சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

 பிரபஞ்சம் தோன்றியது எப்படி?  Khan11

பிரபஞ்சம் தோன்றியது எப்படி?

Go down

 பிரபஞ்சம் தோன்றியது எப்படி?  Empty பிரபஞ்சம் தோன்றியது எப்படி?

Post by ராகவா Tue 10 Sep 2013 - 4:04

பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது வானம் அல்லது ஆகாயம் என்று ஒரு  பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் அதற்கு அடுத்து பிரபஞ்சத்தில் என்ன நிகழ்ந்தது என்று பார்ப்போம்.

நான் பல மத சமபந்தமான நூல்களை மேய்ந்த பொழுது அனைத்து நூல்களும் பிரபஞ்சத்தில் இரண்டாவது தோன்றியது நிலம் அல்லது பூமி என்றே கூறுகின்றது.  ஆனால் அறிவியலின் படியும் ஆன்மீக உள்ளுணர்வின் படியும் இதில் எனக்கு உடன்பாடில்லை. 

பிரபஞ்சத்தில் இரண்டாவது காற்றுதான் உருவாகியிருக்க வேண்டும்.(அந்த காற்று ஹைட்ரஜனாக இருக்கலாம்)  அந்த காற்றானது காலப்போக்கில் வெப்பமடைந்து சில இடங்களில்  நெருப்பு பிழம்பாக மாறியது. காலப்போக்கில் இந்த நெருப்பு பிழம்பே வெடித்து சிதறி இருக்கலாம். பிறகு சில காலம் கழித்து நீர்/மழை உண்டாகிறது(H2O- ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்தது தான் நீர்). 

இந்த மழையானது நெருப்பு பிழம்பின் மீது படும்போழுது அது குளிர்ந்து நிலம் உருவானது. (அதாவது  பூமி போன்றவை). இப்படி உருவான பிரபஞ்சமானது விரிந்து கொண்டே செல்கிறது. பிறகு சில காலத்திற்கு பிறகு அது சுருங்குகிறது.  அனைத்தும் அணுவை விட மிகச்சிறிய புள்ளியாக சுருங்கிறது. அழுத்தம் காரணமாக அது வெடித்து சிதறுகிறது. அந்த  வெடிப்புதான் பெரு  வெடிப்பு எனும் "big bang".

மீண்டும்  பிரபஞ்சம்  விரிவடைகிறது  பல  காலத்திற்கு  பிறகு  மீண்டும்  சுருங்குகிறது  மீண்டும்  பெரு  வெடிப்பு . இவ்வாறு  இது  ஒரு  தொடர்  நிகழ்வாகவே  நடந்து  வருகிறது . என்பது ஒருவகையான பிரபஞ்ச தோற்றத்தை பற்றிய கருத்து.

இதைத்தான் கீதையில் கண்ணபிரான் நான் பிரபஞ்சத்தை  உருவாக்கி  அழித்து மீண்டும் உருவாக்குகிறேன் என்று சொல்வதாக வைத்துள்ளனர்.  


இப்பொழுது இந்த கருத்தின் படி பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது ஆகாயம், இரண்டாவது காற்று, மூன்றாவது நெருப்பு, நான்காவது நீர், ஐந்தாவது நிலம்.  இதைத்தான் ஐம்புதங்கள் என்பர்.

இவை ஐந்தும் இல்லையேல் யாரும் இல்லை. இவை ஐந்துமே அனைத்திற்கும் முதலானது. அனைத்திற்கும் ஆதாரம் இதுவே. ஆதலால் தான் என்னவோ இதை தெய்வமாக வழி பட ஆரம்பித்தனர் பண்டைய மக்கள். 

இந்த பிரபஞ்சத்திற்கு, இயற்கை சக்திக்கு சிவம் என்று பெயரிட்டனர். அதுதான் இன்றைய முக்கியமான ஐந்து சிவன் ஆலயங்கள். 
அவற்றை பஞ்சபூத ஆலயங்கள் என்பர்

சிதம்பரம் எனும் திருச்சிற்றம்பலம் - ஆகாயம் 
 காலஹஸ்தி எனும் திருக்காளத்தி - காற்று
திருவண்ணாமலை- நெருப்பு 
திருவானைக்காவல் -  நீர் 
காஞ்சிபுர ம் எனும் திருக்காஞ்சிபுரம் - நிலம் 

இங்கே இந்த முதலில் உருவான எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற  ஐந்து இயற்க்கை சக்தியை  தான் மக்கள் சிவனாக வழிபடுகிறார்கள்.

எல்லாம் சிவமயம் என்பது இவற்றைத்தானோ?

நன்றி:தளம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 பிரபஞ்சம் தோன்றியது எப்படி?  Empty Re: பிரபஞ்சம் தோன்றியது எப்படி?

Post by ராகவா Tue 10 Sep 2013 - 4:05

பிரபஞ்சம் உருவாவதற்கு முன் எப்படி இருந்தது?

உலகத்திலேயே விடைகான முடியாத மிகப்பெரிய கேள்விகளுள் ஒன்றாக  கருதப்படுவது பிரபஞ்சம் உருவாவதற்கு முன் எப்படி இருந்தது என்பது.  ஒரு பக்கம் பார்த்தல் இது ஒரு மிக சுலபமான கேள்வியாக தெரிகிறது.

பிரபஞ்சம்  உருவாவதற்கு முன் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு செல்வது என்பது மிகவும்  சுலபமான ஒன்று.ஒவ்வொரு உயிரினமும் அந்த நிலைக்கு  தினமும் செல்கின்றது என்று சொன்னால்  நம்புவீர்களா?
ஆனால் அதுதான் உண்மையாக இருக்குமோ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உருவாகின்றது.

அது என்ன நிலை?
நீங்கள் தினமும் தூங்குகின்றீர்கள் அல்லவா அந்த நிலை தான் பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு இருந்தது. (அல்லது இருந்திருக்க வேண்டும்).
அதவாது சிந்தனையற்ற ஒரு நிலை...வெளிச்சமும் அல்லாத இருளும் இல்லாத ஒரு நிலை.
அந்த நிலை எந்த வண்ணத்தில் இருந்தது என்று அறிய வேண்டுமா? இருளான ஒரு அறையில் உங்கள் கண்களை மூடி பாருங்கள் அந்த நிறத்தில் தான் உலகம் உருவாவதற்கு முன்பு இருந்தது.

பிரபஞ்சம்  உருவாவதற்கு முன் எப்படி இருந்தது என்று பார்த்தாயிற்று அடுத்த பதிவில் பிரபஞ்சம் உருவாகும்  பொழுது  எந்த வண்ணத்தில் இருந்தது என்று பார்ப்போம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 பிரபஞ்சம் தோன்றியது எப்படி?  Empty Re: பிரபஞ்சம் தோன்றியது எப்படி?

Post by ராகவா Tue 10 Sep 2013 - 4:06

பிரபஞ்சம் உருவானது எப்படி? கடவுளாளா?

பிரபஞ்சம்  எப்படி உருவானது என்பது பற்றி பல கருத்துக்கள் உள்ளது. இன்னும் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இங்கே நான் என்ன புதிதாக சொல்ல போகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் என்ன செய்யப்போகிறேன் எனில் இங்கே அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் ஒரு பாலம் அமைக்கப்போகிறேன். அதுமட்டுமல்ல இந்த பாலத்தின் மூலம் எனக்கு தெரிந்த, நான் உணர்ந்த, பிரபஞ்ச ரகசியத்தை நான் உங்களுக்கு சொல்ல போகிறேன்.

முதலில் ஆன்மிகம்  மற்றும் அறிவியல்  என்றால் என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆன்மிகம் என்பது நேற்றைய அறிவியல் அவ்வளவுதான்.

ஆன்மிகம் என்பது அகத்தாய்வு செய்தல்.  அறிவியல் என்பது புறத்தாய்வு செய்தல்.

இங்கே ஆன்மிகம் என்ற வார்த்தை கூட சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆதலால் அகத்தாய்வு செய்தல் என்ற வார்த்தையை  இங்கே வைத்து கொள்வோம்.

அறிவியல் எனபது என்ன என்று உங்களுக்கு நன்றாக தெரியும். புறபொருள்களில் ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருவது தான் அறிவியல். அதாவது  வெளியில் இருக்கும்  சூரியன், சந்திரன், நட்சத்திரம், சூரிய குடும்பம், பால் வெளி இங்கே  விண்கலம் அனுப்பி அல்லது தொலை நோக்கி கருவியால் பார்த்து  ஆராய்ச்சி செய்வார்கள்.(நிலம், கடல் இவையும் இந்த ஆராய்ச்சிக்கு உதவுகிறது)  இது அறிவியல் மூலமாக புறத்தாய்வு செய்து உலகம் எப்படி தோன்றியது என்ற முடிவுக்கு வருதல்.


அது என்ன அகத்தாய்வு? ஏன் அதை செய்ய வேண்டும்?
தவம் தியானம் இதைத்தான் அகத்தாய்வு  என்கிறோம்.  இங்கே நாம் கண்களை மூடி ஆராய்ச்சி செய்கிறோம். அதாவது நமது பார்வையை உள் செலுத்தி ஆய்வு செய்கிறோம். அறிவியலில் பார்வையை வெளியில் செலுத்தி ஆய்வு செய்கிறோம்.

அதாவது  உடல் எனும் மெய்யை அல்லது மெய்யின் மூலம்  ஆய்வு செய்து பிரபஞ்ச ரகசியத்தை, ஞானத்தை  பெறுவதால் அகத்தாய்வு செய்பவர்களை  மெய்ஞானி என்கிறோம். விண்ணில் பார்வையை செலுத்தி விண்ணை பற்றிய ஞானம் பெறுதலால் அறிவியலாளர்களை விஞ்ஞானி என்கிறோம்.

அட பிரபஞ்சம் என்பது வெளியில் தானே உள்ளது அதை அறிவியல் முறையில் வெளியில் ஆய்வு செய்வதுதானே சிறந்தது என்று சிலர் கேட்கலாம். அவர்கள் கேள்வி நியாமானது தான். ஆனால் அவர்களுக்கு உடலை பற்றி அந்த அளவுக்கு தெரிந்திருக்காது என நினைக்கின்றேன்.

இந்த பிரபஞ்சத்தில் என்னென்ன உள்ளதோ  அது மனிதனின் உடலிலும்  உள்ளது.  இந்த உலகம் எப்படி பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றால் ஆனதோ அதேபோல் நமது உடலும் இதனால் தான் ஆனது. அதுமட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து பொருளுக்கும் நமக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும்.
வானத்தில் உள்ள சூரியனும் சந்திரனும் கூட நமது உடம்பில் உள்ளதாக மெய்ஞானிகள்   கூறுவர். அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது என்பது அவர்கள் கூற்று.

அகத்தாய்வு பற்றி படித்தவர்களுக்கு நன்று தெரியும் மனிதன் எவ்வளவு சக்தி வாய்ந்தவனாக மாறமுடியும் என்று.
ஒரு கடவுளால் எதுவெல்லாம் முடியும் என்று நினைக்கிறீர்களோ அதுவெல்லாம் மனிதனாலும் முடியும். (போலி சாமியார்களை மனதில் வைத்து குழப்பிக்கொள்ளதீர்கள்).
நீங்கள் என்ன நினைத்தாலும் அதை கூறும் சக்தியை ஒரு மனிதானால் பெற முடியும். நினைத்த நேரத்தில் ஓரிடத்தில் மழை பொழிய வைக்க முடியும். பறக்க முடியும், எங்கிருந்தும் எதையும் யாரையும் பார்க்க முடியும், உடலை  மலை போல் ஆக்க முடியும், உடலை அணு போலவும் மாற்ற முடியும், உயிரற்ற  உடலை தன்னுடலாக மாற்றிக்கொள்ள முடியும். (இவற்றை உண்மையான மெய் ஞானிகள் ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை, இவையாவும் ஒரு கழிவுப்பொருள் போலத்தான்) 

பிரபஞ்சம் முழவதும் சுற்றி வரவும் முடியும்.   பிரபஞ்சத்தை சுற்றி வர தெரிந்தவர்களுக்கு பிரபஞ்சம் எப்படி உருவானது யார் உருவாக்கினார்கள் என்று தெரியாதா என்ன.

உண்மையை சொல்ல வேண்டுமானால் நீங்களும் பிரபஞ்ச ரகசியத்தை அறியலாம். விஞ்ஞானியாக அல்ல மெய்ஞானியாக ..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 பிரபஞ்சம் தோன்றியது எப்படி?  Empty Re: பிரபஞ்சம் தோன்றியது எப்படி?

Post by ராகவா Tue 10 Sep 2013 - 4:06

எங்கு  தொடங்கி  எங்கு முடிக்க' என்று சிற்றின்பத்தை பற்றி ஒரு பாடல் உண்டு. அதுபோல் இந்த கட்டுரையை எங்க ஆரம்பித்து எப்படி முடிப்பது என்றே எனக்கு தெரியவில்லை.
சென்ற பதிவில் ஆன்மிகம் என்ற அகத்தாய்வு  எனபது நேற்றைய அறிவியல், இன்றைய அறிவியலுக்கும் நேற்றைய அறிவியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, அறிவியல்  புறத்தை  பார்க்கின்றது , ஆன்மிகம்  என்கிற அகத்தாய்வு அகத்தை பார்க்கின்றது  என்று பார்த்தோம். சென்ற பதிவிற்கான  வழிகாட்டி.

அன்றைய அறிவியலான அகத்தாய்வில் கண்டறியப்பட்ட பிரபஞ்ச ரகசியங்களில் சில வேதங்களிலும், புராணங்களிலும் ,யோக நூல்களிலும் மற்றும் வேறு   சில நூல்களிலும் ஆங்காங்கே உள்ளதை காண முடிகின்றது.

இன்றைய அறிவியல் வளர வளர சிலர் இப்படிப்பட்ட பண்டைய நூல்களுடன் அறிவியலை சம்பந்த்தப்படுத்தி அறிவியல் வேறு விதமாக உள்ளது இந்த நூல்களில்  சொல்வது வேறு விதமாக உள்ளது என்று கேள்வி    எழுப்புகின்றனர்.

உண்மையில்  இந்த அறிவியலாளர்கள்  அபிரகாமிய மதங்களுடன்  (அதாவது  இஸ்லாம்  மற்றும் கிறிஸ்த்துவம் ) மட்டுமே    அறிவியல்  ஆய்வுகளை  ஒப்பிட்டு பார்த்து  இந்த முடிவுக்கு  வருகின்றனர். (ஆபிரகாமிய மதங்கள் தவறு என்ற கூறவில்லை அவைகளும் இந்தியாவிலிருந்தே சென்றிருக்கும் என்பதற்கான சாத்திய கூறுகள் நிறைய உள்ளன. என்ன அங்கே அகத்தாய்வு உண்மைகள் மிக சொற்ப அளவே உள்ளதாக நினைக்கின்றேன்.இந்திய புராணங்களிலும் அறிவியலுக்கு முரணான செய்திகள் சில உள்ளது என்பதை  மறுக்க இயலாது.)

ஆனால்  அவர்களுக்கு  இந்திய நூல்களில் உள்ள பிரபஞ்ச ரகசியத்தை  பற்றி தெரியவில்லை. வெகு சில அறிவியலாளர்களே பண்டைய இந்திய  நூல்களை பற்றி "கொஞ்சம்" ஆய்வு செய்து அறிவியல் உண்மைகளோடு ஒப்பிட்டு பார்த்துள்ளனர். ஒப்பிட்டு பார்த்த அவர்கள் திகைத்து போய்விட்டனர். ஏன் எனில் இன்றைய அறிவியல் சிந்தித்து கூட பார்க்க முடியாத அளவில் இந்திய நூல்களில்  கால அளவுகள் உள்ளது.

பிரபஞ்சம் உருவாகி 13.7 பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன என்பது இன்றைய அறிவியலாளர்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று . இந்திய புராணத்தில் இந்த 13.7 பில்லியன் ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட    பிரம்மனின்   வெறும்  ஒன்றரை   நாட்கள்  தான். 

பிரம்மனின் ஒரு பகல்  பொழுது  4.32  பில்லியன் ஆண்டுகளுக்கு   சமம் (இதை  ஒரு கல்பம்  என்று சொல்வார்கள் ). இரவு  பொழுது மற்றும்  ஒரு 4.32  பில்லியன் ஆண்டுகள். ஆக   பிரம்மனின் ஒரு நாள்  என்பது 8.64 பில்லியன் ஆண்டுகளுக்கு   சமம். (இங்கே பிரம்மன்  உண்மையா பொய்யா என்ற சர்ச்சை தேவை இல்லை).

இதேபோல்  இந்தியர்கள்  311,040 பில்லியன் ஆண்டுகள்  அதாவது 311 ட்ரில்லியன்   ஆண்டுள்  பற்றி பேசியுள்ளதாக  அறிவியல் அறிஞர்கள்  ஒப்புக்கொண்டுள்ளனர். அது  மட்டுமல்ல    1/1,000,0000 நொடிகள்     பற்றியும்  பேசியுள்ளதாக கூறுகின்றனர்.

இவை  அனைத்தையும்  அவர்கள் அந்த  காலத்தில்  அகத்தாய்வு செய்தே  கணக்கிட்டுள்ளதாக   தெரிகிறது.

 புறத்தாய்வு செய்திருக்க  வாய்ப்புகள்  உள்ளது என்று சொல்லும்  அளவுக்கு  எந்த  ஒரு குறிப்புகளும்  இதுவரை  கிடைக்க  வில்லை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 பிரபஞ்சம் தோன்றியது எப்படி?  Empty Re: பிரபஞ்சம் தோன்றியது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum