுவரை எந்த நம்பிக்கை
எல்லா நேரங்களிலும் பலித்திருக்கிறது? ஆ
னால், நம்பிக்கை என்ற மூடத்தனத்தை ஏன் எல்லாருமே
மேற்கொள்கிறார்கள்? அதிலே மனத்துக்கு ஒரு சாந்தி.
-
தெய்வ நம்பிக்கை, நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்குமாகவே
ஏற்பட்டது. விஞ்ஞான நம்பிக்கையைப் போல் ஒரு
கட்டத்தில் தோல்வியுற்றாலும் மறு கட்டத்தில் வெற்றி
பெறுவதுதான் தெய்வ நம்பிக்கை.
-
"ஒரு சூத்திரதாரியின் கைப்பொம்மைகள் நாம்'' என்பது
மறுக்க முடியாதது. மரணம் என்ற ஒன்று, அதைத் தினசரி
வலியுறுத்துகிறது. இவ்வளவுக்குப் பிறகும், தெய்வ
நம்பிக்கையைச் சிலர் மூட நம்பிக்கை என்று
சொல்வார்களானால், "நான் ஒரு மூடன்' என்று சொல்லிக்
கொள்வதிலேயே பெருமைப்படுகிறேன்.
-
முட்டாள்தனத்தில் இருக்கிற நிம்மதி கெட்டிக்காரத்தனத்தில்
இல்லை. உடம்பிலோ எல்லா நோயும் இருந்தும் "ஒன்றுமே
இல்லை' என்று நம்புகிற முட்டாள் ஆரோக்கியமாகவே
இருக்கிறான். ஒரு நோயும் இல்லாமலேயே ஒவ்வொரு
மயிர்க்காலையும் பார்த்து, ""இது அதுவாக இருக்குமோ?
என்று ஆராய்ச்சி செய்கிற அறிவாளி, நித்திய நோயாளியாகச்
சாகிறான்.
-
"சுடு' என்று சொன்னவுடனேயே யாரைச் சுடுகிறோம் என்று
பார்க்காமலே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு வெற்றி
தேடித் தந்திருக்கின்றன. அந்த நேரத்தில் படைகள்
பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால்... பகுத்தறிவு
மிஞ்சும்... நாடு மிஞ்சாது!
-
போரில் தயக்கம் காட்டிய அர்ஜுனனைப் பார்த்துக்
கண்ணன் அதைத்தான் சொன்னான்.
-
"போர்' என்று வந்த பின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி
வெற்றிக்கு உதவாது' என்றான். கடைசியில் கண்ணன் மீது
மூடநம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தைத்
தூக்கினான். முடிவு வெற்றியாகக் கனிந்தது.
-
கீதையில் கர்மயோகம் மானிடக் கடமைகளை
வலியுறுத்துகிறது. பக்தியோகம், தியானத்தை
வலியுறுத்துகிறது.
கடமையும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது.
தியானமும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது.
-
"மனம் உண்டானால் வழி உண்டு' என்பது பெரியோர்
வாக்கு. அது மானிட தர்மத்துக்கும் பொருந்தும். தியான
தர்மத்துக்கும் பொருந்தும். ஆகவே, தெய்வ நம்பிக்கையை
மூடநம்பிக்கை என்று சொல்வதைப் பற்றி நான் வருந்த
வில்லை. இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான்
வரப்போகிறார்கள்'' என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு
இருக்கிறதே! யார் என்ன செய்ய முடியும்?!
-
------------------------------------------------------
By கவிஞர் கண்ணதாசன்
நன்றி: தினமணி
நம்பிக்கையே மூடநம்பிக்கை என்று சொல்லும்
பகுத்தறிவாளர்கள் உண்டு. அவர்களுடைய நம்பிக்கைகள்
எல்லாம் கெட்டிக்காரத்தனம் என்றும் நம்முடைய
நம்பிக்கைகள் மட்டும் மூடத்தனம் என்றும் அவர்கள்
கருதுகிறார்கள்.
--
நான் சொல்கிறேன். நம்பிக்கையில் மூட நம்பிக்கை,
குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை... எதுவும்
கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே
ஒரு மூடத்தனம். அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை
ஏது?
-
நாட்டு மக்கள் எல்லாரையுமே நாத்திகர்களாக
ஆக்கிவிட முடியும் என்று நம்பித்தான் பெரியார்
பிரசாரம் செய்தார். அந்த நம்பிக்கை எப்படி முடிந்தது?
திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான்
அந்தக் காலத்தில் பலர் தி.மு.க.வில் சேர்ந்தார்கள்.
அதன் கதி என்ன?
-
நம்பிக்கை என்பது இப்படி நடக்கும் என்று ஆசைப்
படுவது. அப்படி நடக்காமலும் போய்விடலாம்.
அப்போது அது மூடத்தனமாகிவிடுகிறது. ஆண்டவனை
நம்புவதிலும், அதே நிலைதான். அது தோல்வியுற்றால்
மூடத்தனம். வெற்றி பெற்றால் கெட்டிக்காரத்தனம்.
-
ஆகவே, நம்பிக்கை என்ற மூடத்தனம் மனிதனாகப்
பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. அதில் ஆஸ்திகன்
மட்டுமென்ன தனி ஜாதி! இதுவரை எந்த நம்பிக்கை
எல்லா நேரங்களிலும் பலித்திருக்கிறது? ஆ
னால், நம்பிக்கை என்ற மூடத்தனத்தை ஏன் எல்லாருமே
மேற்கொள்கிறார்கள்? அதிலே மனத்துக்கு ஒரு சாந்தி.
-
தெய்வ நம்பிக்கை, நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்குமாகவே
ஏற்பட்டது. விஞ்ஞான நம்பிக்கையைப் போல் ஒரு
கட்டத்தில் தோல்வியுற்றாலும் மறு கட்டத்தில் வெற்றி
பெறுவதுதான் தெய்வ நம்பிக்கை.
-
"ஒரு சூத்திரதாரியின் கைப்பொம்மைகள் நாம்'' என்பது
மறுக்க முடியாதது. மரணம் என்ற ஒன்று, அதைத் தினசரி
வலியுறுத்துகிறது. இவ்வளவுக்குப் பிறகும், தெய்வ
நம்பிக்கையைச் சிலர் மூட நம்பிக்கை என்று
சொல்வார்களானால், "நான் ஒரு மூடன்' என்று சொல்லிக்
கொள்வதிலேயே பெருமைப்படுகிறேன்.
-
முட்டாள்தனத்தில் இருக்கிற நிம்மதி கெட்டிக்காரத்தனத்தில்
இல்லை. உடம்பிலோ எல்லா நோயும் இருந்தும் "ஒன்றுமே
இல்லை' என்று நம்புகிற முட்டாள் ஆரோக்கியமாகவே
இருக்கிறான். ஒரு நோயும் இல்லாமலேயே ஒவ்வொரு
மயிர்க்காலையும் பார்த்து, ""இது அதுவாக இருக்குமோ?
என்று ஆராய்ச்சி செய்கிற அறிவாளி, நித்திய நோயாளியாகச்
சாகிறான்.
-
"சுடு' என்று சொன்னவுடனேயே யாரைச் சுடுகிறோம் என்று
பார்க்காமலே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு வெற்றி
தேடித் தந்திருக்கின்றன. அந்த நேரத்தில் படைகள்
பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால்... பகுத்தறிவு
மிஞ்சும்... நாடு மிஞ்சாது!
-
போரில் தயக்கம் காட்டிய அர்ஜுனனைப் பார்த்துக்
கண்ணன் அதைத்தான் சொன்னான்.
-
"போர்' என்று வந்த பின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி
வெற்றிக்கு உதவாது' என்றான். கடைசியில் கண்ணன் மீது
மூடநம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தைத்
தூக்கினான். முடிவு வெற்றியாகக் கனிந்தது.
-
கீதையில் கர்மயோகம் மானிடக் கடமைகளை
வலியுறுத்துகிறது. பக்தியோகம், தியானத்தை
வலியுறுத்துகிறது.
கடமையும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது.
தியானமும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது.
-
"மனம் உண்டானால் வழி உண்டு' என்பது பெரியோர்
வாக்கு. அது மானிட தர்மத்துக்கும் பொருந்தும். தியான
தர்மத்துக்கும் பொருந்தும். ஆகவே, தெய்வ நம்பிக்கையை
மூடநம்பிக்கை என்று சொல்வதைப் பற்றி நான் வருந்த
வில்லை. இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான்
வரப்போகிறார்கள்'' என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு
இருக்கிறதே! யார் என்ன செய்ய முடியும்?!
-
------------------------------------------------------
By கவிஞர் கண்ணதாசன்
நன்றி: தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24304
மதிப்பீடுகள் : 1186
Re: எது மூட நம்பிக்கை
இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான்
வரப்போகிறார்கள்'' என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு
இருக்கிறதே! யார் என்ன செய்ய முடியும்?!
அனைத்தும் அவன் செயல் நல்ல பதிவு நன்றி அண்ணா
வரப்போகிறார்கள்'' என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு
இருக்கிறதே! யார் என்ன செய்ய முடியும்?!
அனைத்தும் அவன் செயல் நல்ல பதிவு நன்றி அண்ணா
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|