சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

  பூரி ஸ்ரீ ஜகந்நாத‌ர் ரத யாத்திரையின் வரலாறு Khan11

பூரி ஸ்ரீ ஜகந்நாத‌ர் ரத யாத்திரையின் வரலாறு

Go down

  பூரி ஸ்ரீ ஜகந்நாத‌ர் ரத யாத்திரையின் வரலாறு Empty பூரி ஸ்ரீ ஜகந்நாத‌ர் ரத யாத்திரையின் வரலாறு

Post by ராகவா Mon 9 Sep 2013 - 17:40

ஒரிசா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஜகந்நாதர் கோயிலில் ரத யாத்திரை இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் தேர் பவனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருளாசியைப் பெறுவார்கள்.

இதற்கான ஏற்பாடுகள் பல நாட்களுக்கு முன்பே துவங்கி சிறப்பாக நடந்து வருகிறது. அந்த கோயிலின் அமைப்பு மற்றும் தேர் பவனியின் வரலாறும் என்ன வென்று ஆராய்ந்தோம்.

அதன்படி ஒரிசா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஜகந்நாதர் கோயிலின் ரத யாத்திரை கடந்த 2,000 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்து வருகிறது.

ஸ்ரீஜகந்நாதர் அவருடைய சகோதரர் ஸ்ரீபலராமர் மற்றும் சகோதரி சுபத்ரா தேவியாருடன் பவனி வந்து மக்களுக்கு அருளாசி வழங்குவது தொன்று தொட்டு நடந்து வரும் கோலாகலமான விழாவாகும்.

ஒரிசா மாநிலத்தின் தலைநகருக்கு அருகே உள்ள பூரி நகரமே ஸ்ரீ §க்ஷத்ரா என்றழைக்கப்படுகிறது. சங்கு போன்ற வடிவில் உள்ள இந்நகரத்தின் மையப்பகுதியில் ராமகிருஷ்ணபுரம் என்ற நகரை அமைத்து விஷ்ணுபக்தரான அரசர் இந்திரத்யும்னன் ஸ்ரீ ஜகந்நாதருக்கு கோயிலை கட்டினார்.

  பூரி ஸ்ரீ ஜகந்நாத‌ர் ரத யாத்திரையின் வரலாறு Img1080705007_1_4
PTI PhotoPTI
கோயிலின் உச்சியில் கலசமும் அதன் மேல் சக்கரமும் அமைக்கப்பெற்றது. கோயிலை தங்க ஆபரணங்களால் அலங்கரித்தார்.

இந்த கோயிலின் முக்தி மண்டபத்தில் இருக்கும் நரசிம்மரின் மூர்த்தி பிரம்மாவால் யாகம் செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

அந்த கோயிலில் இருக்கும் சாமி சிலைகள் முழு உருவம் அடையாமல் இருக்கும். அதற்கு ஒரு வரலாறு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, கடலில் மிதந்து வந்த மரத்திம்மையில் நான் பரிபூரணமாய் இருக்கிறேன் என்று ஸ்ரீ ஜகந்நாதர் இந்திரத்யும்னனிடம் கனவில் கூறினார்.


அதன்படி அந்த மரத்திம்மையில் இருந்த ஸ்ரீ ஜகந்நாதரின் உருவத்தை செதுக்கி உருவாக்க, அரசன் சிற்பிகளை நியமித்தான். ஆனால் சிற்பிகளால் எதுவும் செதுக்க முடியாமல் உளிகள் உடைந்தன. அப்போது கடவுளே அனந்தரானா என்ற சிற்பியின் வடிவில் அந்தப் பணிகளை முடிக்க வந்தார்.

  பூரி ஸ்ரீ ஜகந்நாத‌ர் ரத யாத்திரையின் வரலாறு Img1080705007_2_1
PTI PhotoPTI
ஆனால் அவர் ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது 3 தேர்களை மற்ற சிற்பிகள் செய்ய வேண்டும். கடவுளின் சிலைகளை மட்டும் வயதான சிற்பி மூடிய கோயிலுக்குள் இருந்தபடி 21 நாட்களுக்குள் செய்து முடிப்பார். இதனிடையில் யாரும் கோயிலைத் திறக்கக் கூடாது என்று கூறினார்.

அதற்கு அரசனும் ஒப்புக் கொண்டார். சிலைகளை செய்யும் பணி துவங்கியது. 14 நாட்கள் சென்ற பின்னர் உள்ளே சிற்பியின் செதுக்கும் ஓசை கேட்காததால் சந்தேகம் அடைந்த அரசனும், அரசியும் கோயிலைத் திறந்து பார்க்க உத்தேசித்தனர்.

அரசன் கொடுத்த வாக்கை மீறி கோயிலின் கதவைத் திறந்து பார்த்தான். அப்போது 3 சிலைகளும் முழுவதுமாக வடிவமைக்கப்படாமல் கை, கால்கள் இன்றி இருந்தது. சிற்பியையும் அங்கு காணவில்லை.

அப்போது சிற்பியாக வந்தது கடவுள்தான், நாம் வாக்கை மீறியதால் கடவுள் மறைந்துவிட்டார் என்று இந்திரத்யும்னனிடம் அமைச்சர் விளக்கினார்.

தன் தவறை உணர்ந்த மன்னர் குற்றத்திற்காக தனது உயிரை விட எண்ணினார். அப்போது அரசனின் கனவில் தோன்றிய கடவுள், தான் தரு-பிரம்மனாக நீலாசல் என்ற இடத்தில் நித்தியமாக இருக்கிறேன். இவ்வுலகில் அர்ச்சாவதாரமாக இருக்கிறேன். எனக்கு புறவுலக கைகளோ, கால்களோ தேவையில்லை. இவைகள் இல்லாமலே என்னால் எல்லா வற்றையும் உணர்ந்து அனுபவிக்க முடியும் என்று வேதங்களில் குறிப்பிட்டிருப்பதை உணர்த்தவே இந்த அவதாரத்தை எடுத்துள்ளேன். இதுவும் எனது லீலைகளில் ஒன்றுதான் என்று கூறி மறைந்தார்.

அதன்படிதான் கோயிலில் இருக்கும் சிலைகள் முழு உருவம் பெறாமல் இருக்கின்றன.

  பூரி ஸ்ரீ ஜகந்நாத‌ர் ரத யாத்திரையின் வரலாறு Img1080705007_1_4
PTI PhotoPTI
இப்படி ஸ்ரீ ஜகந்நாதர் அவதரித்து தன்னை நாடி தம் கோயிலுக்கு வர முடியாத பக்தர்களும் தன்னை கண்டு அருள்பாலிக்க வகை செய்யும் வகையில்தான் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ ஜகந்நாதர் தேரில் பவனி வருகிறார்.

நன்றி:வெப்தூனியா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum