Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
உங்களால் நம்ப முடியுமா?
+4
Muthumohamed
நண்பன்
ராகவா
*சம்ஸ்
8 posters
Page 1 of 1
உங்களால் நம்ப முடியுமா?
முல்லாவின் மனைவி அவரிடம் சொன்னார்,''நேற்று நான் என் தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.அவள் வீட்டுச் சுவற்றில் ஒரு ஓவியர் அழகாக சிலந்திவலை போன்று வரைந்திருந்தார்.அதை உண்மையான சிலந்திவலை என்று கருதி அவள் வீட்டு வேலைக்காரி ஒட்டடைக்கம்பு கொண்டு சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.'' முல்லா பளிச்சென்று சொன்னார்,''இதை என்னால் நம்ப முடியவில்லை.''முல்லாவின் மனைவிக்குக் கோபம்.''நான் நேரில் பார்த்தேன் என்று சொல்கிறேன்.நீங்கள் நம்ப முடியவில்லை என்று சொல்கிறீர்களே.இது மாதிரி தத்ரூபமாக வரையக் கூடிய ஓவியர்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?''முல்லா அமைதியாகச் சொன்னார்,''நான் நம்ப முடியவில்லை என்று சொன்னது ஓவியத்தைப் பற்றி அல்ல.வேலைக்காரி சுத்தம் செய்தாள் என்று சொன்னாயே,அதைத்தான்.''
நன்றி தென்றல்
நன்றி தென்றல்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
யார் செய்தால் என்ன
முல்லாவின் நண்பர் வருத்தத்துடன் அவரிடம் சொன்னார்,''பத்து ஆண்டுகளுக்கு முன் எனக்குத் திருமணம் ஆனது.அப்போதெல்லாம் வேலை முடித்து நான் வீட்டுக்கு வரும் போதெல்லாம் என் மனைவி,நான் வீட்டினுள் உபயோகிக்கும் செருப்புக்களை தயாராக எடுத்து வெளியே வைத்துக் காத்துக் கொண்டிருப்பாள்.என் நாயும் வேகமாக வந்து என்னைச் சுற்றி சுற்றி வாலாட்டிக் குரைக்கும்.இப்போது எல்லாம் மாறிவிட்டது.இப்போது என் நாய் செருப்பைக் கொண்டு வந்து தருகிறது.என் மனைவி என்னைப் பார்த்து குரைக்கிறாள்.''முல்லா சொன்னார்,'அதனால் என்ன?முன்னால் அனுபவித்த வசதிகளை இப்போதும் அனுபவிக்கிறாய் அல்லவா?யார் செய்தால் என்ன?''
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்களால் நம்ப முடியுமா?
அருமை அண்ணா...*சம்ஸ் wrote:நன்றி தென்றல்
- Spoiler:
முல்லாவின் மனைவி அவரிடம் சொன்னார்,''நேற்று நான் என் தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.அவள் வீட்டுச் சுவற்றில் ஒரு ஓவியர் அழகாக சிலந்திவலை போன்று வரைந்திருந்தார்.அதை உண்மையான சிலந்திவலை என்று கருதி அவள் வீட்டு வேலைக்காரி ஒட்டடைக்கம்பு கொண்டு சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.'' முல்லா பளிச்சென்று சொன்னார்,''இதை என்னால் நம்ப முடியவில்லை.''முல்லாவின் மனைவிக்குக் கோபம்.''நான் நேரில் பார்த்தேன் என்று சொல்கிறேன்.நீங்கள் நம்ப முடியவில்லை என்று சொல்கிறீர்களே.இது மாதிரி தத்ரூபமாக வரையக் கூடிய ஓவியர்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?''முல்லா அமைதியாகச் சொன்னார்,''நான் நம்ப முடியவில்லை என்று சொன்னது ஓவியத்தைப் பற்றி அல்ல.வேலைக்காரி சுத்தம் செய்தாள் என்று சொன்னாயே,அதைத்தான்.''
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களால் நம்ப முடியுமா?
முயற்சிக்கிறேன் பாஸ்நண்பன் wrote:தொடருங்கள் தல
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்களால் நம்ப முடியுமா?
ஓரு நாள் முல்லா குளத்தில் நீந்திக்கொண்டிருந்த வாத்துக்களில் ஒன்றைப் பிடிக்க முயற்சி செய்தார்.
வாத்துக்கள் கரை ஒரமாக வரும்போது முல்லா அதனை எட்டிப் பிடிக்க முயற்சி செய்தார். வாத்துக்களோ அவர் கையில் அகப்படுவதுபோல பாவனை செய்து நழுவி கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் முல்லாவின் நண்பர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்.
வாத்தைப் பிடிக்க முல்லா எடுக்கும் பிரயாசையையும், அதில் அவர் அடிக்கடி தோல்வியடைவதையும் கண்ட நண்பருக்குச் சிரிப்பு வந்தது.
" என்ன முல்லா அவர்களே வாத்து வேட்டை நடக்கிறது போலிருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
முல்லா உடனே தமது பையிலிருந்த ரொட்டித் துண்டை எடுத்து குளத்து நீரில் நனைத்துச் சாப்பிடத் தொடங்கினார்.
" என்ன செய்கிறீர்கள் முல்லா அவர்களே" என நண்பர் கேட்டர்.
" வாத்து சூப்பில் ரொட்டியை நனைத்துச் சாப்பிடுகிறேனஞ் என்று தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கூறிச் சமாளித்தார் முல்லா.
நன்றி தமிழ்க் களஞ்சியம்.
வாத்துக்கள் கரை ஒரமாக வரும்போது முல்லா அதனை எட்டிப் பிடிக்க முயற்சி செய்தார். வாத்துக்களோ அவர் கையில் அகப்படுவதுபோல பாவனை செய்து நழுவி கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் முல்லாவின் நண்பர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்.
வாத்தைப் பிடிக்க முல்லா எடுக்கும் பிரயாசையையும், அதில் அவர் அடிக்கடி தோல்வியடைவதையும் கண்ட நண்பருக்குச் சிரிப்பு வந்தது.
" என்ன முல்லா அவர்களே வாத்து வேட்டை நடக்கிறது போலிருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
முல்லா உடனே தமது பையிலிருந்த ரொட்டித் துண்டை எடுத்து குளத்து நீரில் நனைத்துச் சாப்பிடத் தொடங்கினார்.
" என்ன செய்கிறீர்கள் முல்லா அவர்களே" என நண்பர் கேட்டர்.
" வாத்து சூப்பில் ரொட்டியை நனைத்துச் சாப்பிடுகிறேனஞ் என்று தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கூறிச் சமாளித்தார் முல்லா.
நன்றி தமிழ்க் களஞ்சியம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்களால் நம்ப முடியுமா?
முல்லா நல்ல அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் தமது அறிவாற்றலினாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பி விடுவார் என்றும் ஊரில் உள்ளவர்களில் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது.
அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர் ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார்.
முல்லா வந்து வணங்கி நின்றார்.
" முல்லா உனது அறிவைப் பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும், நீர் சொல்வது உண்மையாக இருந்தால் உமது தலை வெட்டப்படும், நீர் சொல்வது பொய்யாக இருந்தால் நீர் தூக்கில் ஏற்றப்படுவீர் " என்றார் மன்னன்.
முல்லா உண்மை சொன்னாலும் பொய்யை சொன்னாலும் அவர் உயிருக்கு ஆபத்து தயாராக இருக்கிறது. முல்லா நிலமையை எவ்வாறு சமளிக்கபோகிறார் என்று சபையோர் அவரையே கவனித்தனர்.
முல்லா மன்னனை நோக்கி " மன்னர் அவர்களே தாங்கள் என்னை தூக்கில் போடபோகிறீர்கள்" என்று பதற்றம் ஏதுமின்றிக் கூறினார். அதைக் கேட்ட மன்னர் திகைப்படைந்தார்.
முல்லா சொன்னது உண்மையானால் அவருடைய தலை வெட்டப்பட வேண்டும் அவ்வாறு வெட்டப்பட்டால் அவர் கூறியது பொய்யாகிவிடும்.
முல்லா கூறியது பொய் என்று வைத்துக் கொண்டால் முல்லாவைத் தூக்கில் போடவேண்டும். தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை எனக் கருதினால் அவரைத் தூக்கில் போடாமல் கழுத்தை வெட்ட வேண்டும். இப்படி ஒரு குழப்பத்தை தமது அறிவாற்றலால் தோற்றுவித்து முல்லா மன்னனைத் திக்குமுக்காடச் செய்து விட்டார்.
அவரது அறிவாற்றலைக் கண்ட மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து பொன்னையும் பொருளையும் பரிசாகக் கொடுத்து அனுப்பினான்.
அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர் ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார்.
முல்லா வந்து வணங்கி நின்றார்.
" முல்லா உனது அறிவைப் பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும், நீர் சொல்வது உண்மையாக இருந்தால் உமது தலை வெட்டப்படும், நீர் சொல்வது பொய்யாக இருந்தால் நீர் தூக்கில் ஏற்றப்படுவீர் " என்றார் மன்னன்.
முல்லா உண்மை சொன்னாலும் பொய்யை சொன்னாலும் அவர் உயிருக்கு ஆபத்து தயாராக இருக்கிறது. முல்லா நிலமையை எவ்வாறு சமளிக்கபோகிறார் என்று சபையோர் அவரையே கவனித்தனர்.
முல்லா மன்னனை நோக்கி " மன்னர் அவர்களே தாங்கள் என்னை தூக்கில் போடபோகிறீர்கள்" என்று பதற்றம் ஏதுமின்றிக் கூறினார். அதைக் கேட்ட மன்னர் திகைப்படைந்தார்.
முல்லா சொன்னது உண்மையானால் அவருடைய தலை வெட்டப்பட வேண்டும் அவ்வாறு வெட்டப்பட்டால் அவர் கூறியது பொய்யாகிவிடும்.
முல்லா கூறியது பொய் என்று வைத்துக் கொண்டால் முல்லாவைத் தூக்கில் போடவேண்டும். தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை எனக் கருதினால் அவரைத் தூக்கில் போடாமல் கழுத்தை வெட்ட வேண்டும். இப்படி ஒரு குழப்பத்தை தமது அறிவாற்றலால் தோற்றுவித்து முல்லா மன்னனைத் திக்குமுக்காடச் செய்து விட்டார்.
அவரது அறிவாற்றலைக் கண்ட மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து பொன்னையும் பொருளையும் பரிசாகக் கொடுத்து அனுப்பினான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்களால் நம்ப முடியுமா?
அனைத்தும் சூப்பர் தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களால் நம்ப முடியுமா?
ஜென் துறவி ஒருவர் தன் வீட்டிற்கு வந்தபோது ஒரு திருடன் இருப்பதைக் கண்டார்.அங்கு திருடுவதற்கு ஒன்றும் இல்லாததால் அவன் திகைத்து நின்றான்.துறவி அவனிடம் சொன்னார்,''ஐயோ பாவம்,என்னை நம்பி நீ எவ்வளவு தூரத்திலிருந்து வந்தாயோ!இங்கு ஒன்றும் இல்லையே?ஆனால் நீ வெறும் கையோடு திரும்பப் போகக் கூடாது.,''அவர் தன் உடைகளைக் களைந்து அவனிடம் கொடுத்து எடுத்துப் போகச் சொன்னார்.பின்னர் அவர் சொன்னார்,''அடுத்த முறை வரும்போது முன்கூட்டி சொல்லிவிட்டு வா.நானும் உனக்காக ஏதாவது தயார் செய்து வைப்பேன்.நீயும் ஏமாந்து போக மாட்டாய்.''இருந்த உடைகளைக் கொடுத்துவிட்டு குளிரில் நடுங்கும் துறவியைக் கண்டு என்ன செய்வது என்று அறியாது நின்ற திருடன் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சென்றான்.அவன் சென்றபின் படுத்த துறவி வானத்தைப் பார்த்து,''என்னால் மட்டும் முடிந்தால் இந்த நிலவை எடுத்து அவனுக்குக் கொடுத்திருப்பேனே!''
ஒரு இளம் துறவி தன் ஊருக்கு செல்கையில் இடையில் இருந்த ஆற்றில் திடீரென வெள்ளம் வந்ததால் அக்கரைக்கு செல்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது எதிர்க் கரையில் ஒரு ஜென் துறவி நிற்பதைப் பார்த்து எதிர்க் கரைக்கு வருவதற்கான வழி என்னவெனக் கேட்டான்.துறவி சொன்னார்,''இப்போது நீ எதிர்க் கரையில்தானே நிற்கிறாய்?''
நன்றி தென்றல்
ஒரு இளம் துறவி தன் ஊருக்கு செல்கையில் இடையில் இருந்த ஆற்றில் திடீரென வெள்ளம் வந்ததால் அக்கரைக்கு செல்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது எதிர்க் கரையில் ஒரு ஜென் துறவி நிற்பதைப் பார்த்து எதிர்க் கரைக்கு வருவதற்கான வழி என்னவெனக் கேட்டான்.துறவி சொன்னார்,''இப்போது நீ எதிர்க் கரையில்தானே நிற்கிறாய்?''
நன்றி தென்றல்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்களால் நம்ப முடியுமா?
முல்லாவும் அவர் நண்பர்களும் ஒரு சாராயக் கடையை விலைக்கு வாங்கினார்கள்.ஒரு மாதமாக ரிப்பேர் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. முன்னால் அந்தக் கடையில் வழக்கமாக சாராயம் குடிப்பவர்கள் கடை என்றைக்கு தயாராகும் என்று சுற்றிச் சுற்றி வந்தார்கள்.வேலை முடிவது மாதிரியாய்த் தெரியாதலால் ஒரு குடிமகன் முல்லாவிடம் சென்று,
என்றைக்குத்தான் கடையைத் திறப்பீர்கள்?என்றைக்கு நாங்கள் இங்கே வந்து குடிப்பது?''முல்லா அமைதியாகச் சொன்னார்,''நீங்கள் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.இந்தக் கடையை நாங்கள் வாங்கியது நாங்கள் சாராயம் குடிப்பதற்குத்தான்.மற்றவர்களுக்கு அல்ல.''
*********
நண்பர் கேட்டார்,''முல்லா,நீ தனியாகத்தானே குடிக்கிறாய்?பின் ஏன் தினமும் இரண்டு பாட்டில்களுடன் உன் அறைக்கு செல்கிறாய்?''முல்லா சொன்னார்,''முதலில் நான் ஒரு பாட்டில்தான் குடிக்கிறேன்.அதைக் குடித்ததும் எனக்குள்ளே இன்னொரு ஆள் இருப்பதுபோலத் தோன்றுகிறது.அந்த இன்னொரு ஆள் வருத்தப்படக் கூடாதே என்று அவருக்காகத்தான் இரண்டாவது பாட்டிலைக் குடிக்கிறேன்.''
என்றைக்குத்தான் கடையைத் திறப்பீர்கள்?என்றைக்கு நாங்கள் இங்கே வந்து குடிப்பது?''முல்லா அமைதியாகச் சொன்னார்,''நீங்கள் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.இந்தக் கடையை நாங்கள் வாங்கியது நாங்கள் சாராயம் குடிப்பதற்குத்தான்.மற்றவர்களுக்கு அல்ல.''
*********
நண்பர் கேட்டார்,''முல்லா,நீ தனியாகத்தானே குடிக்கிறாய்?பின் ஏன் தினமும் இரண்டு பாட்டில்களுடன் உன் அறைக்கு செல்கிறாய்?''முல்லா சொன்னார்,''முதலில் நான் ஒரு பாட்டில்தான் குடிக்கிறேன்.அதைக் குடித்ததும் எனக்குள்ளே இன்னொரு ஆள் இருப்பதுபோலத் தோன்றுகிறது.அந்த இன்னொரு ஆள் வருத்தப்படக் கூடாதே என்று அவருக்காகத்தான் இரண்டாவது பாட்டிலைக் குடிக்கிறேன்.''
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்களால் நம்ப முடியுமா?
முல்லா தன் மனைவியுடன் இரவு விருந்துக்கு சென்றார்.ஹாலில் எல்லோரும் கூடியிருந்தனர்.ஒரு ஓரமாகச் சென்ற முல்லா ஏதோ வழுக்கிக் கீழே விழுந்ததில் அவருடைய பேண்ட் முழங்கால் பகுதி கிழிந்து விட்டது.உடனே அவர் மனைவி அருகிலிருந்த பெண்கள் அறையில் எட்டிப் பார்த்துவிட்டு,''இந்த அறையில் இப்போது யாரும் இல்லை.உள்ளே வாருங்கள்.நான் கிழிந்த பகுதியில் ஒரு ஊக்கை மாட்டி கிழிசல் தெரியாமல் இருக்கச் செய்கிறேன்,''என்றதும் முல்லாவும் உள்ளே சென்றார்.ஆனால் கிழிசல் பெரியதாக இருந்ததால் ஊக்கை மாட்ட முடியவில்லை.உடனே முல்லாவின் மனைவி ,''சரி,பேண்டைக் கழட்டி கொடுங்கள்.நான் ஊசி வைத்திருக்கிறேன்.கிழிசலைத் தைத்து விடுகிறேன்,''என்று சொல்ல, முல்லாவும் பேண்டைக் கழட்டிக் கொடுத்தார்.அப்போது ஒரு பெண் அவசரமாகக் கதவைத் திறந்து கொண்டு வந்ததும் அதிர்ச்சி அடைந்த முல்லாவின் மனைவி,அருகில் இருந்த வேறு ஒரு கதவைத் திறந்து,''இப்போதைக்கு உள்ளே இருங்கள்.நான் அந்தப் பெண் வெளியே சென்றதும் கூப்பிடுகிறேன் .''என்றார். உள்ளே சென்ற முல்லா அடுத்த நிமிடம் அலறி அடித்துக் கொண்டு கதவைத் தள்ளிக் கொண்டு மீண்டும் பெண்கள் அறைக்குள்ளேயே வந்தார்.என்ன என்று கேட்க,''அவசரத்தில் என்னை ஹாலுக்குள்ளேயே தள்ளி விட்டாயே?''என்றார்.
நன்றி தென்றல்
நன்றி தென்றல்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்களால் நம்ப முடியுமா?
ஒரு தடவை அறவொழுக்கத்தை நேசிக்கும் பிரபலமான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது சாப்பாட்டு நேரமாகையால் அவர் முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது என்று கேட்டார். முல்லா அதற்கு பதில் சொன்னவுடன், தத்துவவாதி போகும் போது பேச ஆள் கிடைத்தால் நல்லது என்ற எண்ணத்தில் முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார்.
முல்லாவும் நெகிழ்ந்து போய் அந்த படிப்பாளியை அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே போன பிறகு ‘அன்றைய ஸ்பெசல் அயிட்டம் என்ன?’ என்று கடைச் சிப்பந்தியிடம் கேட்டார் முல்லா. ‘மீன்! புதிய மீன்!’ என்று பதில் சொன்னார் சிப்பந்தி. ‘இரண்டு துண்டுகள் நல்லதாக கொண்டு வாருங்கள்’ என இருவரும் ஆர்டர் செய்தனர்.
சிறிது நேரம் கழித்து ஹோட்டல் சிப்பந்தி ஒரு பெரிய தட்டில் இரு மீன் துண்டுகளை வைத்துக் கொண்டு வந்தார். அதில் ஒரு துண்டு பெரியதாகவும், இன்னொரு துண்டு சிறியதாகவும் இருந்தது. அதைக் கண்டவுடன் முல்லா எந்தவொரு தயக்கமில்லாமல் பெரிய மீன் துண்டை எடுத்து தனது தட்டில் போட்டுக் கொண்டார். முல்லாவின் செய்கையால் கடுப்படைந்து போன தத்துவவாதி முல்லாவைப் பார்த்து கடுமையாக முறைத்து விட்டு, ‘முல்லா நீங்கள் நடந்து கொண்ட முறையானது எந்த தர்ம, நீதி, நியாய, மத சாஸ்திரத்துக்கும் ஒத்துவராத ஒன்றாகும்’ என்றார்.
முல்லா, தத்துவவாதி சொல்லுவதையெல்லாம் மிக அமைதியுடன் பொறுமையாக கேட்டுக் கொண்டு வந்தார். கடைசியாக அந்த மெத்தப் படித்தவர் பேசி முடித்தவுடன், “நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்றார் முல்லா. “நான் மனச்சாட்சியுள்ள மனிதனாகையால் சிறு மீன் துண்டை எடுத்திருப்பேன்”. ‘அப்படியா, ரொம்ப நல்லது. இந்தாருங்கள் உங்கள் பங்கு’ என்று சொல்லி சின்ன மீன் துண்டை அந்த தத்துவவாதி தட்டில் வைத்தார் முல்லா.
முல்லாவும் நெகிழ்ந்து போய் அந்த படிப்பாளியை அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே போன பிறகு ‘அன்றைய ஸ்பெசல் அயிட்டம் என்ன?’ என்று கடைச் சிப்பந்தியிடம் கேட்டார் முல்லா. ‘மீன்! புதிய மீன்!’ என்று பதில் சொன்னார் சிப்பந்தி. ‘இரண்டு துண்டுகள் நல்லதாக கொண்டு வாருங்கள்’ என இருவரும் ஆர்டர் செய்தனர்.
சிறிது நேரம் கழித்து ஹோட்டல் சிப்பந்தி ஒரு பெரிய தட்டில் இரு மீன் துண்டுகளை வைத்துக் கொண்டு வந்தார். அதில் ஒரு துண்டு பெரியதாகவும், இன்னொரு துண்டு சிறியதாகவும் இருந்தது. அதைக் கண்டவுடன் முல்லா எந்தவொரு தயக்கமில்லாமல் பெரிய மீன் துண்டை எடுத்து தனது தட்டில் போட்டுக் கொண்டார். முல்லாவின் செய்கையால் கடுப்படைந்து போன தத்துவவாதி முல்லாவைப் பார்த்து கடுமையாக முறைத்து விட்டு, ‘முல்லா நீங்கள் நடந்து கொண்ட முறையானது எந்த தர்ம, நீதி, நியாய, மத சாஸ்திரத்துக்கும் ஒத்துவராத ஒன்றாகும்’ என்றார்.
முல்லா, தத்துவவாதி சொல்லுவதையெல்லாம் மிக அமைதியுடன் பொறுமையாக கேட்டுக் கொண்டு வந்தார். கடைசியாக அந்த மெத்தப் படித்தவர் பேசி முடித்தவுடன், “நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்றார் முல்லா. “நான் மனச்சாட்சியுள்ள மனிதனாகையால் சிறு மீன் துண்டை எடுத்திருப்பேன்”. ‘அப்படியா, ரொம்ப நல்லது. இந்தாருங்கள் உங்கள் பங்கு’ என்று சொல்லி சின்ன மீன் துண்டை அந்த தத்துவவாதி தட்டில் வைத்தார் முல்லா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்களால் நம்ப முடியுமா?
ஹா ஹா சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்களால் நம்ப முடியுமா?
^_ ^_ ^_ ^_ ^_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உங்களால் நம்ப முடியுமா?
முல்லா ஒரு தடவை தனது வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்தார். ஆனால் அவர் நினைத்தபடி வீட்டை விற்பது அவ்வளவு சுலபமாக இல்லை. யாரும் அவரை விலை கேட்டு அணுகவில்லை.என்ன செய்வது என்று யோசித்தார்.திடீரென ஒரு நாள் வீட்டுச் சுவரை இடித்து ஒரு செங்கல்லை எடுத்தார்.அவருடைய செயல் அவர் மனைவிக்குப் புரியவில்லை.''என்ன இப்படி சுவற்றை இடித்து விட்டீர்கள்?''என்று கேட்க, முல்லா சொன்னார், ''அட,முட்டாள் பெண்ணே,உனக்கு என்ன தெரியும்?எந்தப் பொருளை விற்பதானாலும் அதன் மாதிரி ஒன்றைக் காண்பித்தால்தானே வாங்குபவர்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்?அப்போதுதானே நான்கு பேர் அதைப் பற்றி விசாரிப்பார்கள்?அதனால் தான் நமது வீட்டை விற்பதற்கு மாதிரியாக இந்த செங்கல்லைக் காட்டப் போகிறேன்.''
நன்றி தென்றல்
நன்றி தென்றல்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்களால் நம்ப முடியுமா?
முல்லாவுக்கு ஒரு பலசரக்குக் கடையில் வேலை கிடைத்தது.சரக்கு அறையிலிருந்து மூட்டைகளைத் தூக்கி வந்து லாரியில் ஏற்ற வேண்டியது அவர் வேலை.அவர் அதே வேலை பார்க்கும் மற்றவர்களைப் பார்த்தார். அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு மூடைகளைத் தூக்கி சென்றனர்.முல்லா முயன்று பார்த்தார்.அவரால் இரண்டு மூடைகளை ஒரே நேரத்தில் தூக்க முடியவில்லை.அதனால் ஒவ்வொரு மூடையாகத் தூக்கிச் சென்று ஏற்றினார்.அவரைக்கவனித்தமுதலாளி,''முல்லா,நீ மட்டும் ஏன் ஒவ்வொரு மூடையாகத் தூக்குகிறாய்?''என்று கேட்டார்.முல்லா சொன்னார், ''முதலாளி, அவர்கள் எல்லாம் சுத்த சோம்பேறிகள்.இரண்டு மூடை தூக்க இரண்டு தடவை இங்கும் அங்கும் நடக்க வேண்டும் என்று பயந்து இரண்டிரண்டு மூடைகளாகத் தூக்குகிறார்கள்.''
''முல்லா,உண்மையின் விலை என்ன?''என்று ஒருவர் கேட்டார்.முல்லா சொன்னார்,''உண்மை வேண்டும் என்றால் அதற்கு மிக அதிகமான விலை கொடுக்க வேண்டும்,''நண்பர் ,''அது ஏன் அப்படி?''என்று கேட்டார்.முல்லா சிரித்துக் கொண்டே சொன்னார்,''இது பொருளாதாரத்தின் சாதாரண விதி.
அபூர்வமான பொருட்களுக்கு அதிக விலை கொடுத்துத் தானே ஆக வேண்டும்?''
நன்றி தென்றல்
''முல்லா,உண்மையின் விலை என்ன?''என்று ஒருவர் கேட்டார்.முல்லா சொன்னார்,''உண்மை வேண்டும் என்றால் அதற்கு மிக அதிகமான விலை கொடுக்க வேண்டும்,''நண்பர் ,''அது ஏன் அப்படி?''என்று கேட்டார்.முல்லா சிரித்துக் கொண்டே சொன்னார்,''இது பொருளாதாரத்தின் சாதாரண விதி.
அபூர்வமான பொருட்களுக்கு அதிக விலை கொடுத்துத் தானே ஆக வேண்டும்?''
நன்றி தென்றல்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» உங்களால் முடியுமா??
» உங்களால் முடியுமா?
» உங்களால் முடியுமா?
» உங்களால் முடியுமா
» உங்களால் இனங்கான முடியுமா?
» உங்களால் முடியுமா?
» உங்களால் முடியுமா?
» உங்களால் முடியுமா
» உங்களால் இனங்கான முடியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|